Tuesday, July 24, 2012


ஆசை தீரும் காலம் எப்பொழுது
ஏப்ரல் 15,2012,
09:04  IST
* வசதியாக இருப்பவர்களுக்கு கூட, மற்றவர்களை விட அதிகமாக சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. இந்த மனப்பான்மையால் போட்டி பொறாமை உருவாகிறது.
* உலகில் போட்டி மனப்பான்மை இருக்கும் வரையில் மனநிறைவோ, நிம்மதியோ உண்டாகாது. பணஆசை பெருகப் பெருக மக்களிடம் போட்டி உணர்வு அதிகமாகிக் கொண்டே போகும்.
* சின்ன வயதில் ஞானம், ஆன்மிகம் எல்லாம் எதற்கு என்று அலட்டிக் கொள்கிறார்கள். துன்பத்தை எல்லாம் விலைக்கு வாங்கி சிரமப்பட்டாலும் பரவாயில்லை என்று பணத்தைத் தேடி அலைகிறார்கள்.
* எல்லாருக்கும் எல்லா வசதியும் சமமாகக் கிடைத்தாலும் மனம் அடங்குவதில்லை. அப்போதும், முதலில் அது தனக்குத் தான் கிடைக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறது. 
* மன இருளை விரட்டும் பிரகாசத்தை பெறும் முயற்சியை ஒருபோதும் தளர விடக்கூடாது. கிழக்கில் தோன்றும் சூரியன் காணாமல் போனால் கூட பாதகமில்லை. நமக்குள் ஒளிதரும் ஞானத்தை ஒருபோதும் விட்டு விடக் கூடாது. 
காஞ்சிப்பெரியவர்

No comments: