நம்முடைய பொழுதுகள்
ஒவ்வொன்றையும்
என் நினைவுப் பேழையில்
மிகக் கவனமாகச்
சேகரித்து வைத்திருந்தேன்
வேடிக்கையாகப் பேசத் தொடங்கிய
அந்த முன்மதிய மழை நாள்
உன் வருகைக்காக
நகம் கடித்துக் காத்திருந்த பகல்கள்
சிறு புன்னகையை
எப்போதும்
தேக்கி வைத்திருக்கும்
உன் விழிகளிலிருந்து
மீள முடியாமல் தவித்த பின்னிரவுகள்
செல்லக் கோபங்களுக்குப் பிறகு
உன் அன்பில் திளைத்த நாட்கள்
தொலை தூரத்திலிருந்து
உன் வசீகரக் குரல் கேட்டுப்
பரவசப்பட்ட நொடிகள்
நம் இயலாமைகளின்
உச்சங்கள் வெளிப்பட்டு
என் கனவு நீர்க்குமிழியென
உடைந்த அந்த இறுதிக் கணம்
என ஒவ்வொன்றையும்
மிகக் கவனமாகச்
சேகரித்து வைத்திருந்தேன்
தனிமை தளும்பும்
இந்த அதிகாலை வேளையில்
அப்பேழையைத் திறந்து
ஒவ்வொரு பொழுதாக
எடுத்துப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்
வலிகளைக் கிளரும்
அவற்றை அழித்துவிடும் என் முயற்சிகள்
தோல்வியையே தழுவுகின்றன
அவற்றில் நிரம்பியிருக்கும்
உன்னுடைய பிரியங்களை
இன்னும் இன்னும் வெறியுடன்
நேசிக்கத் தொடங்குகிறேன் thanks to tamil
ஒவ்வொன்றையும்
என் நினைவுப் பேழையில்
மிகக் கவனமாகச்
சேகரித்து வைத்திருந்தேன்
வேடிக்கையாகப் பேசத் தொடங்கிய
அந்த முன்மதிய மழை நாள்
உன் வருகைக்காக
நகம் கடித்துக் காத்திருந்த பகல்கள்
சிறு புன்னகையை
எப்போதும்
தேக்கி வைத்திருக்கும்
உன் விழிகளிலிருந்து
மீள முடியாமல் தவித்த பின்னிரவுகள்
செல்லக் கோபங்களுக்குப் பிறகு
உன் அன்பில் திளைத்த நாட்கள்
தொலை தூரத்திலிருந்து
உன் வசீகரக் குரல் கேட்டுப்
பரவசப்பட்ட நொடிகள்
நம் இயலாமைகளின்
உச்சங்கள் வெளிப்பட்டு
என் கனவு நீர்க்குமிழியென
உடைந்த அந்த இறுதிக் கணம்
என ஒவ்வொன்றையும்
மிகக் கவனமாகச்
சேகரித்து வைத்திருந்தேன்
தனிமை தளும்பும்
இந்த அதிகாலை வேளையில்
அப்பேழையைத் திறந்து
ஒவ்வொரு பொழுதாக
எடுத்துப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்
வலிகளைக் கிளரும்
அவற்றை அழித்துவிடும் என் முயற்சிகள்
தோல்வியையே தழுவுகின்றன
அவற்றில் நிரம்பியிருக்கும்
உன்னுடைய பிரியங்களை
இன்னும் இன்னும் வெறியுடன்
நேசிக்கத் தொடங்குகிறேன் thanks to tamil
No comments:
Post a Comment