Sunday, April 1, 2012

புதுக்கணக்கு துவங்கும் இனியநாளில், செல்வத் திருமகளான லட்சுமியை வழிபட்டு தொழில், வியாபாரத்தில் அபிவிருத்தி அடைவோம். 
* தாமரைக் கண்களைக் கொண்ட திருமாலின் துணைவியே! அவனது உள்ளத்தாமரையில் மகிழ்ச்சியோடு வீற்றிருக்கும் இன்பவடிவே! கற்புநெறி தவறாத குலமாதர் நெற்றியில் குங்குமமாய்த் திகழ்பவளே! உலகின் கண்மணியாய் விளங்கும் திருமகளே! எங்கள் தொழிலும், வியாபாரமும் தழைத்திட வேண்டும் தாயே!
* செந்தாமரை மலரில் வீற்றிருப்பவளே! பசுவின் கோமயத்தில் குடிகொண்டவளே! மாவிலைத் தோரண வாசலில் நிறைந்திருப்பவளே! மங்கலம் மிக்க துளசிச்செடியில் உறைந்திருப்பவளே! இனிய சொற்களைப் பேசும் நல்லோரின் நாவில் இருப்பவளே! தூயவளே! எல்லோரும் இன்புற்று வாழ அருள்புரிவாயாக.
* செல்வத்திருமகளே! பாற்கடல் அமுதோடு பிறந்தவளே! வெற்றி தரும் தைரியலட்சுமியே! உயிர்களுக்கெல்லாம் குறைவில்லாமல் உணவைத் தந்து உலகைக் காக்கும் அன்னலட்சுமியே! எங்களுக்கு செல்வ வளத்தை தந்தருள்வாயாக.

No comments: