Monday, October 24, 2016

உங்கள் வீடுகளில் சதா ஒப்பாரி சத்தமா?...

உங்கள் வீடுகளில் சதா
ஒப்பாரி சத்தமா?...
பெண்களுக்குள் போட்டியும்,பொறாமையுமா?...
லட்சுமி வாசம் செய்வதற்கு பதில் தரித்திர தாண்டவமா?...
அனைத்துக்கும் காரணம் டிவி சீரியல்கள்தான்...
அதிர்ச்சி தரும் ஆராய்ச்சி முடிவுகள் !
டிவி நாடகங்களில் வரும் அழுகை சத்தங்கள், ஒப்பாரிகள், உரக்கக் கத்திப் பேசுதல்,சோகம் மற்றும் இழவு இசைகள் உங்கள் வீட்டில் இருக்கும் லக்ஷ்மி கடாக்ஷத்தைச் சீர் குலைத்து கெடுத்து விடும்.
இதனால் வீட்டில் பணம் தங்காமல் போகும்.
வீண் செலவுகள் ஏற்படும்.
அது மட்டுமின்றி உங்கள் உடல் நலத்தையும் சீரழித்து விடும்.
இதனால் தலைவலி, ரத்த அழுத்தம், இதய கோளாறுகள்,மூளை மற்றும் நரம்பியல் சம்பந்தமான பிரச்சனைகள் வரும்...
முக்கியமாக பிறரை எப்படிக் கெடுப்பது, அழிப்பது, துன்புறுத்துவது,
மாமியார் மருமகள் சண்டை,
சந்தேகப்படுவது, சகுனி வேலை பார்ப்பது,
பிறர் தொழிலை எப்படி கெடுப்பது என்பதே காண்பிக்கப்பட்டு மக்களுக்கு பழக்குவிக்கப்படுகிறது .
சுய லாபத்துக்காக இப்படி மக்களைச் சீரழிப்பதில் டிவி சீரியல்கள் முதலிடம் வகிக்கிறது.
தயவுசெய்து மக்களே,
இது போன்ற கேவலமான நாடகங்களைப் புறக்கணியுங்கள்.
நமது செயல் மட்டும் இல்லை எண்ணங்களும் நமது கர்மாதான்.
எனவே உங்கள் விலைமத்ப்பில்லா ஓய்வு நேரத்தை அன்பான குழந்தைகள் மற்றும் வீட்டில் உள்ள கணவன், மனைவி, பெரியவர்களோடும் நல்ல புத்தகங்களைப் படிப்பதிலும் பிறருக்கு நன்மை செய்யும் நல்ல
காரியங்களிலும் ஈடுபடுங்கள்.
இல்லையேல் வரும் பலன்களை
நல்லதோ கெட்டதோ நீங்கள்தான் அவற்றை உருவாக்கினீர்கள் என்பதை உணர்ந்து அனுபவிக்க தயாராகுங்கள்.
அல்லதை விடுத்து நண்பர்களே
நல்லதை பாருங்கள் ,
கேளுங்கள்
பேசுங்கள்,
சிந்தியுங்கள்
வாழ்வில் எல்லாம் நல்லதாய் நடக்கும்.
வாழ்க வளமுடன் & நலமுடன்.
தீதும் நன்றும் பிறர் தர வாரா
நம்மை சுற்று நடப்பனவற்றுக்கு
நாமே பொறுப்பு.
நம் எண்ணம் போலவே நம் வாழ்க்கை.

No comments: