Monday, April 30, 2012


ஏழைகளிடம் வசிக்கும் இறைவன்

15:10  IST
* நன்மை பெற வேண்டுமானால் வாழும் தெய்வமாகிய மனிதர்களை வழிபடுங்கள். அதாவது ஒவ்வொரு மனிதனையும் நேசிக்க கற்றுக் கொள்ளுங்கம்.
* கடவுளின் குழந்தைகளாகிய மனிதர்களுக்குத் தொண்டு செய்வதன் மூலம், ஆண்டவனுக்கு தொண்டு செய்தவனாகிறோம்.
* ஏழைகளிடமும், பலமற்றவர்களிடமும், நோயுற்றவர்களிடமும் இறைவனைக் காண்பவனே, அவரை உண்மையாக வணங்குபவனாவான்.
* எதிர்வாதம் எதுவுமின்றிக் குருவிற்குக் கீழ்ப்படிதலும், பிரம்மச்சரியத்தைக் கண்டிப்பாக பின் பற்றுதலும் வெற்றி பெறுதற்குரிய ரகசியங்களாகும்.
* பெரியவர்கள் பெரும் தியாகங்களைச் செய்கிறார்கள், அதன் விளைவாக வரும் தன்மைகளை மனிதகுலம் பெற்று அனுபவிக்கிறது.
* தெய்வீகத்தன்மை இல்லாமல் பெறுகிற மிதமிஞ்சிய அறிவும் ஆற்றலும் மனிதர்களைச் சாத்தான்களாக்கி விடுகின்றன.
* இரக்கம் உள்ள இதயம், சிந்தனை ஆற்றல் படைத்த மூளை, வேலை செய்யக்கூடிய கைகள் ஆகிய இந்த மூன்றும் நமக்குத் தேவையாகும்.
* எதைக் கண்டும் அஞ்சாதீர்கள். அச்சமுள்ளவன் உலகில் வாழத் தகுதியற்றவன்
- விவேகானந்தர் 

No comments: