Saturday, March 30, 2013

எல்லாம் இறைவன் செயல்

* உலகில் உள்ள தொழில்கள் அனைத்தும் இறைவன் செயலால் நடக்கிறது. சோம்பல் ஒன்று தான் உலகில் இழிவானது. எந்தத் தொழிலில் ஈடுபடும் யாராக இருந்தாலும் அவர்கள் மேன்மக்களே. 
* கடவுளுக்கு எல்லாம் ஒன்று போலத்தான். எத்தனை கோடி உயிர்கள் இந்த உலகத்தில் வாழ்ந்தாலும், மடிந்தாலும் அவர் நிலையில் எந்த மாற்றமும் இருப்பதில்லை.
* நம்முடைய இஷ்டப்படி உலகில் எந்த ஒரு நிகழ்ச்சியும் நடப்பதில்லை. தெய்வத்தின் இஷ்டப்படி தான் அது இயங்குகிறது.
* மனம் இயற்கையாகவே தீய சகவாசத்தின் பக்கம் செல்லக்கூடியது. நல்லவர்களின் சேர்க்கை, பயிற்சி ஆகியவற்றால் அது தன்னை உயர்த்திக் கொள்ளும்.
*அழுவதால் பயனில்லை. முன்வினைப்பயனே நமக்கு இப்பிறவியில் வாய்த்திருக்கிறது. அவரவர் செய்த வினைப்பயனை அவரவரே அனுபவித்துக் கழித்தாக வேண்டும். 
* ஒருவன் முதலில் தனக்குத் தானே நண்பனாகத் திகழவேண்டும். அப்போது உலகம் முழுவதும் அவனுக்கு நண்பர்களாகி நட்பு பாராட்டுவர். 
-பாரதியார்

No comments: