Wednesday, October 17, 2012

பணிவே சிறந்த நற்பண்பு

* யாராவது நம்மைப் புகழ்ந்தால் மகிழ்ச்சி அடையாதீர்கள். அதேபோல, இகழ்ந்து பேசினாலும் கவலை வேண்டாம். புகழையும், பழியையும் சமமாக எடுத்துக் கொண்டால் மனதில் அமைதி நிலைத்திருக்கும்.
* குடும்பவாழ்வில் ஈடுபடுவதே பிறருக்கு உதவி செய்வதற்காகத் தான். நிழல் தரும் மரம் போல மற்றவர்களுக்கு பயனுடையவர்களாக வாழுங்கள்.
* பணிவுடன் இருப்பதே நற்பண்புகளின் உயிர்நாடி. பணிவில்லாத மனிதன் வாழ்வில் உயர்வைப் பெற முடியாது.
* மரணம் எப்போது வேண்டுமானாலும் நமக்கு நேரலாம். அதற்குள் நல்ல அறங்களைச் செய்து மறுமைக்கும் நன்மையைத் தேடுங்கள்.
* பசுவைப் போன்ற நல்ல மனிதர்களிடம் பழகுங்கள். பாம்பு போன்ற விஷத்தன்மை கொண்டவர்களை விட்டு விலகி இருங்கள்.
* மனதில் நல்ல உயர்ந்த சிந்தனைகள் மலர வேண்டுமானால் அன்பும், அருளும் நிறைந்த தூய உணவை மட்டும் உண்ணுங்கள். 
வாரியார்

No comments: