Friday, August 31, 2012

பணியாளர்களை உபசரிங்க

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் நவின்றார்கள்:
* பணியாட்களின் சக்திக்கு மிஞ்சிய வேலைப்பளுவை அவர்கள் மீது சுமத்த வேண்டாம். அவ்வாறு சுமத்த நேரிட்டால் அந்த வேலையில் அவர்களுக்கு நீங்கள் துணை புரியுங்கள்.
* பணியாளர்களை உபசரியுங்கள். நீங்கள் உண்பதில் இருந்து அவர்களுக்கும் உணவு அளியுங்கள்.
* உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளர்களே! உங்களுக்குக் கீழிருந்தவர்கள் குறித்து உங்கள் ஒவ்வொருவரிடமும் வினவப்படும். பணியாட்கள் தன் எஜமானனின் பொருட்களுக்குப் பாதுகாவலன் ஆவான். அவர்களின் பொறுப்புகள் பற்றி விசாரிக்கப்படுவார்கள்.
* நாம் பொறுப்பில் அமர்த்தி உள்ள ஒருவர் நம்மிடமிருந்து ஓர் ஊசியை மறைத்தாலும் அல்லது அதைவிடச் சிறியதொரு பொருளை மறைத்தாலும் அதனை அவர்கள் அபகரித்துக் கொண்டார் என்றே பொருள். மறுமை நாளில் அதனைச் சுமந்த வண்ணம் வருவார்.
வேதவரிகளும் தூதர் மொழிகளும் நூலில் இருந்து

Thursday, August 30, 2012

தெய்வீக குணங்களை வளர்ப்போம்

* மனிதராகப் பிறந்தவர் எல்லாம் மனிதராக மாட்டார். இயற்கையை ஒட்டி வாழும் தெய்வீக வாழ்க்கையே பயனுடையதாகும். தன்னிடம் இருக்கும் தெய்வீகசக்தியை மனிதன் உணராமல்வாழ்வதில் பொருளில்லை. 
* மனிதப்பிறவி விலங்கு உணர்விற்கும் தெய்வீக உணர்விற்கும் இடைப்பட்ட நிலையாகும். அதனால் தான் மனித மனங்களில் பொறாமை, காமம் போன்ற தீயகுணங்களும், அன்பு, கருணை போன்ற தெய்வீக குணங்களும் இருக்கின்றன.
* தீயகுணங்களை வளர்த்துக் கொள்ளத் துணிந்தால் அசத்தியத்தையும், தெய்வீக குணங்களை வளர்த்துக் கொண்டால் சத்தியத்தையும் அடையமுடியும். 
* மனிதன் தனது அன்றாடக் கடன்களை முறையாக நிறைவேற்ற வேண்டும். விழித்திருக்கும் வேளையில் உறங்குவதோ, உறங்கும் வேளையில் விழித்திருப்பதோ முறையான செயல் அல்ல.
* மனிதன் முறையாக அன்றாடம் குறைந்தபட்சம் நான்குமணிநேரமாவது உறங்க வேண்டும். உறங்கும் நேரத்தில் விழித்திருப்பவர்களின் உடல்நலம் குலையத் துவங்கும். நாளடைவில் ஒழுக்கத்திலிருந்து விலகி ஒழுங்கீனமானவர்களாக மாறிவிடுவர். 
திரு.வி.க.

வாழ்க்கை ஒரு நீரோட்டம்

* தூய்மையற்ற சிந்தனைகளைப் படித்தால், அசுத்தமான எண்ணம் மனக்கண்ணாடி வழியே இதயத்திரையில் படியும். நல்ல திசையில் மனதைத்திருப்பி நல்லதைச் செய்ய வேண்டும்.
* கல்லை, மண்ணை, காகிதத்துண்டைக் கடவுள் நிலைக்கு உயர்த்தலாம். ஆனால் கடவுளைக் கல்லாகவும், காகிதத்துண்டாகவும் கீழ் நிலைக்கு இறக்கி விடக்கூடாது.
* இளமை போனால் திரும்பாது. அதுபோல, வாழ்க்கையும் ஒரே திசையில் செல்லும் நீரோட்டம் என்பதால், பயனுள்ள வகையில் வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்.
* வாழ்வில் நடக்கும் ஒவ்வொரு செயலையும் கடவுள் கொடுத்த பரிசாக ஏற்றுக் கொள்ளுங்கள். இன்பம், துன்பம் எதுவந்தாலும் அது இறைவன் கொடுத்ததாகும்.
* எண்ணம், சொல், செயல் மூன்றும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. பேச்சும் செயலும் ஒன்றாக இல்லாவிட்டால், மனிதனின் மனதில் அமைதி தொலைந்துவிடும்.
சாய்பாபா

Tuesday, August 28, 2012

மனதால் புண்ணியம் செய்வோம்

* வாக்கினாலும், மனத்தினாலும், கை, கால் முதலியவற்றாலும் பாவம் செய்து இருக்கிறோம். அவற்றை அதே வாக்கு, மனம், உறுப்புகளால் புண்ணியம் செய்து கரைத்துவிட வேண்டும்.
* அவரவருக்குரிய கடமையை நியதியோடு பின்பற்றினால் மனதில் ஒழுக்கம், கட்டுப்பாடு, மனத்தூய்மை உண்டாகும்.
* குணத்தினாலும், உடலாலும் சேர்ந்து ஒன்றை ஒன்று தூய்மைப்படுத்திக் கொள்ளும் முறையில் செயல் செய்ய வேண்டும்.
* தனக்காக எவ்வளவு குறைவாகச் செலவழிக்க முடியுமோ, அப்படி எளிமையாக வாழ்ந்து, மிச்சம் பிடித்து, அதைத் தர்மத்துக்குச் செலவழிப்பது தான் தனக்கு மிஞ்சிய தர்மமாகும்.
* மனம் நாலாதிசைகளிலும் வெறிநாய் போல் ஓடாமல் இருக்கும் வகையில் கட்டுப்படுத்தி பழகுங்கள்.
* மக்கள் எந்த நிலையில் இருக்கிறார்களோ, அங்கிருந்தே அவர்களை முன்னுக்கு அழைத்துச் செல்ல வேண்டியது தலைவர்களின் கடமை.
* துயரம் எங்கு காணப்படுகிறதோ, அங்கு நாமே வலுவில் சென்று அந்தத் துயரத்தை நீக்க நம்மால் முடிந்ததை செய்ய முயற்சிக்க வேண்டும்.
- காஞ்சிப்பெரியவர் 

Monday, August 27, 2012

தடைகளை வெல்ல வழி

* மனித வடிவம் கொண்ட அனைத்து உயிரையும் வழிபடுங்கள். 
* இரக்கத்தால் பிறருக்கு நன்மை செய்வது நல்லது. ஆனால், இறைவனது படைப்பான அனைத்து உயிர்களுக்கும் பணி செய்வது அதைவிட மிக நல்லதாகும்.
* ஒவ்வொரு உயிரிலும் தெய்வீகத் தன்மை குடி கொண்டிருக்கிறது, உள்ளேயும் வெளியேயும் இருக்கும் இயற்கையைக் கட்டுப்படுத்தி, உள்ளத்தில் குடி கொண்டுள்ள தெய்வீகத் தன்மையை மலரச் செய்வதுதான் முடிவான லட்சியமாகும்.
* தெளிந்த உண்மையையும், கருத்துத் தூய்மையையும் படைக்கலனாகக் கொள்பவர்கள் எந்த தடையையும் எதிர்த்து வெற்றி பெறுவது உறுதி.
* இறைவன் வரம்பு கடந்த பெருமைகளை உடையவன். தூய்மையான மனத்தைப் பெறுவதுடன், இறைவன் மீது நம்பிக்கை கொள்ள வேண்டும். எப்போதும் இறைவனையே சார்ந்து நிற்பதுடன் நன்னெறியில் நின்றால் உங்களை எவராலும் வெல்ல முடியாது.
* எப்போதும் இனிமையோடும், மகிழ்ச்சியோடும் இருப்பது ஒருவனைக் கடவுள் அருகில் கொண்டு செல்லும்.
- விவேகானந்தர்

Sunday, August 26, 2012

உங்களுக்கு தெரியுமா?


1. ராஜிவ் காந்தி சோனியா காந்தியை மணப்பதற்காக "ரோபெர்ட்டோ" ( ROBERTO) என தன் பெயரை மாற்றி கத்தோலிக்கராக மதம் மாறினார்.

2. சோனியா காந்தியின் உண்மையான பெயர் "சேனியா மைனோ" (SANIA MAINO).

3. ராகுல் காந்தியின் உண்மையான பெயர் "ரால்" ( RAUL).

4.  பிரியங்காவின் உன்மையான பெயர் ( BIANCA).

5. சோனியா காந்தி பள்ளி இறுதி வகுப்பு வரை மட்டுமே படித்தவர். லென்னாக்ஸ் ஷாப் (LENNOX SCHOOL)) என்ற ஆங்கிலம் கற்பிக்கும் பள்ளியில் ஆங்கிலம் படித்தார். இந்த பள்ளி கேம்பிரிட்ஜ் யூனிவர்சிட்டி கேம்பஸ்சில் இருக்கிறது. 

6. கேம்பிரிட்ஜ் டவுனில் உள்ள ஒரு உணவு விடுதியில்  சப்ளையராக பணியாற்றினார்.

7.இந்திரா காந்தி சுடப்பட்டவுடன், அவரை  Dr. ராம் மனோகர் லோகியா  மருத்துவமனைக்கு சோனிய காந்தி எடுத்து செல்ல வேண்டும் என நிர்ப்பந்தித்தார். இது AIIMS மருத்துவமனைக்கு எதிர் திசையில் உள்ளது. அங்கு சென்றவுடன், AIIMS மருத்துவமனைக்கு கொண்டு செல்லவேண்டும் என தன் முடிவை மாற்றினார். இதனால் ஏற்பட்ட 24 நிமிட கால தாமத்தால் அதிக ரத்த இழப்பு ஏற்பட்டே இந்திரா காந்தி மரணமடைந்தார்.

8. ராஜீவ் காந்தி மரணத்திற்கு பின் சோனியா பிரதமர் பதவிக்கு வர அவருக்கு போட்டியாக இருந்தவர்கள் ராஜேஷ் பைலட் மற்றும் மாதவராவ் சிந்தியா. இவர்கள் இருவரும்  சந்தேகத்திற்கு இடமான வகையில் விபத்துகளில் உயிரிழந்தனர்.

9. பிறப்பால் சோனியா காந்தி இத்தாலியர். அதன் பின் இந்திய குடியுரிமை பெற்றார். 1992 -ம் ஆண்டு இத்தாலிய குடியுரிமை சட்டப்படி இரட்டை குடிஉரிமை ரத்து செய்யப்பட்டதால்  இத்தாலிய குடியுரிமையை இழந்தார். அதை போலவே  ராகுல் காந்தியும், பிரியங்காவும் இரட்டை குடியுரிமை பெற்றவர்கள். அதன் பின் இத்தாலிய குடியுரிமையை இழந்தனர்.

10.  2001 செப்டம்பர் மாதம் 27 -ம் தேதியன்று அமெரிக்கவில் போஸ்டன் விமான நிலையத்தில் FBI  ராகுல் காந்தியை கைது செய்தது. அதன் பின் இந்திய அரசின் தலையீட்டால் விடுவிக்கப்பட்டார்.

11.  சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியின் பெயரில் உள்ள சுவிஸ் வங்கி கணக்கில் ரஷ்ய உளவுத்துறை கொடுத்த பணம் 10,000 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. விபரங்களுக்கு என்னுடைய இந்த பதிவை பார்க்க இதை கிளிக் செய்யவும்.

12.  இந்திய அரசியலமைப்பு சட்ட நடைமுறைப்படி  ஜனாதிபதி, பிரதமர் போன்ற பதவிகளுக்கு  பிறப்பால் இந்திய குடியுரிமை பெற்றவர்கள் மட்டுமே தகுதியுடையவர்கள். அதனால் தான், " இப்பொழுது ராகுல் காந்தி பிரதமராகலாம்" என திக்விஜய சிங் கூறியதற்கு, சுப்பிரமணிய சாமி "இதில் சட்ட சிக்கல் உள்ளது" என குறிப்பிட்டார்.

ஆனந்தம் அடையும் வழி

* அமைதியை உண்டாக்குபவர்கள் பாக்கியவான்கள். ஏனெனில் அவர்கள் தெய்வமக்கள் என்று அழைக்கப் பெறுவார்கள்.
* என் வார்த்தைக்குச் செவி சாய்ப்பவன் எவனோ, அவன் பத்திரமாய் வாழ்வான். தீமையைப் பற்றிய பயமின்றி அமைதியாக இருப்பான்.
* அயலவனை மதிப்பவன் பாவம் செய்கிறான். ஆனால், எளியவனுக்கு இரங்குபவனோ ஆனந்தமாயிருப்பான்.
* ஒர் ராஜ்யம் தனக்குத் தானே விரோதமாகப் பிளவுபடுமேயானால் அந்த ராஜ்யம் நிலைநிற்க மாட்டாது.
* வேட்டையில் எடுத்து வந்ததைச் சோம்பேறி சமைப்பது இல்லை. சுறுசுறுப்பே மனிதனின் அரும்பொருள்.
* பெண்கள் மிதமான ஆடை அணியட்டும். நாணம் மிகுந்த முகத்துடனும், புலனடக்கத்துடனும் இருக்கட்டும். 
* வானமும் பூமியும் ஒழிந்து போகும். ஆனால், என் வார்த்தைகளோ அழியவே அழியாது.
* அழிவுள்ளதாய் விதைக்கப்படுவது அழிவில்லாததாக எழுந்திருக்கும்.
பைபிள் பொன்மொழிகள்

Thursday, August 23, 2012

பிரார்த்தனை உதட்டிலிருந்து வரக்கூடாது

* அன்பு வழியில் ஆண்டவன் மீது பக்தி செலுத்துங்கள். உங்கள் வாழ்வில் ஏற்படும் அத்தனை குழப்பங்களும் மறைந்துவிடும்.
* வாழ்க்கை மரத்தைப் போன்றது. பண்பை வளர்க்கும் கல்வி தான் வேர். எண்ணங்களே மலர்கள். அவற்றால் விளையும் மகிழ்ச்சி தரும் முடிவுகளே கனிகள்.
* தீய பண்புகளும், நல்ல பண்புகளும் நமது உடலை மாறி மாறி வசப்படுத்தினாலும், இறுதியில் நல்லவை மட்டுமே நம்மை ஆள வேண்டும்.
* சூரியனைப் பார்க்க விளக்கு தேவையில்லை. அதன் ஒளியே போதும். அதேபோல் கடவுளைக் காண அவரின் அருளே நமக்குப் போதுமானது.
* பிரார்த்தனை உதட்டிலிருந்து வரக்கூடாது, நெஞ்சிலிருந்து வரவேண்டும், அதுவும் தனக்காகச் செய்யக்கூடாது, பிறருக்காகச் செய்ய வேண்டும்.
* கல்லிலே கடவுளைக் காணவேண்டுமே தவிர கடவுளைக் கல்லாக்க முற்பட்டுவிடக்கூடாது.
* நல்ல விஷயங்கள் விலைமதிப்பற்றவை. எனவே அது எண்ணிக்கையில் குறைவாகத் தான் இருக்கும், அவற்றை வாங்குவோருக்கு தகுதி வேண்டும்.
சாய்பாபா 

இளமையில் உழைப்போம்

* தேனீயைப் போலவும், எறும்பைப் போலவும் உழைத்து உண்ண வேண்டும். அது உங்களுக்கு அமைதியையும், அன்பையும் தரும். 
* இளமையில் வளையாத மூங்கில் கழைக்கூத்தாடியின் காலில் மிதிபடுகின்றது. இளமையில் வளைந்த மூங்கில் அரசனின் கையில் வில்லாகப் பூஜிக்கப்படுகின்றது. அதனால், இளமையில் நம்மை வளைத்து உழைத்தால் பின்னாளில் மகிழ்ச்சியாக வாழலாம். 
* நாவின் சுவைக்கு அடிமையாகி நல்ல உணவு வகைகளை எங்கே எங்கே என்று தேடி அலையாதீர்கள். மனம் வாடி ஏங்காதீர்கள். இறைவன் அளந்த படியை ஏற்று கிடைத்ததை உண்டு வாழ்வில் திருப்தி காணுங்கள்.
* சுகமாக வாழும் போதே துக்கத்தையும் பழகிக் கொள்ள வேண்டும். ஏனென்றால் மனித வாழ்வில் உயர்வும் தாழ்வும் மாறி மாறி வரக்கூடியவை என்பதனை மறக்காதீர்கள். 
* பிள்ளைகள் தாய் தந்தையரின் கண்ணீரைத் துடைக்க வேண்டுமே தவிர, அவர்களின் துன்பத்தை அதிகப்படுத்தி கண்ணீரில் மூழ்கச் செய்யக்கூடாது. 
* எங்கும் நிறைந்த இறைவனை எளிதாகக் கிடைக்கும் பூவினாலும், நீரினாலும் நாம் வழிபாடு செய்ய வேண்டும். கடவுளை வழிபாடு செய்வதற்கு அன்பும் ஆசாரமும் இரு கண்கள் போன்றவையாகும். 
* தங்கம் இளகினால் அதில் ரத்தினக்கல் பதியும். அதுபோல, உள்ளம் உருகினால் அதில் இறைவன் ஒன்றி விடுவான். 
-வாரியார்

Tuesday, August 21, 2012

நிம்மதிக்கான வழி இது தான்


* நாம் எல்லோரும் கடவுளைப் பற்றிய உண்மையான ஞானத்தைப் பெற முயல வேண்டும். ஞானம் என்பது என்ன? பரம்பொருளாகிய கடவுள் மட்டுமே உண்மை, மற்றதெல்லாம் மாயை என்பதைத் தவிர வேறு எதுவுமே இல்லை என்பது தான்.
* பரம்பொருள் என்னும் ஒன்று தான் உலகத்தில் உள்ள அத்தனைப் பொருளுமாக இருக்கிறது. எல்லாப் பொருட்களையும் கடவுளாகவே பார்க்க வேண்டும். இதை விடுத்து அந்தப் பொருட்களை அதன் உண்மை இயல்புக்கேற்ப மனதைச் செலுத்தினால் சஞ்சலம், ஏற்றத்தாழ்வு உள்ளிட்ட கஷ்டங்கள் ஏற்பட்டுக் கொண்டே தான் இருக்கும்.
* திண்ணையில் உட்கார்ந்திருப்பவன் கீழே விழுந்தால் சிராய்த்துக் கொள்வதோடோ அல்லது சுளுக்கு ஏற்படுவதோடோ போய்விடும். ஆனால், பணக்காரன், பதவிக்காரன் மாடி மீது இருக்கிறான். அவன் கீழே விழுந்தால் எலும்பு முறிந்துவிடும், ஏன்...உயிருக்கே ஆபத்து உண்டாகும்.
* உலகத்தில் பிறந்த ஒவ்வொருவனும், "தான் ஒருவனே மகா கெட்டிக்காரன், மகா யோக்கியன், ரொம்ப அழகுள்ளவன்' என்று நினைத்துக் கொண்டிருக்கிறான். அதுபோலவே, துன்பப்படுபவனும் "தான் ஒருவன் மட்டுமே உலகிலேயே அதிகத் துன்பப்படுபவன்' என்று எண்ணிக் கொள்கிறான். ஆனால், இரண்டுமே உண்மையல்ல. சுகமும் துக்கமும் இரட்டைப்பிறவிகள். சுகம் இருக்கும் இடத்தில் துன்பமும் இருக்கும். இன்பமும் துன்பமும் ஒன்றைவிட்டு ஒன்று விலகுவதில்லை. எனவே, இன்பம் துன்பம் இரண்டையும் விட்டாலன்றி நிம்மதிக்கு வேறு வழியில்லை.
-காஞ்சிப்பெரியவர்

Monday, August 20, 2012

சுறுசுறுப்பாகத் திகழுங்கள்

* நம்முடைய உடலையும், அறிவையும், ஞானத்தையும் பலவீனமாக்கும் எதையும் விஷம் என ஒதுக்கிவிட வேண்டும்.
* பிறருடைய தவறு எவ்வளவு கெட்டதாக இருந்தாலும் அதுபற்றி பேசக்கூடாது. 
அப்படிச் செய்வதனால் நீங்கள் அவனுக்கு கேடு செய்வதுடன், உங்களுக்கும் கேடு 
ஏற்படுத்திக் கொள்வீர்கள்.
* தன்னை அடக்கப் பழகிக் கொண்டவன் வேறு எதற்கும் வசப்படமாட்டான், அவனே உலகில் நன்றாக வாழ 
தகுதியுள்ளவன்.
* எதிலும் பரபரப்பு தேவையில்லை, ஆனால், சுறுசுறுப்பு எப்போதும் தேவை. 
* கீழ்ப்படிதல், முயற்சியுடைமை, செயலாக்கம் ஆகிய மூன்றும் இருந்தால், ஒருவன் வெற்றி பெற்று 
முன்னேறுவதை எதனாலும் தடுக்க முடியாது.
* உலகத்தில் உயர்ந்த செயல்கள் அனைத்தையும் 
சாதித்தவர்கள் உங்களையும் என்னையும் போன்று 
மனிதர்களே. வீரம் மட்டுமிருந்தால் நம்மைப் போன்ற மனிதர்கள் எதையும் செய்து முடிக்க முடியும், 
* இயந்திரங்கள் மனித சமூகத்திற்கு சுகத்தைக் 
கொடுத்தவையுமல்ல, கொடுக்கப் போவதுமில்லை.
- விவேகானந்தர்

Sunday, August 19, 2012

* சுறுசுறுப்பே மனிதனின் அரும்பொருள்

* கடவுள் நமக்கு அச்சம் நிறைந்த ஜீவனைக் கொடுக்கவில்லை. சக்தியும் அன்பும், மன அமைதியும் உள்ள ஜீவனைத் தான் கொடுத்திருக்கிறார்.
* கடவுளே எனக்குத் துணை. மனிதன் எனக்கு என்ன செய்வானென்று அஞ்ச மாட்டேன் என்று நான் தைரியமாய்ச் சொல்லலாமே.
* நீ பரிபக்குவமான மனிதனையும் நேர்மையாளனையும் கவனித்துப் பார். அவனுடைய முடிவு அமைதியானதாயிருக்கும்.
* அமைதியை உண்டாக்குபவர்கள் பாக்கியவான்கள். ஏனெனில் அவர்கள் தெய்வ மக்கள் என்று அழைக்க பெறுவார்கள்.
* என் வார்த்தைகளுக்குச் செவி சாய்ப்பவன் எவனோ அவன் பத்திரமாய் வாழ்வான். தீமையைப் பற்றிய பயமின்றி அமைதியாக இருப்பான்.
* சுறுசுறுப்பே மனிதனின் அரும்பொருள்.
* பெண்கள் மிதமான ஆடைகள் அணியட்டும். நாணமிகுந்த முகத்துடனும், விரித்த தலையோடு விளங்காமலும், விலையுயர்ந்த ஆடைகளையோ விரும்பாமலும் இருக்கட்டும்.
பைபிள் பொன்மொழிகள்

Thursday, August 16, 2012

நாவை அடக்கப் பழகினால் ஞானியாக முடியும்

* அழுக்குத் துணிகளை நல்ல துணிகளோடு சேர்த்துக் கட்டுவதில்லை. அதுபோல, கொடிய தீயவர்களோடு நல்லவர்கள் சேர விரும்புவதில்லை.
* சர்க்கரை என்று எழுதிக் காட்டினால் இனிப்பை உணர வைக்க முடியாது. அனுபவத்தால் மட்டுமே உண்மையை உணர முடியும். அனுபவமே நமக்கு நல்ல ஆசிரியராக வழிகாட்டுகிறது. 
* எதிலும் மாறுபாடான சிந்தனை இருப்பதை தவிர்க்க முடியாது. அதுபோல, கடவுள் விஷயத்திலும் நாத்திகம் பேசும் மனிதர்கள் இருக்கின்றனர்.
* குடும்பம் என்பது சமூகத்தின் ஒருபகுதியே. நற்பண்புகள் குடும்பத்தில் இருந்தால் சமூகத்திலும் பிரதிபலிக்கும்.
* நாவை அடக்கப் பழகினால் ஞானியாக முடியும். எளிய உணவு, அளவான பேச்சு இரண்டையும் கடைபிடித்தால் நன்மை அனைத்தும் நம்மை வந்தடையும்.
* மற்றவர் மீது காட்டும் அன்பு நம்மைக் கட்டிப் போடுகிறது. ஆனால், கடவுளிடம் நாம் வைக்கும் அன்பு, கட்டுகளில் இருந்து நம்மை விடுவிக்கிறது.
சாய்பாபா

நம்மிடம் கூறப்படும் பொய்கள்

நம்மிடம் கூறப்படும் பொய்கள்க்கூட
நம் உறவையும் பாசத்தையும்
பாதுகாக்கும் ஒரு ஏற்பாட்டுதான்

புரிந்துக்கொள்ளுங்கள்


உண்மையைப் பேச சொல்லி
உங்கள் பாசத்துக்குரியவர்களை
வற்புறுத்தாதீர்கள்

அவர் சொல்லும் ஒரு மெய்
உங்கள் உறவுக்கு
மரணதண்டனை விதிக்கலாம்

மனிதனுக்கு
பொய்யுரைக்க தெரிவதால்தான்
பல உறவுகள் இன்னும் நீடிக்கின்றன

அதிக பேச்சு வேண்டாமே

* சகமனிதர்களிடம் அன்பு செலுத்தாமல், மணிக்கணக்காக தியானம் செய்வதால் பலனேதும் இல்லை. உண்மையான ஆன்மிக சாதனை என்பது அனைவருடனும் கைகோர்த்து சமுதாயம் முழுமைக்குமாக உழைப்பது தான்.
* நாடுகள் பல ஆயினும் மண் ஒன்றே. நட்சத்திரங்கள் பல ஆயினும் வானம் ஒன்றே. பசுக்கள் பல ஆயினும் பால் ஒன்றே. நகைகள் பல ஆயினும் தங்கம் ஒன்றே. இவ்வாறு அனைத்து உயிரினங்களிலும் ஒன்றாகக் கருதி சேவை புரியும் போது தான் ஆனந்தம் ஏற்படுகிறது.
* உண்மையான ஆன்மிக சாதனை என்பது வெறும் ஜெபமோ, தியானமோ அல்ல. அனைத்து உயிர்களுக்காகவும் பாடுபடுவதே ஆன்மிகம்.
* சக்தியை வீணாக்காதீர்கள். சக்தி தான் இறைவன், புனிதமற்ற பார்வையால், தீய எண்ணங்களால், தீயவற்றைக் கேட்பதால், அதிகமாக பேசுவதால் இன்றைய இளைஞர்கள் அதிகமான சக்தியை இழக்கிறார்கள். இதனால் மவுனத்தை அதிகம் கடைபிடிக்க வேண்டும்.
- சாய்பாபா 

Wednesday, August 15, 2012

பூஜை அறை




வணக்கம் நண்பர்களே நான் பல வீடுகளில் சோதிடம் பார்க்க செல்லும் போது அவர்களின் பூஜையறையை பார்க்க சொல்லுவார்கள். நானும் போய்  அவர்களின் பூஜை அறையை பார்ப்பேன் அப்பொழுது அவர்களின் வசதிக்கு தக்கவாறு பூஜை அறை இருக்கும் சில வீடுகளில் பார்த்தீர்கள் என்றால் அவர்களின் பணத்தின் மதிப்பை பூஜை அறையில் பார்க்கலாம். அந்தளவுக்கு ஆடம்பரமாக வைத்திருப்பார்கள்.

நான் பார்த்த பல வீடுகளில் இவர்கள் எங்கு எல்லாம் கோவிலுக்கு போகிறார்களே அங்கு எல்லாம் இவர்கள் ஒரு சாமி படத்தையும் விடாமல் வாங்கி வந்து மாட்டிவிடுவார்கள். இன்னும் சில வீடுகளில் போய் பார்த்தால் அவர்கள் வீடுகளில் ஏகாபட்ட சிலைகளை வாங்கி வந்து வைத்திருக்கிறார்கள்.

உங்கள் வீடுகளில் உள்ள பூஜை அறைகளில் உங்கள் குலதெய்வத்தின் படம் தான் முதலில் இடம் பெற வேண்டும். உங்களுக்கு பிடித்த இஷ்டதெய்வத்தின் படம் இருக்கலாம். தேவையற்ற படத்தை மாட்டிவைக்காதீர்கள். எல்லா சாமி படங்களையும் நீங்கள் மாட்டி வைத்தீர்கள் என்றால் நீங்கள் தினமும் அனைவருக்கும் பூஜை செய்ய வேண்டும். உங்களுக்கு இருக்கும் வேலை காரணமாக நீங்கள் தினமும் பூஜை செய்ய முடியாமல் போகும். அதனால் உங்களுக்கு பிரச்சினை வர வாய்ப்பு இருக்கிறது. 

சில வீடுகளில் கோரமாக இருக்கும் தெய்வங்களின் போட்டோவை வாங்கி வந்து மாட்டிவைக்கிறார்கள் அவ்வாறு செய்வதும் தவறு. அவர்களை சாந்தபடுத்துவது என்பது மிக கடினமான ஒன்றாக இருக்கும்.நீங்கள் எவ்வளவு பணக்காரராக இருந்தாலும் சிலை வழிபாட்டை வீட்டில் அனுமதிக்காதீர்கள். வீடுகளில் சிலை இருக்ககூடாது. 

பல வீடுகளின் பல சாமி போட்டை வைத்து இருக்கும் வீடுகளில் எந்த ஒரு தெய்வத்தின் அருளும் இருக்கவில்லை. நான் பார்த்த வரையில் குலதெய்வத்தை பல பேர் மறந்துவிடுகிறார்கள். பல வீடுகளை பார்க்கும்போதே குலதெய்வ அருள் இல்லாமல் இருக்கிறது. 

குலதெய்வத்தின் அருள் கிடைக்கவில்லை என்றால் உங்களால் முன்னேற்றம் காண்பது என்பது கடினமான ஒன்றாக தான் இருக்கும். நீங்கள் எவ்வளவு பெரிய கடவுளை வழிபட்டாலும் குலதெய்வ அருள் இல்லை என்றால் நீங்கள் வாழும் வாழ்க்கையில் ஒரு திருப்தி இருக்காது. ஏதாவது ஒரு குறை இருந்துகொண்டே இருக்கும்.

பூஜை அறையில் நீங்கள் அமர்ந்து கொண்டு பூஜை செய்யுங்கள். அமரும் போது ஏதாவது ஒரு விரிப்பில் அமருங்கள் உங்களின் உடம்பு பூமியில் தொடக்கூடாது. உங்களின் குறைகளை உங்களின் குலதெய்வத்திடம் சொல்லி வேண்டுங்கள் அனைத்து குறைகளையும் அந்த குலதெய்வம் உங்களுக்கு தீர்த்துவைக்கும். உங்கள் கூடவே அது வரும். முதலில் நீங்கள் இதை செய்யும் போது நீங்களே சிரிப்பீர்கள் ஆனால் நாட்கள் ஆக ஆக தான் அதன் அருமை புரியும்.

பூஜை அறையில் நீங்கள் காமாட்சி விளக்கை பயன்படுத்துங்கள். விளக்கின் திரி கிழக்கு முகமாக அல்லது வடக்கு முகமாக இருக்கலாம். அவ்வாறு திரி எரியும் போது உங்களின் குடும்பம் நல்ல முறையில் முன்னேற்றம் ஏற்படும்.

அப்புறம் மறந்திடாமல் வீட்டை நன்றாக சுத்தம் செய்து நறுமண வாசனை வரும் படி வைத்துக்கொள்ளுங்கள். என்ன நண்பர்களே இன்றே செய்வீர்களா?

கடன் பரிகாரம்

கடன் இருப்பவர்கள் மற்றும் எதிர்காலத்தில் கடன் வராமல் இருக்க ஒரு பரிகாரம் தருகிறேன். அதை செய்யுங்கள் உங்கள் குலதெய்வத்தின் கோவிலுக்கு ஒவ்வொரு பௌர்ணமி அன்று சென்று வழிபட்டு வாருங்கள் உங்களை கடனில் இருந்து காப்பாற்றும் உங்கள் குலதெய்வம். வெகுதொலைவில் குலதெய்வம் இருப்பவர்கள் அந்த திசையை நோக்கி வீட்டில் இருந்து சாமி கும்பிடுங்கள். கடன் என்பது வராது.

குலதெய்வ வழிபாட்டு முறை



வணக்கம் நண்பர்களே நமது தளத்தை படித்துவிட்டு பல பேர் அவர்களின் குலதெய்வத்திற்க்கு சென்று வருகிறார்கள். அவர்கள் பிரச்சினை படிப்படியாக குறைந்து வருவதாகும் எனக்கு தகவல் தந்தார்கள். நீங்களும் இன்னும் சென்று வரவில்லை என்றால் கூடிய விரைவில் சென்று வந்துவிடுங்கள். நீங்கள் செல்வதற்க்கு பல தடைகள் ஏற்படலாம். அவற்றை மீறி நீங்கள் சென்றுவிட வேண்டும்.

கடந்த வாரம் ஒரு நண்பர் எனக்கு போன் செய்தார் அவர் குலதெய்வம் கோவிலுக்கு சென்று வரும் போது சிறு விபத்து ஏற்பட்டுவிட்டது என்று சொன்னார். நான் உங்களிடம் இதைப்பற்றி சொல்லிருக்க வேண்டும் என்ன காரணம் என்று தெரியவில்லை எழுதமுடியவில்லை. 

உங்கள் குலதெய்வ கோவிலுக்கு செல்லும் போது அந்த தெய்வத்திற்க்கு என்ன செய்ய வேண்டும் அதாவது அதற்கு உகந்த பூஜை பொருட்கள் என்ன என்று தெரிந்துகொண்டு செல்ல வேண்டும். சில குலதெய்வங்கள் பலி கேட்கும். அப்படி பலி கொடுக்கும் தெய்வம் என்றால் கண்டிப்பாக நீங்கள் பலி கொடுக்க வேண்டும். சில தெய்வங்கள் ஆடு பலி கொடுப்பார்கள் உங்களுக்கு அது செய்யமுடியவில்லை என்றால் கோழியை பலியாக கொடுத்துவிட்டு நீங்கள் தரிசனம் செய்துவிட்டு வரலாம். சில குலதெய்வங்கள் சாராயம் கூட கேட்கும் அந்த மாதிரி குலதெய்வங்களும் இருக்கின்றன அதை நீங்கள் செய்துவிட்டு தான் வரவேண்டும்.

குலதெய்வத்திற்க்கு என்ன செய்ய வேண்டும் என்று உங்களுக்கு தெரியாது. இந்த தளத்தை படிப்பவர்கள் அதிகம் பேர் இளைஞர்களாக இருப்பதால் அவர்களின் குலதெய்வத்திற்க்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியாது உங்கள் தந்தை அல்லது தாத்தாவிடம் கேட்டால் அவர்கள் உங்களுக்கு சொல்லுவார்கள் அப்படி இல்லை என்றால் உங்கள் சொந்த ஊரில் இருக்கும் பெரியவர்களிடம் கேட்டால் அவர்கள் சொல்லிவிடுவார்கள்.

நாம் பல கோவிலுக்கு சென்று வருவோம் அங்கு நமது பேருக்கு அர்ச்சனை மட்டும் செய்துவிட்டு வருவோம் ஆனால் குலதெய்வத்தின் கோவிலுக்கு செல்லும்போது பொங்கல் வைத்து சாமி கும்பிட்டு வரவேண்டும். எல்லா குலதெய்வத்திற்க்கும் அது தான் வழக்கம். 

நண்பர்களே நீங்கள் இந்த தகவலை உங்கள் நண்பர்களின் குடும்பத்திற்கும் சொல்லுங்கள் உங்கள் பக்கத்து வீட்டு குடும்பத்திற்க்கும் சொல்லுங்கள் தெய்வத்தின் அருள் உங்களுக்கு கிடைக்கும். உங்கள் வாழ்க்கையை மேம்படுத்திக்கொள்ள அது உதவும். 

நான் பலபேருக்கு ஆன்மிக சேவை செய்ததால் தான் என் வாழ்க்கையை மேம்படுத்திக்கொள்ள முடிந்தது. என்னால் முடிந்தவரை அனைவருக்கும் பல நல்ல தகவல்களை தந்து இருக்கிறேன். இன்னும் பல நல்ல தகவல்கள் தருவதற்க்கும் இறைவனிடம் வேண்டிக்கொண்டு இருக்கிறேன்.

எனது எண்ணம் எல்லாம் அடுத்தவரை எப்படியாவது வாழ்க்கையில் மேன்மை நிலைக்கு கொண்டு வந்துவிடவேண்டும் என்ற எண்ணம் எப்பொழுதும் இருக்கின்றது. நீங்கள் இந்த தகவல்களை எல்லாம் முடிந்தவரை அடுத்தவர்களிடம் சொல்லுங்கள் அப்பொழுது பலனை அனுபவிப்பீர்கள்.

பகவத்கீதை சொல்லும் வாழ்க்கை !!!






1. வாழ்க்கை ஒரு சவால்
அதனை சந்தியுங்கள்.

2. வாழ்க்கை ஒரு பரிசு
அதனை ஏற்றுக்கொள்ளுங்கள்.

3. வாழ்க்கை ஒரு சாகசப் பயணம்
அதனை மேற்கொள்ளுங்கள்.

4. வாழ்க்கை ஒரு சோகம்
அதனை கடந்து வாருங்கள்.

5. வாழ்க்கை ஒரு துயரம்
அதனை தாங்கிக் கொள்ளுங்கள்.

6. வாழ்க்கை ஒரு கடமை
அதனை நிறைவேற்றுகள்.

7. வாழ்க்கை ஒரு விளையாட்டு
அதனை விளையாடுங்கள்.

8. வாழ்க்கை ஒரு வினோதம்
அதனை கண்டறியுங்கள்.

9. வாழ்க்கை ஒரு பாடல்
அதனை பாடுங்கள்.

10. வாழ்க்கை ஒரு சந்தர்ப்பம்
அதனை பயன்படுத்தி கொள்ளுங்கள்.

11. வாழ்க்கை ஒரு பயணம்
அதனை புகழுடன் முடித்துவிடுங்கள்.

12. வாழ்க்கை ஒரு உறுதிமொழி
அதனை நிறைவேற்றுங்கள்.

13. வாழ்க்கை ஒரு காதல்
அதனை அனுபவியுங்கள்.

14. வாழ்க்கை ஒரு அழகு
அதனை ஆராதியுங்கள்.

15. வாழ்க்கை ஒரு உணர்வு
அதனை உணர்ந்து கொள்ளுங்கள்.

16. வாழ்க்கை ஒரு போராட்டம்
அதனை எதிர்கொள்ளுங்கள்.

17. வாழ்க்கை ஒரு குழப்பம்
அதனை விடைகாணுங்கள்.

18. வாழ்க்கை ஒரு இலக்கு
அதனை எட்டிப் பிடியுங்கள்.

ஸ்ரீ கால பைரவர் போற்றி




இதனை தினமும் சொல்லி வந்தால் நவக்கிரக தோஷம் குறையும்

ஓம் பைரவனே போற்றி
ஓம் பயநாசகனே போற்றி
ஓம் அஷ்டருபனே போற்றி
ஓம் அஷ்டமித் தோன்றலே போற்றி
ஓம் அயன்குருவே போற்றி
ஓம் அற்க்காவலனே போற்றி
ஓம் அகந்தையழிப்பவனே போற்றி
ஓம் அடங்காரின் அழிவே போற்றி
ஓம் அற்புதனே போற்றி
ஓம் அசிதாங்கபைரவனே போற்றி
ஓம் ஆனந்த பைரவனே போற்றி
ஓம் ஆலயக் காவலனே போற்றி
ஓம் இன்னல் பொடிப்பவனே போற்றி
ஓம் இடுகாட்டுமிருப்பவனே போற்றி
ஓம் உக்ரபைரவனே போற்றி
ஓம் உடுக்கையேந்தியவனே போற்றி
ஓம் உதிரங்குடித்தவனே போற்றி
ஓம் உன்மத்த பைரவனே போற்றி
ஓம் உறங்கையில் காப்பவனே போற்றி
ஓம் ஊழழித்தருள்வோனே போற்றி
ஓம் எல்லைத்தேவனே போற்றி
ஓம் எளிதில் இரங்குபவனே போற்றி
ஓம் கபாலதாரியே போற்றி
ஓம் கங்காளமூர்த்தியே போற்றி
ஓம் கர்வபங்கனே போற்றி
ஓம் கல்பாந்தபைரவனே போற்றி
ஓம் கதாயுதனே போற்றி
ஓம் கனல்வீசுங்கண்ணனே போற்றி
ஓம் கருமேகநிறனே போற்றி
ஓம் கட்வாங்கதாரியே போற்றி
ஓம் களவைக்குலைப்போனே போற்றி
ஓம் கருணாமூர்த்தியே போற்றி
ஓம் காலபைரவனே போற்றி
ஓம் கபாலிகர்தேவனே போற்றி
ஓம் கார்த்திகையில் பிறந்தவனே போற்றி
ஓம் காளாஷ்டமிநாதனே போற்றி
ஓம் காசிநாதனே போற்றி
ஓம் காவல்தெய்வமே போற்றி
ஓம் கிரோத பைரவனே போற்றி
ஓம் கொன்றைப்பிரியனே போற்றி
ஓம் சண்டைபைரவனே போற்றி
ஓம் சட்டை நாதனே போற்றி
ஓம் சம்ஹர பைரவனே போற்றி
ஓம் சிவத்தோன்றலே போற்றி
ஓம் சிவாலயத்திருப்போனே போற்றி
ஓம் சிஷகனே போற்றி
ஓம் சீகாழித்தேவனே போற்றி
ஓம் சுடர்ச்சடையனே போற்றி
ஓம் சுதந்திர பைரவனே போற்றி
ஓம் சிவ அம்சனே போற்றி
ஓம் சுவேச்சா பைரவனே போற்றி
ஓம் சூலதாரியே போற்றி
ஓம் சூலவினையறுப்பவனே போற்றி
ஓம் செம்மேனியனே போற்றி
ஓம் ஷேத்ரபாலனே போற்றி
ஓம் தனிச்சன்னதியளானே போற்றி
ஓம் தலங்களின் காவலனே போற்றி
ஓம் தீதழிப்பவனே போற்றி
ஓம் துஸ்வப்நாசகனே போற்றி
ஓம் தெற்கு நோக்கனே போற்றி
ஓம் தைரியமளிப்பவனே போற்றி
ஓம் நவரஸருபனே போற்றி
ஓம் நரசிம்மசாந்தனே போற்றி
ஓம் நள்ளிரவு நாயகனே போற்றி
ஓம் நரகம் நீக்குபவனே போற்றி
ஓம் நாய் வாகனனே போற்றி
ஓம் நாடியருள்பவனே போற்றி
ஓம் நாய் வாகனனே போற்றி
ஓம் நாடியருள்பவனே போற்றி
ஓம் நிமலனே போற்றி
ஓம் நிர்வாணணே போற்றி
ஓம் நிறைவளிப்பவனே போற்றி
ஓம் நின்றருள்வோனே போற்றி
ஓம் பயங்கர ஆயுதனே போற்றி
ஓம் பகையழிப்பவனே போற்றி
ஓம் பரசு ஏந்தியவனே போற்றி
ஓம் பலிபீடத்துறைவோனே போற்றி
ஓம் பாபபஷ்யனே போற்றி
ஓம் பாசம் குலைப்போனே போற்றி
ஓம் பால பைரவனே போற்றி
ஓம் பாம்பணியனே போற்றி
ஓம் பிரளகாலனே போற்றி
ஓம் பிரம்மசிரச்சேதனே போற்றி
ஓம் பூஷண பைரவனே போற்றி
ஓம் பூதப்ரேத நாதனே போற்றி
ஓம் பெரியவனே போற்றி
ஓம் பைராகியர் நாதனே போற்றி
ஓம் மல நாசகனே போற்றி
ஓம் மஹh பைரவனே போற்றி
ஓம் மணி ஞாணனே போற்றி
ஓம் மகர குண்டலனே போற்றி
ஓம் மகோதரனே போற்றி
ஓம் மார்த்தாண்ட பைரவனே போற்றி
ஓம் முக்கண்ணனே போற்றி
ஓம் முக்தியருள்வோனே போற்றி
ஓம் முனீஸ்வரனே போற்றி
ஓம் மூலமூர்த்தியே போற்றி
ஓம் யமவாதனை நீக்குபவனே போற்றி
ஓம் யாவர்க்கும் எளியனே போற்றி
ஓம் ருத்ரனே போற்றி
ஓம் ருத்ராஷதாரியே போற்றி
ஓம் வடுக பைரவனே போற்றி
ஓம் வடுகூர் நாதனே போற்றி
ஓம் வடகிழக்கருள்வோனே போற்றி
ஓம் வடைமாலைப்பிரியனே போற்றி
ஓம் வாரணாசி வேந்தே போற்றி
ஓம் வாமனர்க்கருளியவனே போற்றி
ஓம் விபீஷண பைரவனே போற்றி
ஓம் வீழாமல் காப்பவனே போற்றி