Thursday, November 8, 2012

இறைவன் உனது எஜமானன்..... கிருபானந்த வாரியார்

* கண்ணுக்கு தெரிந்த உலகிற்கு சேவை செய்வதோடு, கண்ணுக்கு தெரியாத கடவுளுக்கும் சேவை செய்ய வேண்டும்.
* கடவுளை வணங்காவிட்டால் தண்டிக்கமாட்டார். வணங்கினால் உனக்கு நன்மை கிடைக்கும். ஆற்றில் குளித்தால் நன்மை ஆற்றுக்கல்ல, அதேபோல் கடவுளை வணங்கினால் நன்மை கடவுளுக்கல்ல.
* பலபேர் கூடி கையெழுத்திட்ட விண்ணப்பத்தை அதிகாரிகள் உடனடியாக கவனிப்பர். அதேபோல் பலபேர் கூடி கூட்டுப்பிரார்த்தனை செய்தால், அந்த விண்ணப்பத்தைக் கடவுள் உடனே கவனிப்பார்.
* இறைவன் எப்போதும் நமக்கு அருளைத்தான் அளிக்கிறார். சில நேரங்களில் வரும் சோதனைகள் துன்பம்போல் தோன்றும். அது நம்முடைய அறியாமையால் ஏற்படுகிறது.
* இறைவனை எஜமானாகக் கருதி, சேவை செய்வதில் அனுமானைப் போல் நடந்து கொள்ள வேண்டும்.
* கடவுள் உணர்வு இல்லாதவன் எவ்வளவு பெரிய அறிஞனாக இருந்தாலும் அவன் விலங்காகத்தான் கருதப்படுவான்.

No comments: