Tuesday, August 7, 2012

"ஆஹா' என்று இருங்கள்

* பொழுது போக்கையே வாழ்க்கைப் 
போக்காக, அதிலும் வழுக்கிவிடுகிற 
போக்காக ஆக்கிக் கொள்ளாமல், எந்த அளவோடு ருசித்துவிட்டு நிறுத்திக் கொள்ள வேண்டுமோ அப்படி நிறுத்திக் கொள்ள வேண்டும்.
* எதற்கெடுத்தாலும் எரிந்து விழுந்து கொண்டோ, மூக்கைச் சிந்திப் போட்டுக் கொண்டோ 
இல்லாமல், "ஆஹா' என்று எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டும்.
* அதிகமாகப் பொருள்களைத் தேடிப் போவதால் 
வாழ்க்கைத் தரம் உயர்ந்துவிடாது. உண்மையில் 
வாழ்க்கைத்தரம் என்பது தரமான வாழ்க்கை 
மனநிறைவோடு இருப்பதுதான்.
* அனைவரும் தங்கள் தேவைகளைக் குறைத்துக் கொண்டு மனசினால் நிறைந்து, சுபிட்சமாக இருக்க வேண்டும். வசதி உள்ளவர்களும் எளிய வாழ்க்கை 
நடத்துவது அவர்களுக்கும் நல்லது, மற்ற ஜன 
சமூகத்துக்கும் நல்லது.
* வியாதிக்கு மருந்து மாதிரி, பசிக்கு உணவு ரொம்ப அளவாகத்தான் போட வேண்டும். பசியைத் தீர்த்துக் கொள்ளத்தான் உணவே, தவிர ருசியைத் தீர்க்க அல்ல.
-காஞ்சிப்பெரியவர்  

No comments: