Tuesday, July 31, 2012

பழைய சோறு நல்லதா ?



காலை உணவு குறித்து இன்றைய இளைஞர்கள் இளைஞிகள் பெரிதாக நாட்டம் கொள்வதில்லை, காலையில் எதுவும் சாப்பிடாமல் இருப்பேன் என்பதை பலர் பெருமையாகச் சொல்கிறார்கள், காரணம் வறுமை இல்லை என்றாலும் காலை உணவைத் தவிர்ப்பது எதோ ஒரு புதிய உடற்பயிற்சி போன்று நம்பப்படுவதுட்ன் உடலை கட்டுக் கோப்பாக வைத்திருக்கும் என்றும் நம்புகிறார்கள், உண்மையில் காலை உணவை தவிர்ப்பவர்களுக்கு நீரிழிவு குறைபாடு வருவதற்கான வாய்ப்பு மிகுதி. இரவு உணவிற்கும் காலை உணவிற்குமான இடைவெளி ஏற்கனவே குறைந்தது 8 மணி நேரமாக இருக்கும் பொழுது, அதை தவிர்த்துவிடுவதால் அந்த இடைவெளி கூடுதலாகி 12 மணி நேரம் வரையிலும் கூட நீட்டிக்கப்படுகிறது, உடலில் உற்பத்தியாகும் இரத்ததிற்கேற்ற அளவில் தான் கணையம் வேலை செய்து இன்சுலினைச் சுரந்து இரத்தத்தில் உள்ள சர்கரையை எரிக்கிறது, காலை உணவு எடுத்த்துக் கொள்ளாததால் இரத்த உற்பத்திக் குறைந்த நிலையில் கணையம் இன்சுலினை உற்பத்தி செய்வதும் இயல்பாகவே குறைய, நாளடைவில் கணையத்தின் இன்சுலின் உற்பத்தித் திறனும் குறைந்துவிடும். இதனால்  இன்சுலின் சுரப்பதில் கட்டுப்பாடு ஏற்பட, வேளை விட்டு சாப்பிடும் போது உண்டாகும் உபரியான இரத்தத்தில்  உபரியாக உற்பத்தியான சர்க்கரையை எரிக்க முடியாமல் அவை இரத்ததில்யே தங்குவதைத் தான் நீரிழிவு குறைபாடு என்கிறார்கள், அதாவது இரத்தத்தில் உள்ள சர்க்கரை எரிக்கப்படாமல் இரத்ததுடன் கலந்து இருப்பதைத் தான் நீரிழிவு என்கிறது மருத்துவ்ச உலகம், இருந்துவிட்டுப் போகட்டுமே என்றுவிட முடியாது, ஏனெனில் இரத்தத்தில் சேரும் சர்க்கரை இரத்ததின் நீர்மத் தன்மையை கெட்டியாக்குவதுடன் இரத்த ஓட்டத்தையும் கட்டுப்படுத்துகிறது. 

இரத்த சர்க்கரை அளவு கூட உடலில் அனைத்து பாகங்களுக்குமான தேவையான இரத்த ஓட்டம் குறைய இயல்பாகவே உடல் பாகங்கள் சீர்கேடு அடைகின்றன, அதனால் தான் மற்ற நோய்களைவிட நீரிழிவு நோய் மனித வாழ்க்கையின் மிகப் பெரிய அரைகூவலாக இருக்கிறது. நீரிழிவு குறைபாடு இதனை நோய் என்று சொல்லமுடியாது) முற்றிலும் குணப்படுத்தப்படாவிட்டாலும் கட்டுப் படுத்திக் கொள்ள முடியும் என்பது தான் தற்காலிக மருத்துவத் தீர்வு, அதாவது இரத்தச் சர்க்கரையைக் கூட்டாத வண்ணம் உணவு பழக்கங்களை மாற்றி அமைத்துக் கொள்வதுடன் தேவையான போது அதற்குறிய மருந்துகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும், இதைத் தவிர்த்து மருத்துவ உலகம் நீரிழிவு குறித்து முழுமையான எந்த ஒரு தீர்வையும் இதுவரை கண்டிபிடிக்கவோ பரிந்துரைக்கவோ இல்லை. மற்றொரு நிரந்தர தீர்வு மாற்று கணையம் பொறுத்துவது தான், ஆனாலும் உயிருடன் இருப்பவர்களிடம் இருந்து கணையம் பெறுவதற்கு வாய்ப்புகள் கிடையாது, கணையம் சிறுநீரகங்களைப் போல் இரண்டாக இல்லாமல் ஒன்றாக இருப்பதால் அதற்கான வாய்ப்புகளும் இல்லை, மூளைச் சாவு கண்டவர்களிடம் இருந்து கணையம் பெறப்பட்டாலும் அவை முற்றிலும் பழுதானவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் பொறுத்தப்படுவதால் பொதுவான நீரிழிவு குறைபாட்டினருக்கு மாற்று உறுப்பு சிகிச்சைகளுக்கான வாய்புகள் கிடையாது. மாற்றுக் கணையம் பொருந்துவதும் மிகக் கடினம், பிழைப்பதற்கான வாய்ப்புகளும் அரிது. இதனால் தான் நீரிழிவுக்கு  இரத்த சர்க்கரையைக் குறைக்கும் மருந்துகளும் உணவுக் கட்டுப்பாடும் தீர்வாக பரிந்துரைக்கப்படுகிறது. 

எனக்கெல்லாம் எந்த நோயும் அண்டாது என்று நம்புவர்களும் இருக்கிறார்கள்', இவையெல்லாம் நாற்பது வயதுவரையான நம்பிக்கையாக இருந்தால் பரவாயில்லை, ஆனால் நாற்பது வயதிற்குமேல் இப்படியான நம்பிக்கை ஒரு மூட நம்பிக்கை. ஆண்டுக்கு ஒருமுறையேனும் இரத்த அழுத்தம், இரத்த சர்க்கரை அளவு, இதய துடிப்பு, சிறுநீர், கண்கள் ஆகியவற்றை சோதனை செய்து அனைத்து உறுப்புகளும் நல்ல முறையில் இயங்குகிறது என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும், ஆண்டுக்கு ஒருமுறையான சோதனை நோய்களின் ஆரம்பக் கட்டத்திலேயே கண்டுப்பிடிக்கப்படுவதால் அவற்றை குணப்படுத்திக் கொள்ள வாய்பாக அமையும் அலட்சியம் காட்டினால் 'நேற்று வரை நன்றாகத் தான் இருந்தார் என்று நாலு பேர் தன்னைப் பற்றிப் பேசும் போது கேட்க முடியாமல் போய்விடும், இதை பயமுறுத்தல் என்று எடுத்துக் கொள்ளாமல் பரித்துரை என்ற அளவில் பார்த்தால் தனக்கும் தனக்கும் பின்னால் இருக்கும் குடும்பத்தின் மீதான நன்மை கருதியவை என்று புரிந்து கொள்ளப்படும். சர்கரை நோய் 50 - 60 வயதிற்கு மேல் தான் வரும் என்ற நம்பிக்கையும் பலரிடம் உள்ளது, அதன் துவக்க காலம் 30 வயதில் கூட துவங்கி இருக்க இன்றைக்கு வாய்ப்புகள் இருப்பதால் 35 வயதில் நீரிழிவு குறைபாடுகள் வெகு சாதாரணமானவையாக உள்ளது. நீர்ழிவு நோய்களில்  இருவகைப் பிரிவில் ஒன்று (Type 2) பெற்றோர் வழியாக பரம்பரையாக வருவது என்பதால் காலை உணவு எடுத்துக் கொள்ளாதவர்களை அவை 30 வயதிலேயே பற்றிவிடுகிறது. தனக்கு நீரிழிவு இருக்கிறதா என்பதை உடலில் ஏற்படும் மாற்றங்களை வைத்து அறிந்து கொள்ளலாம், நீரிழிவினால் ஏற்படும் உடலியல் மாற்றங்கள் (Symptoms) குறித்து நூற்றுக் கணக்கான இணையத் தளங்கள் தகவல்களைத் தருகின்றன.


நீரிழிவு குறைபாட்டால் ஏற்படும் உடல் மாற்றங்களில் பொதுவானவை

1. சிறுநீர் பையில் தேவையான அழுத்தம் இல்லாவிட்டாலும் குளிர்ந்த நீரில் அல்லது பச்சைத் தண்ணீரில் காலோ கையோ படும் பொழுது  சிறுநீர் கழிக்க வேண்டும் என்கிற உணர்வு ஏற்படும். சிறுநீர் கழிக்கும் கழிவரை உள்ளிட்ட இடங்களில் எறும்புகளைப் பார்க்க முடியும், சிறுநீரில் இருக்கும் சர்கரையை நுகர எறும்புகள் சேறும்.

2. கணுக்காலிலும் அதற்கும் கீழேயும் கால் பகுதிகளின் தோல் உடல் தோலின் நிறத்தைவிட கருமையாக அல்லது கருமைத் திட்டுகள் காணப்படுதல் மற்றும் காலில் அடி விரல் உள்ளிட்ட சில பகுதிகளில் உணர்வுகள் குறைந்திருத்தல்

3. ஆண்குறியின் முன்தோலில் ஏற்படும் வெடிப்பு, இவை பாலியல் ரீதியான அல்லது அப்பகுதிகளில் காற்றோட்டம் குறைவானதாக  இருப்பதால் ஏற்படும் வியர்வையினால் உற்பத்தி ஆகும் பாக்டீரியா வகைச் சார்ந்த நோயாக இருக்கும் என்று நினைத்து களிம்புகளை தடவி குணப்படுத்திக் கொள்வர். இவை சர்கரை குறைபாடு உள்ளவர்களுக்கு அடிக்கடி ஏற்படும், காரணம் சிறுநீரில் சேர்ந்திருக்கும் சர்கரை பாக்டீரியாக்களை உற்பத்தி செய்து தோலின் கடினத் தன்மையைக் குறைக்க வெடிப்பு ஏற்படும். இவற்றைக் மருத்துகளின் மூலமாக குணப்படுத்திக் கொள்ளலாம் என்றாலும் மருந்துகளற்ற நிரந்தரத் தீர்வு 'முனைத் தோல் நீக்கம் (சுன்னத்)' இங்கே அடிக்கடி அந்த குறைபாடு கண்டவர்களுக்கான பரிந்துரை என்ற அளவில் சுன்னத் பரிந்துரை உள்ளது மற்றபடி நலமாக இருப்பவர்களுக்கு சுன்னத் செய்வது உறுப்பு சேதம், பல் சொத்தை ஆகமல் தடுக்க அதை எடுத்துவிடுவது தான் நல்லது என்பது போன்ற முட்டாள் தனமான பரிந்துரை.

4. எப்போதும் தாகம் எடுப்பது

5. வழக்கத்துக்கு மாறான சோர்வு மற்றும் உடல் எடை குறைவு

6. உடலில் பல பகுதிகளில் ஏற்படும் அரிப்பு, இரத்த ஓட்டக் குறைவினால் தோல் உலர்ந்து போவதால் ஏற்படும்

7. கண் பார்வை அவ்வபோது மங்குதல்

8. காலில் ஏற்படும் காயங்கள் ஆறுவதற்கு நீண்ட காலம் எடுப்பது.

*********

பசுமாடு பற்றிய தலைப்பில் ஏன் தென்னை மரம் பற்றி எழுதி இருக்கிறீர்கள் ? என்று வாசிப்பவர்கள் நினைக்கக் கூடும், பழைய சோற்றில் மிகுந்த சத்துகள் இருப்பதாகவும் பழைய சோற்றை நாம்  புறக்கணித்ததால் தான் பல வித நோய்கள் நமக்கு ஏற்படுவதாகவும் சில பெரிசுகள் மற்றும் முற்போக்கு இளசுகளும் கருத்துகளைப் பரப்புகின்றனர், பழைய சோறு பாரம்பரிய உணவு என்பது தவிர்த்து மற்ற காலை உணவுகளை ஒப்பிட அதில் சத்துகள் எதுவும் பெரிதாக இல்லை என்பதை அவர்கள் உணர்ந்திருப்பார்களா ? என்று தெரியவில்லை, பழைய சோற்றில் நீர் சேர்த்து இரவு முழுவதும் வைத்திருப்பதால் சற்று ஈஸ்டுகள் சேர்ந்திருக்கும், தவிர்த்து பெரிய சத்துகள் எதுவும் கிடையாது, அதில் இருக்கும் ஈஸ்டுகள் மற்றும் சத்துகளின் அளவு இட்லி தோசையில் இருப்பதைவிடக் குறைவே, இட்லி மாவில் உளுந்து சேர்த்து அரைக்கபடுவதால் புரத சத்து கூடுதலாக இருக்கும், பழைய சோற்றில் அதுவும் கிடையாது, பொதுவாக அரிசி உணவில் கூடுதல் சர்க்கரை இருக்கும் என்பது பழைய சோற்றுக்கும் பொருந்தும். 

பழைய சோறு பாரம்பரிய உணவும் கிடையாது, தமிழர்களின் காலை உணவாக கம்பு, கேழ்வரகு, திணை மற்றும் சாமை ஆகியவையே இருந்தன,  மாவாக அரைத்து கூழாகவோ, களியாகவோ செய்து அவற்றில் அசைவம் / காய்கறி குழம்பைச் சேர்த்து உண்பது தான் வழக்கமாக இருந்தது, இத்தகைய உணவுகளில் போதிய அளவு புரதச் சத்து இருப்பதால் நாள் முழுவதுமான பகல் உழைப்பிற்கு தேவையான சத்துகள் கிடைத்துக் கொண்டிருக்கும், நெல் அரிசியை உணவ உட்கொள்ளும் வழக்கம் கடந்த 60 ஆண்டுகளில் பரவலாகியவை தான், மற்ற உணவு பொருள்களை விட விலை கூடுதல், சமைக்க / பரிமார / கலந்து சாப்பிட எளிது என்ற வகையில் வசதியானவர்கள் நெல் அரிசி உண்பது மேம்பட்ட நிலையின் உணவுச் சின்னம் அல்லது பழக்கமாகிப் போனதால் அரிசி உணவை உண்பது கவுரமாகக் கருதப்பட அவை பரவலாக்கம் ஆகி அரிசி உற்பத்தியும் பெருக, தற்போதைக்கு அரிசி உணவு விலை மற்ற உணவு பொருளைவிடக் குறைவாக இருக்கிறது என்பது தவிர்த்து அரிசி உணவில் எந்த ஒரு தனிச் சிறப்பும் இல்லை. மேலும் அரிசிக்கும் கோதுமைக்கும் சர்கரை அளவில் பெரிய வேறுபாடுகள் இல்லை என்பதால் அரிசிக்கு மாற்றாக கோதுமை சப்பாத்தி, பூரி போன்றவை சர்கரை நோயைக் குறைக்கும் என்பதற்கு எந்த ஒரு முகாந்திரமும் இல்லை, ஆனாலும் கோதுமை பரிந்துரை என்பது செரிமான நேரத்தை நீட்டிக்கும் என்பதால் கோதுமை குறைந்த பட்சத் தீர்வு என்ற அடிப்படையில் தான் சொல்லப்படுகிறது ஆனால் மாற்றுத் தீர்வு இல்லை, அரிசிக்கு மாற்றாக கோதுமை என்றால் சர்கரை குறைபாடு கண்ட சர்தாஜி என்ன சாப்பிடுவான் ? என்றும் கேட்கிறார்கள் என்பதை கவனத்தில் வையுங்கள்.

பழைய சோற்றில் இருக்கும் நீராகாரம் குடிப்பதால் உடலில் குளிர்ச்சி கிடைக்கும் என்பது தவிர்த்து பழைய சோற்றில் சத்துகள் எதுவும் கிடையாது, பழைய சோற்றைத் தொடர்ந்து காலை வேலையில் சாப்பிடுவதால் பீர் குடிக்காமலேயே தொப்பையை வளர்க்கலாம், கிராமத்தினர் பழைய சோறு தின்றுவிட்டு தெம்பாக வேலை செய்யவில்லையா ? அவர்கள் செய்யும் கடுமையான உடல் உழைப்பினால் பழைய சோறு மட்டுமல்ல எந்த ஒரு உணவும் அவர்களின் உடலை பாதிக்காது. ஆனால் உடல் உழைப்பற்ற மற்றவர்களுக்கு அது பொருத்தமான உணவு அல்ல. பழைய சோற்றில் தனிச் சிறப்புகள் எதுவும் கிடையாது அதை உணவாக எடுத்துக் கொள்வதால் கூடுதல் பலன் எதுவும் கிடையாது. பொதுவாகவே அரிசி சார்ந்த நூடுல்ஸ் உள்ளிட்ட எந்த உணவிலும் சர்க்கரை அளவு கூடுதலாக இருக்கும் என்பதில் பழைய சோறும் சேர்த்தி தான்.  பழைய சோற்றைவிட பாசிப் பயிறு சேர்த்த கஞ்சி உடலுக்கு நல்லது. பாசிப் பயிற்றில் தேவையான புரதமும் இருக்கும். நான் பழைய சோற்றைப் பழிக்கவில்லை, ஆனால் அவற்றை பரிந்துரை செய்யும் அளவுக்கு அதில் தனிச் சிறப்புகள் இல்லை என்று மட்டுமே சொல்கிறேன்.

சர்க்கரை குறைபாடு உள்ளவர்கள் எதைத் தான் சாப்பிடுவது ? எதையும் சாப்பிடலாம் ஆனால் ஒரே வேளையில் கட்டு கட்டுவோம் என்று உண்ணக் கூடாது, அளவோடு குறிப்பிட்ட இடைவெளியில் எந்த உணவையும் சாப்பிடலாம், இரத்த சர்க்கரை அளவை உடனடியாகக் கூட்டும்   படி எதையும் சாப்பிடவோ குடிக்கவோ கூடாது, இவ்வாறு உடனடி சர்கரை மாற்றங்கள் (Blood Glucose In-Balance) உடலின் இரத்த ஓட்டத் தன்மைகளிலும் அளவிலும் ஏற்றம் இரக்கம் காட்டுவதால் இயல்பாக செயல்படும் உடலுறுப்புகள் திணறும், பழுதடையும்.

இந்த இடுகையில் முதன்மையாக சொல்ல வந்தது காலை உணவை எந்த காரணத்தை முன்னிட்டும் தவிர்க்காதீர்கள், இருவரும் வேலை செய்யும் சூழலில் உணவு செய்வதற்கு அலுப்பாக இருந்தாலும் வாட்டிய இரண்டு துண்டு பிரட் அல்லது (கடையில் வாங்கிய) இரண்டு இட்லி, ஒரு தோசை, பாலில் ஊறவைத்த சோள சொதில்கள் (சீரியல்) ஆகியவற்றில் எதோ ஒன்றுடன் தேவையான நீர் சத்திற்காக ஒரு டம்ளர் பால் அல்லது தண்ணீர் பருகலாம்.

ஆசை உலகிற்கு பயன்படட்டும்


ஆசை உலகிற்கு பயன்படட்டும்
செப்டம்பர் 06,2008,
18:23  IST
* மனிதர்கள் செய்யும் பல தவறுகளுக்கு ஆசையே அடிப்படையாக இருக்கிறது. ஆசையினால் ஒன்றை அடைய விரும்புகிறோம். அதனை அடைவதற்காக சிலர் தர்ம வழியிலிருந்து விடுபட்டு, அதர்ம வழியைக்கடைப்பிடிக்கிறார்கள். எப்படியாவது ஆசையை நிறைவேற்றிவிட வேண்டும் என்ற உந்துதலே தவறுகளுக்கு காரணமாகிறது. எனவே, ஆசையை விட்டொழிக்க வேண்டும்.
*அக்னியில் நெய்யை விடும்போது, அது மேலும் பெரிதாகிக் கொண்டுதான் போகிறதே தவிர அணைந்து விடுவதில்லை. அதைப்போலவே ஒரு ஆசை நிறைவேறும்போது, அடுத்த ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணம்தான் வருகிறது. நாமாக நிறுத்திக் கொள்ளும்வரையில் ஆசைகள் வந்து கொண்டேதான் இருக்கும். ஆசையில் இருந்து விடுபட மனதை இறைவனிடம் வைக்க வேண்டும்.
* ஆசைகள் மனிதர்களை பாவச்செயல்களில் ஈடுபடுத்தும் சக்தியாக இருக்கிறது. மனதில் இருக்கும் ஆசைகள் கூடிக் கொண்டேதான் இருக்கிறதே தவிர குறைவதில்லை. இதனால் இன்பத்தை காட்டிலும், துன்பமே அதிகமாக இருக்கிறது. எனவே, ஆசைக்கு தடுப்பு போட வேண்டியது அவசியம்.
*ஆசைகளை உலகிற்கு பயன்படுவதாகவும், உங்களுக்கு ஆத்மார்த்தமாக பலன் தருவதாகவும் மாற்றிக்கொள்ளுங்கள். இத்தகைய ஆசையில் ஈடுபாடு காட்டுங்கள். அதனை நிறைவேற்ற முனைப்புடன் செயலாற்றுங்கள். இவ்வாறு தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும்போது, மாயையான ஆசைகள் எல்லாம் உங்களை விட்டு விலகிவிடும். பாவங்களும் குறைந்து, புண்ணியம் கிடைக்கும்

Monday, July 30, 2012

அழகுக்கு மட்டுமல்ல நகை...

அழகுக்கு மட்டுமல்ல நகை...
அக்குபஞ்சர் மருத்துவர் சங்கர்:
 நாம் அணியும் ஒவ்வொரு அணிகலன்களும், உடலில், உயிர் சக்திப் புள்ளிகளைத் தூண்டி, நம்மை சீராக இயங்க வைக்கின்றன. அழகுக்கு அழகு சேர்க்கும் இந்த அணிகலன்கள், ஆரோக்கியத்தையும் தருகின்றன. உதாரணமாக, பொட்டு வைக்கும் ஒரு பெண்ணை சீக்கிரத்தில், "மெஸ்மரிசம்' பண்ண முடியாது. பெண்ணின் இரு கண்களை உற்று நோக்கி வசியப்படுத்த முயற்சிக்கும் போது, மூன்றாவது கண்ணாக உள்ள பொட்டு, அந்த நபரை திசை திருப்பி விடும்.

தைராய்டு சிக்கல் உள்ளவர்களுக்கு, சரியான புள்ளிகளைப் பார்த்து காது குத்தினால், அந்த சிக்கலே தீர்ந்து விடும். கழுத்தில் செயின் அணியும் போது, அங்குள்ள புள்ளிகள் தூண்டப்படும். இதன் மூலம், உடலுக்கும், தலைக்கும் இடையே உள்ள சக்தி ஓட்டம் சீராகும். பெண்கள் புஜத்தில், "வங்கி' அணிவதால், மார்பகப் புற்று நோய் வருவது பெரும்பாலும் தவிர்க்கப்படுவதாக, ஆய்வில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு போடுவதில் கூட, மருத்துவ நுட்பம் உள்ளது. அச்சமயத்தில் அணியும் வளையல்கள், அந்தப் பகுதியின் புள்ளிகளை அழுத்துவதன் மூலம், வெள்ளை அணு உற்பத்தி உடலில் அதிகரிக்கிறது. இதன் மூலம் தாய்க்கும், சேய்க்கும் நோய் எதிர்ப்பாற்றல் கூடும்.

மோதிரம் அணிவது, எல்லா மதத்தினராலும் இன்று ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. பாலுறுப்புகளைத் தூண்டும் புள்ளிகள், மோதிர விரலில் உள்ளன. இதனால் தான் திருமணத்தன்று, மணமக்களுக்கு மோதிரம் போட்டு அழகு பார்க்கிறோம்.

கல்லீரல், மண்ணீரல், பித்தப்பை, சிறுநீரகம், வயிறு போன்ற மிக முக்கிய உறுப்புகளின் செயல்திறனைத் தூண்டிவிடும் அற்புதமான அணிகலன் கொலுசு. கர்ப்பப்பை இறக்கப் பிரச்னையை, தடிமனான கொலுசு அணிவதன் மூலம் தீர்க்கலாம்.

"பில்லாலி' என்பது, குழந்தை பிறந்தவுடன், காலில் மூன்றாவது விரலில் அணிவது. இதை அணியும் போது, சில புள்ளிகள் தூண்டப்பட்டு, பால் சுரப்பை அதிகப்படுத்தும். அணிகலன்கள் அணிவது, வரும் முன் காக்கும் அற்புதமான விஷயம். முடிந்த மட்டும், எடை குறைவான பிளாஸ்டிக் அணிகலன்களை அணிவதைத் தவிர்க்கலாம்.

Sunday, July 29, 2012

உனக்கு நீயே தலைவனாக இரு! உணர்ச்சியூட்டுகிறார் புத்தர்



உனக்கு நீயே தலைவனாக இரு! உணர்ச்சியூட்டுகிறார் புத்தர்
செப்டம்பர் 10,2010,15:20  IST
 எல்லா உயிர்களிடமும் அன்புடன் நேசக்கரம் நீட்டுங்கள். ஒழுக்கம் என்னும் உயர்ந்த பாறை மீது வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுங்கள். மெய்யறிவினால் மனதில் உண்டாகும் மயக்கத்தையும், அறியாமையையும் போக்குங்கள். கூரை செம்மையாக வேயப்பட்டிருந்தால் வீட்டிற்குள் மழைநீர் இறங்காதது போல, நன்னடத்தையும், நன்னெறிப் பயிற்சியும் கொண்ட மனத்தில் ஆசைகளுக்குச் சிறிதும் இடம் இருக்காது.   ஒருவன் ஆயிரம் படைகளை கூட வெற்றி கொள்ளலாம். அது மட்டுமே வீரமல்ல. எவனொருவன் தன்னைத் தானே அடக்கக் கற்றுக் கொள்கிறானே அவனே வெற்றி வீரர்களில் முதன்மையானவன்.  நாம் ஒவ்வொருவரும் தனக்குத் தானே தலைவனாக இருக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். நீயே உனக்கு தலைவனாக முடியா விட்டால் வேறு யார் தலைவனாக இருக்க முடியும்? மன அடக்கம் கைவரப்பெற்றவன் தலைமைப் பொறுப்பை ஏற்கும் தகுதி பெறுகிறான். 
 மனிதன் தீய எண்ணத்தோடு பேசினாலும், செயல் புரிந்தாலும் வண்டிச்சக்கரம் மாடு செல்லும் திசையை நோக்கிச் செல்வது போல, துன்பம் அவனைத் தொடர்ந்து கொண்டே இருக்கும். நிலையில்லாத மனம் படைத்தவர்களும், உண்மையான அறத்தை அறியாதவர்களும், மனதில் அமைதியற்று குழம்பிக் கொண்டிருப்பவர்களும் எக்காலத்திலும் ஞானத்தை அடைய முடியாது. உண்மையான ஞானம் நம்மிடம் தோன்றி விட்டால், மனம் பூரண விடுதலை அடைந்து விடும். அப்போது சொல்லும், செயலிலும் அமைதி தவழும்.  வயலில் களைகள் பயிருக்கு தீமை தருவது போல, மனிதர்களுக்கு ஆசையே எல்லாத் தீமைகளையும் உண்டாக்குகிறது.   எந்தக் காலத்திலும் பகைமையை பகைமையால் தணிக்க முடியாது. பகைமை அன்பால் மட்டுமே போக்க முடியும்.  சோம்பித் திரியாதீர்கள். காமத்தோடு புலன் இன்பங்களை நாடாதீர்கள். ஆக்கமும், கேடும் தருகின்ற இருவழிகளை ஆராய்ந்து அறிவின் துணை கொண்டு ஆக்கம் தரும் பாதையில் நடை போடுங்கள்.
 நியாயமான முறையில் செல்வத்தை சேர்த்து, அதனைக் கொண்டு இல்லாத ஏழைகளுக்கு தானம் செய்து வாழபவன் பெரும் புண்ணியங்களைத் தேடிக் கொள்கிறான்.  மனிதர்கள் தங்கள் நாக்கினைக் காத்துக் கொள்வது அவசியம். அப்போது எல்லா நன்மைகளும் தானாக வந்து சேரும்.  உங்கள் அறிவை நீங்களே தூண்டிக் கொள்ளுங்கள். உங்கள் நீங்களே பரிசோதனை செய்யுங்கள். இதனால், வாழ்வில் உண்டாகும் துன்பங்களைத் தடுத்துக் கொள்ளும் வலிமை உண்டாகும்.   எந்த ஒரு நதியானாலும் ஒருவனுடைய பாவத்தைக் கழுவ முடியாது. எந்த ஒரு சடங்கும் நம்மைத் தூய்மைப்படுத்தாது. தயவு, தருமசிந்தை, அமைதி போன்ற நல்லொழுக்கங்களே நம்மை ஈடேற்றும்.  உலகத்தின் மீது கொண்டுள்ள அளவு கடந்த பற்றை விடுங்கள். வாழ்க்கையில் ஒருவனுடைய செல்வமோ, அதிகாரமோ அவனை மேலும் மேலும் கீழ்நிலைக்குத் தள்ளிவிடுகின்றன.   "அவன் என்னை நிந்தித்தான், தாக்கினான், என் பொருளை அபகரித்தான்' என்று எண்ணிக் கொண்டே இருந்தால், எந்நாளும் பகைமை தீர்வதில்லை. அத்தகைய எண்ணங்களுக்கு சிறிதும் இடம் தராதீர்கள். அவனிடம் அன்புகாட்டுங்கள். பகைமை மறைந்துவிடும்.

நான்கிருந்தால் அறிஞனுக்கும் நரகம் உறுதி

நான்கிருந்தால் அறிஞனுக்கும் நரகம் உறுதி

* நற்செயல் என்னும்   ஏர்முனையால் மனம் என்னும் நிலத்தை உழுது சீர்படுத்துங்கள். அதில் கடவுளின் திருநாமம் என்னும் விதையைத் தூவி விடுங்கள். உண்மை என்னும் நீர் பாய்ச்சுங்கள். அங்கே அன்பு என்னும் பயிர் வளர்த்து மகிழ்ச்சி என்னும் கனியை அறுவடை செய்யுங்கள். இது தான் ஆன்மிக வாழ்வின் 
ரகசியம். 
* நன்மை செய்தவருக்கு திரும்பவும் நன்மையே செய்வது உலக வழக்கம் தான். இதில்  ஒன்றும் புதுமை இல்லை. ஆனால், தீமை செய்தவருக்கும் நன்மை செய்வது தான் உத்தமர்களின் செயலாகும்.
* சகதி நிறைந்த குளத்தில் நிமிர்ந்து நிற்கும் தாமரை மலர் போலவும், நீரினால் பாதிக்கப்படாமல் உயரவே பறந்து செல்லும் கடல்பறவை போலவும் உலகவாழ்வில் இருந்து கொண்டே கடவுளை நோக்கி முன்னேறிச் செல்லுங்கள்.
* மனதின் மாசு பொறாமை. நாக்கின் மாசு பொய் பேசுதல். கண்ணின் மாசு பிறர் பொருளை விரும்புதல். செவியின் மாசு பழிச்சொற்களைக் கேட்டல் இந்நான்கையும் செய்பவன் கற்றறிந்த அறிஞனாக இருந்தாலும் முடிவில் நரகத்திற்கே செல்வான்.
* பொறுமையிலும் சிறந்த தவம் இல்லை. திருப்தி கொள்வதிலும் உயர்ந்த இன்பம் வேறில்லை. ஆசையைக் காட்டிலும் வேறொரு தீமை இல்லை. மன்னிப்பதைக் காட்டிலும் ஆற்றல் மிக்க ஆயுதம் வேறொன்று இல்லை.

விரதம் என்பது எது?

* நீதிநூல்களில் கடிந்து விலக்கப்பட்ட விஷயங்களை நாமும் வாழ்வில் ஒதுக்கிவிடுவது நல்லது. கடுஞ்சொற்கள் பேசுவதை அறவே தவிர்க்க வேண்டும். 
* இயற்கைக்கு மாறுபட்ட செயல்களை என்றும் செய்ய முனையக்கூடாது. உலக நடைமுறைக்கு ஒவ்வாத செயல்களைச் செய்வதில்லை என்று உறுதி எடுங்கள்.
* பிறவுயிர்களைப் பாதுகாப்பதே சிறந்த விரதமாகும். பட்டினியாக இருப்பதை விட பிறவுயிர்களுக்கு தீங்கு எண்ணாமல் வாழ்வதே சிறந்த அறமாகும்.
* பெற்ற தாய்தந்தையரைப் பேணி பாதுகாப்பதும், சரியான தருணத்தில் நமக்குப் பிறர் செய்த நல்ல செயல்களை ஒருபோதும் மறக்காமல் நன்றியுடையவர்காக இருப்பதும் நல்லவர்களின் அடையாளமாகும்.
* பிறருடைய உடைமைகளை குறிப்பாக நிலங்களை ஏமாற்றியோ அல்லது பலவந்தப்படுத்தியோ பறித்து அனுபவிப்பது பெரும் பாவச் செயலாகும்.
* மற்ற செல்வங்கள் எல்லாம் நம்மைவிட்டு விலகினாலும் அழியாத செல்வமாக நம்மிடமே நிலைத்து நிற்கும் செல்வம் கல்விச்செல்வம் மட்டுமே. 
* துன்பம் நம்மை அடுக்கடுக்காக வந்து தாக்கினாலும், மனந்தளராமல் 
ஊக்கத்தோடு செயல்படுபவனிடம் செல்வம் சேர்ந்து விடும்.
* வேதம் முதலான மறைநூல்களைப் படிப்பதைக் காட்டிலும் ஒழுக்கத்தோடும், தூய்மையான உள்ளத்தோடும் இருப்பதே நல்லவர்களின் பண்பாகும்.
-அவ்வையார்

பெண்களுக்கு அழகு எது?

* பயனில்லாத பொருள்களை நாம் தூக்கி எறிவது போல், பயனற்றவர்களின் அன்பையும் உதறித் தள்ளுவதே அறிவுடைமை.
* ஒருவர் பலமுறை கூறி, அதன் பின் செயலை செய்து முடிப்பது பண்பாகாது. தானே தனது கடமையைச் செய்ய வேண்டும்.
* மன எழுச்சியைப்பெற அதிகாலையில் எழுந்திருக்கும் பழக்கத்தை வழக்கமாக்கிக் கொள்வது சரியான வழி முறையாகும்.
* பெரியோர் இருக்குமிடத்தில் பேசும் போது நம் வாதங்களை, முகத்தில் அடித்தால் போல் நிதானமிழந்து கூறுவதை தவிர்க்க வேண்டும்.
* கணவனைக் காத்தல், வீட்டைக் காத்தல், அறத்தைக் காத்தல், அன்பைக் காத்தல் என நல்லனவற்றைக் காப்பதே பெண்ணுக்கு அழகு.
* தீயவனவற்றைக் காப்பாற்றக் கூடாது, அவை அழிவுக்கு காரணமானதாகும், நல்லனவற்றையே காத்தல் நம்மையும் ஒரு பொருட்டாக உலகம் மதிக்க வழி ஏற்படுத்தித் தரும்.
* நல்ல நூல்கள் கூறும் கருத்துக்களையும், பெரியோர் கூறும் அறிவுரைகளையும் உள்ளத்தில் வைத்து காத்தல் வேண்டும்.
- அவ்வையார் 

மழை பெய்வது யாருக்கா


பசிப்பிணி என்ற பாவி ஒருவனைப் பிடித்து விட்டால் தன்மானம், குடிப்பெருமை, கல்வி, வளமை, அறிவுடைமை, கொடை, தவம், உயர்வு, ஊக்கம், காதல் ஆகிய குணங்கள் மறைந்து விடும். தி வருவாய்க்குத் தக்க வகையில் செலவு செய்ய வேண்டும். வரவுக்கு மீறிச் செலவு செய்பவன் மானத்தை இழப்பான். நல்லது கெட்டதை பிரித்தறியும் அறிவினை இழந்து விடுவான். திருடன் என்று பெயர் எடுப்பான். ஏழு பிறப்பிலும் பாவத்தைச் செய்ய வேண்டி வரும். 
துன்பங்களைச் சேர்த்து வைக்கும் இடமாக உடல் இருக்கிறது. இந்த பொய்யான வாழ்க்கை நிலையானது என்று எண்ணி ஏமாந்து விடாதீர்கள். சேர்த்து வைத்த பொருளைக் கொண்டு வறியவர்களுக்கு உதவி செய்யுங்கள். நாம் செய்யும் தர்மமே நம் துன்பத்தைப் போக்க வல்லது.நெல்லுக்கு பாய்ச்சிய நீர் வாய்க்கால் வழியாகப் புல்லுக்கும் பாய்வது போல, மண்ணுலகில் நல்லவர் ஒருவர் இருந்தாலும் அவருக்காகவே மழை பொழிகிறது. அம்மழைநீரால் உலகில் உள்ள அனைவரும் பயன் பெறுகின்றனர். நாம் வருந்தி அழைத்தாலும் நமக்கில்லாத பொருள் கிடைக்காது. நமக்கான பொருளை வேண்டாம் என்று புறக்கணித்தாலும், அது நம்மை விட்டு நீங்காது. இந்த உண்மையை அறியாமல் மனிதர்கள் வருந்துகின்றனர்.

காலம் ஓடிக்கொண்டிருக்கிற



* உலகத்திலுள்ள ஒவ்வொரு கோவிலுக்கும் சென்று அங்குள்ள தெய்வங் களை எல்லாம் வழிபாடு செய்வது நல்லது. 

* வானத்திலிருந்து பெய்யும் பருவமழை குறைந்து விட்டால் உலகில் தான தருமங்களும் குறைந்து விடும்.

* தூய்மையான உள்ளத்தில் வஞ்சக எண்ணங்களுக்கு சிறிதும் இடம் கிடையாது. 

* சந்தனம் எவ்வளவு தேய்த்தாலும் தன் நறுமணத்தினையே பிறருக்கு கொடுக்கும்.
அதுபோல நல்லவர்கள் வறுமை அடைந்தாலும் தன் நற்குணத்திலிருந்து மாறுவதில்லை.

* உலகில் இரண்டு ஜாதியினரே இருக்கின்றனர். ஒன்று ஆண், மற்றொன்று பெண்.

* தாமரை இலைமேல் தண்ணீர் போல, உடம்பின் மீது உள்ள பற்றுக்களை குறைத்துக் கொண்டு வாழுங்கள்.

* நல்ல குடும்பத்தில் பிறந்தவர்கள் வறுமை நிலை அடைந்தாலும், தன் மேன்மையான தன்மை விட்டுக்கொடுக்காமல் தன்னால் ஆன உதவியை பிறருக்குச் செய்வர். 

* ஆண்டுகள் பலவாக அழுது நம்மை நாமே வருத்திக் கொண்டாலும் மாண்டவர்கள்
மீண்டு வரப்போவதில்லை. காலம் ஓடிக் கொண்டிருக்கிறது. இறப்பு நம்மை நோக்கி
வந்து கொண்டிருக்கிறது. அதனால், உங்களால் முடிந்த நன்மைகளை பிறருக்குச்
செய்யுங்கள்.

உலகின் பணக்கார அரசியல்வாதிகளில் 4 வது இடத்தை பெற்ற இந்திய அரசியல்வாதி யார்



உலகின் பணக்கார அரசியல்வாதிகளில் 4 வது இடத்தை பெற்ற இந்திய அரசியல்வாதி யார்?




உலகின்  பணக்கார அரசியல்வாதிகளில் 4 வது இடத்தை பெற்ற இந்திய அரசியல்வாதி யார்?

இந்தியாவில் மிகப் பெரிய பதவியான ஜனாதிபதிபிரதமர் பதவியை இவர் வகிக்கவில்லை ஆனால் அந்த அதிகாரப் பதவி வகிப்பவர் இவரின் ஆணையை ஏற்றுதான் செயல்படுவார்கள் அவர் வேறு யாருமல்ல இந்தியாவில் தற்போது வானாளாவிய அதிகாரம் படைத்த காங்கிரஸ் தலைவி சோனியா காந்திதான் உலகின்  நாலாவது பணக்கார அரசியல்வாதிஇவரின் சொத்து மதிப்பு  $2-19 மில்லியன் அல்ல பில்லியன் (Rs 10,000-95,000 கோடி). ஆனால் 2009 பொது தேர்தல் சமயத்தில் சோனியாகாந்தி வெளியிட்ட அவரின் சொத்து மதிப்பு Rs 50-75 லட்சம் மட்டுமே...

முதல் இடத்தை சவுதி அரபியாவை சார்ந்த  Abdullah Bin Abdul Aziz என்பவரும் இரண்டாம் இடத்தை ப்ருனை நாட்டை சார்ந்தHassanal Bolkiah அவரும் மூன்றாவது இடத்தை  நீயூயார்க் நகர மேயர்  Michael Bloomberg என்பவரும் நான்காவதாக இந்திய காங்கிரஸ் தலைவியான Sonia Gandhi பிடித்துள்ளனர்பாவம் நமது பக்கத்து நாடானா  பாகிஸ்தான் பிரசிடெண்ட்  Asif Ali Zardari 19 வது இடத்தை பெற்றுள்ளார்.


இதை நான் சொல்லவில்லை .அமெரிக்காவில் இருந்து வெளி வரும்  பிஸினஸ் இன்சைடர் என்ற பிரபல வலைத்தளம் கூறியுள்ளது .இது பிஸினஸ்/எண்டர்டெய்மெண்ட் செய்திகளை தாங்கி வெளிவரும் ஒரு பிரபல வலைத்தளம்இது 2009 ல் தொடங்கி நீயூயார்க்கில் இருந்து வெளி வருகிறதுஇதன் C.E.Oகெவின் பிரேய்ன் என்பவர்.


இந்த செய்தி Businessinsider ல் வந்த தகவலின்படி இங்கு என் வழியில்  தரப்பட்டள்ளது  மேலும் அதிக தகவலுக்கு (For more details, ) visit http://www.businessinsider.com/richest-politicians-in-the-world-2012-2?op=1

Saturday, July 28, 2012

வெற்றிக்கு தேவையான குணம்

* எப்போதும் பாடுபடு. எப்போதும் உழைத்துக் கொண்டிரு. உழைப்பிலே தான் சுகமிருக்கிறது. வறுமை, நோய், துன்பம் போன்ற எல்லா பேய்களும் உழைப்பை கண்டால் ஓடி ஒளிந்து விடும். 
* மண்ணும், காற்றும், சூரியனும், சந்திரனும், உன்னையும், என்னையும் சூழ்ந்து நிற்கும் உயிர்களும், நீயும், நானும் தெய்வம் என்று வேதங்கள் கூறுகின்றன. இவை தான் தெய்வம். இதைத் தவிர வேறு தெய்வம் உலகில் இல்லை. 
* தன்னை மறந்து தெய்வத்தை நம்புங்கள். உண்மை யையே பேசி நியாயத்தையே எப்போதும் செய்ய தலைப்படுங்கள். எல்லா இன்பங்களும் உங்களைத் தேடி ஓடி வரும். 
* உண்மையான தெய்வபக்தி இருந்தால் மனோதைரியம் உண்டாகும். மனோதைரியம் இருந்தால் தான் உண்மையான தெய்வபக்தி உண்டாகும். இவை இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்புடையன. 
* வாழ்க்கையில் ஒருவன் வெற்றியடைய வேண்டுமா னால் அவன் சம்பாதித்துக் கொள்ள வேண்டிய குணங்கள் எல்லாவற்றிலும் மிக உயர்ந்த குணம் பொறுமை.

Friday, July 27, 2012

செக்குமாடாய் உழைக்காதீர்கள்

வாழ்க்கையில் உயர வேண்டுமானால் உழைப்பு மிக அவசியம் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் கடுமையாக உழைப்பது மட்டுமே உயர்வுக்கு உத்திரவாதமாகுமா என்றால் இல்லை என்பதே உண்மை. எவ்வளவோ பாடுபட்டு உழைப்பவர்களை நாம் பார்த்திருக்கிறோம். பலர் எத்தனை காலமாக அப்படி உழைத்தாலும் துவக்கத்தில் இருந்தது போலவே பலகால உழைப்பிற்குப் பின்பும் இருக்கிறார்கள். உழைப்பு உயர்வுக்கு உத்திரவாதமென்றால் அவர்கள் எத்தனையோ உயர்ந்திருக்க வேண்டுமே, ஏன் அவர்கள் அவ்வாறு உயரவில்லை? காரணம் அவர்கள் செக்கு மாடாகத் தான் உழைத்திருக்கிறார்கள்.

செக்குமாடு ஒரு நாள் நடக்கும் தூரத்தைக் கணக்கிட்டால் அது மைல் கணக்கில் இருக்கும். ஆனால் அது ஒரே இடத்தில் தானே சுற்றி நடக்கிறது. அப்படித்தான் பலருடைய உழைப்பும் இருக்கிறது. இந்த செக்குமாடு உழைப்பில் சிந்தனை இல்லை. நாளுக்கு நாள் வித்தியாசம் இல்லை. புதியதாய் முயற்சிகள் இல்லை. மாற்று வழிகள் குறித்த பிரக்ஞை இல்லை. இது போன்ற உழைப்பு உங்கள் நாட்களை நகர்த்தலாம், ஆனால் வாழ்க்கையை நகர்த்தாது. 

நாளுக்கு நாள் உலகம் மாறிக் கொண்டே இருக்கிறது. புதிது புதிதாகத் தேவைகள் உருவாகின்றன. பழைய சூழ்நிலைகள் மாறி புதிய சூழ்நிலைகள் உருவாகின்றன. உங்கள் தொழிலைத் தீர்மானிக்கும் மனிதர்கள் மாறுகிறார்கள். நேற்று வெற்றியை ஏற்படுத்திய வழிமுறைகள் இன்று அதே விளைவுகளை ஏற்படுத்தத் தவறுகின்றன. இப்படிப்பட்ட நேரத்திலும் ஒரே போல் எப்போதும் கண்களை மூடிக் கொண்டு உழைப்பது தான் செக்குமாட்டின் உழைப்பு. இப்படி உழைத்து விட்டு உயரவில்லையே என்று வருத்தப்படுவதில் பயனில்லை.

உயர வைக்கும் உழைப்பு எப்படி இருக்க வேண்டும்?

*செய்யும் செயல் நமது அறிவுக்கும் திறமைக்கும் ஏற்றதாக இருக்க வேண்டும்.

*என்ன செய்கிறோம், ஏன் செய்கிறோம், கிடைக்கக்கூடிய பலன் என்ன, அது உழைப்பிற்குப் போதுமானது தானா என்பதை எப்போதும் தெளிவாக அறிந்திருங்கள்.

*நாம் செயல்புரிகிற விதம் கச்சிதமானது தானா, மற்றவர்கள் எப்படிச் செய்கிறார்கள், நம்மை விட அவர்கள் செயல்புரிகிற விதம் சிறந்ததாக உள்ளதா என்பதை விருப்பு வெறுப்பில்லாமல் பார்க்க வேண்டும். அப்படி நம்மை விடச் சிறப்பாக இருந்தால் அதைப் பின்பற்றத் தயங்கக்கூடாது. நம்முடைய வழிமுறை என்பதற்காக தரம் குறைந்த ஒன்றை கண்ணைமூடிப் பின்பற்றும் முட்டாள்தனத்தை செய்யக்கூடாது. 

*செய்யும் செயலில் ஈடுபாடும், முழுக் கவனமும் இருக்க வேண்டும். செய்யச் செய்ய செயலில் நாளுக்கு நாள் மெருகு கூடா விட்டால், தரம் உயரா விட்டால், செயலைக் கச்சிதமாகச் செய்து முடிக்கும் நேரம் கணிசமாகக் குறையா விட்டால் நமக்குள்ள ஈடுபாட்டிலோ, கவனத்திலோ குறை உள்ளது என்பது பொருள்.

*நம் தொழில் சம்பந்தமாக புதிது புதிதாக வரும் மாற்றங்களை கண்டிப்பாக கவனித்து வர வேண்டும்.

*சரியாகச் செய்தும், முயன்றும் போதிய பலன் தராத தொழிலை விட்டுவிடத் தெரிய வேண்டும். 'செண்டிமெண்டல்' காரணங்களுக்காக அதைத் தொடர்ந்து செய்வது முட்டாள்தனம்.

*இதை விட்டால் வேறு வழியில்லை, இது தான் எனக்கு விதித்திருக்கிறது, இதைத் தவிர வேறு எதற்கும் லாயக்கற்றவன் என்று நம்மை நாமே மட்டுப்படுத்திக் கொள்ளக் கூடாது. புதியதை முயன்று பார்க்கத் தயங்கக்கூடாது. முயன்று பார்த்தால் ஒழிய நம் உள்ளே உள்ள திறமைகளை நாம் அறிய முடியாது.

இப்படி எல்லா அம்சங்களையும் உள்ளில் கொண்டு உழைக்கும் உழைப்பே உயர்வைத் தரும்

அபகரித்து உண்ணாதீர்

* நீங்கள் ஒருவர் மற்றவரின் பொருள்களைத் தவறான முறையில் உண்ணாதீர்கள். மேலும் பிற மனிதர்களுடைய பொருள்களில் ஏதேனும் ஒரு பகுதியை அநீதியான முறையில் தின்பதற்காக- அது தவறு என நீங்கள் அறிந்திருந்தும் - அதற்குரிய வாய்ப்பைப் பெற அதிகாரிகளை அணுகாதீர்கள். 
(திருக்குர்ஆன்2: 188)
* நாம் பதவியில் அமர்த்தி இருக்கும் ஒருவர் நம்மிடமிருந்து ஓர் ஊசியை மறைத்தாலும், அல்லது அதனை விட ஒரு சிறிய பொருளை மறைத்தாலும் அதனை அவர் அபகரித்துக் கொண்டார் என்றே பொருள். மறுமை நாளில் அதனை அவர் சுமந்த வண்ணமே வருவார். 
(நபிகள் நாயகம்(ஸல்) நூல்: முஸ்லிம்)
* பரிசாகக் கிடைத்த பொருளை அரசிடம் ஒப்படைக்காமல் தம்மிடம் வைத்துக் கொண்ட அதிகாரிகளைப் பார்த்து நபிகள் நாயகம்(ஸல்) கூறினார்கள். ''இவர்(அரசுப் பணி புரியாமல்) தாம் தாய் வீட்டிலேயே இருந்தால் அப்பொருள்கள் அவருக்குக் கிட்டியிருக்குமா?'' 
(நூல்: புகாரி, முஸ்லிம்)
(வேதவரிகளும் தூதர் மொழிகளும் நூலில் இருந்து

மரணத்தின் பின்.. யாருக்கு மறுபிறவிகள் ஏற்படாது?


மரணத்தோடு ஒரு மனிதனின் வாழ்க்கை முற்றுப் பெறுவதில்லை. அது மேலும் மேலும் தொடர்கிறது.  யாருக்கு மறுபிறவிகள் ஏற்படாது என்ற சந்தேகம் அனைவருக்கும் இருக்கும். இதற்கு சாஸ்திரங்கள், கருட புராணம், கடோபநிஷதம் போன்றவை மறுபிறவி, பற்றிய சில செய்திகளை குறிப்பிடுகின்றன அவை..
பொதுவாக பூமியில் அனுபவிக்க வேண்டிய அனைத்தையும் அனுபவித்து முடிந்தவருக்கு மீண்டும் மறுபிறவி ஏற்படுவதில்லை. இது கர்ம பூமியாதலால் தங்களது கர்மத்தை அனுபவிக்கவே உயிர்கள் பிறப்பெடுக்கின்றன. அவற்றை முற்றிலுமாக அனுபவித்து விட்டு, இனி அனுபவிக்க சஞ்சித கர்மா, பிராரப்த கர்மா, ஆகாம்ய கர்மா என ஏதும் இல்லாதவர்களுக்கு மறுபிறவி ஏற்படுவதில்லை. இவ்வுலக ஆசைகள் ஏதும் இல்லாமல், பற்றற்ற வாழ்க்கை வாழ்பவர்களுக்கும், தவயோகிகளுக்கும் மறுபிறவி இல்லை. சிறந்த தவத்துடனும் பக்தியுடனும் வாழ்ந்து, இறைவன் ஒருவனையே தங்கள் பற்றுக் கோடாகக் கொண்டு, தாங்கள் செய்யும் செயல்கள் அனைத்தையும் இறைவனுக்கே அர்ப்பணித்து வாழ்பவர்களுக்கு மறுபிறவி இல்லை. தாங்கள் செய்த பாவக் கணக்கும், புண்ணியக் கணக்கும் சரியாகி கழிக்க ஏதும் கர்மவினைகள் இல்லாதவருக்கு மறுபிறவி ஏற்படுவதில்லை.
தன்னலம் கருதாது வாழ்ந்து மறைந்த மகான்களுக்கு மறுபிறவி இல்லை. இறைவனின் கட்டளைப்படி மட்டுமே அவர்களது அவதாரம் நிகழும். பந்தம், பாசம், மோகம், அகந்தை, காமம் போன்ற மன அழுக்குகளிலிருந்து விடுபட்டு, இவ்வுலக வாழ்வை வெறுத்து, இறைவனையே சதா தியானித்து, அவன் நாமத்தையே எப்போதும் கூறி வரும் உண்மையான பக்தர்களுக்கு மறுபிறவி ஏற்படுவதில்லை. எல்லா ஆசைகளும் தீர்ந்தாலும் சில கர்ம எச்சங்களை மட்டும் கழிக்க இயலாமல் அதற்கேற்றவாறு உடல்நிலை, ஆயுள்நிலை இடம் தராது இறந்து போனவர்கள் மீண்டும் பூமியில் மறுபிறவி எடுக்கிறார்கள். அவர்கள் சில காலம் மனிதனாகவோ அல்லது மிருகங்களாகவோ வாழ்ந்து விட்டு, தங்களது கர்மக் கணக்குகளை நேர் செய்த பின் மரணிக்கிறார்கள். அவர்களுக்கு மீண்டும் மறுபிறவி என்பது ஏற்படாது. இது போன்ற பல காரணங்கள் மறுபிறவி எடுப்பது பற்றி நமது சாஸ்திரங்களில் கூறப்ப்பட்டுள்ளன.  நமது சாஸ்திரங்கள் கூறும் முறைப்படி பரமாத்மாவிலிருந்து பிரிந்து வந்த ஜீவாத்மாக்கள் அனைவரும், ஏதாவது ஒரு காலத்தில் அந்தப் பரமாத்மாவோடு இணைந்து தான் ஆக வேண்டும். அது ஒரு பிறவியிலும் நிகழலாம். அல்லது அதற்கு ஓராயிரம் பிறவிகள் எடுக்க வேண்டியும் வரலாம். அது அந்த ஆன்மாவின் பரிபக்குவத்தைப் பொறுத்தே நிகழ்கிறது என குறிப்பிடுகின்றன.

ஒரே நாளில் பணக்காரனாக! வீடு, கம்பேனியை ஒரே நாளில் முன்னேற்ற!

கேட்டுக்கோங்க மக்களே! வீடு, கம்பனி இதையெல்லாம் ஒரே நாளில் முன்னேற்றுவது என்பது சாதாரண விசயமில்லை – ஆனால் கீழ்காணும் அறிவுரைகளை பின்பற்றினால் உடனே ஒரே நாளில் முன்னேறிவிடலாம்.

  • முதலில் கடிகாரத்தை 10 நிமிடம் அதிகப்படுத்தி வைக்கவும். இதனால் நம் கம்பேனி மற்ற கம்பனிகளைவிட பத்து நிமிடம் முன்னாடி போய்க்கொண்டிருக்கும்! (எப்பிடி உடனே முன்னேற்றி விட்டோமா??)


    • கிழக்கு பார்த்து இருக்கும் கதவை இடித்துவிட்டு, தெற்கு பார்த்த மாதிரி வைக்கவும் (எப்பிடி பூகோள ரீதியா முன்னேறிடுச்சா?)


      • எல்லோரையும் டை கட்டிவிட்டு வேலைக்கு வரச்சொல்லவும்! (ஏன்னா டை கட்டுறவன் எல்லாம் நன்றாக வேலை செய்வான்!)



      • அலுவலக கண்ணாடிகளை ஸ்டிக்கர் கொண்டு மறைத்திடவும்! (அப்பறம் எதுக்கு கண்ணாடின்னு கேட்கப்பிடாது). இப்ப உங்களை யாராவது பார்க்க வேண்டுமென்றால் கண்ணாடிக்கு மிக அருகில் வந்துதானே பார்க்க முடியும்! அப்படின்னா நீங்க அவங்களை விட்டு தூரமா முன்னேறிட்டிங்கன்னு அர்த்தம்!


        • வடகிழக்கு மூலையில் இருக்கும் கழிவறையை இடித்துவிட்டு தென்மேற்கு மூலையில் வைக்கவும் (வெளிய போறதுதானே எந்தப்பக்கம் போனாத்தான் என்ன? என்றெல்லாம் பேசக்கூடாது!)


          • வீட்டின் உட்பகுதியில் உயரத்தை கூட்டவும். உயரமா வாழ்ந்தாத்தான் சீக்கிரமா உயர முடியும்!


            • அமரும் அலுவலக டேபிளை யாருக்கும் தெரியாதவாறு, உங்களை மறைத்தவாறு மாற்றிவிடவும்! (உங்கள் வளர்ச்சி யாருக்கும் தெரியாது, தடுக்க முடியாதில்லையா?)


              • இதையெல்லாம் நகைச்சுவை என்று கருதுபவர்களுக்கு! நூற்றில் என்பது சதவிகிதம் வீடு, கம்பெனிகள் இதில் குறைந்தபட்சம் ஏதாவது இரண்டையாவது கடைபிடிக்கிறார்கள்!



              இப்ப உங்களுக்கும் முன்னேற ஆசை வந்திடுச்சா? பயன்படுத்திக்கொள்ளுங்கள்!

              Wednesday, July 25, 2012

              ஆன்மிக சிந்தனைகள் »சின்மயானந்தர்


              உயர்ந்த குறிக்கோள் வேண்டும்
              டிசம்பர் 13,2007,
              18:05  IST
              வாழ்க்கையில் நமக்கு முன்வினைப் பயனாகக் கிடைப்பது பிராப்தம், அதையே விதி என்கிறோம். நாம் மேற்கொள்ளும் நல்ல வாழ்க்கையும், செய்யும் நல்வினைகளும், மரத்துண்டுக்கு விசைப்படகு உதவுவதைப் போல நமக்கு உதவுகின்றன. நன்மை தரக்கூடிய வழியில் அழைத்துச் செல்கின்றன. இதை 'புருஷார்த்தம்' என்கிறோம்.
              வாழ்க்கையில் நாம் என்ன சாதிக்கப் போகிறோம் என்பதை மாற்ற முடியாது. அதுவே பிராப்தம். வாழ்க்கையை நாம் எப்படிச் சந்திக்கப் போகிறோம் என்பது நம் கையில் இருக்கிறது. அதுவே புருஷார்த்தம்.
              எந்த விஷயத்தையும் நாம் மனப்பூர்வமாக புரிந்து கொள்வதற்கு, பார்ப்பதும், கேட்பதும் மிகவும் முக்கியமானது. தானே படித்து அறிவு பெறுபவர்கள் மிகச் சொற்பமே. அதனால்தான் பள்ளிக்கூடங்களில் பாடங்களை உரையாற்றுகிறார்கள். எழுதிக் காட்டி, படம் போட்டு பார்க்கச் சொல்கிறார்கள்.
              நமது மனம் உயர்ந்த ஒரு குறிக்கோளை வைத்துக் கொண்டு அதில் ஈடுபட வேண்டும். அப்படிப்பட்ட ஒரு குறிக்கோள் இறைவனிடம் பக்தி செலுத்துவது, அதற்குரிய பூஜை, தியானம், பஜனை இவற்றில் ஈடுபடுவது.
              உள்ளம் ஒரு நிறைவைக் காண விரும்பும் போது, உடலின் துன்பத்தை நாம் பொருட்படுத்துவதில்லை. இதுவே வாழ்க்கையில் உயர்வுபெற நாம் கடைபிடிக்க வேண்டிய தத்துவம்.
              வாழ்க்கை என்பது ஓர் அனுபவம். அதன் முடிவில் ஏற்படுவதுதான் மரணம், ஆனால், மரணத்துடன் எதுவும் முடிவதில்லை. இதைத் தெரிந்து கொண்டுவிட்டால் அப்புறம் நமக்கு எந்தப் பயமும் இல்லை.
              வாழ்க்கையை ஒரு விளையாட்டாகவே கருதுங்கள். ஒவ்வொன்றுடனும் விளையாடுங்கள். எல்லாமே தற்காலிகமானதுதான் என்று தெரிந்து கொண்டு, அந்த உணர்ச்சியுடனேயே அனுபவித்து விளையாடுங்கள்.

              Tuesday, July 24, 2012


              ஆசை தீரும் காலம் எப்பொழுது
              ஏப்ரல் 15,2012,
              09:04  IST
              * வசதியாக இருப்பவர்களுக்கு கூட, மற்றவர்களை விட அதிகமாக சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. இந்த மனப்பான்மையால் போட்டி பொறாமை உருவாகிறது.
              * உலகில் போட்டி மனப்பான்மை இருக்கும் வரையில் மனநிறைவோ, நிம்மதியோ உண்டாகாது. பணஆசை பெருகப் பெருக மக்களிடம் போட்டி உணர்வு அதிகமாகிக் கொண்டே போகும்.
              * சின்ன வயதில் ஞானம், ஆன்மிகம் எல்லாம் எதற்கு என்று அலட்டிக் கொள்கிறார்கள். துன்பத்தை எல்லாம் விலைக்கு வாங்கி சிரமப்பட்டாலும் பரவாயில்லை என்று பணத்தைத் தேடி அலைகிறார்கள்.
              * எல்லாருக்கும் எல்லா வசதியும் சமமாகக் கிடைத்தாலும் மனம் அடங்குவதில்லை. அப்போதும், முதலில் அது தனக்குத் தான் கிடைக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறது. 
              * மன இருளை விரட்டும் பிரகாசத்தை பெறும் முயற்சியை ஒருபோதும் தளர விடக்கூடாது. கிழக்கில் தோன்றும் சூரியன் காணாமல் போனால் கூட பாதகமில்லை. நமக்குள் ஒளிதரும் ஞானத்தை ஒருபோதும் விட்டு விடக் கூடாது. 
              காஞ்சிப்பெரியவர்

              Monday, July 23, 2012

              கொன்றைவேந்தன்-2008

              ----------------

              ------------------------------------
              அவசரச்செலவுக்கு அன்னையைக் கேளு
              ஆலய வாசலில் தாவணி பாரு
              இங்கிலீஷிலே எப்பவும் பேசு
              ஈ.ஸி.ஆர்.ரோட்டில் ஓட்டிப்பழகு
              உள்ள பணத்தை ஜொள்விட்டு அழி
              ஊரில் உள்ள தியேட்டர்கள் அறி
              எல்லாப்படத்தையும் முதல் நாள் பாரு
              ஏ.டி.எம்.கார்டை எப்போதும் வை
              ஐ லவ் யூவென சொல்லிப் பழகு
              ஒவ்வொருநாளும் சட்டை மாற்று!
              ஓஹோவென்று ஃபிகரைப் புகழ்
              ஔவையாருக்கும் பேத்தி இருப்பாள்
              அஃக்கன்னாவில் ஒண்ணுமேயில்லை
              கற்பு எனப்படுவது குஷ்பூவின் கருத்து
              காசில்லார்க்குக் காதலி இல்லை
              கிண்டல் செய்வது மாணவர்க்கழகு
              கீழ்ப்பாக்கத்திலும் அறிஞர்கள் உண்டு
              குறும்பாய் தினசரி குறுஞ்செய்தி அனுப்பு
              கூட்டம் இருக்கிற பேருந்தில் ஏறு
              கெஞ்சிக்குழைவது ஜொள்ளர் கடமை
              கேவலப்படுத்துதல் கேர்ள்-ஃபிரண்ட் இயல்பு
              கைபேசி மாடலை அடிக்கடி மாற்று
              கொஞ்சம் கொஞ்சம் தமிழிலும் பேசு
              கோபம் வந்தால் வீட்டிலே காட்டு
              கௌபாய் போல ஊரை சுற்று
              சத்யம் தியேட்டர் சாலவும் நன்று
              சாகிறவரைக்கும் மொக்கை போடு
              சிகரெட் பிடித்தால் மறைந்து ஊது
              சீறும் பல்சரை தினசரி ஓட்டு
              சும்மாயிருந்தால் கவிதை எழுது
              சூடும் சொரணையும் காதலர்க்கில்லை
              செல்போன் ரிங்டோன் அடிக்கடி மாற்று
              சேரும் நண்பர்கள் ஜேப்பைக் கவனி
              சைட்டடிப்பதற்கு கூலிங்-கிளாஸ் போடு
              சொட்டைத்தலையில் தொப்பியை அணி
              சோதாநண்பர்கள் உடன்வரும் சனி
              தந்தைபர்ஸ் மிக்க ஏ.டி.எம்.இல்லை
              தாய் ரிமோட் எடுத்தால் நெடுந்தொடர் தொல்லை
              திரைப்படப்பாட்டைத் தினசரி ஓது
              தீனியைக் குறைத்தால் தொப்பை வராது
              துட்டுள்ளவரை தான் உடன்வரும் நட்பு
              தூக்கம் வரும்வரை எஃப்.எம்.கேளு
              தெளிவுடையோரைத் தூர விலக்கு
              தேடிப்போனால் பாட்டியும் முறைப்பாள்
              தைத்ததை விடவும் ரெடிமேட் நன்று
              தொலைந்த செல்போன் திரும்ப வராது
              தோழனுடன்போய் ஜொள்ளுதல் தீது
              நமீதா நாமம் நயம்பட உரை
              நான்கில் ஒரு ஃபிகர் நிச்சயம் தேறும்
              நித்தம் செல்லை டாப்-அப் பண்ணு
              நீள எஸ்.எம்.எஸ். அனுப்புதல் தவிர்
              நுரைவரும் பீரை வெயிலில் பருகு
              நூல்விடாமல் ஃபிகர் கிடைக்காது
              நெட்டை ஃபிகரும் ஒட்டடைக்கு உதவும்
              நேரம் கிடைத்தால் பாடமும் படி
              நையப்புடைப்பது அப்பா கடமை
              நொண்டிச்சாக்கு தினசரி புகல்
              நோட்டில்லேன்னா கேட்டுக்கு வெளியே!
              படங்கள் தனியாய்ப் பார்ப்பது பாவம்
              பாஸும் ஃபெயிலும் படிப்பதைப் பொறுத்து
              பில்லியன் சீட்டிற்கு ஃபிகரே பெருமை
              பீஸைத் தின்றால் ஹால்-டிக்கெட் இல்லை
              புத்தகம் இருப்பது ஃபோட்டோ வைக்க
              பூசை என்பது தண்ணியடித்தல்
              பெண்கள் காலேஜ் புண்ணியதீர்த்தம்
              பேசிக்கொல்வது பெண்டிர் இயல்பு
              பையனைப் போலே பல்லைக்காட்டாதே
              பொதுவிடம் என்றால் முதுகில் கவனம் வை
              போன செமஸ்டர் திரும்ப வராது
              மன்மதக்குஞ்சு நீயென்றுணர்
              மாமிகள் நட்பு ஆபத்துக்குதவும்
              மிஞ்சும் பெண்ணிடம் கெஞ்சுதல் நன்று
              மீட்டர் இல்லா ஆட்டோ காதல்
              முற்பகல் காட்சியை முதல்நாள் பாரு
              மூன்றாண்டில் டிகிரி முடிப்பவன் மேதை
              மென்ட்டல் என்பவன் தினசரி படிப்பவன்
              மேட்னி போகக் கூட்டணி சேரு
              மையிடும் பெண்கள் பழையபஞ்சங்கம்
              மொறைக்கிற பெண்ணைத் துரத்துதல் தவிர்
              மோட்சம் அளிப்பது ஃபிகரின் புன்னகை
              வண்டியிருப்பது ஊர் சுற்ற உதவும்
              வாட்டமளிப்பது கோடை விடுமுறை
              விடாமல் தொடரும் வித்தையில் தேறு!
              வீட்டுக்குப் போனால் விழுந்திடும் உதை
              உடான்ஸ் விடுகையில் கவனம் தேவை
              ஊக்கம் தருவது ஓரக்கண் பார்வை
              வெட்டிப்பொழுதில் வெளியே திரி
              வேஸ்ட் எனப்படுவது ஃபிகர்களில் இல்லை
              வைதிடும் பெண்ணைக் கைதொழுதிடு
              ஒரு ஃபிகர் இருக்க மறு ஃபிகர் தவிர்
              ட்டைவாய்நண்பனை ஒதுக்கிடல் நன்று