Sunday, September 23, 2012

நியாயமாக சம்பாதியுங்கள்

* முட்டாளின் வழி அவனுடைய கண்களுக்குச் சீராகத்தான் தோன்றும். ஆலோசனைக்குச் செவி கொடுப்பவன் தான் அறிஞனாவான்.
* நேர்மையாளனின் பாதை உதய ஒளி போன்றது. நடுப்பகல் வரை பரிபூரணமாக அதன் பிரகாசம் மென்மேலும் உயர்ந்து கொண்டே போகும்.
* ஒன்றுமில்லாதவன் தன்னை ஏதோவென்று நினைத்துக் கொள்வானாகில் அவன் தன்னைத்தானே வஞ்சித்துக் கொள்கிறான்.
* எந்தப் பறவையாயிருந்தாலும் அதன் கண்பார்வையின் முன்னால் வலை விரிப்பது வீணே!
* மனிதனின் இருதயம் அவனுடைய வழியை வகுக்கும். ஆனால், அவனது காலடிகளை வழிநடத்துபவர் கடவுளே.
* சிலரின் பாவச் செயல்கள் விசாரணைக்குப் போகுமுன்பே வெளியாகி விடுகின்றன. மற்றும் சிலருடையதோ விசாரணைக்குப் பிறகு தான் பின் தொடர்கின்றன.
* அநியாயத்தின் மூலம் கிடைக்கும் பெரும் வருமானத்தைவிட, நியாயமாய்ச் சம்பாதிக்கும் சொற்பமே மேலானது.
* உன் மட்டில் கவனமாயிரு. உன் சகோதரன் உனக்கெதிராக மீறி நடந்தால் கண்டிக்கலாம். ஆனால், மனம் வருந்து வானேயானால் அவனை மன்னித்துவிடு.
-பைபிள் பொன்மொழிகள்

No comments: