Monday, October 1, 2012

எது செய்தாலும் பலன் நமக்கே!

* கடவுள் பிரம்மாண்டமான பெரிய வட்டம் போன்றவர். அந்த வட்டத்தின் மையம், 
எங்கும் எல்லா இடங்களிலும் அமைந்து
இருக்கிறது. அந்த மையம் தான் மனிதன். 
* நம்முடைய தெய்வீக இயல்பை வெளிப்
படுத்த ஒரே வழி, மற்றவர்கள் தங்கள் 
தெய்வீக இயல்பை வெளிப்படுத்தும்படி அவர்களுக்கு உதவி செய்வது தான்.
* கடவுள் ஒவ்வொரு உயிரிலும் குடிகொண்டிருக்கிறார். இதைத் தவிர தனியாக வேறு ஒரு கடவுள் இல்லை. இந்த உண்மையை எவ்வளவோ தவங்களுக்குப் பிறகு நான் புரிந்து கொண்டிருக்கிறேன். மக்களுக்குச் சேவை 
செய்பவன் உண்மையில் கடவுளுக்குச் சேவை 
செய்பவனாகிறான்.
* தன்னலமற்ற மனப்பான்மை தான் ஆன்மிக வாழ்வின் அடிப்படை. இதை கொண்டே ஒருவரின் ஆன்மிகத்
தேடுதலை சோதிக்க வேண்டும். சுயநலம் 
இல்லாதவனே, ஆன்மிக வாழ்க்கையைப் 
பெற்றவனாகிறான். 
* தீமையைச் செய்வதனால் நாம் நமக்கும் மற்றவர்
களுக்கும் தீமை செய்கிறோம். நன்மையைச் 
செய்வதனால், நாம் நமக்கும் மற்றவர்களுக்கும் நன்மை செய்து கொள்கிறோம். 
- விவேகானந்தர்

No comments: