Sunday, August 19, 2012

* சுறுசுறுப்பே மனிதனின் அரும்பொருள்

* கடவுள் நமக்கு அச்சம் நிறைந்த ஜீவனைக் கொடுக்கவில்லை. சக்தியும் அன்பும், மன அமைதியும் உள்ள ஜீவனைத் தான் கொடுத்திருக்கிறார்.
* கடவுளே எனக்குத் துணை. மனிதன் எனக்கு என்ன செய்வானென்று அஞ்ச மாட்டேன் என்று நான் தைரியமாய்ச் சொல்லலாமே.
* நீ பரிபக்குவமான மனிதனையும் நேர்மையாளனையும் கவனித்துப் பார். அவனுடைய முடிவு அமைதியானதாயிருக்கும்.
* அமைதியை உண்டாக்குபவர்கள் பாக்கியவான்கள். ஏனெனில் அவர்கள் தெய்வ மக்கள் என்று அழைக்க பெறுவார்கள்.
* என் வார்த்தைகளுக்குச் செவி சாய்ப்பவன் எவனோ அவன் பத்திரமாய் வாழ்வான். தீமையைப் பற்றிய பயமின்றி அமைதியாக இருப்பான்.
* சுறுசுறுப்பே மனிதனின் அரும்பொருள்.
* பெண்கள் மிதமான ஆடைகள் அணியட்டும். நாணமிகுந்த முகத்துடனும், விரித்த தலையோடு விளங்காமலும், விலையுயர்ந்த ஆடைகளையோ விரும்பாமலும் இருக்கட்டும்.
பைபிள் பொன்மொழிகள்

No comments: