குரூப்-1, குரூப்-2, குருப்-4 பணிகளில் 10 ஆயிரம் காலி இடங்களை நிரப்புவது தொடர்பான அறிவிப்புகள் இந்த மாதம் இறுதிக்குள் வெளியிடப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. தலைவர் ஆர்.நட்ராஜ் தெரிவித்தார்.
சென்னை வேப்பேரி கால்நடை மருத்துவக் கல்லூரி ஆண்டுவிழா கல்லூரி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. ஆண்டுவிழா முடிவடைந்த பின்னர் டி.என்.பி.எஸ்.சி. தலைவர் ஆர்.நட்ராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-
அரசு பணிகளுக்கான நியமனங்கள் வெளிப்படையாக இருக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துள்ளோம். ஏற்கனவே நடத்தப்பட்ட குரூப்-2 மற்றும் கிராம நிர்வாக அதிகாரி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதேபோல் உடல் ஊனமுற்றவர்களுக்காக நடத்தப்பட்ட சிறப்பு குருப்-4 தேர்வின் முடிவையும் வெளியிட்டு இருக்கிறோம்.
குரூப்-1, குரூப்-2, குரூப்-4 பதவிகளில் 10 ஆயிரம் காலி இடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அரசின் வெவ்வேறு துறைகளில் இருக்கும் காலி இடங்கள் பெறப்பட்டு மேற்கண்ட பணிகளுக்கான போட்டித்தேர்வுகள் பற்றிய அறிவிப்புகள் மார்ச் மாதம் 31-ந் தேதிக்குள் வெளியிடப்படும்.
No comments:
Post a Comment