Sunday, October 14, 2012

சாம்ராஜ்யத்தின் சொந்தங்கள்

* இறைவன் நீங்கள் கேட்கும் முன்பே உங்களுக்கு எது தேவை என்பதை தந்தை ஸ்தானத்தில் இருந்து அவன் அறிவான்.
* குழந்தை போல் எவர் தன்னைப் பணிவாக தாழ்த்திக் கொள்கிறாரோ அவரே பரலோகத்தில் தலைசிறந்தவராய் இருப்பார்.
* கவலைப்படுவதன் மூலம் உங்களில் ஒருவராவது ஒரு முழமேனும் உயர்ந்து விட முடியுமா?
* ஏழைகளே நீங்கள் ஆசீர்வாதத்திற்கு உரியவர்கள். ஏனெனில் ஆண்டவனின் சாம்ராஜ்யம் உங்களுக்குச் சொந்தமானது.
* உங்கள் நற்செயல்களைக் கண்டு விண்ணுலகில் உள்ள உமது தந்தையைப் போற்றும்படி உங்கள் ஒளி அவர்கள் முன் ஒளி வீசட்டும்.
* சின்னஞ்சிறு குழந்தைகள் என்னிடம் வர வழி விடுங்கள். அவர்களைத் தடை செய்யாதீர்கள். 
* உங்களிடம் உள்ளதை ஏழைகளுக்குக் கொடுங்கள். சொர்க்கத்தில் உங்களுக்குச் செல்வம் சேரும்.
* பாடுபட்டுக் கடுஞ்சுமையைத் தாங்கிக் கொண்டிருப்போரே நீங்கள் அனைவரும் என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்கு ஓய்வு தருகிறேன்.
இயேசுநாதர்

No comments: