Tuesday, September 25, 2012

நமக்கு தேவையான மருந்து

* மனதில் ஏற்படும் ஆசைகள் தான் நாம் அனுபவிக்கும் துன்பங்களுக்கு மூலமாக இருக்கிறது. இதனால் பல நேரங்களில் தீமைகள் தான் வருமே தவிர நன்மைகள் ஏற்படாது.
* எல்லோரும் சாந்தமாக இருந்தால் குற்றங்களும் நோய்களும் இராது.
* ஜனங்கள் ஒற்றுமையாக வாழ வேண்டும். தப்பு தண்டாவில் சிக்கிக் கொண்டு கஷ்டப்படக் கூடாது. 
* மனதை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர பயிற்சி, பக்தி, தியானம் அவசியம். மூன்றையும் முறையாக கடைப்பிடிப்பவர்கள் எளிதாக மனதை கட்டுப்படுத்த முடியும்.
* மெய், வாக்கு, மனம், பணம் இவற்றால் நாம் பாவம் செய்கிறோம், இந்த நான்கினாலும் நல்ல செயல்களைச் செய்யப் பழக வேண்டும்.
* உலகில் உள்ள பிரச்னைகளுக்கு எல்லாம் அதர்ம சிந்தனையே காரணம், இந்த நோய் தீரவேண்டுமானால் பக்தி, சாந்தம் ஆகிய இரு மருந்துகள் தேவை.
* வாழ்வில் சறுக்குவது சகஜம். ஆனால், மேலே ஏறுவதற்கு ஒவ்வொருவரும் பிரயத்தனம் செய்ய வேண்டும்.
- காஞ்சிப்பெரியவர் 

No comments: