Thursday, June 16, 2016

வாஸ்து உண்மைகள் 15

மனையின் வடக்கு மற்றும் கிழக்கு பாகங்கள் உயர்வாக இருந்து மற்ற பக்கங்கள் இருப்பின் பொருளாதார தாழ்வு, வம்ச வளர்ச்சி பாதிப்பு போன்ற தீய விளைவுகளே ஏற்படும்.
மனையின் வடக்கு மற்றும் கிழக்கு சுற்றுச் சுவர்களில் கட்டிடங்கள் அமைத்து ஈசானிய மூலை மூடப்பட்டால் உரிமையாளரின் உடல்நலம் மிகவும் பாதிப்பிற்கு உள்ளாகும்.ஆயுள் குறையும்.வம்சவளர்ச்சி தடைபட்டு தீயவிளைவுகளே ஏற்படும்.
மனையின் வடகிழக்கு மூலை குறைவுபட்டலோ,வீட்டு அமைப்பில் வடகிழக்கு குறைவுபட்டலோ ஆண் வாரிசு இல்லாமல் போகும்.மீறி ஆண்வாரிசு இருந்தாலோ ஆயுள் குறைவாகவோ அல்லது முரட்டு குணம் கொண்ட தீய நடததையுள்ளவர்க்ளாகவோ இருக்கலாம்.
வடகிழக்கில் கட்டிடங்களை அமைத்து தென்மேற்கில் கிணறு போன்ற பள்ளமான அமிப்புகளிருந்தால் அந்த வீட்டில் துர்மரணம் ஏற்படும்.
வீட்டு மனையில் வடகிழக்கு மூலை நீண்டு அமைந்திருந்து, வீட்டு கட்டிட அமைப்பில் வடகிழக்கு பாதிப்படைந்தால் பெரியவர்கள் உயிரோடு இருக்க இளவயதினர் உயிர் பறிப்படையும்.
வடகிழக்கு இடத்தில குப்பைக் குழி அமைப்பதோ, கழிவறை அமைப்பதோ மிகவும் தீய பலன்களைத தரும் பொருளாதார தாழ்வு, அவப்பெயர்,தீராத நோய்கள் போன்ற பாதிப்பைத தரும். இங்கு சமையல் அறை இருப்பினும் இதே தீய பலன்கள் ஏற்படும்
மனையின் கிழக்கு பாகம் மேடாக இருந்தாலும்,கிழக்கு சுற்றுச் சுவற்றோடு சேர்ந்து கட்டிடம் அமைந்து இருந்தாலோ பொருளாதார வீழ்ச்சியும்,வம்சவளர்ச்சியும் பாதிக்கும். வாரிசுகள் அறிவுவளர்ச்சியில் குறைவாக இருக்கும்படியான தீய பலன்களே ஏற்படும்.
கிழக்குபாகத்தில் இடம் இல்லாமல் சுற்று சுவற்றோடு சேர்ந்து மேற்கில் சரிவாக அமைக்கும் வீட்டில் உள்ளோர் தீராத வியாதிகள் அல்லது நரம்பு சம்பந்தமான மற்றும் கண் சம்பந்தமான நோய்களால் பாதிப்பு அடைவார்கள்.
தென்கிழக்கில் கிழக்கிலிருந்து பாதைத்தாக்கம் உள்ள வீட்டில் உள்ள பெண் முரட்டு சுபாவத்துடன் மற்றவர்களுடன் அடிக்கடி சண்டையிடுபவளாகவும் இருப்பாள். ஆண் தவறான பழக்கங்களில் சிக்கித் தவிப்பார்கள்.
தென்மேற்கில் தெற்கிலிருந்து பாதைத் தாக்கம் உள்ள வீட்டில் உள்ள பெண் உடல்நல பாதிப்புடனும் தவறான பழக்கங்களுக்கும், இரத்த அழுத்தம், படப்படப்பு மற்றும் திடீர் மரணங்களும் ஏற்படலாம்.
மனையின் வடக்கில் இடமில்லாமலும் தெற்கில் அதிக காலியிடங்களுடனும் தென்மேற்கில், தெற்கில் கிணறு போன்ற பள்ளமான அமைப்பிருந்தால் அந்த வீட்டின் பெண்கள் தீராத நோய்களால் பாதிப்படைவார்கள். மனநலமும் பாதிப்பு அடையும. பொருளாதார வீழ்ச்சியும், திடீர் மரணங்களும் ஏற்படும்.
தென்கிழக்கு மூலை தெற்கில் அல்லது கிழக்கில் வளர்ச்சி பெற்று அதே மூலையில் கிணறு போன்ற பள்ளமான அமைப்புகள் இருந்தாலும், வடக்கு சுற்றுச் சுவற்றில் வீட்டை அமைத்து தெற்கில் அதிக காலியிடங்கள் இருந்தாலும், வடகிழக்கு மூடும் படியாக கட்டிடம் அமைந்திருந்தாலும் அந்த வீட்டில் பொருளாதார வீழ்ச்சி, கடன் தொல்லை, திருட்டு, தீவிபத்துக்கள் வழக்கு விவகாரங்கள் போன்ற தீய அமைப்பே தொடரும். ஆண் வாரிசுகள் குறைவு பட்டு பெண்களுக்கான சொத்தாக மாறும் அபாயம் உண்டு.
தெற்கில் அதிக காலியிடமிருந்து கிழக்கு, வடக்கு சுற்றுச் சுவர்களில் கட்டிடம் அமைத்து வடகிழக்கு பாதிப்படைந்து, தெற்கில் கிணறு போன்ற குழி அமைப்பிருந்து, தெற்கில் கூரை தாழ்வாக அமைந்திருந்தால் அந்த வீட்டின் பெண் துணை இழந்து தவிப்பாள். தீராத வியாதியாலும், தவறான பிள்ளைகளாலும் வேதனைப் படுவாள்.
வடகிழக்கு எல்லையில் கட்டிடம் அமைத்து, கிழக்கு வாசல் வைத்து மேற்கிலும் தெற்கிலும் அதிக காலியிடமிருக்கும் அக்னிமூலை மனையில் வசிக்கும் கணவன் மனைவி இருவரும் சண்டையிட்டு பிரிவார்கள், குழந்தைகள் நோயாலும், தவறான வாழ்வாலும் அலைக்களிக்கபடுவார்கள்.
மனையின் காளியிடதிலோ, வீட்டின் அறைகளிலோ தெற்கு பாகம் பள்ளமாக இருந்தால் பெண்களுக்கு தீராத நோய்களால் வேதனை, பொருளாதார வீழ்ச்சி மற்றும் திடீர் மரணம் ஏற்படும் .
தெற்கில் அதிக காலியிடமிருந்தால் பொருளாதார நஷ்டம், வீண் விவகாரங்கள், பெண்களுக்கு உடல்நலப் பாதிப்பு ஏற்படும்.
தென்மேற்கு மூலையில் மேற்கில் பாதைதாக்கம் இருந்தால் அங்கு கிணறு போன்ற பள்ளமான அமைப்பிருந்தால் அது ஆண்களை தீய வழியில் நடத்தி தற்கொலைக்கு தூண்டும், தீராத நோய்கள் போன்ற தீய பலன்களை ஆண்களுக்கு ஏற்படுத்தும் தவறான அமைப்பாகும்
மனையில் வடக்கு அல்லது கிழக்கு பாகத்தை விற்பனை செய்தால் பொருளாதார வீழ்ச்சியும், உடல்நல பாதிப்பு, தொழில் முடக்கம் ஏற்படும்.
தெற்கு திசையிலும், மேற்க்கு திசையிலும் சுற்றுச் சுவர்களில்லாமல் காலியிடமாக, மைதானமாக இருந்தால் பொருளாதார வீழ்ச்சி, அகால மரணம்,உடல்நலப் பாதிப்பு, மனநலப் பாதிப்பு தீய பழக்கங்கள் போன்ற தீய அமைப்புகளே நடைப்பெரும்.
மனையில் வீட்டு அறைகளில் கூரை அமைப்புகளில் மேற்கில் தாழ்வாக இருந்தால் பொருளாதார வீழ்ச்சி, உடல்நலப் பாதிப்பு தவறான பாதையில் சென்று நற்ப்பெயர் இழப்பு, போன்ற தீய காரியங்களே ஏற்படும். மேற்கு பாகத்தில் திண்ணைகள் தரை மட்டத்தை விட தாழ்வாக இருந்தால் மேற்சொன்ன பலன்களே ஏற்படும்.
வடமேற்கு மூலையில் வடக்கில் பாதைத் தாக்கம் இருந்தால் அது பெண்களின் உடல்நல பாதிப்பிற்கும், தவறான தீய பழக்கங்கள் ஏற்படவும் காரணமாகிறது.
வாய்விய மனையில் மேற்கில் முகப்பு வாசலிலிருந்து ஈசானிய மூலை மறைத்து வீட்டை கட்டினால் அந்த வீட்டார் பொருளாதார தாழ்விற்கு ஆளாகி வீட்டை விற்க வேண்டி வரும்.
வாய்விய மனையில் வடமேற்கில் வளர்ச்சியோ அல்லது அந்த பகுதி மறைத்து கட்டிடம் கட்டபட்டாலோ மன அமைதியின்றி அலைந்து திரிவார்கள் தற்கொலை போன்ற தவறான முடிவிற்கும் ஆளாவர்கள்.
வடக்கு பார்த்த மனையில் வடக்கில் காலியிடமில்லாமல், தெற்கில் அதிக காலியிடமிருக்குமாறு அமைந்த வீட்டில் பெண் உடல்நல பாதிப்படைந்து உயிரிழக்கச் செய்யும் படியான தீயபலன்களே ஏற்படும்.
வடக்கில் வீட்டில் தரையைவிட உயர்வான திண்ணைகள் அமைந்தால் பொருளாதார தாழ்வும், அனாவசியச் செலவுகளால் மன நிம்மதியின்மையும், கடன்சுமைகளும் போன்ற தீய பலன்களே ஏற்படும்.
வடக்கில் வீட்டில் தரையைவிட உயர்வான திண்ணைகள் அமைந்தால் பொருளாதார தாழ்வும், அனாவசியச் செலவுகளால் மன நிம்மதியின்மையும், கடன்சுமைகளும் போன்ற தீய பலன்களே ஏற்படும்.
வடகிழக்கில் கழிப்பிடம் போன்ற அமைப்புகளிருந்தல் வீட்டில் உள்ளோரிடயே கருத்து வேறுபாடுகளால் சண்டைச் சச்சரவுகள் அதனால் சுற்றுச் சுழலில் அவப்பெயர்கள், தவறான நடத்தைகள் பொருளாதார வீழ்ச்சி, உடல் நலக்குறைவு போன்ற தீயபலன்களே ஏற்படும்.......Sp Seethapathi

No comments: