Monday, June 11, 2012


இன்று விவேகானந்தர் பிறந்த தினம்)          செய்ய முடியும் என்று நம்பு!
ஜனவரி 10,2012,
11:01  IST
* கடவுளைக் காண மனிதனுக்குத் தொண்டு செய்யுங்கள். பட்டினியால் வாடும் ஏழைகளை நாராயணர்களாக பாருங்கள்.
* உங்களை உடல் அளவிலோ, அறிவு அளவிலோ, ஆன்மிக அளவிலோ ஏதாவது ஒரு விஷயம் பலவீனமாக்கினால், அதை விஷமாகக் கருதி உதறித்தள்ளுங்கள்.
* இறைவன் ஒரு சக்தி மட்டுமல்ல, அவரே உண்மையும் கூட. இதை உணர்ந்து உண்மையுடன் நடந்து கொள்ளுங்கள். 
* திறக்க முடியாத அனைத்து வாசல்களையும் அன்பு திறக்கிறது. உலகின் அனைத்து ரகசியங்களுக்கும் வாசல் அன்பு தான்.
* கால்பந்து விளையாடி விட்டு, கீதை படித்தால் மனதில் நன்றாகப் பதியும். ரத்தத்தில் வேகமிருந்தால் தான், பகவான் கிருஷ்ணரின் அறிவையும், ஆற்றலையும் அறிய முடியும்.
* நம்மிடத்தில் ஒன்றை இழுத்துக் கொள்ளும் சக்தியைப் போல, அதை விலக்கும் சக்தியும் உள்ளது.
* முடியாது என்ற வார்த்தையை அகராதியை விட்டே உதறித்தள்ளுங்கள். உங்களால் எல்லாவற்றையும் சாதிக்க முடியும்.
விவேகானந்தர்

No comments: