Wednesday, June 15, 2016

வாஸ்து உண்மைகள் 13

பொதுவாக வீடு கட்டும் தாய், தந்தை மூத்த சகோதரர், ஆசிரியர், மூத்த உறவினர்கள் வாழும் பகுதிக்கு வடக்கு திசையிலும், கிழக்குத் திசையிலும், தான் மனை வாங்க வேண்டும்.. என்பது சாஸ்திரங்கள் கூறும் கருத்தாகும்.
வீட்டின் பகுதிகள்
அலுவலக அறை வடமேற்கு திசை
புத்தக அறை தென்மேற்குத் திசை
சமையல் அறை தென் கிழக்குத் திசை
உணவு புசிக்கும் அறை தெற்குத் திசை
படுக்கை அறை மேற்கு, வடகிழக்குத் திசைகள்
பூஜை அறை மேற்கு, வடகிழக்குத் திசைகள்
குளியல் அறை கிழக்கு திசை
சேமிப்பு அறை வடக்கு திசை. (UNDER GROUND)
கழிவறை வட மேற்கு திசை.              ஈசான்யத்தில் பிரச்சனை இருந்தால் தொழில் சரிவர அமையாது. சொந்த தொழில் செய்தாலும் சரி அல்லது வேலை க்கு செல்பவராயினும் சரி ஈசான்யம் தவறில்லாமல் இருக்க வேண்டும். அப்போதுதான் தொழில் நிறைவாக இருக்கும் வருமானமும் தடையின்றி வரும். ஈசான்யத்தில் - 1. மேடாக இருக்க கூடாது.2. அடைப்புகள் கூடாது. 3. வாயில் மற்றும் சன்னல்கள் நலம் 4. பாத்ரூம் மற்றும் லெட்ரின் கூடாது. 5. பாரமான பொருட்கள் வைக்க கூடாது. 6. சமையலறை, படுக்கை அறை கூடாது.7. கிணறு, போர்வெல் அல்லது நிலத்தொட்டி நலம்                  சிலர் வீட்டு வாயிலுக்கு முன்னால் road செல்லும் அமைப்பு இருக்கும் இவர்கள் தங்கள் வீட்டின் தளம் உயர அமைப்பை road ன் உயரத்தை விட உயரமாக அமைக்க வேண்டும். அப்போது தான் வாழ்க்கை உயர்வு இருக்கும் அப்படி இல்லாமல் road ன் உயர்வை விட வீட்டின் தளம் குறைவாக இருந்தால் என்ன முயற்சி செய்தாலும் வளர்ச்சி எட்டாக்கனி ஆகிவிடும்.                 பசுக்களுக்கு தீவனம் கொடுப்பது, நாய்களுக்கு biscuit கொடுப்பது, கோவில்களுக்கு சென்றால் மீன்களுக்கு பொரிபோடுவது மற்றும் அனாதை ஆசிரமங்களில் வசிக்கும் குழந்தைகளுக்கு அவ்வப்போது உதவிசெய்வது ஆகியவை செய்து வந்தால் நாளடைவில் vaasthu மற்றும் jathaga ரீதியான பிரச்சனைகளை தீர்க்க உதவிடும் வழிகளாகும்.              நாம் இருக்கும் இடத்திற்கு வடக்கு பகுதியில் நீரோடை அல்லது கால்வாய் மேற்கிலிருந்து கிழக்காகவோ மற்றும் கிழக்கு பகுதியில் தெற்கிலிருந்து வடக்கு நோக்கியோ செல்வது மிகவும் சிறப்பு. குடும்பம் மற்றும் வாழ்க்கை செழிப்பாக இருக்கும்.
அவ்வாறு இல்லாமல் மேற்கு பகுதியிலோ அல்லது தெற்கு பகுதியிலே நீரோடை அல்லது கால்வாய் இருப்பின் வாழ்வில் உயர்வை ஏற்படுத்தாது. வாழ்க்கை தரம் வளர்ச்சி அடையாது.             ஓட்டு வீடானாலும் சரி, சிமெண்ட் சீட் வீடானாலும் சரி அல்லது பெரிய காங்கிரீட் வீடானாலும் சரி வீட்டின் மேற்பகுதியில் கூம்பு போற்று அமைக்க கூடாது.
தெற்கு மற்றும் மேற்கு பகுதி சற்று உயர்ந்தும் வடக்கு மற்றும் கிழக்கு பகுதி சற்று தாழ்வாகவும் அமைக்க வேண்டும்                        தென் மேற்கு மூலையை நிறைய பேர் குபேர மூலை என கூறுகின்றனர் ! அந்த மூலை குபேர மூலை அல்ல "குகபர ஸ்தானம் " எனப்படும் ஒரு வாஸ்து பலம் பொருந்திய மூலை ஆகும்., இங்கு நைருதி என்ற அரக்கன் ஏற்கனவே அங்கிருந்த எமனை தெற்கு திசைக்கு விரட்டி விட்டு சூரியனை தன கையால் மறைத்து அங்கு இருளை உருவாக்கி அங்கு வசித்து வருகிறான்... இந்த இடத்தில் இருளில் செய்யும் எந்த பணிகளும் விருத்தி ஆகும் ! பணம் வைத்தால் பணம் விருத்தியாகும் ! எந்த பொருள் வைத்தாலும் அப்பொருள்கள் பெருகும் ! படுக்கை அறை இங்கு இருப்பின் சந்தோசம், இன விருத்தி ஆகுதல்., நோயின்மை போன்ற நன்மைகள் இருக்கும் ! நைருதியின் தலையிலும், எமன் தலையிலும் எடையை வைத்தல் இரண்டு பேரும் கொஞ்சம் அடங்குவார்கள் என்பதால் தான் தென் மேற்கு(நைருதி) மூலையில் இருந்து தெற்கு (எமன் ) திசை தாண்டி ஆக்கியேனம் தொடாமல் வீட்டின் பெரும்பகுதி இவர்கள் இருவரின் தலைமேல் வைப்பது போல வீடுகளை கட்டுவார்கள்...நைருதியில் பணம் பொருள் வைத்தல் வேறு எந்த திருடர்களோ மற்றும் வேறு எந்த சந்தர்ப்ப சூழ்நிலைகளோ பணம் பொருள்களை சேதம் செய்யாது ! அப்புறம் இதே பணம் பொருள்கள் மற்றும் களஞ்சியங்களை வடக்கு திசையான குபேரன் மூலையில் பூமிக்கு அடியில் வைக்கலாம் !                  தென் மேற்கு மூலையை நிறைய பேர் குபேர மூலை என கூறுகின்றனர் ! அந்த மூலை குபேர மூலை அல்ல "குகபர ஸ்தானம் " எனப்படும் ஒரு வாஸ்து பலம் பொருந்திய மூலை ஆகும்., இங்கு நைருதி என்ற அரக்கன் ஏற்கனவே அங்கிருந்த எமனை தெற்கு திசைக்கு விரட்டி விட்டு சூரியனை தன கையால் மறைத்து அங்கு இருளை உருவாக்கி அங்கு வசித்து வருகிறான்... இந்த இடத்தில் இருளில் செய்யும் எந்த பணிகளும் விருத்தி ஆகும் ! பணம் வைத்தால் பணம் விருத்தியாகும் ! எந்த பொருள் வைத்தாலும் அப்பொருள்கள் பெருகும் ! படுக்கை அறை இங்கு இருப்பின் சந்தோசம், இன விருத்தி ஆகுதல்., நோயின்மை போன்ற நன்மைகள் இருக்கும் ! நைருதியின் தலையிலும், எமன் தலையிலும் எடையை வைத்தல் இரண்டு பேரும் கொஞ்சம் அடங்குவார்கள் என்பதால் தான் தென் மேற்கு(நைருதி) மூலையில் இருந்து தெற்கு (எமன் ) திசை தாண்டி ஆக்கியேனம் தொடாமல் வீட்டின் பெரும்பகுதி இவர்கள் இருவரின் தலைமேல் வைப்பது போல வீடுகளை கட்டுவார்கள்...நைருதியில் பணம் பொருள் வைத்தல் வேறு எந்த திருடர்களோ மற்றும் வேறு எந்த சந்தர்ப்ப சூழ்நிலைகளோ பணம் பொருள்களை சேதம் செய்யாது ! அப்புறம் இதே பணம் பொருள்கள் மற்றும் களஞ்சியங்களை வடக்கு திசையான குபேரன் மூலையில் பூமிக்கு அடியில் வைக்கலாம் !                                    புதிதாக வீடு கட்டி குடியேரும் போது சிலருக்கு அந்த வீடு போன உடன் படிப்படியாக நல்ல காரியங்கள் எல்லாம் நடக்கும் . உடனே அந்த வீட்டை ராசியான வீடு என்கின்றனர். ஆனால் சில வீடுகள் குடியேறிய சில மாதங்களிலேயே அடுக்கடுக்கான பிரச்சனைகளை கொடுத்து அதளபாதாளத்தில் தள்ளி விடும். உடனே அந்த வீட்டை ராசியில்லாத வீடு என்கின்றனர். உண்மையில் ஏன் அந்த வீடுகள் இவ்வாறு பட்டம் பெறுகிறது என ஆராய்ந்து பார்த்தால் அந்த வீடுகளில் உள்ள vaasthu குற்றங்களே காரணமாகின்றன. Vaasthu பலம் உள்ள வீடு ராசியான வீடாக பெயர் பெற்று விடுகிறது. ஆனால் vaasthu பிழையுள்ள வீடு ராசியில்லாத வீடாக பெயர் பெற்று விடுகிறது.
ஒரு சிறிய உதாரணம். என் உறவினர் இரண்டு வருடங்களுக்கு முன் இடம் வாங்கி அவர்களே vaasthu பார்த்து வீடும் கட்டி குடியேறிவிட்டனர். அவருக்கு கடந்த 6 மாத காலமாக உடல் நல குறைவு தற்போது சிறு அறுவை சிகிச்சையும் செய்துவந்துள்ளனர்.
நான் இதற்கு என்ன காரணம் என அந்த வீட்டை ஆராய்ந்த போது என் கண்ணில் பட்ட vaasthu பிழைகள். 1. வீடு வடக்கு பார்த்த வீடு ,மொத்தம் 4 அறைகள். உள்ளே நுழைந்த்தும் hall, அடுத்து kitchen, அதற்கு மேற்கு அறை bed room, வடமேற்கு bed room . இதில் முன்னாடி காம்பவுண்ட் வடகிழக்கில் வைத்துள்ளனர் இது மிக சரி . ஆனால் அதே நேர் hall வாயில், kitchen வாயில், அதற்கு அடுத்து kitchen சன்னல் வைத்துள்ளனர் இவை மிக தவறு . முன்னாடி காம்பவுண்ட் ஈசான்யத்தில் வாயில் வைத்து அதற்கு நேரே hall மெயின் வாயில் வைக்கும் போது hall ன் வாயில் மொத்த வீட்டிற்கு வடகிழக்கு என கணக்கு செய்து வத்துள்ளனர் .ஆனால் இது அந்த அறக்கு வட மேற்காகிய நீச்ச பகுதி ,kitchen வாயிலும் வடமேற்காகிய நீச்ச பகுதி, kitchen சன்னல் அந்த அறைக்கு தென் மேற்கு இவை மூன்றும் தவறு. தென்மேற்கு bedroom வாயில் hall க்கு தென்மேற்கில் வருகிறது அதுவும் தவறு.
ஒவ்வொரு அறைக்கு வாயில் மற்றும் சன்னல் வைக்கும் போதும் அறையின் உச்ச பகுதியில் வைக்க வேண்டும். கட்டிடத்தின் மொத்த பகுதியை கணக்கிட்டு வைத்தால் அது மகா தவறு.
மேலும் அந்த வீட்டில் gift ஆக வந்த furniture அனைத்தும் வடக்கு கிழக்கு பகுதியில் போட்டு மேற்கு பகுதியை காலியாக விட்டுள்ளனர் இது மிக மிக தவறு.furniture எந்த அறையானாலும் தெற்கு மேற்கு பகுதியில் தான் வைக்க வேண்டும். இல்லையென்றால் வாழ்க்கை சுமை தாங்கி.
நான் அவரை பார்க்க சென்ற போது இந்த furniture களையாவது மேற்கில் வைத்து கிழக்கை காலியாக விடுங்கள் என கூறினேன் அதற்கு அவர்கள் மேலே ஒரு போர்சன் எடுத்து பின் இவைகளை அங்கு மாற்ற வேண்டும் என்றனர். Hospital மற்றும் மற்ற அனாவசிய செலவுகளை ஏற்படுத்தும் இந்த அமைப்புகளை சரி செய்யாமல் எப்படி மேல் போர்சன் எடுக்க முடியும்.                  வாஸ்துவில் சில வாஸ்தவமான வாக்கியங்கள பார்ப்போம். வீட்டின் பின்பக்கமோ, முன்பக்கமோ காளான் வளர்வது எந்த நல்லதுமில்ல. வேறோடு பிடுங்கி எறிஞ்சடுறது நல்லது, காக்கையோ ஆந்தையோ வீட்டில் வந்தா நீதிதேவன் நுழைச்சிட்டாரு, இனி அனர்த்தத்தாம்பாங்றது மூடநம்பிக்கை, அதுக்குப்போய்ட்டு வீட்ல இருக்கறவங்களுக்கு சாந்தி பூஜை நடத்தி, யந்திரம் மாட்டி எல்லார்க்கும் தாயத்து கட்டிவிடறதும் மூடநம்பிக்கை தான், இது நம் பலவீனத்த புரிஞ்சு தந்திரவாதிகள் பணம் பறிக்கற வேலையே தவிற. வேறொண்ணுமில்ல. அடுத்து இன்னொன்னு வீட்டில கிளி வளர்க்கலாமா ? சில வாஸ்து ஞானிகள் வளர்க்கலாம் என்பார்கள். அதற்கு திசையுங்காட்டுவாங்க. கிழக்கு ஆக்கிநேயத்தில் சுவத்துல ஒட்டாம , இந்த மாதிரி நான்கு திசையிலும் காம்பவுண்ட் சுவத்துக்கு ஒட்டாம கூண்டுகள் அமைக்கலாம்ன்னு. அது பெருந்தவறு காரணம் பக்ஷிகள் சுதந்திரமா பறந்து சுற்றித்திரிந்து வளர்வது , அதை கூண்டுக்குள் அடைத்து தீனிப்போட்டு வளர்த்தாலும் பாவம். இது உங்க வாழ்க்கைல பாதிப்ப குடுக்கலன்னாலும், உங்க சந்ததிங்க வாழ்க்கைல பாதிப்ப உண்டு செய்யும். அடுத்து இன்னொன்று அம்மா அப்பா இருக்கும்போது மகனோ மகளோ அடிக்கல் நடலாமாங்றது , பூமி பூஜை நடக்கறப்ப அவங்க இல்லன்னா மகனோ மகளோ செய்தாலும் தப்பில்ல           குடியிருக்கும் வீட்டில ஈசான்யங் குறைந்தும், சில வியாபாரிங்க லட்ச கணக்கல சம்பாதிக்கறத பார்த்திருக்கே. எமக்கே ஆச்சரியமா இருக்கும். எப்படி சாத்யமாகுன்னு மண்டய பிச்சுக்குவ , பிறகு தான் கண்டுபிடிச்ச காரணம் வியாபார ஸ்தலத்தல ஈசான்ய நுழைவு வாயில் மற்றும் ஸ்தலத்துக்குள்ள வாஸ்து குத்தமில்ல. ஈசான்யங் குறைஞ்சா வெறும் பணப்ரச்சனை மட்டுமில்ல. ஒரு மனுஷனுக்கு பணமட்டுமே சுகத்த கொடுக்கறதில்ல. சரீரத்திற்கு ஆரோக்யமில்லாம போயிட்டா கோடி கோடியாயிருந்தாலும் என்ன பலன் ? அவங்க வசிக்கற இடத்தில் ஈசான்யங் பலங்குறைஞ்சு , மற்ற அசுப பலன் தரக்கூடிய தசைகள் பலம் பெற்றால், இப்படித்தான் சரீரம் பலங்குறைந்து ஈட்டிய பணமெல்லாம் மருந்துக்கும் மருத்துவர்கள் ஐயாக்களுக்காக தான் போய் சேரும். சோடா இது திரவம் . கியாஸுக்கும் தொடர்பு இருக்கு, முக்கால் பாகம் லாபந்தரும். அரசியல் பதவிகள், காண்ட்ராக்டுகள், அதிக லாபத்தை தரக்கூடிய பணிகள். வாழுமிடத்திலாவது. மேற்கூறிய பணிகள் செயல்படும் அலுவலகத்திலாவது, வாஸ்து குற்றங்கள் இருக்குமாயின் இதயத்தில் பிணிகள் முள்ளாயுருவாகி துளைகளுண்டாக்கும்...........thanks to Sp Seethapathi

No comments: