Sunday, October 7, 2012

அமைதிக்கு வழி வகுப்போம்

* ஒரு காலத்தில் இருளாக இருந்த நீங்கள் இப்போது கடவுளுடன் இணைந்து ஒளியாய் இருக்கிறீர்கள். ஆகவே ஒளி பெற்ற மக்களாக எப்போதும் வாழுங்கள்.
* ஞானிகள் வானத்தின் பேரொளியைப் போலவும், ஒளியைப் போலவும், பலரை நல்வழிக்குக் கொண்டு வீண்மீன்களைப் போலவும், என்றென்றும் முடிவில்லாக் காலத்திற்குள் ஒளி வீசித் திகழ்கின்றனர்.
* நீ செய்ய நினைக்கும் செயல் எதுவோ அதை (உடனே) செய். நீ நெருங்கிக் கொண்டிருக்கும் பாதாளத்தில் எவரும் செயல்புரிவதுமில்லை, சிந்தனை செய்வதுமில்லை.
* கோபப்பட்டாலும் பாவம் செய்யாதிருங்கள். படுக்கையில் உங்கள் உள்ளத்தோடு பேசி அமைதியாயிருங்கள். உங்கள் வேலையை மட்டுமே பார்த்துக் கொண்டு<, உங்கள் சொந்தக் கையால் உழைத்து அமைதியாய் வாழ்வதில் நோக்கமாயிருங்கள்.
* சிறிது காலத்துன்பங்களுக்கு பின் கடவுள் உங்களைச் சீர்படுத்தி, உறுதிப்படுத்தி, வலுப்படுத்தி நிலைநிறுத்துவார்.
* வாழ்க்கையில் எப்போதும் அமைதிக்கு வழி வகுப்பவற்றை தேடுவோம். ஒருவர் மற்றொருவருக்கு வளர்ச்சி தருபவற்றை செய்ய முயற்சிப்போம்.
-பைபிள் 

No comments: