Monday, April 23, 2012


ஆன்மிக பலமே நாட்டின் பலம்
டிசம்பர் 11,2011,
09:12  IST
* குழந்தை தன் தேவைக்கு தாயை நம்பியிருக்கிறது. அதுபோல, வளர்ந்த பின்னும் மனிதன் தன் தேவைகள் அனைத்திற்கும் உலகநாயகியான ஜகன்மாதாவையே நம்பி வாழ்கிறான்.
* அனைத்து சக்தியும் கொண்ட அம்பாள் கருணை வடிவத்துடன், எங்கும் நிறைந்திருக்கிறாள். உலகின் இயக்கத்திற்கு ஆதாரமாகத் திகழ்கிறாள். 
* இந்தியாவில் பெண்களுக்கு தரப்படும் மதிப்பு உயர்வானது. தெய்வத்தை அன்னையாகக் கருதி வழிபாடு செய்தால், ஆன்மிக வாழ்வில் அனைத்து நன்மைகளும் உண்டாகும்.
* குழந்தைகள் தாயிடமே அதிக பாசத்தை காட்டுகின்றனர். இதனால் தான் மாதா, பிதா, குரு, தெய்வம் என்று தாய்க்கு முதலிடம் தரப்பட்டுள்ளது.
* ஆன்மிக பலத்தால் மட்டுமே நாடு எழுச்சி அடையப்போகிறது. கடவுளிடம் கொண்ட நம்பிக்கையால் இந்திய மக்கள் பலம் பெற்றிருக்கிறார்கள்.
* மனிதன் நல்ல, தீய எண்ணங்களின் உரிமையாளனாக இருக்கிறான். அவனுக்கு தேவையான அனைத்து வலிமையும், உதவியும் அவனுக்குள்ளேயே இருக்கிறது.
-விவேகானந்தர் 

No comments: