Tuesday, March 26, 2013

தூங்கும் முன் சிந்தனைசெய்

* சேதுவில் அணை கட்டிய ராமனுக்கு அணில் செய்த உதவிபோல், நாமும் ஏதாவது ஒரு திருப்பணியில் ஈடுபட்டுத் தர்மம் செய்ய வேண்டும்.
* ஆசிரியர் கடமைக்கு கல்வி கற்று தராமல், மாணவனை சோதித்து சுத்தம் செய்து, நற்குணம் உள்ளவனாக, புத்தியுள்ளவனாக மாற்ற வேண்டும்.
* அரசை எதிர்பார்த்து குறை கூறி கொண்டு இருக்காமல், நாட்டின் மீது பற்றுள்ள மக்கள் சமுதாயத்திற்கு தங்களால் முடிந்த நன்மைகளில் ஈடுபட வேண்டும்.
* ஆனந்தமாக இருப்பதற்கு எப்போதும் உண்மையாக இருக்கும் கடவுளை பிடித்துக் கொள்ள வேண்டும். உலகத்துக்குச் சேவை செய்தால் சொந்தக் கஷ்டத்தை மறக்க வழி ஏற்படும்.
* வாழ்க்கையில் நம்முடைய துன்பத்தையே நாம் பெரிதாக நினைத்துக் கொண்டிருக்கக் கூடாது, நம்மால் உலகம் மேம்படும் என்று தெரிந்தால் அதற்காக நாம் பாடுபட வேண்டும்.
* தினமும் தூங்கச் செல்லும் முன் அன்றைய நாளில் நீ செய்த நல்லவை, கெட்டவைகளை எண்ணிப்பார்த்துவிட்டு, இறைவனின் நாமத்தை 108 முறை உச்சரித்துவிட்டு பின்பு தூங்க வேண்டும்.
-காஞ்சி பெரியவர் 

No comments: