Saturday, October 1, 2016

அளவுக்கு மீறீனால் அமிர்தமும் நஞ்சு

⭕ பச்சரிசி அதிகமானால்- சோகை நோய்
⭕ அச்சுவெல்லம் அதிகமானால் _ அஜீரணம்
⭕ பலகாரம் அதிகமானால் - வயிற்று வலி
⭕ இஞ்சி அதிகமானால் - மென் குரலும் இறுக்கமாகும்
⭕பழைய சோறு, கஞ்சி அதிகமானால் - வாயு, வயிற்று பொறுமல் ஏற்பட்டு கை கால்வலிக்கும்
⭕ தேங்காய் அதிகமானால் - சளி, பித்தம், வறட்டு இருமல் உண்டாகும்
⭕ மாங்காய் அதிகமானால் - வயிறு கட்டும் சளி வளரும், இடுப்புவலிவரும். பித்தம் அதிகமாகும்.
⭕ கோதுமையைசூட்டு உடம்புள்ளவர்கள் அதிகம உண்டால் - வயிறு வீங்கும், குடல் இரையும், பித்தம் அதிகமாகும்
⭕ பாதாம் பருப்பு அதிகமானால் - வாய் சுவை மாறும் பித்த அதிகமாகும். வயிறு மந்தமாகும்.
⭕ முற்றிய முருங்கை சாப்பிட - வாயு சளி உண்டாகும்
⭕ எருமைப்பால் அதிகம் குடிக்க - கிட்னி கல், அறிவு மங்கும்
⭕ மிளகு - உடம்பில் சக்தி இல்லாதவர்கள். அதிகம் உண்டால் வெப்பம் உண்டாகும்.
⭕ மிளகாய் அதிகமானால் -வெப்பமுண்டாகும், சளி அதிகரிக்கும், விந்து கெடும்.
⭕ காபி அதிகமானால் - கை நடுங்கும் பித்தம் அதிகமாகும். கண்ணெரியும், நெஞ்சு உலரும் ஆண்மை கெடும்.
⭕ டீ அதிகமானால் - உடல் நடுங்கும் கை கால் வீக்கமாகும், காய்ச்சல், வீக்கம், பசியின்மை, விந்து அழியும்
⭕ எலுமிச்சை அதிகமானால் - பாண்டு நோய், இதயம் ஆகியவை பாதிக்கும்.
⭕ எள்ளு அதிகமானால் - பித்தம் செரியாமை உண்டாகும்.
⭕ உப்பு அதிகமானால் - எலும்பு உருக்கும், உயிர் விந்தை குறைக்கும்
⭕ வெங்காயம் அதிகமானால் - தலைவலிக்கும், அறிவழிக்கும், சளி பெருகும்
⭕ குங்குமப்பூ அதிகமானால் - மதியழக்கும், ரத்தம் வெளுக்கும், கருவில் இருக்கும் குழந்தைஉறுப்புகளை கோணலாக்கும்.
⭕ வெள்ளை பூண்டு அதிகமானால்- ரத்தம்
கொதித்து பொங்கும், கரு அழிக்கும். குடல் எரிக்கும், ஆண் தன்மை இழக்கும்
🍚🍲 *அளவுக்கு மீறீனால் அமிர்தமும் நஞ்சு

No comments: