Thursday, May 31, 2012


இனிமையாகப் பேசுங்கள்
மே 25,2012,
10:05  IST
* நாக்கை அடக்கினால் நாம் ஞானியாக வாழலாம். அதனால் தான் விரதம் இருப்பதற்கும், நாள் முழுவதும் பேசாமல் மவுனம் காப்பதற்கும் பெரியவர்கள் நமக்கு வழிகாட்டி இருக்கிறார்கள்.
* உண்ணும் உணவைப் பொறுத்தே ஒருவரின் எண்ண ஓட்டம் அமைகிறது. வேண்டாத தீய ஆசைகளுக்கும் உணவிற்கும் நெருங்கிய தொடர்புண்டு. 
* நாக்கின் ருசி, பேச்சு இரண்டையும் கட்டுப்படுத்துவதை பொறுத்துத் தான் வாழ்வு சிறக்கும். நாக்கை நெறிப்படுத்தினால் பிற நன்மைகள் தாமாகவே நம்மை வந்தடையும். 
* இஷ்டதெய்வம் ஒன்றைத் தேர்ந்தெடுங்கள். அதன் நாமத்தை திரும்பத் திரும்ப உச்சரியுங்கள். அது நாவிற்கும், மனதிற்கும் இனிமை சேர்க்கும்.
* பேசுவதாக இருந்தால் அளவோடு பேசுங்கள். இனிமையாகவும், மற்றவர் மனம் புண்படாமலும் பேசப் பழகுங்கள். உங்களின் பேச்சு மற்றவருக்கு அமைதி தருவதாக அமையட்டும். 
சாய்பாபா 

No comments: