Monday, April 30, 2012


ஏழைகளிடம் வசிக்கும் இறைவன்

15:10  IST
* நன்மை பெற வேண்டுமானால் வாழும் தெய்வமாகிய மனிதர்களை வழிபடுங்கள். அதாவது ஒவ்வொரு மனிதனையும் நேசிக்க கற்றுக் கொள்ளுங்கம்.
* கடவுளின் குழந்தைகளாகிய மனிதர்களுக்குத் தொண்டு செய்வதன் மூலம், ஆண்டவனுக்கு தொண்டு செய்தவனாகிறோம்.
* ஏழைகளிடமும், பலமற்றவர்களிடமும், நோயுற்றவர்களிடமும் இறைவனைக் காண்பவனே, அவரை உண்மையாக வணங்குபவனாவான்.
* எதிர்வாதம் எதுவுமின்றிக் குருவிற்குக் கீழ்ப்படிதலும், பிரம்மச்சரியத்தைக் கண்டிப்பாக பின் பற்றுதலும் வெற்றி பெறுதற்குரிய ரகசியங்களாகும்.
* பெரியவர்கள் பெரும் தியாகங்களைச் செய்கிறார்கள், அதன் விளைவாக வரும் தன்மைகளை மனிதகுலம் பெற்று அனுபவிக்கிறது.
* தெய்வீகத்தன்மை இல்லாமல் பெறுகிற மிதமிஞ்சிய அறிவும் ஆற்றலும் மனிதர்களைச் சாத்தான்களாக்கி விடுகின்றன.
* இரக்கம் உள்ள இதயம், சிந்தனை ஆற்றல் படைத்த மூளை, வேலை செய்யக்கூடிய கைகள் ஆகிய இந்த மூன்றும் நமக்குத் தேவையாகும்.
* எதைக் கண்டும் அஞ்சாதீர்கள். அச்சமுள்ளவன் உலகில் வாழத் தகுதியற்றவன்
- விவேகானந்தர் 

சிலிண்டர் இருப்பு 2 நாட்களுக்கே உள்ளதாம்...!

2 நாட்களுக்கே இருப்பு உள்ளதாம் சிலிண்டர்: தமிழகத்தில் மேலும் தட்டுப்பாடு!
 1/1 
புது டெல்லி, ஏப். 28 - நாடு முழுவதும் சமையல் சிலிண்டர்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் அவல நிலை உருவாகி உள்ளது. தமிழ்நாடு உட்பட தென் மாநிலங்களில் இன்னும் 6 நாட்கள் வரை சப்ளை செய்வதற்கு உரிய சிலிண்டர்களே இருப்பில் உள்ளன. இந்தியன் ஆயில் கார்பரேசன் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்கள் நிதி பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களில் உள்ளன. இதன் காரணமாக தேவையான எரிவாயு சிலிண்டர்களை பாட்டலிங் தொழிற்சாலையில் உற்பத்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது எரிவாயுவை சிலிண்டர்களில் நிரப்பும் தொழிற்சாலைகளில் இருப்பு மிக குறைவாக உள்ளது. தமிழ்நாடு உட்பட சில தென் மாநிலங்களில் பதிவு செய்து இரண்டரை மாதங்கள் கழித்தே சமையல் எரிவாயு சிலிண்டர் சப்ளை செய்யப்படுகிறது. ஆனால் இந்த தடவை நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது. தற்போதைய நிலவரப்படி தேசிய அளவில் 2.9 லட்சம் டன் எல்.பி.ஜி. சிலிண்டர்களே இருப்பில் உள்ளன. இது 6 நாட்களுக்கு மட்டுமே சப்ளைக்கு ஆகும். இதை விட மோசமாக தென் மாநிலங்களுக்கான இருப்பு 35 ஆயிரம் டன்கள்தான் என்று கூறப்படுகிறது. இது இன்னும் 2 நாட்களுக்கே போதுமானதாகும்.

Sunday, April 29, 2012

பந்திக்கு முந்த வேண்டாம்


* வேலை செய்வதாகக் காட்டிக் கொள்பவராக இல்லாமல் இறைப்பணியாளராய் கடவுளின் திருவுளத்தை உளமாற நிறைவேற்றுங்கள்.
* மனத்தளர்ச்சியுள்ளவர்களுக்கு ஊக்க மூட்டுங்கள்; வலுவற்றோருக்கு உதவுங்கள்; எல்லோரோடும் பொறுமையாயிருங்கள்.
* எளியோரின் நலனில் அக்கறை கொள்பவர் பேறு பெற்றோர், துன்ப நாளில் கடவுள் அவரை விடுவிப்பார்.
* உங்களைத் திருமண விருந்திற்கு அழைத்திருந்தால்
பந்தியில் முதன்மையான இடத்தில் அமராதீர்கள்.
* பெருமைக்குரியோராய் இல்லாதிருந்தும், தம்மைப் பெரியவர் எனக் கருதுவோர் தம்மை ஏமாற்றிக் கொள்கின்றனர்.
* தம்மைத்தாமே உயர்த்துவோர் யாவரும் தாழ்த்தப்பெறுவர்; தம்மைத்தாமே தாழ்த்துவோர் உயர்த்தப் பெறுவர் என்பது நியதி.
* உங்களை எவராவது ஏற்றுக் கொள்ளவில்லை என்றாலோ, உங்களுடைய வார்த்தைகளைக் கேட்கவில்லை என்றாலோ, நீங்கள் அந்த நகரத்தைவிட்டோ அல்லது அந்த வீட்டை விட்டோ புறப்படும் போது உங்களுடைய பாதங்களில் படிந்துள்ள தூசியை உதறிவிடுங்கள்.
- பைபிள்
குங்குமத்திற்கு பதிலாக ஸ்டிக்கர் பொட்டு வைத்துக் கொள்வது சரியா?






நாகரீக மோகத்தில் நிகழும் தவறுகளில் இதுவும் ஒன்று. சுமங்கலிப் பெண்கள் நெற்றியிலும் உச்சியிலும் வைத்துக் கொள்ளும் குங்குமத்தில் தாம் மகிழ்ந்து இருப்பதாக மகாலட்சுமி கூறுகிறாள். எனவே, குங்குமம் தான் உயர்ந்தது. பொட்டு வைத்துக் கொள்வதையே, நாகரீகக் குறைவாக சில சகோதரிகள் கருதும் சூழலில் ஸ்டிக்கராவது வைத்துக் கொள்கிறார்களே என்று அல்ப சந்தோஷப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.
நெற்றியில் குங்குமம் அணியும் போது, தீய சக்திகள் விலகும். அதிலும் இரு புருவங்களுக்கிடையில் குங்குமம் வைத்தால், அவர்களை யாரும் அவ்வளவு எளிதில் வசியம் செய்ய முடியாது. மேலும் மஞ்சள், படிகாரம், சுண்ணாம்பு போன்ற கிருமி நாசினிப் பொருட்களைக் கொண்டு குங்குமம் தயார் செய்யப்படுகிறது. அவ்வாறு தயார் செய்யப்பட்ட குங்குமத்தை பெண்கள் தங்களுடைய நெற்றியின் மையப் பகுதியில் அணிவதால் உடலிலிருந்து மூளைக்குச் செல்லும் நரம்புகளின் வெப்பத்தை குங்குமம் தடுக்கிறது. மேலும் குங்குமத்தின் மேல் சூரிய ஒளிப்படும்போது குங்குமத்தில் உள்ள மூலிகை தன்மையும், சூரிய சக்தியிலிலிருந்து வெளிப்படும் வைட்டமின் டி சக்தியும் உடலுக்குள் சென்று நன்மையை ஏற்படுத்தி தருகிறது.அதேபோல் மன அமைதி, மங்களகரமான தோற்றம், உடல் நலத்தையும் தருவதால் பெண்கள் நெற்றியில் குங்குமம் அணிவது சிறந்தது.

Saturday, April 28, 2012

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு.
பருவமழை முன்கூட்டியே வர அதிக வாய்ப்பு : கோடை மழையால் மக்கள் நிம்மதி
அருமை
பிடிச்சுருக்கு
பரவாயில்லையே
சென்னை: வானிலை மாற்றத்தால், தமிழகத்தில் பல மாவட்டங்களில், கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில், வழக்கமாக மே மாத இறுதியில் துவங்கும் தென்மேற்கு பருவமழை, முன்கூட்டியே பெய்யக்கூடிய வாய்ப்பு உள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில், மே முதல் வாரத்தில், "கத்திரி' வெயில் துவங்கும் நிலையில், வேலூர், திருச்சி, மதுரை, பாளையம்கோட்டை, சேலம் உள்ளிட்ட பல மாவட்டங்களில், நூறு டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி, வெயில் வாட்டி எடுத்தது.

மகிழ்ச்சி : இந்நிலையில், தமிழகத்தில் பல மாவட்டங்களில், சில நாட்களாக பெய்து வரும் கோடை மழையால், கோடை உஷ்ணத்தால் அவதிப்பட்ட மக்கள், மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
குறிப்பாக, கரூர், திருச்சி, நீலகிரி, தூத்துக்குடி, ஈரோடு, விருதுநகர், சேலம், நாமக்கல், கன்னியாகுமரி, ராமநாதபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட பல மாவட்டங்களில், கனமழை பெய்ததால், விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதனால், வெப்பத்தின் தாக்கம் ஓரளவு குறைத்திருந்தாலும், பெரும்பாலான மாவட்டங்களில், கோடை உக்கிரத்தின் தீவிரம் குறையவில்லை.

மழைக்கு காரணம் : ஏப்ரல், மே மாதங்களில், வங்கக் கடலில், குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, வலுவடைந்து புயலாக மாறுவதும், பல சமயங்களில் வலுவிழந்து போவதும் உண்டு. தற்போது, குமரிக் கடல் பகுதியில், வளிமண்டலத்தின் மேல் அடுக்கில் உருவான காற்றின் சுழற்சி காரணமாக, பல மாவட்டங்களில், கனமழை பெய்து வருகிறது. அடுத்த இரண்டு நாட்களுக்கு, தமிழகத்தின் தென்மாவட்டங்களில் அனேக இடங்களிலும், வடக்கு மாவட்டம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்யக்கூடும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று முன்தினம் தெரிவித்தது.

முன்கூட்டியே துவங்கும் : பல மாவட்டங்களில் வெயில் கொளுத்திய போதும், தொடர்ந்து பெய்து வரும் கோடை மழை மற்றும் பருவ நிலை மாற்றத்தால், தென்மேற்கு பருவமழை முன்னதாகவே துவங்கலாம் என, சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு, ஜூன் முதல் தேதி துவங்கும் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கு முன்பாகவே, 30ம் தேதி துவங்கியது. இதனால், இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை, முன்னதாகவே துவங்கக் கூடிய வாய்ப்பு இருப்பதாக, அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தென்மேற்கு பருவமழை : தமிழக மாவட்டங்களை ஒட்டிய கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கினால் மட்டுமே, உள்மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் குறையும். தென்மேற்கு பருவமழையால், தமிழகத்திற்கு பெரிய அளவு பயன் இல்லை. எனினும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தேனி, ஊட்டி, நாகர்கோவில், நெல்லை உள்ளிட்ட சில இடங்களில், அவ்வப்போது மழை பெய்யும். கேரளாவில் பருவமழை துவங்கினால், குற்றால அருவியில் தண்ணீர் வரத்து அதிகரிக்கும்.
» ஆன்மிக சிந்தனைகள் »பாரதியார்
பயத்தை வெல்வோம்!
ஆகஸ்ட் 01,2009,11:21  IST

* மனிதன் பாவம் செய்வதை விட்டால் அமரத் தன்மை பெறலாம். பாவத்தின் சம்பளம் மரணம் என்று கிறிஸ்தவ வேதம் சொல்கிறது. பாவத்தை நீக்கி, மனிதர் மரணத்தை வெல்லக் கூடிய காலம் வரலாம்.
* பயத்தை வென்றால் மற்ற பாவங்களை வெல்லுதல் எளிதாகி விடும். மற்ற பாவங்களை வென்றால் தாய் பாவமாகிய பயத்தை வெல்லுதல் மிக எளிதாகி விடும்.
* கல்வியை இளமையில் கற்கவேண்டும் என்பர். அதே நேரம் கற்பதற்கு வயது ஒரு தடையல்ல. ஆர்வம் இருந்தால் எந்த வயதிலும் கற்கத் தொடங்கலாம்.
* இப்போது உள்ள பழைய யுகம் மாறிப் புதிய யுகம் தோன்றும். அப்புதிய யுகத்தில் தெய்வப்பக்தியையே மூலாதாரமாகக் கொண்டு மக்கள் வாழ்வார்கள்.
* புராணங்களைக் கேட்டு பயனடையுங்கள். ஆனால், அதையே வேதங்களாக நினைத்துக் கொண்டு, மடமைகள் பேசி விலங்குகள் போல நடந்து கொள்வது கூடாது.

Wednesday, April 25, 2012


சவால்களை சந்தியுங்கள்
ஏப்ரல் 19,2012,
15:04  IST

* கருத்து ஒற்றுமை கொண்டவர்களிடம் விட்டுக்கொடுப்பது பெரிதல்ல. முரண்பட்ட கருத்து உடையவர் என்றாலும் விட்டுக் கொடுப்பதே சகிப்புத்தன்மை.
* கோழைத்தனம் நீங்குவதற்காக சிலர் உடற்பயிற்சியில் ஈடுபடுகின்றனர். சவால்களை எதிர்கொண்டு வாழக் கற்றுக் கொள்வதே சரியான மருந்து.
* கடவுள் பொறுமையோடு அனைத்தையும் சகித்துக் கொள்கிறார். ஆனால், அவருடைய பொறுமைக்கும் எல்லையுண்டு.
* கோயில்கள் வெறும் கண்காட்சிக்காக ஏற்படுத்தப்பட்டவை அல்ல. தெய்வீக உணர்வை மக்களிடம் பரப்பும் பணியை மேற்கொண்டிருக்கின்றன.
* தீய செயல்களைச் செய்பவரை விட, தீய எண்ணங்களுக்கு இடம் தருபவன் அதிக தீமையைச் செய்து கொண்டிருக்கிறான்.
* குறை இல்லாத மனிதன் இல்லை. ஆனால், எதிராளியின் குறைகளை மட்டுமே மிகைப் படுத்துகிறோம். இதனால் வெறுப்புணர்வு அதிகமாகிறது.
- காந்திஜி

Monday, April 23, 2012


ஆன்மிக பலமே நாட்டின் பலம்
டிசம்பர் 11,2011,
09:12  IST
* குழந்தை தன் தேவைக்கு தாயை நம்பியிருக்கிறது. அதுபோல, வளர்ந்த பின்னும் மனிதன் தன் தேவைகள் அனைத்திற்கும் உலகநாயகியான ஜகன்மாதாவையே நம்பி வாழ்கிறான்.
* அனைத்து சக்தியும் கொண்ட அம்பாள் கருணை வடிவத்துடன், எங்கும் நிறைந்திருக்கிறாள். உலகின் இயக்கத்திற்கு ஆதாரமாகத் திகழ்கிறாள். 
* இந்தியாவில் பெண்களுக்கு தரப்படும் மதிப்பு உயர்வானது. தெய்வத்தை அன்னையாகக் கருதி வழிபாடு செய்தால், ஆன்மிக வாழ்வில் அனைத்து நன்மைகளும் உண்டாகும்.
* குழந்தைகள் தாயிடமே அதிக பாசத்தை காட்டுகின்றனர். இதனால் தான் மாதா, பிதா, குரு, தெய்வம் என்று தாய்க்கு முதலிடம் தரப்பட்டுள்ளது.
* ஆன்மிக பலத்தால் மட்டுமே நாடு எழுச்சி அடையப்போகிறது. கடவுளிடம் கொண்ட நம்பிக்கையால் இந்திய மக்கள் பலம் பெற்றிருக்கிறார்கள்.
* மனிதன் நல்ல, தீய எண்ணங்களின் உரிமையாளனாக இருக்கிறான். அவனுக்கு தேவையான அனைத்து வலிமையும், உதவியும் அவனுக்குள்ளேயே இருக்கிறது.
-விவேகானந்தர் 

Saturday, April 21, 2012


Jun
ரத்த அழுத்தத்தை விரட்டும் வழி

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper
நம் உடலில் உள்ள சின்னச் சின்ன குறைபாடுகளை கண்டுகொள்ளாமல் விடும்போது அது பெரிய ஆபத்துகளை உருவாக்குகிறது. அந்த வகையில் மிகவும் ஆபத்தானது ரத்த அழுத்தம். சாதாரண விஷயம் போல தோன்றினாலும் இதை கட்டுக்குள் வைக்காவிட்டால் இதயம், மூளை, சிறுநீரகம் மற்றும் கண்கள் என முக்கிய உறுப்புகள் பாதிக்க வாய்ப்புள்ளது என்கிறார் மருத்துவ நிபுணர் குமரன் அப்புசாமி. ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்கள் 40 வயதுக்கு மேல்தான் வரும் என்று சொன்னது அந்தக் காலம். இப்போது 25 வயதிலேயே ஹார்ட் அட்டாக் பயமுறுத்தத் தொடங்கிவிட்டது. இதற்கு அடிப்படை காரணம் ரத்த அழுத்தப் பிரச்னை.

ரத்த அழுத்தத்தை பல ஆண்டுகளாக கண்டுகொள்ளாமல் விடும்போது இதயத்துக்கு செல்லும் ரத்தக்குழாய் சுருங்கி மாரடைப்பு உண்டாகிறது. மூளைக்கு செல்லும் ரத்தக் குழாய் சுருங்கி மூளைக்கு போகும் ரத்தம் குறைந்தால் பக்கவாதம் ஏற்படுகிறது. மேலும் மூளைக்கு செல்லும் ரத்தக் குழாய்கள் வெடித்து மரணம் ஏற்படும் ஆபத்தும் உள்ளது. ரத்த அழுத்தம் அளவுக்கு அதிகமாக உயர்வது, குறைவது இரண்டுமே பிரச்னைதான். வழக்கமாக மாரடைப்புக்கு பிறகு இதயம் ரத்தத்தை பம்பிங் செய்வது குறையும். அப்போது ரத்த அழுத்தம் குறைய வாய்ப்புள்ளது. இதயம் வீங்கும் பட்சத்திலும் குறைந்த ரத்த அழுத்தம் வரலாம்.

குறைந்த ரத்த அழுத்தத்தால் அடிக்கடி மயக்கம் ஏற்படலாம். அட்ரீனல் சுரப்பி எனப்படும் ஹார்மோன் சுரப்பியில் டியூமர் வரலாம். இதனாலும் ரத்த அழுத்தம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இயல்பாகவே அதிகளவு டென்ஷன், கோபம் உள்ளவர்களுக்கு ரத்த அழுத்தப் பிரச்னை தோன்றும். இந்த பாதிப்பு உள்ளவர்களுக்கு கிட்னி கெட்டுப் போகவும் வாய்ப்புள்ளது. சிறு வயதில் உடலை வருத்தி வேலை செய்யாமல் இருப்பது, அளவுக்கு அதிகமாக அசைவ உணவுகளை எடுத்துக் கொள்வதால் உடலில் சேரும் கொழுப்பு, தவறான உணவு முறை, அடிக்கடி குளிர்பானங்களை உட்கொள்வதால் ரத்தத்தில் அதிகரிக்கும் உப்பின் அளவு, மது மற்றும் போதைப் பழக்கங்கள், அதிக உடல் எடை போன்ற காரணங்களால் சிறு வயதிலேயே ரத்த அழுத்தம், மாரடைப்பு மற்றும் சிறுநீரக கோளாறுகள் ஏற்படுகின்றன. ரத்த அழுத்த அறிகுறி உள்ளவர்கள், உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்வதுடன் உணவுக் கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சியில் கவனம் செலுத்த வேண்டும்.

பாதுகாப்பு முறை

முதலில் உங்கள் உடல் எடை, உயரத்துக்கு ஏற்றதுதானா என்பதை சோதித்து சரி செய்யவும். தினமும் சில மணி நேரம் வாக்கிங் அல்லது ஏதாவது ஒரு உடற்பயிற்சியை கட்டாயம் செய்யவும். உணவில் நிறைய காய்கறிகள், பழ வகைகள் சேர்க்கவும். சாப்பாட்டில் உப்பு குறைவாக பயன்படுத்த வேண்டியது அவசியம். மருத்துவரின் ஆலோசனையுடன் அதிக உடல் எடையை குறைக்கவும். புகை பிடிக்கும் பழக்கம் இருந்தால் அது ரத்தக் குழாயை சுருங்க செய்யும். உடனடியாக புகைபிடிக்கும் பழக்கத்தை விடவும். இதேபோல் மிகை ரத்த அழுத்தம் உள்ளவர்கள் மதுப்பழக்கத்தையும் விட வேண்டும். மதுவை விட முடியாதவர்கள் மதுவின் அளவை படிப்படியாக குறைத்துக் கொள்ளவும்.

ரெசிபி

ஓட்ஸ் உப்புமா: ஓட்ஸ் ஒரு கப், மோர் 20 மி.லி. அரைப்பதற்கு இஞ்சி, பச்சை மிளகாய் மற்றும் ஒரு கட்டு கொத்தமல்லி. இவற்றை எண்ணெயில் வதக்கி அரைத்து வைக்கவும். ஓட்ஸை தனியாக மிக்சியில் அரைத்து மோரில் கலந்து வைக்கவும். இத்துடன் அரைத்த கலவையை சேர்க்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், பெருங்காயம், கருவேப்பிலை தாளித்து தேவையான உப்பு சேர்த்து கலந்து வைத்துள்ள ஓட்ஸ் கலவையை சேர்த்து உப்புமா பதத்துக்கு கிளறி இறக்கவும். இதில் தேவையான அளவு நார்ச்சத்து உள்ளதால் எச்.டி.எல். எனப்படும் நல்ல கொழுப்பை அதிகரிக்கும்.

முருங்கைக்காய் வடை: பத்து முருங்கைக்காய்களை வேக வைத்து, உள் பகுதி சதையை சேகரிக்கவும். கடலைப்பருப்பு இரண்டு கப் ஊற வைத்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். முருங்கைக்காய் சதைப்பகுதியை அரைத்த மாவில் சேர்க்கவும். இத்துடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி சிறிதளவு, அரிசி மாவு 2 டீஸ்பூன், உப்பு தேவைக்கு ஏற்ப சேர்த்து வடைக்கு தேவையான பதத்தில் பிசைந்து எண்ணெயில் பொறித்து எடுக்கவும். இதில் தேவையான இரும்புச் சத்து உள்ளதால் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

வெஜிடபிள் மசாலா கறி: காலி பிளவர் - 1 கப், பச்சை பட்டாணி - 1 கப், பீன்ஸ், கேரட் தேவையான அளவு, குடைமிளகாய் - ஒரு கப், பட்டை, கிராம்பு, சோம்பு, வரமிளகாய், கொத்தமல்லி, ஏலக்காய், சுக்கு சிறிதளவு ஆகியவற்றை நன்றாக வறுத்து பொடி செய்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்கறி வகைகளை பாதியளவு வெந்தபின் இன்னொரு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், கருவேப்பிலை, வெங்காயம் மற்றும் காய்கறிகள் சேர்த்து வதக்கவும். மசாலா பொருட்களையும் சேர்த்து வதக்கி மஞ்சள் தூள், உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும். இதில் போதுமான அளவு நார்ச்சத்து இருப்பதால் உடலில் கெட்ட கொழுப்பு சேருவதை தடுக்கும்.

டயட்

தவறான உணவு முறை காரணமாக உடலில் சேரும் கெட்ட கொழுப்பு, உடல் எடை அதிகரிப்பு ஆகிய காரணங்களால் சிறு வயதிலேயே ரத்த அழுத்தப் பிரச்னை தோன்றுகிறது. மன உளைச்சல், டென்ஷன் மற்றும் அதிகபட்ச கோபமும் ரத்த அழுத்த பிரச்னையை உருவாக்குகிறது. நீண்ட நாள் சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கும் ரத்த அழுத்தம் வரலாம். இதன் தொடர்ச்சியாக மாரடைப்பு, பக்கவாதம்கூட ஏற்படக் கூடும். இதுபோன்ற பிரச்னைகளை துவக்கத்திலேயே தடுக்க அதிக உடல் எடையை குறைக்க வேண்டும். அதற்கு டயட்டில் கவனம் செலுத்தவும். உடலில் நல்ல கொழுப்பு சேருவதற்கான உணவுகளை கண்டறிந்து சேர்த்துக் கொள்ளவும்.

உப்பு அதிகமாக சேர்க்கப்படும் ஊறுகாய், வத்தல், வடகம் ஆகியவற்றை தவிர்க்கவும். உணவு தயாரிப்பில் பயன்படுத்தும் எண்ணெயின் அளவை குறைக்கவும். அசைவ உணவு அடிக்கடி எடுத்துக் கொள்வதை கட்டுப்படுத்தவும். எண்ணெயில் பொறித்த உணவுகளையும் தவிர்ப்பது அவசியம். பால் மற்றும் பால் பொருட்களின் அளவையும் குறைப்பது நல்லது. தினமும் குறைந்தபட்சம் 1 மணி நேரம் வாக்கிங் அவசியம்.

கீரை மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம் கெட்ட கொழுப்பு கரைந்து நல்ல கொழுப்பின் அளவு அதிகரிக்கும். பழங்கள் நிறைய எடுத்துக் கொள்ளவும். பீசா, பர்கர் உள்ளிட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும் என்கிறார் உணவு ஆலோசகர் சங்கீதா.

பாட்டி வைத்தியம்

அரை கிலோ அசோக மரப்பட்டை, சீரகம் 50 கிராம் எடுத்து இரண்டையும் பொடி செய்து கொள்ளவும். தினமும் இரண்டு கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் ரத்த அழுத்தம் குணமாகும்.

அமுக்காராவை பொடி செய்து தினமும் சாப்பிட்டு வந்தால் ரத்த அழுத்தம் சரியாகும்.

ஆடாதொடா இலையை பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட ரத்தக் கொதிப்பு குணமாகும்.

ஆரைக் கீரை சாற்றில் சீரகத்தை ஊற வைத்து, உலர்த்திப் பொடியாக்கி தினமும் காலை, மாலை இரண்டு வேளையும் 5 கிராம் அளவுக்கு சாப்பிட்டால் ரத்த அழுத்தத்தை குறைக்கும்.

இஞ்சிச் சாற்றில் சீரகத்தை ஊற வைத்து காய வைத்துக் கொள்ளவும். இதில் 2 கிராம் அளவுக்கு எடுத்து காலை, மாலை இரண்டு வேளையும் சாப்பிடலாம்.

இஞ்சிச் சாற்றில் தேன் கலந்து இரண்டு வேளையும் குடித்தால் ரத்தக் கொதிப்பு குணமாகும்.

எலுமிச்சம் பழச்சாறு, பேரீச்சம்பழம், சீரகம் சேர்த்து அரைத்து வெறும் வயிற்றில் தினமும் சாப்பிட்டால் ரத்தக் கொதிப்பு சரியாகிவிடும். கடுக்காய், சுக்கு, தாமரைப்பூ, ஏலக்காய் தலா 100 கிராம் எடுத்துப் பொடி செய்து கொள்ளவும். இதில் தினமும் இரண்டு கிராம் அளவு பொடியை சாப்பிட்டு வந்தால் இதய நோய், ரத்த அழுத்தம் வராது.

கல்யாண முருங்கைக் கீரை, சீரகம் இரண்டையும் நெல்லிச்சாறு சேர்த்து அரைத்து தினமும் அதிகாலையில் சாப்பிட்டால் ரத்த அழுத்தம் சரியாகும்.

சர்ப்பகபந்தா வேரை பொடி செய்து தினமும் அரை கிராம் அளவுக்கு சாப்பிட்டால் ரத்த அழுத்தம் சீராகும்.

13
Sep
எலும்பு தேய்மானம் தடுக்க எளிய டிப்ஸ்!

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper
உடலின் ரத்த உற்பத்தியில் எலும்புகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. உடல் இயக்கம் இன்றி இருக்கும் போது ரத்த செல்கள் உற்பத்தி பாதிக்கப்பட்டு எலும்புகளில் தாதுப் பற்றாக்குறை ஏற்படும். இதுவே எலும்பு தேய்மானத்துக்கு முக்கிய காரணம் ஆகிறது. உடலின் வளர்ச்சிக்கு ஏற்ப எலும்புகளிலும் மாற்றங்கள் ஏற்படுகிறது. எலும்புகளின் அடிக்கட்டமைப்பை புரதங்கள் வலுவாக்குகின்றன. கால்சியம், பாஸ்பரஸ் போன்ற தாதுக்கள் இடையில் பரவி எலும்புக்கு வலு சேர்க்கின்றன. இந்த இயக்கமானது உடலில் எப்போதும் நடப்பதால் கால்சியம் சத்து அதிகம் தேவைப்படுகிறது.

இந்த சத்துக்கள் பால், பச்சைக் காய்கறிகள் மற்றும் கீரை வகைகளில் இருந்து கிடைக்கிறது. வயது, உழைக்கும் தன்மை இரண்டையும் கருத்தில் கொண்டு சரியான உணவு முறையை கடைபிடிப்பது எலும்பு தேய்மானத்தை தவிர்க்க உதவும். குழந்தைகளுக்கு வளர்ச்சியின் காரணமாக உடல் வலி ஏற்பட வாய்ப்புள்ளது. இது போன்ற வலிகள் தானாகவே சரியாகி விடும். அவர்களுக்கு கை, கால் ஆகியவற்றில் வலி ஏற்படும் போது வெதுவெதுப்பான ஒத்தடம் கொடுத்தால் போதும்.

வலிக்கும் பகுதிகளில் வீக்கம், தொடு வலி, நொண்டுதல் மற்றும் காய்ச்சல் போன்ற பிரச்னைகள் இருக்கும் போது உடனடியாக மருத்துவரை அணுக வேண்டியது அவசியம். இதேபோல் குழந்தைகள் படிக்கும் வயதில் எவ்வித உடற்பயிற்சியும் இன்றி இருந்தால் அவர்களின் வளர்ச்சி பாதிக்கும். எனவே கால்சியம் உணவுகளை உட்கொள்வதுடன் குழந்தைப் பருவத்தில் இருந்தே உடற்பயிற்சியை வழக்கப்படுத்துவது அவசியம்.

பொதுவாக ஒருவருக்கு எலும்பு தேய்மானம் இருக்கும் பட்சத்தில் இடுப்பு, தோள், மணிக்கட்டு, முட்டி, முதுகு, கழுத்து உள்ளிட்டவற்றில் திடீரென வலி ஏற்படும். இதற்கு பல காரணங்கள் உள்ளன. பரம்பரைக் காரணங்கள், கால்சியம் குறைபாடு, உடற்பயிற்சி இன்றி இருத்தல், எடை அதிகம் இருத்தல், மதுப்பழக்கம் மற்றும் புகைபிடித்தல், வேறு நோய்களுக்கு உட்கொள்ளும் மருந்துகள், முன் கூட்டியே ஏற்படும் மெனோபாஸ், பெண்களுக்கு அறுவை சிகிச்சை மூலம் கருப்பை அகற்றுதல் போன்ற காரணங்களால் எலும்பு தேய்மானம் உண்டாகிறது.

வயது 30ஐத் தொட்டவர்கள் வைட்டமின் டி மற்றும் கால்சியம் உள்ள உணவுகளை கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும். பச்சைக் காய்கறி, பால், முட்டை மற்றும் கடல் உணவுகள், கொட்டை வகைகள் ஆகியவற்றில் வைட்டமின்&டி அதிகம் உள்ளது.  வாரத்தில் மூன்று முறை 15 நிமிடங்களாவது வெயிலில் இருக்க வேண்டும். எலும்புகள் உறுதியிழப்பைத் தடுக்க தினமும் 20 நிமிடம்வாக்கிங் செல்ல வேண்டியது கட்டாயம். உடல் எடை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஏரோபிக்ஸ் மற்றும் நீச்சல் உள்ளிட்ட பயிற்சிகள் நல்ல பலன் தரும். எலும்புகளை உறுதி செய்யும்.

எலும்பு தேய்மானம் உள்ளவர்கள் தசை வலுப்படுத்தும் பயிற்சிகளை பிசியோதெரபி மருத்துவரின் ஆலோசனையுடன் செய்ய வேண்டியது அவசியம்.
புகைபிடித்தல் மற்றும் மது அருந்தும் பழக்கத்தை படிப்படியாக குறைத்து விட்டு, விடுவது நல்லது. எலும்பு தேய்மானத்துக்கான அறிகுறி உள்ளவர்கள் எலும்பு தேய்மானத்தின் அளவை அதற்கான கருவிகள் மூலம் தெரிந்து கொள்ள முடியும். உணவு, உடற்பயிற்சி மற்றும் வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்வதன் மூலம் மட்டுமே எலும்பு தேய்மானத்துக்கு தீர்வு காண முடியும்  என்கிறார் பிசியோதெரபி மருத்துவர் செந்தில் குமார்.

ரெசிபி

ஓட்ஸ் புட்டு: ஓட்ஸ் ஒரு கப், பச்சரிசி மாவு கால் கப் ஆகியவற்றை தனியாக வறுத்துக் கொள்ளவும். இத்துடன் தேங்காய், உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கிளறி வைக்கவும். இந்த கலவையை இட்லி பானையில் ஆவியில் வேக வைத்துக் கொள்ளவும். அத்துடன் எலுமிச்சை சாறு, தாளித்த பச்சை மிளகாய் சேர்த்துக் கிளறவும். ஓட்ஸ் புட்டு உடலுக்கு ஆரோக்கிய மானது.

ஆப்பிள் சிப்ஸ்: கடலைமாவு, அரிசி மாவு இரண்டும் சேர்த்து ஒரு கப் எடுத்துக் கொள்ளவும். வெண்ணெய் கால் டீஸ்பூன், உப்பு, எண்ணெய் மற்றும் மிளகாய்த்தூள் தேவையான அளவு எடுத்துக் கொள்ளவும்.  6 துண்டு ஆப்பிளை தோல் சீவி அரைத்துக் கொள்ளவும். மாவைக் கொட்டி அதில் வெண்ணெய், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து கலக்கவும். இத்துடன் அரைத்த ஆப்பிள் விழுதையும் சேர்த்து பிசையவும். பக்கோடா பதத்தில் உதிரியாக பிசைந்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும். இதில் வைட்டமின்&சி, இரும்பு சத்து உள்ளது.

குடைமிளகாய் பனீர் பிரை: 2 கப் பனீரை தனியாக வாணலியில் வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். ஒரு குடை மிளகாய் மற்றும் 2 வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டி, எண்ணெயில் வதக்கவும். இத்துடன் உப்பு, அரை டீஸ்பூன் சோயா சாஸ் சேர்த்து வதக்கி கடைசியாக வறுத்து வைத்த பனீரை சேர்க்கவும். குடை மிளகாய் பனீர் பிரை, சப்பாத்திக்கு தொட்டு சாப்பிட ஏற்றது.

டயட்

எலும்பு தேய்மானம் ஏற்படாமல் தடுக்க உணவில் செலுத்த வேண்டிய கவனம் குறித்து விளக்குகிறார் உணவு ஆலோசகர் சங்கீதா. ‘‘உடல் உழைப்பை விட அதிக உணவு எடுத்துக் கொள்ளுதல், எந்த வித உடற்பயிற்சியும் இன்றி இருத்தல் போன்ற காரணங்களால் எலும்பு தேய்மானம் ஏற்படுகிறது.
மேலும் கால்சியம் உள்ள உணவுகள், காய்கறி, பழங்கள் உண்ணாமல் தவிர்ப்பவர்களுக்கு சிறு வயதிலேயே எலும்பு வலுவிழக்கும் பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் பாக்கெட் செய்யப்பட்ட துரித உணவுகள், குளிர்பானங்கள் குடிப்பதும் எலும்பு தேய்மானத்துக்கு காரணமாகிறது.

எனவே சிறு வயதில் இருந்தே கால்சியம் அதிகம் உள்ள உணவுகளை கண்டிப்பாக சேர்த்துக் கொள்ள வேண்டும். பால் மற்றும் பால் பொருட்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். தினமும் இரண்டு டம்ளர் பால் அவசியம் குடிக்க வேண்டும். ஏதாவது ஒரு வகை முழு தானியத்தை தினமும் ஒரு வேளை உணவில் சேர்த்துக் கொள்வது முக்கியம்.

ராகி, கொள்ளு, உளுத்தம் பருப்பு, முருங்கைக் காய் மற்றும் முருங்கைக்கீரை, வாழைப்பழம், ஆப்பிள், ஆரஞ்சு, கீரை வகைகள் ஆகியவற்றில் கால்சியம் சத்து உள்ளது. இவை எலும்பு வலுவடைய உதவும். பெண்களின் மெனோபாஸ் 40 வயதுகளில் வருவதால் அதன் பின்னர் கால்சியம் பற்றாக்குறைக்கு ஆளா கின்றனர். அந்த நேரத்தில் கால்சியம் அதிகம் உள்ள சிக்கன், மட்டன், இறால், முட்டை, மீன் போன்ற உணவு வகைகளை சேர்க்க வேண்டும். மெனோபாசுக்குப் பின்னர் சோயா பீன்ஸ் சேர்த்துக் கொள்வதன் மூலம் அதிக கால்சியம் உடலுக்குக் கிடைக்கும்.

பாட்டி வைத்தியம்

வெந்தயத்தை பொடி செய்து கோழி முட்டையின் வெள்ளைக் கருவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் எலும்பு தேய்மானத்தால் ஏற்படும் இடுப்பு வலியில் இருந்து நிவாரணம் பெறலாம்.

வெந்தயக் கீரை, மாதுளை ஓடு, வில்வ ஓடு மூன்றையும் சம அளவில் எடுத்து காய வைத்து பொடி செய்து, இரண்டு கிராம் பொடியை காலை, மாலை சாப்பிட்டால் எலும்பு தேய்மானத்தை தடுக்கலாம்.

ஆளிவிதை 100 கிராம் எடுத்து பொடி செய்து, இத்துடன் குங்கிலி பஸ்பம் 10 கிராம் சேர்த்து தினமும் இரண்டு கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.

ஆல மர மொட்டுகளை பொடி செய்து சாப்பிட்டால் இடுப்பு, எலும்பு வலியை தடுக்கலாம்.

எலும்பு தேய்மானத்தால் ஏற்படும் மூட்டு வலிக்கு அவுரி இலையை விளக்கெண்ணெய் சேர்த்து வதக்கி ஒத்தடம் கொடுக்கலாம்.

அவுரி இலை, வாதநாராயணன் இலை, பூண்டு, மிளகு அனைத்தையும் எடுத்து அரைத்து தினமும் ஐந்து கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் மூட்டு வாதம், மூட்டு வீக்கம் குணமாகும்.

அமுக்காரா, சுக்கு, ஏலக்காய், சித்தரத்தை தலா 100 கிராம் எடுத்து அரைத்து தினமும் ஐந்து கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் கை, கால் வலி, மூட்டு, இடுப்பு மற்றும் தொடை வலி  குணமாகும்.

அத்திக்காயை வேக வைத்து சிறு பருப்பு சேர்த்து சாப்பிட்டு வந்தால் கை, கால் வலி குணமாகும்.

அத்தி மரத்தில் இருந்து பால் எடுத்து சாப்பிட்டு வந்தால் மூட்டு வலி, இடுப்பு வலி, தண்டுவடக் கோளாறு குணமாகும்.

எங்கள் நிலம்

ஒரு காலத்தில் 
ஆங்கிலேயன் வந்தான் 
எங்கள் நிலத்தில் 
கருவேலம் நட்டான் ...
....................
நாங்கள் சீர்செய்தோம் 
பயிர் செய்தோம் 
................
இப்போது ,
அரசியல்வாதி வந்தான் 
எங்கள் நிலத்தையே 
எடுத்துக்கொண்டு போகிறான் !!

நாம் பரவலாக நியாயப்படுத்தும் லஞ்சம்

ஓட்டுப்போட போட காசு வாங்குவது

டிராபிக் போலீஸ்கு காசு கொடுப்பது

TTR இடம் காசு கொடுப்பது

கல்லூரிக்கு நன்கொடை கொடுத்து சீட்டு வாங்குவது

இப்படி எல்லாத்தையும் நியாயமான நடைமுறை போல செய்ய ஆரம்பிச்சுடோமே ???

அசிங்கப்பட கூட இல்லாம அவன் செய்றான் நான் செஞ்சா என்ன தப்புன்னு கேட்க ஆரம்பிச்சுடோமே ??

இது சமூக மன நோய்....

கற்பை பற்றி நாள் தோறும் கதைக்கிறோம் ??
நம் சுயமரியாதை அதை விட பெரியது தானே ??
லஞ்சம் சுயமரியாதையை மறந்து ஈடுபடும் செயல் தானே ??

அதை ஏன் நியாயப்படுத்தனும் ???

தமிழா வெட்கப்படு லஞ்சம் வாங்கவும்/கொடுக்கவும் வெட்கப்படு

என்னை கேட்டா லஞ்சத்தை ஒழிக்க முடியாதுன்னு சொல்றவன தான் முதலில் ஒழிக்கணும் 

Friday, April 20, 2012

மின்சாரம்... பெட்ரோல்... கேஸ்... சூப்பர் 100 டிப்ஸ்

பட்டென எகிறும் பில்... சட்டென குறைய சூப்பர் 100 டிப்ஸ்
மிக்ஸி, கிரைண்டர், டி.வி., ஃப்ரிட்ஜ், வாஷிங்மெஷின், ஏ.சி. என ஏகப்பட்ட எலெக்ட்ரானிக் பொருட்களை வீட்டுத் தேவைக்காக வாங்கிக் குவிக்கும்போது, அவற்றை இயக்கும் கரன்ட்டுக்கு எவ்வளவு செலவாகும் என்பதை பெரும்பாலானவர்கள் இங்கு யோசிப்பதில்லை. ஆனால், கரன்ட் 'பில்'லை பார்த்த பின்புதான், 'ஐயோ' என அலறல் போடுவார்கள். இதே கதைதான்... டூ-வீலர், ஃபோர் வீலர், சமையல் கேஸ் என தினம் தினம் எரிபொருளுக்காக நாம் செலவழிக்கும் தொகையும். இதெல்லாம் மாதக் கடைசியில் பட்ஜெட்டில் பற்றாக்குறையை ஏற்படுத்தி பயமுறுத்தும்போது 'பக் பக்' என்றிருக்கும்!
பணத்தை மிச்சப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள் மட்டுமல்ல... அதை தண்ணீராகச் செலவழிக்கக் கூடிய அளவுக்கு தாராளமாக வசதியுள்ளவர்களும்கூட எரிபொருள் சிக்கனத்தைக் கடைபிடிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.
ஆம்... பூமியை கபளீகரம் செய்வதற்கு தயாராகிக் கொண்டிருக்கும் சுற்றுச்சூழல் கேடுகளுக்கு அடிப்படையே... தாறுமாறான எரிபொருள் பயன்பாடுதான்.
எரிபொருளை எப்படி முறையாகப் பயன்படுத்தி, எரிசக்தியை சிக்கனப்படுத்தி, பட்ஜெட்டைக் குறைத்து, வீட்டையும் - நாட்டையும் காப்பாற்றுவது என்பதைச் சொல்கிறது இந்தப் புத்தகம்.
படித்துப் பார்த்தால், வழக்கம்போல பொக்கிஷமாக பத்திரப்படுத்தி விடுவீர்கள்!
லைட்ஸ் ஆஃப்... பில் சேஃப்!
வீட்டில் எரியும் மின்விளக்குகள் நல்ல வெளிச்சத்தைத் தரும்; அழகைத் தரும். ஆனால், அதற்கான கட்டணம்..? செலவாகிற எரிசக்தி..? அவற்றை எப்படி சிக்கனமாகப் புழங்குவது..? இப்படித்தான்...
1. நீங்கள் எங்கு வேலை செய்கிறீர்களோ அங்கு மட்டும் விளக்கு எரிந்தால் போதுமே?! கிச்சனில் வேலை செய்யும்போது ஹாலில் எதற்கு இரண்டு விளக்குகள்? குறிப்பாக, படிக்கும்போது அந்த டேபிளில் மட்டும் விளக்கு எரிந்தால் போதும். அந்த மாதிரி 'டேபிள் லேம்ப்ஸ்'தான் மார்கெட்டில் வகைவகையாகக் கிடைக்கிறதே... வாங்கிப் பயன்படுத்தினால் காசும் மிச்சம்; கரன்ட்டும் மிச்சம்.
2. டியூப் லைட், குண்டு பல்பு போன்றவற்றில் தூசு படிந்திருந்தால், அவை குறைந்த அளவு வெளிச்சத்தையே கொடுக்கும். அந்த விளக்குகளை அவ்வப்போது துடைத்து சுத்தம் செய்வது நல்லது.
3. இப்போது பல வீடுகளில் கச்சிதமான 'சி.எஃப்.எல்' (CFL-compact Fluorescent Lamp) விளக்குகள் ஒளிர்கின்றன. காரணம், '60 வாட்ஸ் குண்டு பல்பு' கொடுக்கும் அதே அளவு ஒளியை, '15 வாட்ஸ் சி.எஃப்.எல். பல்பு' மூலமே பெற்றுவிட முடியும். அப்போ நாமும் 'சி.எஃப்.எல்'-க்கு மாறிடுவோமா..!
4. மஞ்சளாக எரியும் மெர்க்குரி, சோடியம் பல்புகளுக்குப் பதிலாக, அதிக ஒளியைத் தரும் 'ஹாலைடு' பல்புகளை (Halide Lamp) பயன்படுத்தினால் அதிக வெளிச்சம் கிடைப்பதோடு, எரிபொருள் செலவும் குறையும்.
5. டியூப் லைட்டுக்கு வழக்கமான 'அலுமினிய சோக்' பயன்படுத்துவதைவிட (Aluminium Choke) 'மின்னணு சோக்' (Electronic Choke) பயன்படுத்தினால் மின் செலவு குறையும். ஸ்டார்ட்டர் என்று தனியாக ஒரு உபகரணத்தையும் உபயோகிக்கத் தேவையிருக்காது.
6. வீட்டுக்குள் டிஸ்டம்பர், பெயின்ட் அடிக்கும்போது அதிக அடர்த்தியில்லாத லைட் கலரில் அடித்தால்தான் வெளிச்சம் அதிகமாகக் கிடைக்கும். மிக அடர்த்தியான நிறங்கள் ஒளியை உறிஞ்சி கொள்ளும் தன்மையுடையன என்பதால், ஒன்றுக்கு இரண்டு விளக்குகள் பயன்படுத்த வேண்டியதாகிவிடும்.
7. 'இன்ஃப்ரா ரெட் லேம்ப்ஸ்', 'மோஷன் சென்சார்ஸ்', 'ஆட்டோமேடிக் டைமர்ஸ்' என ஒளியின் அளவினை முறைப்படுத்திடும் மின்னமைப்புகள் (டிம்மர்ஸ்) மற்றும் சோலார் செல் மூலமாக தானே இயங்குகிற மின் கருவிகள் வழக்கத்துக்கு வந்துள்ளன. அவற்றைஎல்லாம் பயன்படுத்தினால், தேவையானபோது தானாகவே 'ஆன்' ஆகி, தேவையில்லாதபோது 'ஆஃப்' ஆகிவிடும். மின்சக்தியும் பெருமளவில் மிச்சமாகும்.
பக்குவமாகப் பயன்படுத்துங்கள் ஃப்ரிட்ஜை!
ஃப்ரிட்ஜ் - நம் வீட்டு ஊட்டி பெட்டி! ஞாயிறு அரைத்த மாவு, நேற்று அரைத்த சட்னி, சாம்பார், பால், காய்கறிகள், பழங்கள் என சகல பொருட்களையும் கதவு திறந்து வாங்கி, சீக்கிரம் கெட்டுப் போகாமல் பாதுகாத்து, குளிர்ச்சியாகவும் பத்திரமாகவும் வைத்திருக்கும் கிச்சன் தோழி. குளிர்பதனப்பெட்டி எனும் அந்த ஃப்ரிட்ஜை எப்படி வாங்குவது, அதன் பயன்பாட்டில் எரிசக்தியை எப்படி சிக்கனப்படுத்துவது..? இதோ...
8. ஃப்ரிட்ஜ் வாங்குவது என முடிவு செய்துவிட்டால், அதிக எரிசக்தி செயல்திறன் கொண்ட வகைகளைத் தேர்ந்தெடுங்கள்.
9. எந்த சைஸ் ஃப்ரிட்ஜ் சிறந்தது..? பொதுவாக சிறிய சைஸ் ஃப்ரிட்ஜ்களுக்கான எரிசக்தி தேவைப்பாடு, பெரிய சைஸ் ஃப்ரிட்ஜ்களுக்குத் தேவைப் படுவதைவிட குறைவாகவே இருக்கும்.
10. 'அவங்க வீட்டுல பெரிய ஃப்ரிட்ஜ் வச்சுருக்காங்களே..?' என்று மனசு சமாதானமாகாதவர்கள், இதைப் படியுங்கள். ஒரு பெரிய சைஸ் ஃப்ரிட்ஜின் மின்சக்தி தேவைப்பாடு, அதே அளவு வசதி கொண்ட இரண்டு சிறிய சைஸ் ஃப்ரிட்ஜின் மின்சக்தி தேவைப்பாட்டைவிட அதிகமாகவே இருக்கும்!
11. ஃப்ரிட்ஜின் 'உறைய வைக்கும் அறை' (Freezer) மேலே அல்லது கீழே இருந்தால் தேவைப்படும் மின்சக்தி தேவைப்பாட்டைவிட, பக்கவாட்டில் இருந்தால் 12 சதவிகிதம் குறைவாகத் தேவைப்படும். ஃப்ரிட்ஜ் வாங்கும்போது இதையெல்லாம் கண்டிப்பாக கவனியுங்கள்.
12. கதவிலேயே குளிர்ந்த நீர், ஐஸ்கட்டிகளைப் பெறும் வசதியோடு கூடிய ஃப்ரிட்ஜ்களும் உண்டு. ஆனால், இவை அதிக அளவில் எரிசக்தியை பயன்படுத்துபவைகளாகவே இருக்கும். அதுமட்டுமல்ல... அதன் விலை மற்றும் பராமரிப்பு செலவும் மிக அதிகம்.
13. எரிசக்தி சிக்கனத்துக்கான நட்சத்திர குறியீடுகள், தற்போது வழக்கத்தில் உள்ளன. குறிப்பிட்ட சாதனத்தின் ஆற்றல், அதன் செயல்திறன் மற்றும் ஆற்றல் செலவு உள்ளிட்ட விஷயங்களை வைத்து இத்தகைய குறியீடுகள் வழங்கப்படுகின்றன.
14. நீங்கள் வாங்கப்போகும் ஃப்ரிட்ஜின் மேல் சிவப்பு வண்ணத்தால் ஆன நட்சத்திரக் குறியீடுகள் அதிகம் இருந்தால், உங்கள் சாய்ஸ் இஸ் குட். அதிக நட்சத்திரம் இருந்தால்... அது அதிக சேமிக்கும் திறன் கொண்டது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
15. விலை குறைவாகக் கிடைக்கிறது என்பதற்காக பழைய, திறன் குறைந்த ஃப்ரிட்ஜ்களை வாங்குவதைவிட, புதிதாக வாங்குவதுதான் புத்திசாலித்தனம். காரணம், பழைய ஃப்ரிட்ஜை இயக்க அதிக மின்சாரம் தேவைப்படும், அது மின் கட்ட ணத்தை அதிகப்படுத்தும்தானே?!
இந்தக் கூறுகளையெல்லாம் ஆராய்ந்து ஃப்ரிட்ஜை வாங்கியாகி விட்டது. அதில் எப்படி மின்சக்தியை சேமிப்பது..? இதோ...
16. ஃப்ரிட்ஜை வீட்டில் வைக்கும்போது, சுவரில் இருந்து குறைந்தது 30 செ.மீ. தூரம் தள்ளிவைத்தால்தான், அது வெப்பக்காற்றை வெளியிட வசதியாக இருக்கும்.
17. வெப்பத்தை அதிகமாக வெளியிடும் ஏ.சி. அயர்ன் பாக்ஸ் போன்றவற்றுக்கு அருகில் ஃப்ரிட்ஜை வைக்கக் கூடாது. காரணம், அதன் பாதிப்பால் இது அதிக அளவு மின்சக்தியை இழுக்கும்.
18. சமையல் அறையில் கேஸ் அடுப்புக்கு அருகிலும் ஃப்ரிட்ஜை வைப்பது கூடாது. இது, அதிக மின்சாரத்தை உள்ளிழுக்கும் என் பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.
19. ஃப்ரிட்ஜுக்குள் அதிகமான பொருட்களை வைக்கும்போது, அந்தப் பொருட்களிடையே போதிய காற்றோட்டம் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். அப்போது தான் அவை சம அளவில் குளிர்ச்சி உடையதாக இருக்கும்.
20. ஃப்ரிட்ஜுக்குள் இருந்து எந்தப் பொருளை வெளியே எடுக்க வேண்டும் என முடிவு செய்த பின்பு, கதவைத் திறப்பது நல்லது. 'கத்திரிக்காயை எடுத்திட்டேன், தக்காளி வேணுமா, வேண்டாமா..? அது சமையல் கட்டுலேயே இருக்குதா...' என யோசித்துக்கொண்டே கதவைத் திறந்து வைத்துக்கொண்டிருந்தால், குளிர்க் காற்று வெளியேறி, அதே குளிர்நிலை மீண்டும் கிடைப்பதற்கு கூடுதல் மின்சாரம் தேவைப்படும்தானே? இதைத் தவிர்க்கலாமே!
21. மிகவும் சூடான மற்றும் வெதுவெதுப்பான உணவுப் பொருட்களை அறையின் வெப்பநிலைக்கு கொண்டு வந்து அவற்றை நன்கு மூடி ஃப்ரிட்ஜ் உள்ளே வைக்க வேண்டும். அவ்வாறு செய்யப்படுவதன் மூலம் மின்சக்தி குறைந்த அளவு பயன்படுத்தப்படுவதோடு அந்தப் பொருள் குளிரூட்டப்படும் நேரமும் குறைகிறது.
22. ஃப்ரிட்ஜ் கதவின் காப்பு முத்திரைகள் (Seals) தூய்மையானதாகவும் இறுக்கமானதாகவும் இருக்க வேண்டும். இதை எவ்வாறு உறுதி செய்வது? ஒரு காகிதத் துண்டினை கதவின் இடுக்கினில் வைத்தால் அது கீழே விழாதிருக்க வேண்டும். மாறாக, அந்தக் காகிதத் துண்டு கீழே வழுக்கி விழுந்தால்... குளிர்பதனப் பெட்டியின் கதவின் காப்பு முத்திரைகள் உடனடியாக மாற்றப்பட வேண்டும்.
23. ஃப்ரிட்ஜில் உள்ள கன்டென்சர் காயில் மீது அதிகளவு தூசு படிந்தால், அது இயங்குவது கடினமாகும். அதிகக் கடினமான மோட்டாரை இயக்க மின்சக்தி அதிக அளவில் தேவைப்படும். இதைத் தவிர்க்க, கன்டென்சர் காயிலுக்கு நல்ல காற்றோட்டம் கிடைக்கும் வகையில் அவ்வப்போது சுத்தம் செய்தால்... நோ பிராப்ளம்.
24. ஃப்ரிட்ஜின் ஃபிரீஸருக்குள் ஐஸ் படியாமல், அப்படி படிந்தவற்றை அவ்வப்போது நீக்கிவிட் டால் மின்சாரம் அதிக அளவு செலவாகாது.
25. ஃப்ரீஸரில் படிந்த ஐஸ் பார்களை நீக்க கரண்டி, கத்தி போன்றவற்றை சிலர் உபயோகிப் பார்கள். இது ஃப்ரீஸரைச் சேதப்படுத்தி, பயன்படாமல் செய்துவிடும். எப்போதும் அதற்கென உள்ள 'டீஃப்ராஸ்ட்' பட்டனையே உபயோகியுங்கள்.
26. ஐஸ்கிரீம், ஐஸ் கட்டி தேவைப்படும் நேரங்களில் மட்டும் ஃப்ரிட்ஜினை அதிகளவு குளிர்நிலையில் வைத்திருக்க வேண்டும். அவை தேவையில்லாத போது, குறைந்த அல்லது நடுத்தர குளிர்நிலையில் வைத்திருப்பது சிக்கன நடவடிக்கைக்கு கைகொடுக்கும்.
ஏர்கண்டிஷனர் ஏற்பாடுகள்!
இன்று வீடு, அலுவலகம், ஹோட்டல், சினிமா தியேட்டர் என எல்லா இடங்களிலும் ஏர்கண்டிஷனர் எனப்படும் ஏ.சி. பயன்படுகிறது. ஆடம்பரமான பொருள் என்பதைத் தாண்டி அவசியமான பொருள் என்றாகி விட்டது இந்த ஏ.சி. ஆனால், அதற்காக செலவிடும் தொகைதான் அதிகம். அதன் உபயோகத்தில் எப்படி மின் செலவைக் கட்டுப்படுத்தி, பணத்தை மிச்சப்படுத்துவது..?
27. சுட்டெரிக்கும் கோடைக்காலம் தவிர்த்து, மற்ற சீஸன்களில் சீலிங் ஃபேன், டேபிள் ஃபேன்களையே பயன்படுத்தலாம். காரணம், இவற்றை பயன்படுத்தினால் ஒரு மணி நேரத்துக்கு முப்பது பைசா மட்டுமே செலவாகும். இதுவே ஏ.சி-யை பயன்படுத்தினால்... ஒரு மணி நேரத்துக்கு ரூபாய்களில் செலவாகும்!
28. ஏ.சி. இருக்கும் அறையில் குறைந்த அளவு சூரிய ஒளி உள்ளே செல்லுமாறு பார்த்துக் கொண்டால் 'குளுகுளு' மெயின்டெயின் ஆகும். மின்சாரமும் அதிகம் செலவாகாது.
29. உலகத்துக்கே இயற்கைதானே எஜமான்! வீட்டின் ஜன்னல் மற்றும் சுவர்களின் மீது நிழல் படும்படி மரங்களை வளர்த்தால், 'ஏ.சி'-க்கான மின்சாரத்தில் நாற்பது சதவிகிதத்தை சேமிக்கலாம் என்று நிரூபணம் செய்திருக்கின்றன ஆய்வுகள். அப்புறம் என்ன... மரம் நடுங்கள்; வளம் பெறுங்கள்.
30. ஏ.சி. வசதி செய்யப்பட்ட அறையின் மேற்கூரை வெப்பத்தை உள்ளே கடத்தும் வகையில் இருக்கக் கூடாது. அப்படியிருந்தால், குளிர்ச்சியை வெளியே கடத்தாத வண்ணங்களை அங்கு தீட்டுவது சிறந்தது.
31. ஏ.சி. பொருத்தப்பட்டுள்ள அறையின் மேற்கூரையின் கீழே செயற்கை சீலிங் (ஃபால்ஸ் சீலிங்) அமைக்கப்படுவதால், மேற்கூரையிலிருந்து வெளிப்படும் வெப்பக்கதிர் வீச்சு குறையும்; குளிரூட்டப்படும் அறையின் பரப்பளவும் குறைவதால், குறைந்த மின்சாரத்தில் 'ஜில்ஜில்' என இருக்கும்.
32. ஏ.சி-யிலிருந்து வரும் குளிர்க்காற்று கீழ்நோக்கி வீசும் தன்மையுடையதால், தரையிலிருந்து இரண்டு அல்லது மூன்று மீட்டர் உயரத்துக்கு மேல் ஏ.சி-யை பொருத்துவதுதான் சரியான முறை. 'நாங்க கீழ வச்சுட்டோமே.. என்ன பண்றது' என்பவர்கள், அதன் ஸ்விங் மோட் (Swing Mode), எப்போதுமே மேல் நோக்கியதாக இருக்குமாறு அமைத்து விட்டால், பிரச்னை தீர்ந்து விடும்.
33. ஸ்பிலிட் ஏ.சி-யின் கம்ப்ரஸரை (compressor) எப்படி வைப்பது..? எங்கு வைப்பது..? - இதுதான் நிறைய பேருக்கு வரும் சந்தேகம். ஏ.சி. பொருத்தப்படும் அறைக்கு வெளியே குளிர்ச்சியான, நிழல்பாங்கான இடமாக பார்த்து வைத்தால், சூரிய ஒளிபட்டு வெப்பமாவது தடுக்கப்படும்.
34. ஸ்பிலிட் ஏ.சி-யின் பழைய கம்ப்ரஸர்களை ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு தடவை மாற்றுவது நல்லது. அதற்கு மேலும் பழைய கம்ப்ரஸரை பயன்படுத்தாமல், புதிய கம்ப்ரஸர்களை அமைத்து செயல்திறனை அதிகரித்தால்... மின்செலவு குறையும்.
35. ஏ.சி-யின் மின் செலவை ஈஸியாகக் குறைத்திட வேண்டுமா..? எப்போதுமே... 25 டிகிரி சென்டிகிரேடு அளவிலேயே ஏ.சி-யின் 'தெர்மோஸ்டாட்' இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். அதற்கு கீழே குறையக் குறைய... மின்செலவு அதிகரிக்கும். போர்வைதான் இருக்கிறதே என்று 18 என்ற அளவிலேயே பயன்படுத்தினால்... பர்ஸ் கரையத்தான் செய்யும்!
36. ஏ.சி-யையும் ஃபேனையும் ஒருசேர பயன்படுத்துவது நல்லதல்ல. அது தூக்கத்தையே குலைக்கும். குறிப்பிட்ட நேரத்துக்கு ஏ.சி-யை ஓடவிட்ட பிறகு, அதை ஆஃப் செய்துவிட்டு, ஃபேனை ஓடவிடலாம். ஃபேன் குறைந்த மின்சாரத்தை எடுத்துக்கொள்ளும் என்பதால் மின் சிக்கனம் சாத்தியமாகிறது. அறை ஏற்கெனவே குளிர்ந்திருப்பதால், குளுமைக்கும் குறைவிருக்காது.
37. ஏ.சி. மெஷினானது, ஓர் அறையை 30 நிமிடங்களுக்குள் குளிர்ச்சியாக்கிவிடும். எனவே, நேரக்கட்டுப்பாட்டுக் கருவியை (Timer) பயன்படுத்துவதன் மூலம் மின்சாரத்தை சேமிக்கலாம்.
38. ஏ.சி. வசதி செய்யப்பட்ட அறைகளில் குளிர் வெளியே செல்லாதவாறு கதவுகள் இடைவெளியில்லாமல் மூடப்பட்டிருந்தால், அதுவும் மின் சிக்கனத்துக்கு வழி வகுக்கும்.
39. ஏ.சி-யின் 'ஃபில்டர்', மாதம்தோறும் தவறாமல் சுத்தம் செய்யப்பட வேண்டும். இல்லாவிட்டால், அதில் அழுக்குப் படிந்து காற்றோட்டத்தைக் குறைத்து, ஏ.சி. மெஷினை விரைவில் பழுதாக்கி விடும். சுத்தமான 'ஃபில்டர்', விரைவாக குளிர்வதற்கு உதவுவதன் மூலம், மின்சக்தி இழப்பினை தடுத்து, உங்கள் பர்ஸைக் காப்பாற்றும்.
40. ரிப்பேர் ஆகும் நிலையில் உள்ள ஏ.சி-யை இயக்கினால், அது குறைந்த அளவு குளிர்ச்சியைத்தான் தரும்; தொடர்ந்து இயக்கினால், உடனே பழுதாகி புதிய ஏ.சி. வாங்கும் செலவை உண்டாக்கும். 'ஏதாவது கோளாறு...' என்று தெரிந்தால், உடனடியாக அதை சரி செய்வதுதான் சாமர்த்தியம்.
41. ஏ.சி-க்கு அருகிலேயே போட்டோ காப்பி மெஷின் (ஜெராக்ஸ் மெஷின்), ஸ்டெபிலைஸர், யு.பி.எஸ். போன்ற வெப்பத்தை வெளியிடும் கருவிகளை வைக்காமல், தூரத்தில் வைப்பது இரு கருவிகளுக்கும் நல்லது.
42. மின் அடுப்பு, காபி தயாரிக்கும் கருவி, வாட்டர் கூலர், ஃப்ரிட்ஜ், அயர்ன்பாக்ஸ் போன்ற வெப்பத்தை வெளியிடும் மின்கருவிகளையும் ஏ.சி. அறைகளில் அறைகளில் பயன்படுத்தாமல் இருப்பது மின் சிக்கனத்துக்கான வழி.
43. ஏ.சி. அறையை விட்டுக் கிளம்பப் போகிறீர்கள் என்பதை முடிவு செய்துவிட்டால், அறையின் குளிர்நிலை கொஞ்ச நேரம் நீடிக்கும் என்பதை மனதில் கொண்டு, அரை மணி நேரத்துக்கு முன்பாகவே ஏ.சி-யை ஆஃப் செய்துவிடலாம்.
வாட்டர் ஹீட்டரில் மின்சாரம் வேஸ்டாக வேண்டாமே..!
குளிர் காலத்திலும், குளிர்ப் பிரதேசங்களிலும் வாட்டர் ஹீட்டர் அத்தியாவசிய மான பொருளாகிவிட்டது. இதற்கும் மின்சாரம் அதிக அளவு தேவைப் படுவதால், அங்கும் மின்சிக்கனம் அவசியம்தானே?! அதற்காக...
44. குளிப்பதற்காக ஹீட்டரை போட்டுவிட்டு, சமையல் செய்து விட்டு வந்து பார்த்தால்... தண்ணீர் அளவுக்கு அதிகமாக சூடாகியிருக்கும். பிறகு, குளிர்ந்த நீரை அதிகமாக கலந்து பயன்படுத்துவோம். இத னால் கணிசமான அளவு மின்சாரம் செலவாகும். அதைத் தடுக்க, குளிக்கும் சூட்டில் தண்ணீர் இருக்கும்போது ஹீட்டரை ஆஃப் செய்துவிட்டால் இரட்டை வேலையும் இல்லை... செலவும் கட்டுப்படுத்தப்படும்.
45. சூடுபடுத்தப்பட்ட நீர் செல்லும் குழாய்களுக்கு, குறிப்பாக குளிர்ந்த பகுதிகளில் செல்லும்போது அவற்றுக்கு தகுந்த வெப்ப பாதுகாப்பு உறை (Insulation sleaves) போட்டு விட்டால், வெப்பம் வேஸ்ட்டாவது தடுக்கப்படும்.
46. மின்சாரத்தால் இயக்கப்படும் வாட்டர் ஹீட்டருக்குப் பதிலாக, சூரியசக்தியால் இயக்கப்படும் வாட்டர் ஹீட்டரை பயன்படுத்தினால்... லாபம்! அது எப்படி..? இரண்டு 'கிலோ வாட்' சூரியசக்தி ஹீட்டரை வாங்கினால், அதற்கு விலையாக கொடுத்த தொகையை, மின்சக்தியை மிச்சப்படுத்துவதன் மூலம் நான்கு ஆண்டுகளில் பெற்றுவிடலாம். பராமரிக்கும் செலவும் மிகமிகக் குறைவுதான் எனும்போது இதை பற்றி யோசிக்கலாமே!
தவிக்க விடுகிறதா தண்ணீர் மோட்டார்..?!
வீடுகளிலும், விவசாயத்திலும் அதிகம் பயன்படுத்தப்படுவது தண்ணீரை பூமியிலிருந்து மேலே எடுத்துவரும் 'வாட்டர் பம்புகள்'தான். இவற்றில் மின்சக்தியை சேமிப்பதும் சிக்கனப்படுத்துவதும் மிக முக்கியமானதல்லவா..! எப்படி..?
47. மோனோ பிளாக் (Mono block) பம்புகள் அதிக செயல் திறன் மிக்கவை என்பதால் முடிந்தவரை அவற்றைத் தேர்ந்தெடுத்து வாங்கிப் பயன்படுத்துவது நல்லது.
48. மோட்டாரிலிருந்து வாட்டர் டேங்க்குக்கு தண்ணீர் செல்லக்கூடிய குழாய்களில் கவனம் வையுங்கள். குறைந்த வளைவுகளுடன் கூடிய பி.வி.சி. பைப்புகள் என்றால், தண்ணீர் சுலபமாக மேலே ஏறும். மின்சாரமும் சிக்கனமாகும்.
49. தண்ணீர் எவ்வளவு தேவைப்படுமோ... அந்தளவுக்கு மோட்டரை இயக்கினால், மின்சாரம், தண்ணீர் எல்லாமே மிச்சமாகும். ஓவர்ஹெட் டேங்க்கிலிருந்து வழிந்தோடிக் கொண்டே இருந்தால், விரயமாவது தண்ணீர் மட்டுமல்ல... மின்சாரமும்தான்!
50. பம்ப் பொருத்தும்போது, தகுந்த நிபுணர்களின் பரிந்துரையின்படி நீரை உறிஞ்சும் இடத்திலும், வெளியேற்றும் இடத்திலும் பொருத்தப்படும் குழாயின் 'விட்ட' அளவுகளை (Suction and delivery pipe diametre) சரியாகத் தெரிந்து பொருத்தினால், அதன் செயல்திறன் அதிகமாகும்; மின்சாரச் செலவும் குறையும்.
கம்ப்யூட்டரும் கரன்ட்டும்!
கணினி இல்லாத தினசரி வாழ்க்கை, குறையான வாழ்க்கை என்றாகிவிட்டது. இதன் பயன்பாடுகள் எல்லா இடங்களிலும் நிறைந்திருப்பதால், கணினி இயக்கத்தில் மிச்சப்படுத்தப்படும் மின்சாரம் மிகப் பெரிய அளவிலானது. எப்படி மிச்சப்படுத்துவது..?
51. கணினியில் காலையிலிருந்து மாலை வரை வேலை செய்தாகிவிட்டது. அடுத்து ஒரு மணிநேரம் கழித்துத்தான் அதில் வேலை செய்யப் போகிறோம் என்றால், அந்த நேரத்தில் அதனை ஆஃப் செய்து வைத்திருப்பதால் மின்சாரம் மிச்சமாகும்.
52. 'இல்லை இல்லை... நாங்கள் 24 மணி நேரமும் கம்ப்யூட்டரும் கையுமாகத்தான் இருப்போம்' என்றால், அது புத்திசாலித்தனமல்ல. காரணம், ஒரு கணினியை இயக்கினால், அது ஒரு பெரிய சைஸ் ஃப்ரிட்ஜைவிட அதிக மின்சக்தியினை செலவழிக்கிறது என்பதை மறக்க வேண்டாம்.
53. 'லஞ்ச் முடிச்சுட்டு வர்ற வரைக்கும் மானிட்டர் 'ஆன்'ல இருக்கட்டும்...' என்றால், வேண்டாம் ப்ளீஸ். ஏனெனில், கணினி பயன்படுத்துவதற்கு செலவிடப்படும் மின்சக்தியில் பாதி அளவினை மானிடர் செலவழிக்கும். எனவே, கீப் மானிடர் ஸ்லீப்.
54. தேவைப்படும்போது கீ-போர்டில் இருக்கும் ஸ்லீப் பட்டனை பயன்படுத்தினால், மானிட்டர் மற்றும் சி.பி.யு. இரண்டின் பயன்பாடும் நிறுத்தப்பட்டு, நாற்பது சதவிகிதம் மின்செலவை மிச்சப்படுத்த உதவி புரியும் என்கின்றனர் இதன் எக்ஸ்பர்ட்டுகள்.
55. 'ஸ்க்ரீன் சேவர்' எனப்படும் ஆப்ஷனை உபயோகிப்பது என்பது உசிதமல்ல. அது, கணினியின் திரைக்கு வெறும் அழகு கூட்டத்தான். சொல்லப் போனால், அதுவும்கூட மின்சார செலவை அதிகபடுத்தவே செய்யும்.
சிலிண்டரை சிக்கனமாகப் புழங்க..!
'எப்படி பார்த்துப் பார்த்து செலவு செய்தாலும், கேஸ் 30 நாளைக்கு மேல வரமாட்டேங்குது...' என்று புலம்புவர்கள், 'இதையெல்லாம் செய்கிறீர்களா...' என பரிசோதித்துப் பாருங்களேன்...
56. அடுப்பைப் பற்றவைக்கும் முன், சமைக்க வேண்டிய பொருட்களைத் நறுக்கி, கழுவி தயார் நிலையில் வைத்திருந்தால், சமையல் நேரமும் எரிபொருளும் இரு மடங்கு மிச்சமாகும்.
57. சீக்கிரமாகச் சமைக்க வேண்டுமா..? அதிக ஆழம் மற்றும் அதிக அகலம் இல்லாத பாத்திரங்களைப் பயன்படுத்திப் பாருங்கள். எப்போதையும்விட கூடுதல் நாட்கள் வரும் கேஸ் பயன்பாடு.
58. சாம்பார் கொதிக்க ஆரம்பித்ததும், அடுப்பை மிதமாக எரிய வைத்தால்... கேஸ் மிச்சமாகும். இந்த யுக்தி சாம்பாருக்கு மட்டுமல்ல... மொத்த சமையலுக்கும்தான்!
59. முடிந்தவரை எல்லாவற்றையும் பிரஷர் குக்கரிலேயே சமைத்துவிட்டால்... நேரம், கேஸ் இரண்டுமே மிச்சம்.
60. குறிப்பிட்ட நேரத்தில் மொத்தக் குடும்பமும் உட்கார்ந்து சாப்பிட்டுவிட்டால், உணவை அடிக்கடி சூடுபடுத்துவதை தவிர்த்து, எரிபொருளை சேமித்திடலாம்.
61. பெரிய பர்னரை பயன்படுத்துவதற்குப் பதிலாக, முடிந்தவரை சிறிய பர்னரைப் பயன்படுத்தினால்... சமையல் எரிவாயு அதிகளவு செலவாகாது.
62. கேஸ் ஸ்டவ்வில் உள்ள அனைத்து பாகங்களையும், குறிப்பாக பர்னரை சுத்தமாக வைத்திருந்தாலே, பாதியளவு எரிபொருள் மிச்சமாகும்.
63. ஃப்ரிட்ஜிலிருந்து காய்கறி, பால் போன்றவற்றை ஜில்லென்று எடுத்தால், அதை சாதாரண வெப்பநிலைக்கு கொண்டு வந்த பிறகு சமைப்பது எரிபொருளை பெருமளவில் மிச்சப்படுத்தும்.
உங்கள் வீட்டில் விறகு அடுப்பா..?
இயற்கை வளம், மரங்கள் இதெல்லாம் அழிவின் விளிம்பில் இருப்பதால், தென்னை மட்டை, தேங்காய் மூடி என வீணாகக் கூடிய பொருட்கள் தாராளமாக கிடைக்கும் இடத்தில் வசிப்பவர்கள், விறகு அடுப்புகளைப் பயன்படுத்தலாமே! 'எங்களுக்கும் கேஸ் அடுப்புக்கும் ரொம்ப தூரம். நாங்க எப்பவுமே விறகு அடுப்புதான்' என்பவர்கள் அந்த விறகையும் எப்படி சிக்கனமாக செலவழிக்கலாம்..?
64. நன்றாக காய வைத்த விறகுகளையே பயன்படுத்துங்கள். காரணம், காயாத விறகுகள் அதிக புகையை வெளிவிடும்; குறைவான வெப்பத்தையே தரும்; நேரமும் வீணாகும்.
65. எரியும் தன்மை இல்லாத மரங்களை விறகாகப் பயன்படுத்துவது நல்லதல்ல. அதிலும், அவற்றின் மேல் மண்ணெண்ணெயை ஊற்றி எரிய வைப்பது தவறு. இதனால், மண்ணெண்ணெய், புகை மண்டலமாக வெளிவரும். இது, உணவின் சுவையைக் கெடுத்து, உண்பவர், சமைப்பவர் இருவரின் ஆரோக்கியத்தையும் கெடுக்கும்.
66. அடுப்பின் புகை வீட்டுக்குள் பரவாதவாறு சரியான புகைப்போக்கி அமைப்பது, வீட்டில் உள்ளவர்களின் உடல்நலத்துக்கு நல்லதல்லவா..!
67. சமைக்கும்போது தேவைக்கு அதிகமாக தீயை எரிக்காதீர்கள். தீ அதிகமாக இருந்தால் உணவு விரைவில் வெப்பமடையும் என்பது உண்மையல்ல. உண்மையில் தீ சமமாகப் பரவி சீராக எரிந்தால்தான் உணவு விரைவில் வெப்பமடையும். அதனால் எரிபொருட்களை சிக்கனமாக உபயோகிப்பதே விரைவில் சமைக்க முடியும்.
68. காட்டாமணி செடி, ஊமத்தம் செடி, சாண வரட்டி போன்றவை சீக்கிரம் எரிந்தாலும், அதிக புகையை வெளியிட்டு உடல் நிலையை பாதிக்கும் என்பதால் இவற்றைத் தவிர்ப்பது நலம்.
69. காட்டாமணி, ஊமத்தம் போன்ற சில விஷ தாவரங்களின் புகை சமைப்பவருக்கும் அதை உண்பவருக்கும் நுரையீரல் புற்றுநோய் போன்ற நோய்களையும் தருபவை. தாவரத்தின் தன்மை தெரியாமல் பயன்படுத்த வேண்டாம்.
70. தவறான எரிபொருட்களை விறகுடன் சேர்த்து எரிப்பதை அறிய முடியாதவர்கள், குளிப்பதற்கான வெந்நீருக்கு மட்டும் விறகடுப்பு பயன்படுத்தலாம்.
மண்ணெண்ணெய் அடுப்பு மனம் போல் எரிய..!
'கெரோசின்' எனப்படும் மண்ணெண்ணெய் அடுப்பைப் பயன்படுத்தி சமைப்பவர்கள், எரிபொருளை எப்படி மிச்சப்படுத்துவது..?
71. கெரோசின் பம்ப் ஸ்டவ்களை உபயோகப்படுத்துவோர், அதன் பர்னரை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். முக்கியமாக மண்ணெண்ணெய் வாயுவாக வெளியேறும் துளையை சுத்தமாக பராமரிக்க வேண்டும்.
72. தீயின் நிறம் மஞ்சளாகவோ, பச்சையாகவோ மாறினால்... அடைப்பு இருக்கிறது என்று அர்த்தம். உடனே பர்னரைத் தூய்மை செய்யுங்கள். பர்னர் பழுதானதாகத் தெரியவந்தால் மாற்றி விடுங்கள்.
73. ஸ்டவ்வைப் பற்ற வைக்கும்போது பர்னரை சூடேற்ற குறைவான மண்ணெண்ணெயை எரித்தால் போதும். பர்னர் நிறைய வழியவிட வேண்டாம்.
74. எரிதுளை அடைப்பின்றி இருந்தால்தான் எல்லா பக்கங்களி லும் தீ சம அளவில் பரவும். இதனால் சமையல் நேரம் குறையும். எரிபொருளும் மிச்சப்படும்.
75. மண்ணெண்ணெய் ஊற்றும் டேங்க்கின் உள்ளே தானாகவே துரு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இது பர்னரை அடைக்கக் கூடும். எனவே 3 மாதங்களுக்கு ஒரு முறை டேங்க்கை சுத்தமாகக் கழுவவேண்டும். அதிலிருக்கும் மண்ணெண்ணெயை வெளியில் எடுத்து, வடிகட்டி பயன்படுத்தவேண்டும்.
76. சமைத்து முடித்த பின்பு வெப்பமான இடங்களின் அருகிலோ, எரியும் வேறு அடுப்பின் அருகிலோ கெரோசின் ஸ்டவ்களை வைக்கக் கூடாது. அந்த வெப்பம் டேங்கில் உள்ள மண்ணெண்ணெயைத் தானே எரிதுளை வழியாக வெளியே கசியுமாறு செய்யும். இது தீ விபத்தில்கூட முடியலாம்.
77. வெப்பமான இடத்தில்தான் அடுப்பை வைத்தாக வேண்டும் என்ற சூழலில், டேங்கில் உள்ள காற்று வெளியேறும் திருகாணியைக் கழற்றி வைக்கலாம். இதனால் மண்ணெண்ணெய் கசிவது தடுக்கப்படும்.
78. எப்போதாவது மட்டுமே பயன்படுத்தும் ஸ்டவ்களை மண்ணெண்ணெயுடனேயே வைப்பது சரியல்ல. அது தானாகவே ஆவியாகி வீணாகும் என்பதோடு, அந்த ஸ்டவ்வும் விரைவில் பழுதாகும்.
சாண எரிவாயு... சபாஷ்!
'சாண எரிவாயு' - இன்று பரவலாக, மாற்று எரிபொருளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது இது. காற்றுப் புகாத ஒரு தொட்டியை வடிவமைத்து, அதில் சாணத்தை கொட்ட வேண்டும். இந்தச் சாணக் கழிவுகள் நொதித்து, அதிலிருந்து உருவாகும் மீத்தேன் வாயுவை, குழாய் மூலமாக அடுப்பில் இணைத்துப் பயன்படுத்தலாம். இதன் மூலம் சமைக்கலாம்; விளக்கு எரிக்கலாம்; ஜெனரேட்டரையும் இயக்கலாம். அதை எப்படி பயன்படுத்தலாம்... எப்படி மிச்சப்படுத்தலாம்..?
79. கிராமத்தில் இருப்பவர்களுக்கு சாணம் எளிதாகக் கிடைக்கும். நகரத்தில் இருப்பவர்கள் சாணத்துக்கு எங்கு போவது...? இதற்கும் ஒரு தீர்வு வந்துவிட்டது. வீட்டுச் சமையலறையில் கிடைக்கும் கழிவுகளைக் கொண்டே எரிவாயுவை தயாரிக்கலாம் (மேல் விவரங்களுக்கு கன்னியாகுமரி, விவேகானந்தா கேந்திராவின் இயற்கை வள அபிவிருத்தி மையத்தை அணுகலாம்).
80. மொட்டை மாடி, வரண்டா, பால்கனி என கிடைக்கும் இடத்தில் தொட்டியை வைத்து, பழைய சாதம், காய்கறிக் கழிவுகள் என அனைத்தையும் அதில் போடலாம். தினமும் 5 கிலோ கழிவு இருந்தால், நான்கு பேர் உள்ள குடும்பத்துக்கு தினமும் தேவையான சமையல் எரிவாயு கிடைத்துவிடும்.
81. அதிக புளிப்பு உள்ள பொருட்களையும், உப்பையும் இந்தத் தொட்டிக்குள் போடக் கூடாது. அது மீத்தேன் வாயு உற்பத்தியைப் பாதிக்கும்.
82. எல்.பி.ஜி. சிலிண்டர்கூட சில சமயங்களில் வெடித்துவிடும். ஆனால், காய்கறிக் கழிவு எரிவாயு தொட்டி மிகமிக பாதுகாப்பானது என்பதுதான் இதன் சிறப்பம்சம். தைரியமாகக் களத்தில் இறங்கலாம்.
83. வீடுகளில் காய்கறிக் கழிவு எரிவாயு தொட்டி அமைக்க, அடுப்புடன் சேர்த்து மொத்தமாக 20 ஆயிரம் ரூபாய் செலவாகும். ஒரே ஒரு முறை முதலீடு செய்து விட்டால், வாழ்நாள் முழுக்க பயனளிக்கும்.
84. சாண, காய்கறிக் கழிவு எரிவாயு பயன்படுத்துபவர்களுக்கு கேஸ் தட்டுப்பாடு, அதன் விலையேற்றம் பற்றிய கவலையில்லை. இதனால், சுற்றுச்சூழலுக்கும் பாதுகாப்பு. கழிவு மறுசுழற்சியும் எளிதாக நடக்கும்.
85. எரிவாயு கிடைத்த பின், இதிலிருந்து வெளியேறும் கழிவுகளை வீட்டுத் தோட்டத்துக்கும் பூச்செடிகளுக்கும் உரமாகப் பயன்படுத்தலாம். ஒரே கல்லில், இரண்டு மாங்காய். வாய்ப்புள்ளவர்கள், இத்தகைய மாற்று எரிசக்தி குறித்தும் யோசிக்கலாமே!
வாகன எரிபொருள் சிக்கனம் தெரியுமா உங்களுக்கு..?
பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்களின் விலை, வீட்டு பட்ஜெட்டை மட்டுமல்ல நாட்டின் பட்ஜெட்டையும் பாதிக்கிறது என்பதை அவ்வப்போது உணர்ந்து கொண்டுதான் இருக்கிறோம். அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த எரிபொருட்களை மிச்சப்படுத்துவது, இந்த கணத்தில் மிக அவசியமானது; அவசரமானது!
86. நீங்கள் கார் ஓட்டினாலும், டூ-வீலர் ஓட்டினாலும்... டயரில் உள்ள காற்றழுத்தம் எப்படி இருக்கிறது என்பதை தகுந்த இடைவெளியில் செக் பண்ணுங்கள். காரணம், டயரின் காற்றழுத்தத்தை மிகச்சரியான அளவில் பராமரித் தாலே பெருமளவில் எரிபொருளை சேமிக்கலாம்.
87. டயர்களில் காற்றின் அழுத்தம், குறிப்பிட்ட அளவிலிருந்து 25% குறைவாக இருந்தால், எரிபொருள் 5-10% வேஸ்டாகும். டயரின் ஆயுள் காலமும் 25% குறையும். முறையாகப் பராமரித்தால், இதைத் தவிர்க்கலாம்!
88. கிளட்சை அழுத்திக் கொண்டே வண்டியை ஓட்டினால், அது உங்கள் ஆசை வண்டியின் தரத்தையும் ஆயுள் காலத்தையும் பாதிக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அடிக்கடி புது கிளட்ச் பிளேட் மாற்ற வேண்டி வரும் என்பதால், ஃபாலோ த ரூல்ஸ்.
89. வேகத்துக்குத் தகுந்த கியரில் வாகனத்தைச் செலுத்தா விட்டால், எரிபொருள் 20% அதிகமாக செலவாகும். இதைக் குறைப்பது உங்கள் கைகளில்தானே இருக்கிறது!
90. வாகனங்களில் 'பைமெட்டாலிக் ஸ்பார்க் பிளக்'கைப் பயன்படுத்துவதன் மூலம் 15% எரி பொருளை சேமிக்கலாம். மேலும், அது வெளியிடும் புகையின் அளவும் குறையும் என்கிறார்கள் நிபுணர்கள். உங்கள் செய்கையால், எரிபொருளோடு சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும்.
91. தேவையற்ற சுமைகள், எரிபொருள் உபயோகத்தை அதிகப் படுத்தும். நகரத்தில் வாகனத்தை ஒட்டும்போது 50 கிலோ வரையி லான எடை குறைப்பே... 2 சதவிகித எரிபொருளை மிச்சப் படுத்தும்.
92. ஏ.சி. குளுமையைத் தந்து, உங்கள் பயணத்தை இனிதாக்கும். அதேசமயம், சாதாரண வாகனங் களை விட, ஏ.சி. வாகனங்கள் 20 சதவிகித அளவுக்கு எரிபொருள் செலவை அதிகப்படுத்தும். எனவே, தேவையறிந்து பயன்படுத்தினால், கணிசமான அளவுக்கு எரிபொருளை மிச்சப்படுத்தலாம்.
93. உங்கள் வண்டி, உங்கள் குடும்ப உறுப்பினர் போல அல்லவா..? அதற்கும் சரியான கவனிப்பு வேண்டும். தகுந்த இடைவெளியில், ஆத்தரைஸ்டு சர்வீஸ் சென்டரில் வண்டியை சர்வீஸ் செய்யுங்கள். அது, எரிபொருளைத் தானாக மிச்சப்படுத்தும்.
94. எரிபொருளுடன் பயன் படுத்தப்படும் ஆயில் தரமானதாகவும், பிராண்டட்டாகவும் இருப்பது... வண்டியை நீண்ட நாள், நல்ல கண்டிஷனில் வைத்திருப்பதோடு எரிபொருளை யும் மிச்சப்படுத்தும்.
95. உங்கள் திறமையையும் ஸ்டைலையும் காண்பிக்க, வண்டியை அதிக வேகத்தில் ஓட்டினால், எரிபொருள் அதிகமாக வீணாகும். மிதவேகம், மிக நன்று. அநாவசியமாக அடிக்கடி பிரேக் போடுவதை தவிர்ப்பது வண்டிக்கு, எரிபொருளுக்கு நல்லது.
96. சிக்னலிலோ, வேறு எங்காவதோ இரண்டு நிமிடத்துக்கு மேல் வண்டி நிற்க வேண்டி வந்தால், ஆஃப் செய்து விடுவது அதிபுத்திசாலித்தனம்.
97. வண்டியிலுள்ள எரிபொருள் டேங்க், துரு பிடிக்காமல் சுத்தமாக பராமரிக்கப்பட்டால், எரிபொருள் ஈஸியாக மிச்சமாகும்.
98. எந்த எரிபொருளைப் பயன்படுத்தினாலும், வண்டியை அதிக வேகத்தில் ஓட்டுவது இனிமையான பயணத்துக்கு வழிவகுக்காது.
99. வண்டியின் ஏர் ஃபில்டர் களை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். தூசுகள் நிறைந்த ஏர் ஃபில்டரால் வண்டியின் இயக்கம் பாதிக்கப்படும், அதனால், எரிபொருள் வீணாகும். சுத்தமாக இருப்பது மனிதர்களுக்கும் மட்டுமல்ல, வாகனத்துக்கும் ஆரோக்கிய அவசியம்!
100. சொந்த வாகனத்தில் ஒரு பயணத்தைத் தொடங்கும் முன்பாக, இது அதி அவசியமானதா... வேறு சில வேலைகளையும் சேர்த்து முடிக்க முடியுமா என்றெல்லாம் யோசித்துத் தொடங்குங்கள். சொந்த வாகனத்தில் போகும் அளவுக்கு அவசியமானதல்ல என்றால், பஸ், ரயில் என்று பொதுவாகனங்களைப் பயன்படுத்துங்கள்.

இதைக் கவனிங்க முதல்ல..
சையாக வாங்கி ஓட்டிக் கொண்டிருக்கும் காரில், சொட்டுச் சொட்டாக பெட்ரோல் கசிவதைப் பார்ப்போம். 'நாளைக்கு சரி செய்து விடலாம்... நாளைக்கு சரி செய்து விடலாம்' என ஒரு மாதமேகூட ஓடிவிடும். இதனால், வீணாவது பெட்ரோல் மட்டுமல்ல... பணமும்தான்!
1 நிமிடத்துக்கு, வீணாகும்
பெட்ரோல் 2 மில்லி
அப்படியானால்,
ஒரு நாளைக்கு? 2.880 லிட்டர்
ஒரு மாதத்துக்கு... 86.4 லிட்டர்
1 லிட்டர் பெட்ரோலின் விலை ரூ. 51.00
எனில், 86.4 லிட்டருக்கு ரூ. 4406.40

இதைக் கவனிங்க முதல்ல..
ரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு வீடு மாற்றி வரும்போது, ஃபேனுக்கான ரெகுலேட்டரை மறந்து விட்டிருப்போம். புது வீடு வந்ததும் அவசரத்தில் ரெகுலேட்டரே இல்லாமல் ஃபேன் ஓடிக்கொண்டிருக்கும். இப்படி ஓடுவதால் எவ்வளவு காசு வீண் தெரியுமோ..?!
ரெகுலேட்டர் இல்லாமல் நாள்
முழுக்க ஒரு ஃபேன் ஓடினால்
வீணாகும் கரன்ட் 1 யூனிட்
மாதத்துக்கு 30 யூனிட்
1 யூனிட் 1 ரூபாய் என்று வைத்துக் கொண்டாலே... மாதம் 30 ரூபாய் வீண்.
இதைக் கவனிங்க முதல்ல..
ரு குண்டு பல்பு மாதம் முழுக்க
எரிவதற்கு ஆகும் கரன்ட் செலவு 40 யூனிட்
சி.எஃப்.எல் பல்ப் இதேபோல
எரிந்தால் 10 யூனிட்
மாதம் முழுக்க மிச்சமாகும் தொகை
(ஒரு யூனிட் கரன்ட் 1 ரூபாய் என வைத்துக் கொண்டால்)... 30 ரூபாய்.

இதைக் கவனிங்க முதல்ல..
யர்ன் பாக்ஸ் பயன்படுத்தும்போது துணிக்கு ஏற்ற வெப்பத்தைக் கொடுக்க வேண்டும். இதற்காக அயன்பாக்ஸில் உள்ள பட்டனை பயன்படுத்தத் தவறினால்... இழப்பு உங்களுக்குத்தான். உதாரணமாக நைலக்ஸ் துணிக்கான வெப்பத்தைப் பயன்படுத்தி காட்டன் டிரெஸ்ஸை அயர்ன் செய்தால், ஒருமுறைக்கு இருமுறையாக தேய்க்க வேண்டியிருக்கும்.
ஒரு நாளைக்கு 5 செட்
டிரெஸ்ஸை இப்படி தேய்த்தால்
வீணாகும் கரன்ட் 1/2 யூனிட்
மாதத்துக்கு 15 யுனிட்
மாதம் முழுக்க வீணாகும் தொகை 15 ரூபாய்.
எரிபொருள் சிக்கனம் உங்கள் பர்ஸூக்கு மட்டும் பாதுகாப்பானது அல்ல, நாட்டின் கஜானாவுக்கும்தான். இதில் சிக்கனம்... தேவை