Saturday, May 26, 2012


அன்பு நீர் பாயட்டும்!
மே 31,2009,
11:14  IST
* சக்தி எல்லையற்றது. முடிவில்லாதது. தான் அசையாமல், உலகப் பொருள்களை எல்லாம் அசைத்து வைப்பது சக்தியே. 
* சக்தி என்பவள் பிரம்மதேவனின் மகளாக, கண்ணபெருமானின் தங்கையாக, சிவபெருமானின் மனைவியாக இருக்கிறாள். அதே சக்தியே பிரம்மா, கண்ணன், சிவன் மூவருக்கும் தாயாகவும் திகழ்கிறாள். சக்தியே எல்லாவற்றுக்கும் ஆதாரமான முதல்பொருளாக இருக்கிறாள். 
* சக்தி என்னும் கடலில் சூரியன் ஒரு நுரை போல இருக்கிறான். சக்தி என்னும் வீணையில் சூரியன் ஒரு ஸ்வர ஸ்தானம். சக்தி ஆடும் கூத்தில் சூரியனின் ஒளி ஒரு தாளமாக இருக்கிறது. அந்த சக்தியை நாம் போற்றுவோம். 
* காகம் கரைவதும், நீர் பாய்வதும், பயிர் வளர்வதும், கோழி கூவுவதும், எறும்பு ஊர்வதும் இப்படி இயற்கையின் ஒவ்வொரு அசைவும் சக்தியின் தொழிலே. அவள் நம்மை கர்மயோகத்தில் (கடமையைச் செய்தல்) நாட்டம் கொள்ளச் செய்வாளாக. 
* மகா சக்தியின் அருளால் மனம் என்னும் நிலத்தில் அன்புநீர் பாயட்டும். அறிவு என்னும் ஏறு (காளை) உழட்டும். சாஸ்திரங்களால் அதிலுள்ள களை நீங்கட்டும். வேதப்பயிர் செழிக்கட்டும். இன்பமாகிய நெல்லை அறுவடை செய்ய அவளது அருள் கிடைக்கட்டும்

No comments: