Sunday, April 29, 2012

பந்திக்கு முந்த வேண்டாம்


* வேலை செய்வதாகக் காட்டிக் கொள்பவராக இல்லாமல் இறைப்பணியாளராய் கடவுளின் திருவுளத்தை உளமாற நிறைவேற்றுங்கள்.
* மனத்தளர்ச்சியுள்ளவர்களுக்கு ஊக்க மூட்டுங்கள்; வலுவற்றோருக்கு உதவுங்கள்; எல்லோரோடும் பொறுமையாயிருங்கள்.
* எளியோரின் நலனில் அக்கறை கொள்பவர் பேறு பெற்றோர், துன்ப நாளில் கடவுள் அவரை விடுவிப்பார்.
* உங்களைத் திருமண விருந்திற்கு அழைத்திருந்தால்
பந்தியில் முதன்மையான இடத்தில் அமராதீர்கள்.
* பெருமைக்குரியோராய் இல்லாதிருந்தும், தம்மைப் பெரியவர் எனக் கருதுவோர் தம்மை ஏமாற்றிக் கொள்கின்றனர்.
* தம்மைத்தாமே உயர்த்துவோர் யாவரும் தாழ்த்தப்பெறுவர்; தம்மைத்தாமே தாழ்த்துவோர் உயர்த்தப் பெறுவர் என்பது நியதி.
* உங்களை எவராவது ஏற்றுக் கொள்ளவில்லை என்றாலோ, உங்களுடைய வார்த்தைகளைக் கேட்கவில்லை என்றாலோ, நீங்கள் அந்த நகரத்தைவிட்டோ அல்லது அந்த வீட்டை விட்டோ புறப்படும் போது உங்களுடைய பாதங்களில் படிந்துள்ள தூசியை உதறிவிடுங்கள்.
- பைபிள்

No comments: