Monday, June 25, 2012


 பெயர்ச்சி  – தோல்வி நீக்கி வெற்றி பெற 

jothida parigaram jathaga parigarangaljothida parigaram jathaga parigarangal
பரிகாரங்கள் :
தற்போது, சமீபத்தில், குருப் பெயர்ச்சிப் பலன்களை  வெளியிட்டிருந்தோம். சில ராசிகளுக்கு நறபலன்களும் சில ராசிகளுக்கு அனுகூலமற்றதுமான பலன்கலைப் பார்த்திருந்திருப்பீர்கள். ஒவ்வொரு ராசிக்கும் உரிய பரிகாரங்களையும் ஆங்காங்கே சொல்லியிருந்தோம். இப்போது வாசகர்கள் இன்னும் அதிகமாக பயனடையும் வண்ணம் அனைத்து விதமான பிரச்சினகளையும் தீர்க்கும் விதமாக , பிரச்சினைவாரியாக பரிகாரங்களைக் கூறியுள்ளோம். அவரவர் பிரச்சினையை, உரிய பரிகாரங்களைச் செய்து தீர்த்துக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்.அனைவரையும் கவலையின்றி மனநிம்மதியைப் பெருக்கிக் கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்.
தோல்வியை விரட்டி வெற்றியைக் குவிக்க !:
சிலர் எதில் இறங்கினாலும் தோல்வியே வரும். தொட்டது துலங்காது. தேர்வில் தோல்வி, மேலும், வேலை வாய்ப்புகளும் அமையாது. திரைப்படம் எடுத்தாலும் தோல்வி. கோடிக்கணக்கான பணமும் பாழாகும். அரசியல்வாதிகளுக்கு அடுத்தடுத்த தேர்தல்களில் நின்றாலும் தோல்வி என்று துவண்டு போயிருப்பார்கள். இதற்கெல்லாம காரணம் அவர்களின் ஜாதக அமைப்பே!.
எப்படிப்பட்ட ஜாதக அமைப்பையும் மாற்றிவிடக்கூடிய சக்தி இந்த பரிகாரத்துக்கு உண்டு. ஈஸ்வரி பட்டம் உள்ள அம்மன் தெய்வங்கள் கஷ்டப்படுகிறவர்களுக்கெல்லாம் இரக்க உணர்வோடு வெற்றியைத் தரும் சிறப்பு வாய்ந்த சக்தி பெற்றவை. குறிப்பாக அங்காள பரமேஸ்வரி அனைவருக்கும் வெற்றிக்குத் துணை நிற்கும் தெய்வம். தொடர்ந்து 27 வெள்ளிக்கிழமை அங்காள பரமேஸ்வரி ஆலயத்துக்கு சென்று காலை 9.00 மணி முதல் 10.00 மணிக்குள் அதாவது சனி ஹோரையில் , 18 எலுமிச்சம்பழங்களால் ஆன மாலையிட்டு, 9 எலுமிச்சம்பழங்களை இரண்டாக வெட்டி மஞ்சள் குங்குமம் இட்டு, 18 தீபமிட்டு வழிபட்டு வந்தால், தோல்வியைத் தரும் தோஷம் விலகி ஓடும். வெற்றி மேல் வெற்றி கிட்டும். நினைத்த காரியம் கைகூடும். தீபமேற்றி ‘ அங்காள பரமேஸ்வரி தாயே! எனக்கு வெற்றியை நீ மட்டுமே தர முடியும். என் வாழ்வில் ஒளியேற்று!’ என மனமுருகி வேண்டினால், தோல்வி தோஷம் அடியோடு நீங்கி , வெற்றி மேல் வெற்றிகள் குவியும்.
மேற்கூறப்பட்ட பரிகாரத்தைச் செய்து அனைவரும் இன்புற்றிருக்க வேண்டுகிறோம்!

No comments: