Monday, August 13, 2012

லட்சியத்தில் உறுதி வேண்டும்

* சுயநலநோக்கத்துடன் செயல்படும்போது நம் ஆற்றல் அனைத்தும் சிதறி வீணாகின்றன. ஆற்றல் உங்களிடம் திரும்பி வருவதற்கான வழி சிறிதும்இல்லை.
* உங்கள் இதயத்தில் ஒரு வெட்டவெளி இருப்பதாக நினையுங்கள். அதில் சுடர் ஒன்று ஒளிவீசிப் பிரகாசிப்பதாக எண்ணி தியானத்தில் ஆழ்ந்து விடுங்கள். 
* மனம் என்னும் கடிவாளத்தை உறுதியாகப் பிடித்து உடலையும், புலன்களையும் நல்வழியில் நடத்திச் செல்வதே தவம்.
* ஒருமுகத்தன்மையுடன் ஒருசெயலில் ஈடுபடப் பழகினால் உடலுக்கு புத்துணர்வு உண்டாகும். 
* சிறிது நேரம் பழகினாலும் கூட நல்லவர்களுடன் தொடர்பு கொள்ளுங்கள். அந்த தொடர்பால் பிறவிக்கடலைக் கடக்கும் வழி கிடைக்கும்.
* ஒரு குறிக்கோளைத் தேர்ந்தெடுங்கள். அதைப் பின்பற்றுங்கள். முடிவை எட்டும் வரை விட்டு விடாதீர்கள். லட்சியத்தில் உறுதி இருந்தால் வெற்றி நிச்சயம் கிடைக்கும்.
- விவேகானந்தர்

No comments: