Saturday, March 31, 2012


* மனிதன் பாவம் செய்வதை விட்டால் அமரத் தன்மை பெறலாம். பாவத்தின் சம்பளம் மரணம் என்று கிறிஸ்தவ வேதம் சொல்கிறது. பாவத்தை நீக்கி, மனிதர் மரணத்தை வெல்லக் கூடிய காலம் வரலாம்.
* பயத்தை வென்றால் மற்ற பாவங்களை வெல்லுதல் எளிதாகி விடும். மற்ற பாவங்களை வென்றால் தாய் பாவமாகிய பயத்தை வெல்லுதல் மிக எளிதாகி விடும். 
* கல்வியை இளமையில் கற்கவேண்டும் என்பர். அதே நேரம் கற்பதற்கு வயது ஒரு தடையல்ல. ஆர்வம் இருந்தால் எந்த வயதிலும் கற்கத் தொடங்கலாம்.
* இப்போது உள்ள பழைய யுகம் மாறிப் புதிய யுகம் தோன்றும். அப்புதிய யுகத்தில் தெய்வப்பக்தியையே மூலாதாரமாகக் கொண்டு மக்கள் வாழ்வார்கள்.
* புராணங்களைக் கேட்டு பயனடையுங்கள். ஆனால், அதையே வேதங்களாக நினைத்துக் கொண்டு, மடமைகள் பேசி விலங்குகள் போல நடந்து கொள்வது கூடாது
தமிழக சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம்: கூடங்குளம் அணு மின் நிலையப் பிரச்னையை, தனது நிர்வாகத் திறமையால், எவ்வித அசம்பாவிதமும் இல்லாமல், முதல்வர் ஜெயலலிதா முடித்துள்ளார். ஆனால், காங்கிரஸ் ஆளும் மகாராஷ்டிராவில் அணு மின் நிலையத்துக்கு எதிராக இன்னும் போராட்டம் நடந்து வருகிறது

«£‹‡ÁÚTÖ‰ ÍÙTcXÖL J£ NÖR• RVÖ¡eL «£•‘]Ö¥ AR¼h ReLÖ¸ NÖRÚU H¼\‰. sPÖL ReLÖ¸ NÖR• RVÖ¡†‰ ÙYjLÖV R›Ÿ ToNzPÁ T¡UÖ¿jL·. ÙNš˜Û\ CÚRÖ:
ÚRÛYVÖ]ÛY
TÖÍU‡ A¡p - 2 P•[Ÿ
ReLÖ¸ - LÖ¥ fÚXÖ
ÙYjLÖV• - 2
ÚRjLÖš - J£ ™z
”| - 10 T¥
Ctp - J£ p¿ ‰|
ÙSš - AÛW L
“‡]Ö - ÛL‘z A[°
ÙLÖ†RU¥¦ - ÛL‘z A[°
TyÛP fWÖ•“ HXeLÖš - ÚRÛYVÖ] A[°
ÙNš˜Û\
—zV• ÛNÍ heL¡¥ ÙSšÛV F¼½ TyÛP fWÖ•“ HXeLÖš ÚTÖy| ÙYzeL «P°•.
Ctp ”| CWÛP• Ryz ÛY†‰e ÙLÖ·[°•. [YÖef¥ ÙYjLÖV• ToÛN –[LÖÛV S¿efe ÙLÖ·[°•.
ReLÖ¸ÛV S¿ef RÂÚV ÛY†‰e ÙLÖ·[°•. “‡]Ö, U¥¦ÛV r†R• ÙNš‰ ÙLÖ·[°•. TyÛP fWÖ•“ ÙYz†R‰• ÙYjLÖV• ToÛN–[LÖš Ctp ”| “‡]Ö U¥¦ G¥XÖY¼Û\• ÚTÖy| YReL°•. ‘\h ReLÖ¸ ÚNŸ†‰ YReL°•.
C†‰PÁ AÛW {Í”Á –[LÖš†Š·, LÖ¥ {Í”Á UtN·Š· ÚNŸeL°•. J£ ™z ÚRjLÖÛV –ep›¥ Az†‰ ÛLVÖ¥ SÁ\ÖL ‘³‹‰ 2, 3 RPÛY TÖ¥ G|eL°•. TÖ¨PÁ RƒŸ ÚNŸ†‰ 4 L A[‹‰ heL¡¥ «y| RÖ¸†R NÖUÖÁLºPÁ A¡pÛV• ÚTÖy| E“ ÚNŸ†‰ SÁ\ÖL f[½«P°•. heLÛW ™z B« Y‹R‰• ÙY›y ÚTÖy| 2 N†R• Y‹R‰• G|†‰ «P°•. sPÖ] ReLÖ¸ NÖR• ÙWz. C\ef ÛY†‰ T‡Û]‹‰ Œ–PjL· L³†ÚR heLÛW ‡\eL°•. ÙYjLÖV R›Ÿ ToNzPÁ T¡UÖ\XÖ•.

ஒருவரின் பிறவிகளை ஏழு என்று குறிப்பிடுகிறார். தேவர், மனிதர், விலங்கு, பறவை, ஊர்வன, நீர்வாழ்வன, தாவரம் ஆகியவையே ஏழுபிறவிகள்.
இதை
புல்லாகிப் பூண்டாகிப் புழுவாகி மரமாகி
 பல்விருகமாகி, பறவையாய்ப், பாம்பாகிக்
கல்லாய், மனிதராய்ப் பேயாய் கணங்களாய்
வல்லசுரராகி முனிவராய்த்தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்ததுள்
எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன்
எம்பெருமான்
என்று மாணிக்கவாசகர் திருவாசகத்தில் குறிப்பிடுகிறார். பல பிறவி எடுத்து இளைத்துவிட்டேன் என்று ஈசனிடம் கதறுகிறார்.
Dinamalar cartoon
ÙTyÚWÖ¥ «ÛX SÖÛ[
¦yP£eh ¤.3 EV£f\‰ 

ÙTyÚWÖ¥ ¦yP£eh 3 ¤TÖš A¥X‰ 4 ¤TÖš EVŸ†RT|• GÁ¿ G‡ŸTÖŸeLT|f\‰.

சென்னை: தமிழ்நாட்டில் மின்கட்டணங்கள் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் உயர்கிறது. இதற்கான முறையான அறிவிப்பை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்தது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மின்கட்டணம் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்காக மின்சார வாரியம் மின்கட்டண உயர்த்துவதற்கு அனுமதி கேட்டுதமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் சமர்ப்பித்தது. தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம், சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட இடங்களில் பொது மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தியது. இதில் கலந்து கொண்ட மக்கள் மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் மின்சார கட்டணம் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் இதற்கான அறிவிப்பு முறையாக அறிவிக்கப்பட்டது.

மின்கட்டண உயர்வின்படி, வீடுகளின் பயன்படுத்தும் மின்சாரத்திற்கு, 100 யூனிட்கள் வரை மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு யூனிட்டிற்கு ரூ.1.10 எனவும், 101 முதல் 200 யூனிட்கள் வரை பயன்படுத்துபவர்களுக்கு யூனிட்டிற்கு ரூ.1.80எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 201 முதல் 250 வரை யூனிட்கள் வரை பயன்படுத்துபவர்களுக்கு ஒரு யூனிட் ரூ.3 எனவும், 251 முதல் 500 யூனிட் மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு ரூ.3.50 எனவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மின்கட்டணம் 4 பிரிவுகளில் உயர்த்தப்பட்டுள்ளது. 500 யூனிட்கள் வரை மின்சாரம் பயன்படுத்துபவர்களில், 200 யூனிட்கள் வரை பயன்படுத்துபவர்களுக்கு ரூ.3 எனவும், 201 - 500 யூனிட் பயன்படுத்துபவர்களுக்கு யூனிட் ரூ. 4 எனவும், 501 யூனிட்களுக்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு ஒரு யூனிட் 5.75 எனவும் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உயர்வு 37 சதவீதம் வரை இருக்கும் எனவும், இந்த உயர்வு ஓராண்டு வரை அமலில் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், விவசாயத்திற்கு இலவச மின்சாரம் தொடரும் என கூறப்பட்டுள்ளது. விசைத்தறி கூடங்களுக்கு முதல் 500 யூனிட்களுக்கு வரை கட்டணம் இல்லை. 500 யூனிட்களுக்கு மேல் யூனிட்டிற்கு ரூ. 4 எனவும் நிர்ணியக்கப்பட்டுள்ளது. வழிபாட்டு தலங்களுக்கு, 120 யூனிட்கள் வரை, யூனிட்டிற்கு ரூ.2.50 எனவும், 120 யூனிட்களுக்கு மேல், யூனிட்டிற்கு ரூ.5 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வர்த்தக நிறுவனங்களுக்கு முதல் 100 யூனிட்கள் வரை , யூனிட்டிற்கு 4.30 எனவும், 101 யூனிட்களுக்கு மேல் ரூ. 7 எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அலங்கார விளக்குகள் பயன்படுத்துவோருக்கு யூனிட்டிற்கு ரூ. 10. 50 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

குடிசைத்தொழில், சிறு தொழில்களுக்கு 100 யூனிட்கள் வரை பயன்படுத்துபவர்களுக்கு, யூனிட் ரூ.3.50 எனவும், 100 யூனிட்களுக்கு மேல், ரூ. 4 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தொழிற்சாலைகளுக்கு மின்சார கட்டணம் யூனிட்டிற்கு ரூ.5.50 எனவும்,செய்யப்பட்டுள்ளது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களுக்கு மின்கட்டணம், யூனிட்டிற்கு ரூ. 4.50 எனவும், தனியார் கல்வி நிறுவனங்களுக்கு மின்கட்டணம் யூனிட்டிற்கு ரூ. 5 எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மின்கட்டண உயர்வால் மின்சார வாரியம் நஷ்டமின்றி இயங்கும் எனவும் அதிகாரிகள் அறிவித்தன

Friday, March 30, 2012

 »விவேகானந்தர்உன்னை மறைத்துக் கொள்
* மனிதனிடம் உள்ள சுயநலத்தை வெளியேற்றினால், மறுபக்கம் வழியாக இறைவன் நுழைகிறான். சுயநலம் அகன்றுவிட்டால் இறைவன் மட்டுமே இதயத்தில் இருப்பான்.* விக்கிரகத்தை கடவுள் என்று கூறலாம். கடவுளையே விக்கிரகமாக நினைக்கும் தவறைத் தவிர்க்க வேண்டும்.* நாமே நமக்கு சொர்க்கத்தை உருவாக்கிக் கொள்கிறோம். [...]

இணையத் தொடர்புக்குப் பயன்படுத்த பல பிரவுசர்கள் நமக்குக் கிடைக்கின்றன. இவை அனைத்தும் ஒரே மாதிரியான திறனுடனோ, வசதிகளுடனோ அமைக்கப்படுவதில்லை. சில வேகமாக இயங்கும்; பல பிரவுசர்கள் தரும் வசதிகள் எண்ணற்றவையாக இருக்கும். பாதுகாப்பு தருவதில் சில பிரவுசர்களை மற்றவை மிஞ்ச முடியாது. சிலவற்றைப் பயன்படுத்திப் பார்த்து அதில் ஏற்பட்ட அனுபவங்களை இங்கு தருகிறோம். உங்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ப, உங்களுக்கான பிரவுசரைத் தேர்ந் தெடுத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய தேவைகளை முன்னிறுத்தி, அதில் வெற்றி பெற்ற பிரவுசரைத் தேர்ந் தெடுத்துப் பயன்படுத்துங்கள். இந்த தேர்வின் போது ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். எந்த பிரவுசரும், அது இயக்கப்படும் கம்ப்யூட்டரின் ஹார்ட்வேர் அமைப்பைப் பொறுத்தே இயங்கும். எனவே, உங்கள் ஹார்ட்வேர் வடிவமைப்புகளையும் கருத்தில் கொண்டு, பிரவுசர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். 
நாம் பயன்படுத்திப் பார்க்க எடுத்துக் கொண்டவை அண்மைக் காலத்தில் தரப்பட்ட Chrome 17, Firefox 10, Internet Explorer 9 ஆகிய வையாகும். வேகம், பாதுகாப்பு, கூடுதல் வசதிகள் மற்றும் ஆட் ஆன் தொகுப்புகள் ஆகியவற்றின் அடிப்படையில் இவற்றைத் தரவரிசைப்படுத்தினோம். முதல் இடத்தை, அடுத்து வந்த பிரவுசரை மிகக் குறுகிய மதிப்பெண்களில் முந்திக் கொண்டு பிடித்தது கூகுளின் குரோம் பிரவுசர் பதிப்பு 17. இதன் ஜாவா ஸ்கிரிப்ட் இயக்கம், இணையப் பக்கம் இறங்குவதில் வேகம், சிறப்பான பாதுகாப்பு வசதிகள் மற்றும் பல ஆட் ஆன் புரோகிராம்கள் இதற்கு முதல் இடத்தை வழங்கியுள்ளன. மொஸில்லா வின் பயர்பாக்ஸ் பதிப்பு 10 அடுத்த இடத்தைப் பிடித்துள்ளது. இதன் எச்.டி.எம்.எல்.5 கிராபிக்ஸ் இயக்கம் மற்ற எந்த பிரவுசரைக் காட்டிலும் கூடுதல் வேகத்தினைத் தருகிறது. இதன் இன்னொரு தனிச் சிறப்பு, இதற்கென உருவாக்கப் பட்டுள்ள பல ஆயிரக்கணக்கான ஆட் ஆன் புரோகிராம்கள். இவற்றின் மூலம் இணையத்தில் உலா வருவது எளிதாகவும், வேடிக்கையான ஓர் அனுபவமாகவும் உள்ளது. 
மைக்ரோசாப்ட் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9, சற்று குறைவான மதிப்பெண் களே பெற்றது. உங்கள் பிரவுசருக்கான தீம் எதனையும் இது தருவதில்லை. இந்த வகையில் வாடிக்கையாளர்களுக்கு இது ஏமாற்றத்தைத் தருகிறது. மேலும் விண்டோஸ் லைவ் மெஷ் பயன்படுத்தாமல், நாம் ஏற்படுத்தி வைத்திருக்கும் பேவரிட் தளங்களின் முகவரிகளை இணைக்க முடியாது. ஆனால், பாதுகாப்பு அம்சங்களைப் பொறுத்தவரை இது சிறப்பாகவே இயங்குகிறது. எச்.டி.எம்.எல். 5 குறியீடுகளை மிக வேகமாக இயக்குகிறது. இந்த இரண்டின் செயல்பாட்டில் இது மற்ற பிரவுசர்களுக்கு இணையாக இயங்குவது குறிப்பிடத்தக்கது.
இனி ஒவ்வொரு பிரவுசரின் நிறை குறைகளைக் காணலாம்.

1. கூகுள் குரோம் பதிப்பு 17: மொத்தத்தில் முதல் இடம் பிடித்துள்ள பிரவுசர். இணைய தளங்களைப் பார்த்துக் கொண்டிருக்கையில், அவை முடங்கிப் போனால் பிரவுசரின் இயக்கத்திறனை நிறுத்தாமல், அவற்றை மட்டும் மூடும் சிறப்பினை இந்த பிரவுசர் கொண்டுள்ளது. இதன் பல அடுக்கு பாதுகாப்பு (Sandbox) கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்களைத் தடுக்கிறது. மனதைக் கவராத அம்சங்கள் என்று எடுத்துக் கொண்டால், ஆர்.எஸ்.எஸ். ரீடர் இணைத்துத் தரப்படாததனைச் சொல்லலாம்; அடுத்து இதன் டிசைன் மிகவும் அழகாக இல்லாதது இணையப் பயனாளர்களைக் கவர்வதில்லை. 
இதன் மற்ற சிறப்பம்சங்கள்: பயன்படுத்துவதில் எளிமை, அதிக எண்ணிக் கையில் எக்ஸ்டன்ஷன் வசதிகள், ஆட் ஆன் புரோகிராம்கள், மிகச் சிறந்த இயக்கம் ஆகியவை. இவை அனைத்தும் தொடக்க நிலை இணையப் பயனாளருக்குத் தெரியாமலோ, தேவை இல்லாமலோ இருக்கலாம். ஆனால், அனைவரின் எதிர்பார்ப்புகளை இது நிறைவேற்றுகிறது. இணையப் பக்கங்களை, அவற்றில் எத்தனை கிராபிக்ஸ் ஆப்ஜெக்ட் கள் இருந்தாலும், நான்கு விநாடிகளில் இறக்கித் தருகிறது. பிப்ரவரியில் வெளியான இதன் பதிப்பில், இணைய முகவரியை டைப் செய்திடத் தொடங்குகையிலேயே அந்த பக்கத்தைத் தருவது இதன் அதிமுக்கிய சிறப்பாக உள்ளது. 
வேறு மொழிகளில் உள்ள இணைய தளம் இறங்குகிறது எனில், உடனே அதனை மொழி பெயர்த்துத் தரும் பணியில் குரோம் இறங்குகிறது. மொழி பெயர்ப்பு மிகச் சரியாக இல்லை என்றாலும், அப்பக்கத்தைப் பற்றி அறிந்து கொள்ள இது உதவுகிறது. 

2. மொஸில்லா பயர்பாக்ஸ் பதிப்பு 10: பலவகைச் சிறப்புகளைக் கொண்ட ஓர் அருமையான பிரவுசர். எச்.டி.எம்.எல். 5 இயக்கம் மற்றும் ஆயிரக்கணக்கான ஆட் ஆன் புரோகிராம்கள் இதன் சிறப்புக்கு அடிப்படை. ஆனால் தேவையற்ற அல்லது அதிகமான ஆட் ஆன் தொகுப்புகள், பிரவுசரின் வேகத்தை மட்டுப்படுத்துவது இதன் பலஹீனமே. மார்ச், 2011 ல் பதிப்பு 4 வந்த பின்னர், இன்று வரை ஆறு பதிப்புகள் வந்துள்ளன, மொஸில்லா வாடிக்கையாளர்களின் தேவைகளைத் தொடர்ந்து கணித்து வருவதனைக் காட்டுகிறது. இதில் டேப்களை குழுக்களாக அமைத்துப் பிரித்து வைத்து எளிதாக இயக்கலாம். பாப் அப் பில்டர், பிரைவேட் பிரவுசிங் போன்றவை இதன் மற்ற சிறப்புகள். 

3. இன்டர்நெட் எக்ஸ் புளோரர் பதிப்பு 9: பாதுகாப்பில் இதன் தனித் தன்மையை மற்ற பிரவுசர்கள் கொண்டிருக்கவில்லை. எச்.டி.எம்.எல். 5 இயக்கத்தில் இதுவே அதிக வேகம் கொண்டுள்ளது. இதன் டேப்களைக் கையாள்வதில் சற்று சிரமமாக உள்ளது. எளிமையில் மிகவும் பின் தங்கி உள்ளது. 
ஒவ்வொரு தனி நபருக்குமாக, குறிப்பிட்ட தளங்களைத் தொடர்ந்து தடுத்துவிடும் வசதி தரப்பட்டுள்ளது. இதன் புக்மார்க்குகளை மற்றவற்றில் இணைப் பதில் இன்டர்நெட் எக்ஸ்பு ளோரர் எதுவும் செய்யவில்லை என்பது தீராத குறையாக உள்ளது. தீம்கள் மற்றும் ஸ்பெல்லிங் செக் செய்திடும் வசதி இல்லாதது, பலருக்கு ஏமாற்றத்தைத் தரும்

பதிவு செய்த நாள் : மார்ச் 26,2012 IST
பன்னாட்டளவில் மொபைல் போன்களைத் தயார் செய்து விற்பனை செய்துவரும் நோக்கியா நிறுவனம், தான் எந்த லாட்டரியும் நடத்தவில்லை என அறிவித்துள்ளது. மார்ச் இரண்டாம் வாரத்தில் வெளியிட்ட இதன் அறிக்கையில், பல நாடுகளில் இருந்து வாடிக்கையாளர்கள் தாங்கள் "நோக்கியா லாட்டரியில்' பங்கு கொண்டதாகவும், அதன் முடிவுகளை எதிர் நோக்கி இருப்ப தாகவும், பல இணைய மையங்களில் எழுதி உள்ளனர். 
இன்றைய சூழ்நிலையில் உழவு முறைகளில் குறிப்பிட்ட மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளன மற்றும் பல்வேறு புதிய முறைகளான மிகக்குறைந்த உழவு, பூஜ்ய உழவு, தாள் போர்வை உழவு ஆகியவை அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.
மிகவும் உயர்ந்துவரும் (கச்சா) எண்ணெய் விலையினால் குறைந்த உழவுமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் பழமையான உழவு முறையில் ஏற்படும் பிரச்னைகளும் காரணம். தொடர்ந்து அதிகமாக இயந்திரங்களை பயன்படுத்துவதினால் மண் கட்டமைப்பு பாதிப்பும், கடின மண் தட்டும் ஏற்படும். மற்றும் மண் அரிப்பிற்கு வழிவகுக்கிறது.
பூஜ்ய உழவு முறை: உழவற்ற நிலையிலேயே பூஜ்ய உழவு என அழைக்கப்படுகிறது. குறைவான உழவு முறையின் குறைந்தபட்ச நிலையிலோ பூஜ்ய உழவு ஆகும். முதன்மை உழவு முழுவதுமாக தடுக்கப்படுகிறது மற்றும் வரிசைப்படுத்துதல் விதைப்படுக்கை தயார் செய்யும் வரை மட்டும், இரண்டாம் உழவு செய்யப்படுகிறது.
பூஜ்ய உழவுகளில் ஒரு முறை ஆகும். இந்த ஒரு தனித்துவமான ஒரே நேரத்தில் நான்கு வேலைகளை நிறைவேற்றுகிறது. பயிர் வரிசையில் குறுகிய வரிசையாக சுத்தம் செய்தல், விதைத்தலுக்கு ஏற்றவாறு துளையிடல், விதையினைத் துளையில் விதைத்தல் மற்றும் நன்றாக விதையினைகள் கொண்டு முதல் முன் பயிர் வரிசையை பெரிய சுவீப் மற்றும் வெட்டும் கத்திப்பகுதி சீரமைக்கிறது. மற்றும் (பிளான்டர்) நடவிற்கு துளையிடும் கொழு, விதைகளை விதைத்து மூடுவதற்கு ஏற்றவாறு குறுகிய துளைகளை ஏற்படுத்துகிறது.
பூஜ்ய உழவு முறையில் களைக்கொல்லியின் பயன்பாடு அதிகமாக இருக்கும். விதைப்பதற்கு முன் களைகளைக் கட்டுப்படுத்த, பரந்த வீரியம் கொண்ட இலக்கற்ற களைக்கொல்லி மருந்துகள் (எ.கா. பாராகுவாட், கிளைபோசேட்) பயன்படுத்தப்படுகிறது.
பழமையான உழவு முறை மண் அரிப்பை ஏற்படுத்துகிறது. பருவ காலங்களிலும் பயிர்கள் வளர்வதற்கு ஏற்றவாறு மண்வளத்தை பாதுகாக்க, தாள் போர்வை உழவு அல்லது தாள் போர்வை வேளாண்மை உதவுகிறது. இலையுதிர் காலங்களில் தாவரக் கழிவுகள் மேற்பரப்பில் பரவி போர்வையாக அமைகிறது. இது ஒரு வருடாந்திரப் பயிர் மேலாண்மை திட்டம் ஆகும். இதன்மூலம் மண் இளகுகிறது. தாவரக்கழிவுகளை சிறு துண்டுகளாக்குகிறது. மற்றும் களைகளை கட்டுப்படுத்த உதவுகிறது.
சுவீப்ஸ் / கத்திகள் பொதுவாக அறுவடைக்குப் பின் செய்யப்படும் முதன்மை உழவின்போது மண்ணை 12 முதல் 15 செ.மீ. ஆழம் வரை உழுகிறது. ஆழத்தைப் பொறுத்து, அடுத்துவரும் உழவு முறைகள் அமையும். பொதுவாக சட்டிக்கலப்பை போன்ற கருவிகள், தாவரக் கழிவுகள் அதிகம் உள்ளபோது முதன்மை உழவுக்கு பயன் படுத்தப் படுகிறது. இதனால் அக்கழிவுகள் மண்ணோடு நன்றாகக் கலக்கிறது மற்றும் விரைவாக மட்டுப்படுகிறது. ஆனால் ஓரளவு கழிவுகள் மண்ணில் காணப்படும்.
தீமைகள்:
* குறைந்த உழவு முறையில் விதை முளைப்புத் திறன் குறைவாக இருக்கும். 
* குறைந்த உழவு முறையில் மட்கும் திறன் குறைவாக காணப்படும். 
* அவரை மற்றும் பட்டாணி போன்ற பயறுவகைத் தாவரங்களின் வேர் முடிச்சுகள் பாதிக்கப் படுகின்றன.
* வழக்கமான கருவிகளைக் கொண்டு விதைப்பு செய்வது கடினம்.
* தொடர்ந்து களைக் கொல்லிகளை பயன்படுத்தும் போது சுற்றுச்சூழல் மாசுபாடு ஏற்படுகிறது மற்றும் பல்லாண்டு வாழ் களைகள் அதிகம் வளருகின்றன.
-ஆர்.ஜி.ரீஹானா, 
அக்ரி கிளினிக், 89037 57427
சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் தகவல் தொடர்பு அதிகாரியாக இருப்பவர் ஆனந்த கிருஷ்ணன். இவர், அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த தமிழர். இவரது தந்தை கிருஷ்ணன், திருநெல்வேலி மாவட்டம் கங்கை கொண்டானைச் சேர்ந்தவர், இவரது தாய் சுபத்ரா, மகாகவியின் மாமனார் ஊரான கடையத்தைச் சேர்ந்தவர்.
படித்து முடித்ததும், அமெரிக்காவில் வேலை கிடைத்து, அங்கேயே செட்டிலாகி விட்ட கிருஷ்ணன் - சுபத்ராவின் மகன் ஆனந்த கிருஷ்ணன், படிப்படியாக முன்னேறி, தூதரக வேலையில் சேர்ந்து விட்டார். ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த, கிறிஸ்டைன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ரூபன், ரோகன் என்று பள்ளி செல்லும் இரண்டு குழந்தைகள்.
ஆனந்த கிருஷ்ணனின் பணியில், ஒரு பகுதி தென்னகத்தில் உள்ள மாணவ, மாணவியருக்கு, அமெரிக்க கல்வி பெறுவது எப்படி என்பதை எடுத்துச் சொல்வதாகும். இதற்காக, தமிழகத்தின் பின்தங்கிய மாவட்டங்களில் உள்ள மாணவ, மாணவியரை சந்தித்து பேசுவது, ஆனந்த கிருஷ்ணனிடம் உள்ள சிறப்பம்Œம்.
இதன் ஒரு கட்டமாக, திருநெல்வேலி மனோன்மணியம் பல்கலைக்கழகத்துக்கு பயணம் மேற்கொண்டார். இவர் தன் நெல்லை பயணத்தை பற்றி, பெற் றோருக்கு சொல்லவும், அவர்களுக்கு மலரும் நினைவுகள் வர, நெல்லை தாமிரபரணி துவங்கி, கடையம் வரையிலான சிறப்புகளை சொன்னதுடன், தாங்களும் வருவதாகக் கூறி, அதன்படியே வந்து விட்டனர். கல்லூரி பணி முடித்து, ஆனந்த கிருஷ்ணனின் குடும்பம், தாமிரபரணி கரையோரமாக பயணம் மேற்கொண்டது.
ஆனந்த கிருஷ்ணன், அவரது மனைவி குழந்தைகள் மற்றும் பெற்றோருடன் ஒவ்வொரு இடத்தையும் ரசித்து பார்த்தார். மகாகவியின் பாதம் பட்ட கடையத்தில், என் பாதம் படுவது புண்ணியம் என்றபடி, அந்த தெருவில் காரைவிட்டு இறங்கி நடந்தே சென்றார்.
அம்பாசமுத்திரம் ஆனந்தபவன் ஓட்டல் சாப்பாடு, குற்றாலம் குளியல், கங்கை கொண்டான் ஈஸ்வரன் கோவில் தரிசனம் என்று ஒவ்வொன்றிலும் ஆழ்ந்த ரசனையை வெளிப்படுத்தினர்.
பயணத்தின் முடிவில்தான் ஒரு சுவாரசியம் ஏற்பட்டது. சிற்றுண்டி சாப்பிடுவதற்காக, குற்றாலம் செங்கோட்டை ரோட்டில் உள்ள ஓட்டலுக்குள் நுழைந்ததும், அங்குள்ள ஓட்டல் ஊழியர்கள், "டிவி'யை ஓட விட்டனர். எல்லாரும், "டிவி'யின் பக்கம் தங்கள் கவனத்தை திருப்ப, ஆனந்த கிருஷ்ணனின் குழந்தைகள் ரூபனும், ரோகனும் அதை கொஞ்சமும் பொருட்படுத் தாமல், தோட்டத்து செடி, கொடிகளை ஆராய்ந்து கொண்டு இருந்தனர்.
எளிமையின் உருவமாக இருந்த குழந்தைகளின் தாய், கிறிஸ்டைன் பேசுகையில், "என்னோட குழந்தைகளுக்கு, "டிவி' என்றால் என்னவென்று தெரியுமே தவிர, அதில் கொஞ்சமும் விருப்பமில்லை; அதை திரும்பிக்கூட பார்க்க மாட்டார்கள். காரணம், நாங்களும் அப்படி இருப்பதால் தான்.
"அதே போல, அறிமுகமில்லாத உணவை தொடக்கூட மாட்டார்கள், பொது இடங்களில், சிறுநீர் போக மாட்டார்கள், குப்பைகளை அதற்கான தொட்டி கிடைத்தால் போடுவர், அதுவரை, தங்களது பைகளிலேயே சுமந்து கொண்டு இருப்பர். இயற்கையான விஷயங்களில், மிகவும் ஆர்வம் காட்டுவர். எளிமையான உணவையே எடுத்துக் கொள்வர், நிறைய படிப்பர்; அதைவிட, நிறைய சந்தேகம் கேட்பர். மொத்தத்தில் அமைதியான, ஒழுக்கமான, அன்பான, அறிவான குழந்தைகளாகத்தான், நாங்கள் வளர்க்கிறோம்; அவர்களும் அப்படியேதான் வளர்கின்றனர், வளர்வர்...' என்று கூறி முடித்தார்.

நாமக்கல்: பள்ளிக்கல்வி பயிலும் மாணவர்களுக்கு, இலவச பாடப் புத்தகம் வழங்கப்படும் என்ற அறிவிப்பை, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வரவேற்றுள்ளது.
சங்கத்தின் மாநில தலைவர் கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக அரசு, 2012-13ம் நிதி ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையில், பல வரவேற்கத்தக்க அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. எனினும், ஆசிரியர், அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்பு மற்றும் கோரிக்கைக்கு தீர்வு காணப்படாதது ஏமாற்றத்தை உருவாக்கியுள்ளது. சட்டசபை தேர்தல் வாக்குறுதி திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தும் வகையில், 2012-13ம் ஆண்டு நிதி ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை அமைந்துள்ளது.
பள்ளிக்கல்வி பயிலும் மாணவர்களுக்கு, இலவச பாடப் புத்தகம் வழங்கப்படும் என்ற அறிவிப்பு மட்டுமே, பள்ளிக் கல்வியில் புதிய அறிவிப்பாகும். இது, வரவேற்கத்தக்க அறிவிப்பாகும். எனினும், தமிழகத்தின் பள்ளி கல்வித்துறையின் தேவைக்கு ஏற்ப, 30 சதவீத நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். மத்திய அரசுக்கு இணையான ஊதியம்போல், ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது
Dinamalar cartoon

Wednesday, March 28, 2012

அஷ்டம சனி என்ன செய்யும்..? என்ற கேள்விக்கு ஏழரை சனியில் எவ்வளவு கஷ்டம் தருமோ அந்த கஷ்டத்தை இரண்டரை வருடத்திலே சனி கொடுத்துவிடுவார் என்பதுதான் பொதுவான பதிலாக இருக்கிறது.கும்ப ராசிக்காரர்களுக்கு இப்போது அஷ்டம சனி முடிந்து மீனம் ராசிக்காரர்களுக்கு அஷ்டம சனி தொடங்கியிருக்கிறது.குமப ராசிக்காரர்கள் அளவுக்கு மீனம் ராசிக்காரர்கள் கஷ்டப்படுவர் என சொல்ல முடியாது.கும்பம் ராசியினர் பொதுவாகவே தாழ்வு மனப்பான்மையினர்.வாழ்வில் அதிக போராட்டம் அனுபவித்து வரக்கூடியவர்கள். ,மற்றவர்களிடமிருந்து ஒதுங்கி வாழக்கூடியவர்கள்..அடிக்கடி தடங்கல்களை அனுபவிக்ககூடியவர்கள்.அப்படிப்பட்டவர்களுக்கு அஷ்டம சனி வந்தால் கஷ்டம் அதிகமாகவே இருக்கும்.அதை அனுபவித்து,ஒருவழியாகி,முடிந்துவிட்டது.இனி கவலைப்படாதீர்கள்.

Tuesday, March 27, 2012

சென்னை: பட்ஜெட் குறித்து தி.மு.க., தலைவர் கருணாநிதி பேட்டி:பட்ஜெட்டில் 1,500 கோடி ரூபாய்க்கு வரி போட்ட பிறகாவது, நம்முடைய மக்களுக்கு தாங்கள் செய்த தவறை உணரக்கூடிய நிலைமை வரும் என்றால், இன்னும் கூட அதிகமாக வரி போட்டிருக்கலாம். பட்ஜெட்டிற்கு சில எதிர்க்கட்சிகள் எதிர்ப்பைத் தெரிவித்திருக்கிறார்கள். ஆனால், டில்லியிலே எதிர்க்கட்சியாக இருப்பவர்கள் தெரிவிக்கிற அளவுக்கு, இங்கே அவர்களால் தெரிவிக்க முடியவில்லை. 
Dinamalar cartoon
Current events

குரூப்-1குரூப்-2குருப்-4 பணிகளில் 10 ஆயிரம் காலி இடங்களை நிரப்புவது தொடர்பான அறிவிப்புகள் இந்த மாதம் இறுதிக்குள் வெளியிடப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. தலைவர் ஆர்.நட்ராஜ் தெரிவித்தார்.

சென்னை வேப்பேரி கால்நடை மருத்துவக் கல்லூரி ஆண்டுவிழா கல்லூரி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. ஆண்டுவிழா முடிவடைந்த பின்னர் டி.என்.பி.எஸ்.சி. தலைவர் ஆர்.நட்ராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-

அரசு பணிகளுக்கான நியமனங்கள் வெளிப்படையாக இருக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துள்ளோம். ஏற்கனவே நடத்தப்பட்ட குரூப்-2 மற்றும் கிராம நிர்வாக அதிகாரி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதேபோல் உடல் ஊனமுற்றவர்களுக்காக நடத்தப்பட்ட சிறப்பு குருப்-4 தேர்வின் முடிவையும் வெளியிட்டு இருக்கிறோம்.

குரூப்-1குரூப்-2குரூப்-4 பதவிகளில் 10 ஆயிரம் காலி இடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அரசின் வெவ்வேறு துறைகளில் இருக்கும் காலி இடங்கள் பெறப்பட்டு மேற்கண்ட பணிகளுக்கான போட்டித்தேர்வுகள் பற்றிய அறிவிப்புகள் மார்ச் மாதம் 31-ந் தேதிக்குள் வெளியிடப்படும்.

ரேஷன் கார்டை புதுப்பிக்க மேலும் ஒருமாத காலம் அவகாசம் அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது. ரேஷன் கடைக்கு வர இயலாதவர்கள் வீடுகளில் இருந்தபடியே ஆன்-லைனில் புதுப்பிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.
 
ரேஷன் கார்டுகளின் செல்லத்தக்க காலத்தை இந்த ஆண்டு ஜனவரி 1-ந் தேதியில் இருந்து வரும் டிசம்பர் 31-ந் தேதி வரை ஓராண்டிற்கு நீட்டிக்க முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டார். மேற்படி உத்தரவின்படி புழக்கத்தில் உள்ள ரேஷன் கார்டுகளில் வருடம் குறிப்பிடாமல் உள்ள கூடுதல் தாளின் மேற்பகுதியில் 2012 என்று முத்திரையிட்டு செல்லத்தக்கதாக அறிவிக்கப்பட்டது.

புதுப்பிப்பதற்கான கால அவகாசம் பெப்ரவரி 28 வரை அளிக்கப்பட்டது. மொத்தம் உள்ள ஒரு கோடியே 97 லட்சத்து 70 ஆயிரத்து 682 ரேஷன் கார்டுகளில் இதுவரை ஒரு கோடியே 86 லட்சத்து 58 ஆயிரத்து 768 ரேஷன் கார்டுகள் புதுப்பிக்கப்பட்டு உள்ளன. ரேஷன் கார்டை புதுப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. இதனை கனிவுடன் பரிசீலித்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாரேஷன் கார்டை புதுப்பிக்க மேலும் ஒரு மாத காலத்திற்கு அதாவது மார்ச் 31-ந் தேதி வரை அவகாசம் அளிக்க உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி இருப்பிட ஆதாரமாக வழங்கப்பட்டுள்ள வெள்ளை மற்றும் மஞ்சள் நிற தட்கல் ரேஷன் கார்டு வைத்திருப்போர் மற்றும் அரிசிசர்க்கரை விருப்ப ரேஷன் கார்டுகள் வைத்துள்ள உடல்நல குறைவு காரணமாக நடக்க இயலாதோர்வயது முதிர்வு காரணமாக ரேஷன் கடைக்கு வர இயலாத குடும்ப அட்டைதாரர்கள்புனிதப்பயணம் மற்றும் மதம் சார்ந்த உள்ளிருப்பு விரதம் மேற்கொண்டுள்ளோர் மற்றும் புதுப்பித்தல் நடைபெற்ற காலத்தில் தற்காலிகமாக வெளிïர் சென்றவர்கள் ஆகியோர் பயனடையும் வகையில் அவர்களது ரேஷன் கார்டுகளை ஆன்-லைன் முறையில் புதுப்பித்துக் கொள்ள இணையதள வசதி செய்து கொடுக்கப்பட்டு உள்ளது.

இணையதள முகவரி

என்ற இணையதள முகவரிக்கு சென்று புதுப்பித்து கொள்ளலாம். இதில் ரேஷன் பொருள் வேண்டுவோர் 2012-ம் ஆண்டிற்கான கால நீட்டிப்பு தாளின் இரண்டு நகல்களை எடுத்துக்கொண்டு ஒரு நகலை குடும்ப அட்டையில் ஒட்டிக் கொண்டும்மற்றொரு நகலை உரிய கடைக்காரரிடம் அளித்து ரேஷன் பொருட்களை தொடர்ந்து பெற்றுக் கொள்ளலாம்.

ரேஷன் பொருள் வேண்டாதவர்கள் மற்றும் இருப்பிட சான்றாக மட்டுமே வைத்துக் கொண்டுள்ளவர்கள் இணையதளத்தில் உள்ள 2012-ம் ஆண்டுக்கான கால நீட்டிப்பு தாளின் ஒரு நகலை அவர்களுடைய குடும்ப அட்டையில் ஒட்டிக் கொண்டால் மட்டும் போதுமானது.

இந்த இணையதள வசதி நாளை (மார்ச் 1) முதல் 31-ந் தேதி வரையில் நடைமுறையில் இருக்கும். மேற்படி இந்த வசதியை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று உணவுத்துறை அமைச்சர் இரா.காமராஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.
நம்முடைய பொழுதுகள்
ஒவ்வொன்றையும்
என் நினைவுப் பேழையில்
மிகக் க‌வனமாகச்
சேகரித்து வைத்திருந்தேன்

வேடிக்கையாகப் பேசத் தொடங்கிய
அந்த முன்மதிய மழை நாள்

உன் வருகைக்காக
நகம் கடித்துக் காத்திருந்த பகல்கள்

சிறு புன்னகையை
எப்போதும்
தேக்கி வைத்திருக்கும்
உன் விழிகளிலிருந்து
மீள முடியாமல் தவித்த பின்னிரவுகள்

செல்லக் கோபங்களுக்குப் பிறகு
உன் அன்பில் திளைத்த நாட்கள்

தொலை தூரத்திலிருந்து
உன் வசீகரக் குரல் கேட்டுப்
பரவசப்பட்ட நொடிகள்

நம் இயலாமைகளின்
உச்சங்கள் வெளிப்பட்டு
என் கனவு நீர்க்குமிழியென‌
உடைந்த அந்த இறுதிக் கணம்

என ஒவ்வொன்றையும்
மிகக் கவனமாகச்
சேகரித்து வைத்திருந்தேன்

தனிமை தளும்பும்
இந்த அதிகாலை வேளையில்
அப்பேழையைத் திறந்து
ஒவ்வொரு பொழுதாக‌
எடுத்துப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்

வலிகளைக் கிளரும்
அவற்றை அழித்துவிடும் என் முயற்சிக‌ள்
தோல்வியையே த‌ழுவுகின்ற‌ன‌

அவற்றில் நிரம்பியிருக்கும்
உன்னுடைய பிரியங்களை
இன்னும் இன்னும் வெறியுடன்
நேசிக்கத் தொடங்குகிறேன்     thanks to tamil

தலையை அழுத்தும் உனது வேலைப்பளுவுக்கிடையில் இதுவும் ஒரு கடமை என நினைத்து நீ இதனை வாசித்துக் கொண்டிருக்கக் கூடும்.. அல்லது உறக்கம் வராத மழைக்காலப் பின்னிரவொன்றில் காளான்களாய் முளைக்கும் என்னைப் பற்றிய நினைவுகள் உன்னை இங்கு கொண்டு வந்திருக்கலாம்..

மாலை நடைப்பயிற்சிக்குப் பின்பு சற்று ஓய்வாக ஹட்சன் நதிக்கரைப் புல்வெளியில் அமர்ந்து நதியின் சலனத்தைக் கவனித்துக் கொண்டிருந்தேன்.. அப்போது எனது புறங்கையில் விழுந்து பலநூறு முத்துக்களாய்ச் சிதறிய மழைத்துளியொன்று தான் உன் நினைவுகளை இழுத்து வந்து விட்டது.. மழைத்துளிகள் விழுவதையும், மறுகணம் உடைந்து மறைவதையும் கண்கொட்டாமல் ரசிக்க முடிகிற நம்மால், வாழ்வு உறவுகளை இணைப்பதையும், கணநேரத்தில் தொலைவில் நகர்த்தி விடுவதையும் ரசிக்க முடியாதிருப்பதும் தான் ஏனென்று புரியவில்லை.

இது போன்ற மழை நாட்க‌ளில் மணிக்கணக்காய் நாம் கதை பேசிய காலங்கள் நினைவிருக்கிறதா? எனக்குள் தேங்கிக் கிடந்த குழந்தைமையை, இறுகிக் கிடந்த சுயத்தை நீ வெளிக் கொண்டு வந்ததும், அசாத்தியப் பொறுமையுடன் எனது உளறல்களை நீ செவிமடுத்ததும்..  ம்ம்.. இன்று, பரபரக்கும் பெருநகர வாழ்வில் கனவுகளைத் துரத்தியபடி நீ ஓடிக் கொண்டிருக்கிறாய்.. பேசக் கிடைக்கும் அந்தச் சில நிமிடங்களிலும் சின்னச் சின்ன விசாரிப்புகள் மட்டுமே சாத்தியமாகிறது. யதார்த்தம் புரிந்தாலும் எப்படியோ வந்து விடுகின்றது சில கண்ணீர்த் துளிகள். 

இங்கேயும் மனிதர்கள் பலவிதமாகத்தானிருக்கிறார்கள். பழகுவதற்கு முன்பே நம்மைப் பற்றி ஒரு பிம்பத்தை உருவாக்கிக் கொள்கிறார்கள். நெருங்கி வருவதற்கான சந்தர்ப்பம் வாய்க்கும் பொழுதில் நம்மைப் பற்றிய அந்தப் பிம்பம் குறுக்கீடாக வந்து அவர்களை அலைக்கழிக்கும் போலும். ஒருவரை ஆழ்ந்து நேசிக்க அவ்வளவு எளிதாக முடிவதில்லை.

உறவுகளை அவரவர் பலவீனங்களோடு ஏற்றுக் கொள்ளும் பக்குவம் உன்னைப் போல எல்லோருக்கும் இருப்பதில்லை.  எதிர்பார்ப்புகளற்ற பிரியத்தைத் தந்தவன் நீ..  தனிமையிலும், பாட வேளைகளிலும், உறக்கம் கலைந்த அதிகாலையிலும் உள்ளம் கனத்துப் போவது இதனால் தானோ என்னவோ?.. இது போன்ற வெறுமையை,  பிரிவை நீயும் உணர்ந்திருக்கிறாயா?

பிறிதொரு நாளில் உன்னருகேயமர்ந்து இதுவரை பேசாத அனைத்தையும் பேச வாய்த்தால் ஒரு வேளை இதற்கான விடை கிடைக்கலாம். அதுவரை, உலகின் ஒரு கோடியில் நானும் மறுகோடியில் நீயுமென‌ அன்றாட அலைக்கழிதல்களுக்குள் நம்மைத் தொலைத்திருப்போம், நீ நீயாக.. நான் நானாக.. மாமரத்துக் கிளிகளையும், அணில்களையும் விசாரித்தேனென்று சொல்.. அம்மாவையும்..
thanks to tamil