Monday, January 14, 2013

பொங்கல் வழிபாடு

* சூரியதேவனே! கிரகமண்டலத்தின் நாயகனே! ஒளிக்கும் ஒளியாக திகழ்பவனே! பொன் நிறமானவனே! எல்லோரும் துதிக்கப்படுபவனே! ஆகாயத்தில் சஞ்சரிப்பவனே! உன்னை வணங்குகிறோம்.
*பகல் பொழுதின் அதிபதியே! வெற்றியை வழங்குபவனே! ஆயிரமாயிரம் ஒளிக் கிரணங்களை கொண்டவனே! அதிதியின் புத்திரனே! உன்னைப் பணிகிறோம்.
* வெயிலாய் காய்பவனே! பகைவர்களை அழிப்பவனே! பிரகாசம் நிறைந்தவனே! அன்பு கொண்டு உயிர்களைக் காப்பவனே! மூவுலகையும் தோற்றுவித்தவனே! துன்பத்தை பனி போல மறையச் செய்பவனே! உன்னைத் துதிக்கிறோம்.
* ஆகாச சமுத்திரத்தில் யாத்திரை செல்பவனே! வேதங்களில் கரை கண்டவனே! உஷ்ணம் மிக்கவனே! மாலையில் மஞ்சளாய் ஒளிர்பவனே! உன்னைப் போற்றுகிறோம்.
* தங்கம் போல் ஜொலிப்பவனே! மும்மூர்த்திகளுக்கும் தலைவனே! தேவாதி தேவனே! ஆரோக்கியம் அருள்பவனே! உன்னைச் சரணடைகிறோம்.

No comments: