Monday, June 25, 2012


 பெயர்ச்சி  – தோல்வி நீக்கி வெற்றி பெற 

jothida parigaram jathaga parigarangaljothida parigaram jathaga parigarangal
பரிகாரங்கள் :
தற்போது, சமீபத்தில், குருப் பெயர்ச்சிப் பலன்களை  வெளியிட்டிருந்தோம். சில ராசிகளுக்கு நறபலன்களும் சில ராசிகளுக்கு அனுகூலமற்றதுமான பலன்கலைப் பார்த்திருந்திருப்பீர்கள். ஒவ்வொரு ராசிக்கும் உரிய பரிகாரங்களையும் ஆங்காங்கே சொல்லியிருந்தோம். இப்போது வாசகர்கள் இன்னும் அதிகமாக பயனடையும் வண்ணம் அனைத்து விதமான பிரச்சினகளையும் தீர்க்கும் விதமாக , பிரச்சினைவாரியாக பரிகாரங்களைக் கூறியுள்ளோம். அவரவர் பிரச்சினையை, உரிய பரிகாரங்களைச் செய்து தீர்த்துக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்.அனைவரையும் கவலையின்றி மனநிம்மதியைப் பெருக்கிக் கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்.
தோல்வியை விரட்டி வெற்றியைக் குவிக்க !:
சிலர் எதில் இறங்கினாலும் தோல்வியே வரும். தொட்டது துலங்காது. தேர்வில் தோல்வி, மேலும், வேலை வாய்ப்புகளும் அமையாது. திரைப்படம் எடுத்தாலும் தோல்வி. கோடிக்கணக்கான பணமும் பாழாகும். அரசியல்வாதிகளுக்கு அடுத்தடுத்த தேர்தல்களில் நின்றாலும் தோல்வி என்று துவண்டு போயிருப்பார்கள். இதற்கெல்லாம காரணம் அவர்களின் ஜாதக அமைப்பே!.
எப்படிப்பட்ட ஜாதக அமைப்பையும் மாற்றிவிடக்கூடிய சக்தி இந்த பரிகாரத்துக்கு உண்டு. ஈஸ்வரி பட்டம் உள்ள அம்மன் தெய்வங்கள் கஷ்டப்படுகிறவர்களுக்கெல்லாம் இரக்க உணர்வோடு வெற்றியைத் தரும் சிறப்பு வாய்ந்த சக்தி பெற்றவை. குறிப்பாக அங்காள பரமேஸ்வரி அனைவருக்கும் வெற்றிக்குத் துணை நிற்கும் தெய்வம். தொடர்ந்து 27 வெள்ளிக்கிழமை அங்காள பரமேஸ்வரி ஆலயத்துக்கு சென்று காலை 9.00 மணி முதல் 10.00 மணிக்குள் அதாவது சனி ஹோரையில் , 18 எலுமிச்சம்பழங்களால் ஆன மாலையிட்டு, 9 எலுமிச்சம்பழங்களை இரண்டாக வெட்டி மஞ்சள் குங்குமம் இட்டு, 18 தீபமிட்டு வழிபட்டு வந்தால், தோல்வியைத் தரும் தோஷம் விலகி ஓடும். வெற்றி மேல் வெற்றி கிட்டும். நினைத்த காரியம் கைகூடும். தீபமேற்றி ‘ அங்காள பரமேஸ்வரி தாயே! எனக்கு வெற்றியை நீ மட்டுமே தர முடியும். என் வாழ்வில் ஒளியேற்று!’ என மனமுருகி வேண்டினால், தோல்வி தோஷம் அடியோடு நீங்கி , வெற்றி மேல் வெற்றிகள் குவியும்.
மேற்கூறப்பட்ட பரிகாரத்தைச் செய்து அனைவரும் இன்புற்றிருக்க வேண்டுகிறோம்!

Friday, June 22, 2012


கோயில்களில் தரிசனம் செய்யும் போது செய்யக்கூடாதவை எவை தெரியுமா?
ஜூன் 21,2012
  
அ-
+
Stay connected to temple.dinamalar.com
புண்ணிய தீர்த்தங்களில் வந்தவுடன் காலை வைக்கக்கூடாது. முதலில் ஜலத்தை தலையில் தெளித்துக் கொண்டு கால் அலம்ப வேண்டும். குளத்தில் கல்லைப் போடக்கூடாது. பூஜை வேளையில் தீபத்தை ஆடவர்கள் அணைக்கக் கூடாது. பூசணிக்காயை பெண்கள் உடைக்கக் கூடாது. கோயிலை வேகமாக வலம் வருதல் கூடாது. எவருடனும் வீண் வார்த்தைகள் கோயிலில் வைத்து பேசக்கூடாது. தாம்பூலம் தரித்துக் கொண்டு கோயிலுக்குள் செல்லக்கூடாது. மூர்த்தகளைத் தொடுதலோ, மூர்த்திகளின் திருவடிக்கருகில் கற்பூரம் ஏற்றுதல் கூடாது. சுவாமிக்கு நிவேதனம் ஆகும் போது பார்த்தல் கூடாது. வஸ்திரத்தை போர்த்திக் கொண்டு ஜபம், பிரதக்ஷிணம், நமஸ்காரம், பூஜை, ஹோமம் செய்யக்கூடாது. பசுவிற்கும், அந்தணருக்கும் நடுவிலும், அந்தணர் அக்னியின் நடுவிலும், தம்பதிகளின் நடுவிலும், தேவதைகள் பலிபீடத்திற்கு நடுவிலும், குரு சிஷ்யரின் நடுவிலும், லிங்கத்திற்கும் நந்திக்கும் நடுவிலும் செல்லக்கூடாது. இரவில் துணி துவைக்கக் கூடாது. குப்பையை வெளியே கொட்டக் கூடாது. மரத்தில் நிழலில் தங்கக் கூடாது. ரகசியமான விஷயத்தைப் பேசக் கூடாது. அன்னம், உப்பு, நெய் இவைகளை கையால் பரிமாறக் கூடாது. ஒரே சமயத்தில் தனது இரு கைகளாலும் தன்னுடைய தலையை சொறியக்கூடாது. ஆயுள், பொருள், வீட்டுத் தகராறு, மந்திரம், உடலுறவு, மருந்து, வருமானம், தானம், அவமானம் இந்த ஒன்பதும் பிறருக்குத் தெரியக்கூடாது. சந்தியா கால வேளையில் சாப்பாடு, தூக்கம், உடலுறவு, அத்யயனம் இவைகள் செய்தல் கூடாது. தீபாவளி தவிர மற்ற நாட்களில் அதிகாலைப் பொழுதில் எண்ணெய் தேய்த்துக் கொள்ளக்கூடாது. இடது கையினால் தண்ணீர் அருந்தக்கூடாது.

Tuesday, June 19, 2012


மிளகு, பூண்டுடன் மீன் குழம்பு--சமையல் குறிப்புகள்


 
  • மீன் (சங்கரா, வெள்ளைக் களங்கா, பாறை, வஞ்சிரம், வவ்வால், வரால்) - 1/4 கிலோ.
  • அரைக்க:
  • மிளகு - 1 தேக்கரண்டி.
  • பூண்டு - 8 பல்.
  • மிளகாய்த் தூள் - 1.5 தேக்கரண்டி.
  • தனியாத் தூள் - 2 தேக்கரண்டி.
  • சின்ன வெங்காயம் - 10
  • தக்காளி - 1 பெரியது.
  • தாளிக்க:
  • வெங்காயம் பொடியாக நறுக்கியது - 1.
  • வெந்தயம் - 1/2 தேக்கரண்டி.
  • கடுகு - 1/2 தேக்கரண்டி.
  • சீரகம் 1/4 தேக்கரண்டி.
  • கறிவேப்பிலை - சிறிதளவு.
  • எண்ணெய் - தேவையான அளவு.
  • மற்றவை:
  • புளி -1 எலுமிச்சை அளவு
  • மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி.
  • உப்பு - தேவையானது

  • புளியை தண்ணீர் விட்டு கரைசல் செய்து, அதனுடன் அரைத்த மசாலா, உப்பு, மஞ்சள் தூள் ஆகியவற்றைக் கலந்து, சுவை பார்த்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  • கடாயில் எண்ணெய் சூடானதும் தாளிப்புப் பொருட்களை சேர்த்து, தாளித்து, கலந்த மசாலாவை ஊற்றி, தேவையான தண்ணீர் கலந்து, பச்சை மசாலா வாசம் நீங்கும் வரை கொதிக்க வைத்து, அதன் பின் மீன் துண்டுகளை சேர்த்து, மூடி போட்டு 5 நிமிடம் மிதமான தீயில் சமைத்தால் எண்ணெய் மேலெழும்பி கவர்ச்சியும், சுவையும் மிக்க மீன் குழம்பு தயாராகி விடும்.

விவசாயிகள் தேவைதானா?

First Published : 15 Jun 2012 02:53:52 AM IST

ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் பல சாதனைகளில் விவசாயத்துக்கு விவசாயிகள் வேண்டாம் என்ற கொள்கையும் ஒன்று. நிலத்தைவிட்டு விவசாயிகள் வெளியேறும் போக்கு துரித கதியில் நிகழ்ந்து வருகிறது.
 இந்தியாவில் தனித்தன்மை வாய்ந்த ஒருவர் விவசாயத் துறைக்கு அமைச்சராக உள்ளார். அவருக்கு விவசாயம் பகுதி நேர வேலை. ஐ.பி.எல்., கிரிக்கெட் இவற்றையெல்லாம் கவனித்ததுபோக நேரமிருந்தால் அறிக்கை விடுவார். வர்த்தகத்துறை அமைச்சருடன் மோதுவதுண்டு.
 இந்தியாவில் விதர்பா பகுதி விவசாயிகள்தாம் அதிகம் தற்கொலை செய்து கொள்வதாக ஒரு தகவல் உண்டு. நமது மைய விவசாய அமைச்சரும் விதர்பா பகுதியைச் சேர்ந்தவர் என்பதால் விவசாயிகள் வேண்டாம் என்ற கருத்தில் பிரதமருடன் ஒத்துப் போவது இயல்புதான்.
 ""பலகுடை நீழலும் தம்குடைக்கீழ்க் காண்பர் அலகுஉடை நீழ லவர்'' என்று எழுதிய வள்ளுவர், ""அன்னத்தை வழங்கி மற்றவர்களின் பசியை ஆற்றும் தருமம் மற்ற எல்லா தருமங்களைவிட உயர்ந்தது'' என்று குறளோவியம் படைத்துள்ளார்.
 பாகவதத்தில் பகவான் கிருஷ்ணன் நாரதரிடம், விவசாயியை ""அன்னதாதா'' என்று போற்றி உலகுக்கு உணவு வழங்கி மக்களின் பசியாற்றும் விவசாயியை நான் வணங்கி வழிபடுகிறேன்...'' என்று கூறியுள்ளார்.
 அப்படிப் போற்றத்தக்க விவசாயிகள் விதர்பாவில் தற்கொலை செய்துகொண்ட விவரத்தை அண்மையில் ஊடகங்கள் படம்பிடித்துக் காட்டியதை பகவான் கிருஷ்ணரும் பார்க்கவில்லை. திருவள்ளுவரும் பார்க்கவில்லை. நாம் பார்த்து நொந்து பயன் என்ன?
 ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் மூன்றாண்டு நிறைவு விழா கொண்டாடப்படும் வேளையில் எதை நாம் பாராட்டுவது என்று புரியவில்லை. விவசாயிகளை விரட்டும் பணியைப் பாராட்டுவதா?
 பழங்குடி மக்களின் உரிமைகளை நசுக்கி அவர்களை நக்சலைட்டுகளாக மாற்றிய பணியைப் பாராட்டுவதா? நாளுக்கு நாள் நாணயமிழந்து வீழ்ந்துவிட்ட ரூபாய் மதிப்புக்காகப் பாராட்டுவதா? சில்லறை விலைக்கு குறியீட்டெண் மளமளவென்று ஏறி 10.4 சதவிகிதம் தொட்டுள்ளதைப் பாராட்டுவதா?
 ஊழலை ஒழிக்கத் தயார் செய்த கொள்ளை அறிக்கைபோல் ஒரு வெள்ளை அறிக்கை வெற்றுக் காகிதத்திற்காகப் பாராட்டுவதா?
 இன்றுள்ள எரிசக்தி நெருக்கடிக்கு வழிகாணும் கருவியாக உள்ள கரும்பு எத்தனால் உற்பத்திக்கு முயலாமல் சாராய ஆறுகளை ஓடச் செய்யும் சாதனையைப் பாராட்டுவதா? எதுவுமே புரியவில்லை.
 விவசாயிகளை விரட்டுவதில் அல்லது வெளியேற்றுவதில் ஆர்வமாயுள்ள இந்திய ஆளும் வர்க்கம் இன்றைய ஐரோப்பாவைக் கவனிப்பது நல்லது. ஐரோப்பாவை எடுத்துக்கொண்டால் ஸ்பெயின், பிரான்ஸ் நாடுகளில் விவசாய நிலப்பரப்பு அதிகம்.
 அதன்பின்னர் ஜெர்மனி, இங்கிலாந்து, இத்தாலி தவிர நெதர்லாந்தில் மட்டுமே குறைவான விளைநிலம் உள்ளது.
 ஐரோப்பிய விவசாயிகள் சூழலுக்கேற்றபடி வளம்குன்றா வேளாண்மையைக் கடைப்பிடிக்கவும், விளைபொருள்களுக்கு லாபகரமான விலைகளைப் பெறவும் மானியங்களை வழங்கி ஏற்றுமதி செய்வோரும் ஊக்குவிக்கப்படுகின்றனர்.
 ஏற்றுமதிப் பொருள்களுக்குச் சிறப்பு மானியமும் உண்டு. டென்மார்க், நெதர்லாந்து நாடுகளில் பால்வளமும் கால்நடை வளர்ப்பும் அதிகம். பால், வெண்ணெய், பாலாடைக்கட்டி ஏற்றுமதி உண்டு.
 ஐரோப்பிய நாடுகளில் பிரான்ஸ், அயர்லாந்து, டென்மார்க், கிரீஸ், ஸ்பெயின், நெதர்லாந்து ஆகியவை வேளாண் ஏற்றுமதி மூலம் கணிசமாக லாபம் பெற்று வருகின்றன.
 ஒட்டுமொத்த ஐரோப்பாவில் 1.4 கோடி விவசாயப் பண்ணைகள் உள்ளன. இவற்றில் 1 கோடிப் பண்ணைகள் சிறியவை. அதாவது 1 ஹெக்டேர் அல்லது அதற்கும் குறைவானது.
 மொத்த வேளாண்மை உற்பத்தியில் சிறிய பண்ணைகளின் பங்கு 10 சதவிகிதம்.
 கடந்த பத்து ஆண்டுகளில் ஐரோப்பிய நாடுகளில் விவசாயிகளுக்கு அளித்து வரும் சலுகைகள் அளவிடற்கரியது.
 ஐரோப்பிய யூனியன் அல்லது யூரோ நாடுகள் இப்போது ஒரு புதிய விவசாய ஒப்பந்தம் செய்யத் திட்டமிட்டுள்ளன. இதன் பெயர் ஐரோப்பிய விவசாயப் பொது உடன்பாட்டுக் கொள்கை. கி.பி. 2014 இல் தொடங்க உள்ளது.
 சென்ற ஆண்டு ஐரோப்பியப் பொது உடன்பாட்டின் செலவினம் 60 பில்லியன் யூரோ. இது யூரோ நாடுகளின் மொத்தச் செலவினங்களில் அதாவது யூரோ பட்ஜெட் செலவுகளில் 50 சதவிகிதமாகும்.
 இந்தப் பொது உடன்பாட்டின்படி 2014 - 20 களில் 400 பில்லியன் யூரோவாக சுமார் 7 மடங்கு விவசாயச் செலவினங்களை உயர்த்தத் திட்டமிட்டுள்ளன.
 இந்தியா போன்ற வளரும் நாடுகளில் விவசாயச் செலவினங்களைக் குறைக்கும் போக்கு தென்படுகிறது. ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் விவசாயிகளின் உற்பத்திச் செலவு முழுவதுமே மானியமாக வழங்கப்படுகிறது. விவசாயிகள் அவர்கள் செய்யும் உற்பத்தியை நல்ல விலைக்கு விற்று லாபமும் பெற்று மீண்டும் விவசாயத்தில் ஆர்வம் காட்டும் வழியில் விவசாயக் கொள்கைகள் வகுக்கப்பட்டுள்ளன.
 அண்மையில் டோஹாவில் ஒன்றுகூடிய உலக வர்த்தக நிறுவன மாநாட்டில் வளர்ச்சியுற்ற நாடுகளில் விவசாய மானியத்தைக் குறைக்கும்படி வற்புறுத்தப்பட்டபோது, அமெரிக்க - ஐரோப்பியப் பிரதிநிதிகள் ""நாங்கள் விவசாயிகளுக்கு வழங்கும் மானியங்கள் குறைவுதான்.
 இன்னமும் கூடுதலாக்கத் திட்டமிட்டுள்ளோம். ஆகவே உலக வர்த்தக அமைப்பின் கோரிக்கையை ஏற்பதற்கில்லை'' என்று கூறி அந்த மசோதா தோற்கடிக்கப்பட்டது.
 அமெரிக்காவுக்கும் ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கும் விவசாயம் தேவை. ""எங்களுக்கு விவசாயம் வேண்டும்'' என்று கோஷம் போடும்போது, இந்தியா மட்டும் ""எங்களுக்கு விவசாயிகள் தேவையில்லை'' என்று சொல்லாமல் சொல்லி விவசாயிகளின் தற்கொலைகளை ஊக்குவிப்பது ஏன்?
 தேச வளர்ச்சிக்கு விவசாயிகளின் பங்கே தேவையில்லை என்ற நிலைக்கு நாம் தள்ளப்பட்டு விட்டோமா?

Monday, June 18, 2012


    மின்சார கண்ணா...                                                                                      தமிழகம் மட்டுமல்லாமல், உலகின் பல பகுதிகள், மின்தட்டுப்பாட்டால் திணறிக்கொண்டிருக்கின்றன. மின்சாரத்தை உற்பத்தி செய்யும் சாதனங்கள், சோலார் இயந்திரங்கள் என பல ஆய்வுகள் தொடர்ந்து நடக்கின்றன. இருப்பினும், குறைந்த செலவில், மாசு இல்லாமல் மின்சாரத்தை உற்பத்தி செய்வது கடினமாகவே இருக்கிறது.

இந்நிலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த கே.ஆர்.ஸ்ரீதர் என்பவரின் கண்டுபிடிப்பு, உலக அளவில் நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. இந்த சாதனத்தின் பெயர் "புளூம் பாக்ஸ்'.

யார் இந்த ஸ்ரீதர்: 1960ல் தமிழகத்தில் பிறந்த இவர், திருச்சி "நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி'யில் மெக்கானிக்கல் இன்ஜினி யரிங் படித்தார். 1980களில் அமெரிக்காவிற்கு சென்ற இவர், அங்குள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில், "நியூக்ளியர் இன்ஜினியரிங்'கில் எம்.எஸ்.பட்டமும், மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கில் பிஎச்.டி.,யும் பெற்றார். பின், அரிசோனா பல்கலைக்கழக விண்வெளி ஆய்வ கத்தின் இயக்குன ராகவும், "ஏரோஸ்பேஸ் மற்றும் மெக்கானிக்கல் இன்ஜினியரிங்' துறையில் பேராசிரி யராகவும் பணிபுரிந்தார். செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ தேவை யான ஆக்சிஜன் உள்ளிட்ட வற்றை தயாரிக்க முடியுமா என்ற ஆய்வை பல்கலைக்கழக ஆய்வகத்தில் ஸ்ரீதர் தலைமையில் "நாசா' மேற்கொண்டது. இந்த ஆய்வு பாதியில் நிறுத்தப்பட்டது.

ரூட்டை திருப்பிய ஸ்ரீதர்: செவ்வாய் கிரகத்தில் ஆக்சிஜனை தயார் செய்ய முடியுமா என ஆராய்ந்த ஸ்ரீதர், அதே ஆக்சிஜனை உருவாக்கி, அதனுடன் ஹைட்ரஜனை இணைத்து மின்சாரம் தயாரிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டார். 2002ம் ஆண்டு "புளூம் எனர்ஜி' என்ற நிறுவனத்தை கலிபோர்னியாவில் துவக்கினார். பல ஆண்டு ஆராய்ச்சி முடிவில், 2010 ல் "புளூம் பாக்ஸை' உலகிற்கு அறிமுகப்படுத்தினார். இந்த ஆராய்ச்சியை கண்டு அமெரிக்கர்கள் வியப்படைந்தனர்.

புளூம் பாக்ஸ்:சுற்றுச்சூழல் மாசுபடாமல் மின்சாரம் தயாரிக்கும் கைய டக்க அளவுடைய "புளூம் பாக்ஸ்' உதவியுடன், சராசரியாக ஆசிய கண்டத்திலுள்ள நான்கு வீடுகளுக்கு அல்லது ஒரு அமெரிக்க வீட்டிற்கு தடையில்லா மின்சாரம் வழங்கலாம். குளிர்சாதனப்பெட்டி அளவுடைய "புளூம் பாக்ஸை' கொண்டு 100 வீடுகளை கொண்ட ஒரு அபார்ட் மென்ட்டிற்கு மின்சாரம் அளிக்கலாம். இதன் உட்புறத்தில் எரிபொருள் மின்கலம் ( ஊதஞுடூ ஞிஞுடூடூ ) உள்ளது. புரோட்டான் மற்றும் செராமிக் ஜவ்வுகள் பொருத்தப்பட்டுள்ளன. இவை உலோக வினையூக்கிகளால் பிரிக்கப்பட்டுள்ளன. இதற்குள் மீத்தேன், ஆக்சிஜனை செலுத்தும்போது 1000 டிகிரி வெப்பநிலை உருவாகி, மின்சாரம் உற்பத்தியாகிறது. பெரிய அளவிலான "புளூம் பாக்ஸ்'கள் 3 கோடி முதல் 4 கோடி ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. கூகுள், சான்பிரான் சிஸ்கோ விமானநிலையம், சி.ஐ.ஏ., உள்ளிட்ட பெரிய நிறுவனங்கள் இந்த "புளூம்பாக்ஸை' பயன்படுத்துகின்றன. இன்னும் சில ஆண்டுகளில் சாதாரண மக்கள் உபயோகப்படுத்தும் வகையில் குறைந்த விலை "புளூம்பாக்ஸ்'கள் தயார் செய்யப்படும் என ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.

Sunday, June 17, 2012


ஒரு ஆஸ்பத்திரியில் ஒரு அப்பாவி! – சோ

3 votes
பல வாசகர்கள் ‘சோவின் உடலுக்கு என்ன? குணமாகி விட்டதா? என்ன நடந்தது?’ என்றெல்லாம் விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள். ‘சோ’ ஆஸ்பத்திரியில் சுமார் 12 நாட்கள் இருந்து விட்டு, வந்தாகி விட்டது. தன்னுடைய அனுபவத்தை ‘சோ’ கூறுகிற கட்டுரை இது.


எம்.ஜி.ஆர். செத்துப் பிழைத்தவர். நான் உபதேச வெள்ளத்தில் மூழ்கி எழுந்தவன்.

ஆஸ்பத்திரியில் இருந்தாலும் இருந்தேன். ஓர் உபதேச மழையே என் மீது பொழிந்து விட்டது. எனக்கு உபதேசம் செய்யாதவர்களே யாரும் கிடையாது. எனக்கு வந்த நோய் ஒருபுறம் இருக்கட்டும். இந்த உபதேசப் பிரளயத்தைப் பார்ப்போம்.


என்னைப் பார்க்க வந்து சுமார் அரைமணி நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு, இறுதியில் ‘இதோ பார்! யார் கிட்டேயும் அநாவசியமா பேசிக்கிட்டிருக்க வேண்டாம். யார் வந்தாலும் அஞ்சு நிமிஷத்துலே திருப்பி அனுப்பிடு. பேசாம படுத்துக்கிட்டிரு. அவங்களா போயிடுவாங்க. இல்லேன்னா அவனவன் அரை மணி நேரம் உட்கார்ந்துடுவான். அதுக்கு இடம் கொடுக்காதே. அது உனக்கு நல்லதில்லை. என்ன! போயிட்டு வரட்டுமா?’ என்று சொல்லி போனவர்கள் பலர்.

‘என்ன! போய்ட்டு வரட்டுமா?’ என்று எழுந்து நின்று, ஏதோ ஒரு யோசனை வந்தவர்களாக, சற்று நின்று ‘பேஷண்டை சும்மா தொந்திரவு பண்ணக் கூடாது. அந்த இங்கிதம் நிறைய பேருக்குத் தெரியறதில்லே!’ என்று பிரகடனம் செய்து விட்டு, மீண்டும் உட்கார்ந்து விட்டவர்கள் சிலர். இவர்கள் இருந்த அரைமணி நேரத்தில் பலவித உபதேசங்கள்.

‘இதோ பாரு! இந்தக் காலத்திலே டாக்டர்களை எல்லாம் நம்ப முடியாது. எல்லோரும் பணம் பண்றவங்க. அதுக்காக இல்லாத வியாதிக்கெல்லாம் மருந்து கொடுத்துக்கிட்டு இருப்பாங்க. நீதான் ஜாக்கிரதையா இருக்கணும்’.

இவர் போய், அடுத்து வருகிறவரின் உபதேசம், ‘டாக்டர் சொல்றபடி அப்படியே கேள். நமக்குத்தான் தெரியும்னு நினைச்சுக்கிட்டு எதையும் செய்யாதே. கண்டவன் சொல்றதை நீ கேக்காதே. டாக்டர் சொல்றதை அப்படியே கேளு.’

இன்னொரு ரகத்தினரின் உபதேசம் இப்படி: ‘நம்ம உடம்பு பத்தி நமக்குத் தெரியாதது, டாக்டருக்குத் தெரியுமா? அவங்க தெரிஞ்ச மாதிரி பேசறாங்கன்றதுக்காக அதை அப்படியே ஒத்துக்கக் கூடாது. நீ இன்டர்நெட் போட்டுப் பாரு. அவங்க சொல்ற டேப்லட், கேப்ஸ்யூல்... இதுக்கெல்லாம் என்ன எஃபெக்டுன்னு பாரு. அதோட ஸைடு எஃபெக்ட் பாத்தியானா உனக்கே பயம் வந்துரும். இந்த மாத்திரைய சாப்பிடறதாலே நல்லதா, இல்லே பெரிய ஆபத்தா அப்படின்ற கேள்வி வரும். அதனாலே ஒரு டாக்டர் சொல்றதோடு விட்டுடாதே. அவர் சொல்றதை நீ செக் பண்ணு. செகண்ட் ஒபினியன் கேளு. சில சமயம் தேர்ட் ஒபினியன் கூட தேவைப்படும். என்னா? ஜாக்கிரதை. என்ன? நான் போய் என் டாக்டரைப் பாக்கணும். இரண்டு வேளையா ஒரே வயத்து வலி. என்னன்னே புரியலை. அவரு மருந்து கொடுத்தார்னா டக்னு குணமாகும். போய்ட்டு வரட்டுமா, போறேன்’.

உபதேச வகைகள் இத்துடன் முடியவில்லை. இது வேறு வகை: ‘இந்த டாக்டர்ஸெல்லாம் ஆன்டிபயாடிக் கொடுப்பான். அது பெரிய விஷம். உடம்பை உருக்கிடும். இந்தக் கிருமிகள் எல்லாம் இருக்கே.... ரொம்ப இன்டெலிஜன்ட். அது இந்த ஆன்டிபயாடிக்குக்குப் பழகிடும். அப்புறம் அதுக்கு ஒரு இன்னொரு ஆன்டிபயாடிக் கொடுப்பான். அந்தக் கிருமி எல்லாம் அதுக்கு பழகிடும். அப்புறம் வேறொரு ஆன்டிபயாடிக் கொடுப்பான். அப்புறம் அதுக்கும் பழகிடும். இப்படியே இது போய்க்கிட்டே இருக்கும். அதனாலே இந்த டாக்டர்ஸே வேண்டாம். நீ பேசாம ஆயுர்வேதிக் ட்ரீட்மென்ட் எடுத்துக்கோ. ஒரு ஆபத்தும் கிடையாது. என்ன...! ஸ்லோ ப்ராஸஸ்! அவ்வளவுதான். பட், அதைப் பத்தி பரவாயில்லை. ஆறு மாசம், ஒரு வருஷம் ட்ரை பண்ணு. நல்ல எஃபெக்ட் இருக்கும். சூரணம், லேகியம், பஸ்பம் எல்லாம் கொடுப்பான். அதைச் சாப்பிடு. நல்ல பத்தியம் இரு. உனக்கு நிச்சயம் குணமாகும். வீணா இந்த மாடர்ன் மெடிஸன் வேண்டவே வேண்டாம்’ என்று ஒருவர்.

அடுத்த விஸிட்டர் : ‘இதோ பாரு! எவனாவது சொல்றான்னு கேட்டு, ஆயுர்வேதிக், சித்தா மெடிஸன் இதுக்கெல்லாம் போயிடாதே. வீண் வம்பு! சும்மாவானா எதையாவது கொடுத்துட்டிருப்பாங்க. ஒண்ணும் எஃபெக்ட்டே இருக்காது. கேட்டா இதெல்லாம் ஸ்லோ ஆக்டிங். நாங்க நோயை குணப்படுத்துறது மாத்திரம் அல்ல. இந்த நோயோட மூலத்தையே குணப்படுத்துறோம்னு சொல்வான். என்ன மூலத்தை குணப்படுத்துறது? இவங்களாலே வெறும் மூலத்த கூட குணப்படுத்த முடியாது. அதனால நீ அந்தப் பக்கமே போகாதே. நீ மாடர்ன் மெடிஸன்ஸையே நம்பு. அதுக்கு கைமேல பலன். ஒரு மாத்திரை போட்டியானா தலைவலி நிக்கறது, இன்னொரு மாத்திரை போட்டியானா வயித்து வலி நிக்கறது. அந்த அளவு ரிசர்ச் பண்ணியிருக்காங்க. அதனாலே நீ மாடர்ன் மெடிஸனை நம்பு. ஆயுர்வேதிக் எல்லாம் போய் மாட்டிக்காதே.’

அடுத்த உபதேசகர் இயற்கையின் நண்பர் : ‘பாரு! நான் சொன்னா நீ ஏத்துக்குவியோ இல்லியோ எனக்குத் தெரியாது. இந்த மாதிரி கபம், ஜுரம், உடம்பு வலி, குளிர் இதுக்கெல்லாம் பெஸ்ட் மெடிஸன் என்ன தெரியுமா? முடக்காத்தான் கீரையை எடுத்து, அதை நல்லா கிள்ளி, கடக்காத்தான் கீரையை போட்டு, அதையும் கலந்து, ஊதுவளை பிழிஞ்சி, வௌக்கத்தான் கீரையை கலந்து, கானாடுகாத்தான் காயை எடுத்து, அதை நல்ல சூரணமா அரைச்சு, இதை கஷாயமாக்கணும். ‘அதுக்கப்புறம்தான் விஷயமே இருக்குது. அதை அப்படியே வெச்சிரு. ஊறட்டும். இன்னொரு டம்ளர்லே என்ன பண்றே – ஆட்டுப் பாலை எடுத்துக்கோ! ஆட்டுப் பால்ல நீ நல்லா கோமியத்தைக் கலந்துக்கோ. அதுலே களாக்கா, எருக்கம் பூ இல்லே – எருக்கம் இலை – எருக்கம் பூ விஷம். அதைப் போட்டுக்காதே – எருக்கம் இலையை போட்டுரு. முன்னே வெச்ச பாரு கஷாயம்! அதை இதுலே போடு. அப்படிப் பண்ணியானா...’ என்னாகும் என்று அவர் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. எனக்கே புரிந்துவிட்டது. அதோடு வியாதி தீர்ந்தது. நானும் தீர்ந்தேன் என்று நினைத்துக் கொண்டேன்.

அடுத்தவர், வருவார். ‘டேய்!’ சுற்றுமுற்றும் பார்த்தார். ரூமில் யாரும் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டார். என்ன இருந்தாலும் ரூமில் யாரும் இல்லை. அவர் பேசுவதை நாற்காலி, கட்டில், டேபிள் போன்றவை கேட்டுவிடக் கூடாது என்பதுபோல், குரலை தாழ்த்திக் கொண்டார். ‘எவனோ ஏவல் வெச்சுப்புட்டான். உனக்கு வேண்டாதவன் நிறையப் பேர் இருக்கான். அவன்ல ஒருத்தன் ஏவல் வெச்சுட்டான். நான் விசாரிச்சுட்டேன். உன் நட்சத்திரத்துக்கு ஏவல்தான். தீர்மானமா சொல்லிப்புட்டான். இதுக்கு நாம என்ன செய்யணும்னா, உளுந்தூர்பேட்டையிலே ஒரு சாமியார் இருக்கார். அவர் கிட்டே போனா, நெத்தியிலே ஒரு எலுமிச்சம் பழத்தை வெச்சு ஒரு அடி அடிப்பார். அதை நசுக்கி அந்தச் சாறை எடுத்து, அவர் குடிச்சுடுவார். நம்ம மேலே வெச்ச ஏவல் எல்லாம் அவர்கிட்டே போயிடும். அவர் தாங்கிப்பார். அப்பேர்ப்பட்ட சித்தர். நேத்து உளுந்தூர்பேட்டையிலே இருந்தார். இன்னைக்கு எங்கே இருக்கார்னு தெரியாது. அவரைக் கண்டுபிடிச்சிட்டோம்னா அவ்வளவுதான். சூன்யத்தை எடுத்துடுவாரு. நமக்கு ஜெயம்தான். ஆனா, அவரை கண்டுபிடிக்க முடியாது.’ அடுத்தவர் வருவார். இவர் ஒரு மாடர்ன் ஆசாமி. ‘நம்மூர் ஆஸ்பிடல்களே பிரயோஜனம் இல்லடா. நம்மூர் டாக்டர்ஸும் பிரயோஜனம் இல்லை. இதை நம்பி என்ன பண்றது? பெரிய மனுஷங்களுக்கு உடம்புக்கு வந்தா என்ன பண்றாங்க? சிங்கப்பூர் போறாங்க, அமெரிக்கா போறாங்க. ஏன்? அங்கெல்லாம் நல்லா க்யூர் கிடைக்குது. அதனாலே நீயும் செலவப் பாக்காம, சிங்கப்பூர், அமெரிக்கானு எங்காவது போய் ட்ரீட்மென்ட் எடுத்துக்கிட்டு வா. அதான் பெஸ்ட்’.

‘செலவைப் பாக்காம...’ என்று அவர் சுலபமாகச் சொல்லி விட்டார். யார் செலவு? அது என் செலவு. அடுத்தவர், ‘இந்த ஏஜ்ல இப்படித்தான்டா வரும். நீ என்ன சின்னப் பையனா? அப்படித்தான் வரும். அதெல்லாம் சமாளிச்சுக்க வேண்டியதுதான். என்ன பண்றது? அவ்வளவுதான். என் சித்தப்பா ஒருத்தர் இருந்தார். அவருக்கு கிட்டத்தட்ட உன் வயசுதான். ஏதோ ஜுரம்ன்னாரு. அதுக்கெல்லாம் மருந்தெல்லாம் வாங்கி கொடுத்தோம். ரெண்டே நாள்! போய்ட்டார். ஸோ, இதுக்கெல்லாம் கவலைப்படாதே! என்ன இப்போ? வெறும் ஜுரம்தானே! மருந்து கொடுத்தா சரியாப் போயிடும். ரெண்டே நாள்!’ அடுத்தவர் என்னைப் பார்த்து திடுக்கிட்டு விட்டார். ‘டேய் என்னடா இது! இப்படி இளைச்சுப் போயிட்டே? மூஞ்சி வாடிப் போயிடுச்சு! உடம்பே எலும்பும் தோலுமா இருக்கு! என்னடா இது! என்ன ஆச்சு உனக்கு? பாத்தாலே பயமா இருக்கேடா! டேய்! என்ன பண்ண போறே நீ? சரி, சரி! பாத்துக்க ஒண்ணும் ஆகாது. ஒண்ணும் கவலைப்படாதே! ஜாலியா இரு! நேத்து இருந்தவன், இன்னிக்கு இல்லை! அதுக்காக பார்த்தா முடியுமா? தைரியமா இரு! கவலை கூடாது.’

அடுத்தவர் ‘இதோ பாரு! நிறைய ஃப்ரூட்ஸ் சாப்பிடு. தேன்ல பலாப்பழத்தை தோய்ச்சு சாப்பிட்டா, ரொம்ப ஹெல்த்தியா இருக்கும். ப்ரோட்டின் சாப்பிடு. நிறைய ப்ரோட்டின். அப்பப்ப அரைமணிக்கொரு தடவை பால்ல கலந்து புரோட்டின் பவுடர் சாப்பிடு. அதோட விட்டுடாதே. இளநீர் நிறையச் சாப்பிடு. ஒருநாளைக்கு ஏழு தடவை இளநீர் சாப்பிடு. வாட்டர் முக்கியம். ஒருநாளைக்கு எட்டு லிட்டர் குடிக்கணும்னு சொல்றாங்க. அது முடியலைன்னா எய்ட் லிட்டர்ஸாவது குடி. சாப்பிடு. அப்புறம் இந்த பாதாம் பருப்பு, வால்நட், பிஸ்தா இந்த மாதிரி நட்ஸ் எல்லாம் சாப்பிடு. மருந்தை விட இதெல்லாம்தான் குணம் தரும். ஏன்னா உடம்புலே ஸ்ட்ரென்த் வரும்.’

இவர் சொல்வதைக் கேட்டால், காலையிலிருந்து இரவு வரை சாப்பிடுவதற்குத்தான் நேரமிருக்குமே தவிர, வேறெதற்கும் நேரம் இருக்காது என்று எனக்குத் தோன்றியது. அடுத்தவர் பரோபகாரி. ‘மிளகு ரசத்திலே சீரகத்தைப் போட்டு, வெந்தயத்தைப் பொடி பண்ணி கலந்து, இஞ்சி கரைச்சு விட்டு, பெருங்காயத்தைப் போட்டு, புதினா இலையை நல்லா கசக்கிப் பிழிஞ்சி, அதையும் கலந்து, எலுமிச்சம் பழத்தை ஊத்தி.... கலந்த ரசம் இந்தா இதைச் சாப்பிடு. இதை முந்தா நேத்துக்கு முன் நாளே என் வொய்ஃப் என்கிட்டே கொடுத்தா. மறந்து போய் எங்கேயோ வெச்சுட்டேன். அப்புறம்தான் தெரிஞ்சது. கண்டுபிடிச்சேன். அதான் இருக்கட்டுமேன்னு கொண்டு வந்தேன். சாப்பிடு. ஜம்முன்னு இருக்கும். போய்ட்டு வரட்டுமா? திரும்பி வரேன் நானு’

அடுத்தவர் ‘என்னடா, கலைஞர் எப்படிப் பேசியிருக்கார் பாத்தியா? என்ன அர்த்தத்திலே அவர் பேசறாருன்னு புரியலையே? சி.எம். செய்யுறதுல்லாம் சரின்னுதான் நினைக்கிறீயா? சென்ட்ரல்ல என்ன ஆகும்னு நினைக்கிறே? பிரணாப் முகர்ஜி பிரசிடென்ட்டா வருவாரா? இல்லே அவரை கேபினட்ல இருந்து விடக் கூடாதுன்னு தீர்மானம் பண்ணுவாங்களா? என்னமோ தெரியலே! இந்த சைனாக்காரன் வேறே கொஞ்சம் கொஞ்சமா உள்ளுக்குள்ளே வந்துக்கிட்டே இருக்கான். இந்தியன் கவர்ன்மென்டே கவனிக்க மாட்டேங்குது. பாகிஸ்தான்காரனை பாரு! இந்த விஸா எல்லாம் தளர்த்த வேண்டாம்னு சொல்லிட்டான். சரிடா டேய்! உனக்கு இப்ப பாலிடிக்ஸ் எல்லாம் வேணாம். பாலிடிக்ஸ் எல்லாம் அநாவசியமா எதுக்கு உனக்கு? ஏன்டா, உனக்கு பாலிடிக்ஸ்..? இப்ப அதான் கவலையா உனக்கு? அதை மறந்துட்டு கொஞ்சம் பேசாம இரேன். அதான் நல்லது! வரட்டுமா? நியூஸ் பாக்கணும். பிரணாப் முகர்ஜி ஸ்டேட்மென்ட் வரப் போகுதுன்னு ஒருத்தன் சொன்னான். போய்ட்டு வரட்டுமா? பாலிடிக்ஸ மறந்துடு. வேண்டாம் உனக்கு.’

இதுக்கெல்லாம் முத்தாய்ப்பு வைத்தாற்போல், ஒருவர் ஒன்று சொன்னார். ‘இதெல்லாம் எதனால நமக்கு வருதுன்னு நினைச்சே? நீ என்ன மருந்து சாப்பிட்டாலும் இதெல்லாம் சரியாப் போகாது. இதை அனுபவிச்சுட வேண்டியதுதான். போன ஜன்மத்து பாவம்! வேற வழி கிடையாது. அனுபவிச்சுத்தான்டா ஆகணும். அது, தானா சரியாப் போகிற வரைக்கும் நீ என்ன்னா மருந்து சாப்பிட்டாலும் சரியாப் போகாது. நாமெல்லாம் இந்த யுகத்துலே கொஞ்சநஞ்ச பாவமா பண்ணியிருக்கோம்? அத்தனையும் அனுபவிக்க வேண்டாமா? அதுலே கொஞ்சம் கழியறது இப்படி! அதை நினைச்சு சந்தோஷப்படு. பாவம் 100 பர்சன்ட் இருந்தா, இந்த ஜுரத்துலே ஒரு பர்சன்ட்டாவது போகாதா?’ இன்னும் கொஞ்சம் தாராளமாக, இந்தப் பாவத்தில் 50 பர்சென்ட் போகும் என்று அவர் சொல்லியிருந்தாலாவது நிம்மதியாக இருக்கும். அதுகூட இல்லை. ஒரு பர்சன்ட்தான் போகும் என்று சொல்லி விட்டுப் போனார்.

இப்படிப் பல உபதேசங்கள்.

நெஞ்சில் கபம் இருந்ததால், அதை எடுக்க ஃபிஸியோதெரபிஸ்ட்கள் என்னை மார்பில் அடித்தார்கள். ‘பட் பட் பட்’ என்று நல்ல அடி. ஆண்கள் செய்கிற வரையில் இது சரியாகப் போயிற்று. ஒரு பெண் வந்து நன்றாக அடித்தார். அவர் அடித்து முடித்த பிறகு, அவரிடம் ‘அம்மா உனக்கு ஒரு வேண்டுகோள்’ என்றேன்.
‘என்ன ஸார்?’ என்று அவர் கேட்டார்.
‘என்னை அடித்ததை வெளியே சொல்லி விடாதீர்கள். பொம்பளையிடம் அடிபட்டவன் என்ற பெயர் வரும். தயவு செய்து என்னைக் காப்பாற்றுங்கள்’ என்று கெஞ்சிக் கேட்டுக் கொண்டேன்.
அந்த அம்மையார் பெருந்தன்மையுடன் ‘நான் யாரிடமும் சொல்ல மாட்டேன்’ என்று சொல்லிவிட்டுப் போனார்.



அடுத்ததாக வந்த ஆள், ‘அந்த அம்மா வந்து உங்களை மார்லே பட் பட் பட்டுன்னு நல்லா அடிச்சுட்டாங்களாமே!’ என்று கேட்டார்.
‘யார் உங்களுக்குச் சொன்னது?’ என்றேன்.
‘அவங்கதான் சொன்னாங்க’ என்றார்.
சரி, ஒரு உபதேச வெள்ளத்தில் மூழ்கி எழுந்தேன். ஒருவழியாக உடல் குணமாகி, வீட்டிற்குச் செல்வதற்காக லிஃப்ட்டில் ஏறினேன்.
லிஃப்ட் பாய் ‘சார் வணக்கம்!’ என்றான்.
‘வணக்கம்’ என்றேன்.
‘உடம்பு நல்லாயிடுச்சா?’ என்றான்.
‘நல்லாயிடுச்சு’ என்றேன்.
‘போய்ட்டு வாங்க சார். எப்ப சார் திரும்பி வருவீங்க?’ என்றான்.
நல்ல ஆசி! என்று நினைத்து விடைபெற்றேன்.

இதற்கிடையில், என்னைக் கவனித்த டாக்டர்கள், டாக்டர் ராஜ்.பி.சிங்; டாக்டர் ராமசுப்ரமணியம்; டாக்டர் பிரபாகர் தியாகராஜன் தவிர - டாக்டர்கள் ரங்கபாஷ்யம், பாலசுப்ரமணியம், கணேஷ், ஸ்ரீதரன், விஜய் சங்கர் போன்றவர்கள் காட்டிய அக்கறையும், திறமையும் அசாத்தியமானது. ஏதோ தங்கள் வீட்டில் ஒருவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு விட்டதைப் போல், அவ்வளவு அக்கறை காட்டினார்கள். அவர்கள் மட்டுமல்ல, அப்பல்லோவின் அதிபர் டாக்டர். பிரதாப் சி.ரெட்டி மற்றும் அவருடைய மகள் ப்ரீதா ரெட்டி உட்பட – அங்கிருந்த லிஃப்ட் பாய் வரை, என்னிடம் காட்டிய பரிவும், அக்கறையும் என்றும் மறக்க முடியாதவை. டாக்டர்களின் திறமை, அவர்களுடைய அனுபவம் என்னை மீண்டும் இயங்க வைத்தது. இதற்கிடையில், அப்படி இப்படி சமாளித்து, ‘துக்ளக்’ இதழை வெளிக்கொண்டு வர ‘துக்ளக்’ காரியாலயத்தில் உள்ளவர்களும் மிகவும் உதவினார்கள். கட்டுரைகளை சரி பார்ப்பது, தலையங்கம் எழுதுவது போன்ற வற்றைச் செய்தாலும், கேள்வி-பதில் எழுத முடியவில்லை என்பதால், இரண்டு இதழ்களில் அதை நிறுத்தினேன். அதில் வாசகர்களுக்கு வருத்தம் உண்டு. எனக்கு வேறு வழியில்லாமல் போய்விட்டது. இதைத் தவிர, வாசகர்கள் எத்தனை பேர், எனக்காக வேண்டிக் கொண்டார்கள், எத்தனை பேர் கோவில்களில் அர்ச்சனை செய்தார்கள், பிரசாதங்களை அனுப்பினார்கள் என்ற கணக்கைப் பார்த்தால், அதற்கு முடிவே கிடையாது. அத்தனை பேர் அவ்வளவு அக்கறை காட்டியிருக்கிறார்கள். ஒரு வாசகருடைய தகப்பனார் வந்து, என்னுடைய கையை பிடித்துக் கொண்டு, அழுது தீர்த்துவிட்டார். ‘எனது உயிர் போகட்டும், நீங்கள் பிழைக்க வேண்டும்’ என்றார் அவர். அப்படி ஒன்றும் என் உயிருக்கு ஆபத்து நேரிட்டு விடவில்லை. ஆனால் அவருக்கு அவ்வளவு ஆதங்கம்! சில பெரிய மனிதர்கள், விவரஸ்தர்கள் வந்து அழுதார்கள்! என் நண்பன் ஒருவன் கதறித் தீர்த்து விட்டான். இத்தனைக்கும் எனக்கு வந்த நோய் உயிருக்கு ஆபத்து விளைவிக்கக் கூடியதே அல்ல.




முதல்வர் வந்து பார்த்தார். ஏற்கெனவே எனக்குக் கிடைத்த மரியாதை, பல மடங்கு கூடிவிட்டது. நான் ஒரு VIP ஆகி விட்டேன். Very Important Patient! ஓரிரு நாளைக்கு மேல் தொடர்ந்து படுத்தவன் இல்லை என்பதால், இந்த மாதிரி ஒரு மாதம் நீண்டு விட்ட நோய், எல்லோரையும் மிகவும் பாதித்து விட்டது. ஆளும் கட்சித் தலைவர்கள், எதிர்க்கட்சிகளைச் சார்ந்தவர்கள், பல முக்கியஸ்தர்கள், நண்பர்கள், வாசகர்கள் என்று நேரில் வந்து பார்த்தவர்களுக்கும், பல வகைகளில் விசாரித்தவர்களுக்கும் வந்த வருத்தம், அவரவர்களைச் சூழ்ந்து விட்ட சோகம், கவலை எல்லாம் என்னை மிகவும் சிறிய மனிதனாக்கி விட்டது. நான் யோசித்துப் பார்த்தேன். ‘நாம் என்ன செய்து விட்டோம்? ஒரு பத்திரிகை நடத்துகிறோம். அதில் நமது கருத்துக்களை எழுதுகிறோம். அதை விற்கிறோம். பணம் சம்பாதிக்கிறோம். எழுதுகிற கருத்துக்கள் விலை போகாதது என்று சொல்லலாமே தவிர, அதற்கு ஒரு விலை வைத்து நான் லாபம் சம்பாதிக்கிறேன் என்பதை மறுப்பதற்கில்லை. அப்படிப்பட்டவனுக்கு இவ்வளவு பேர் அன்பும் பாசமும் காட்டுகிறார்கள் என்றால், அது எவ்வளவு பெரிய அதிர்ஷ்டம்!’ அதிர்ஷ்டம் தந்த அனுபவங்கள் என்று முன்பு நான் ஒரு புஸ்தகம் எழுதினேன். அதில் நான் கூறிய அதிர்ஷ்டங்களை எல்லாம் விட இப்படிப்பட்ட வாசகர்களைப் பெற்றிருக்கிறேனே, அதுதான் என் அதிர்ஷ்டம்!

ஆஸ்பத்திரியில் ஒரு தீர்மானத்திற்கு வந்தேன். ‘டாக்டர்கள் காட்டிய கருணையும் பரிவும், ஒருபுறம்; வாசகர்கள் காட்டிய அன்பு, அக்கறை – இவையெல்லாம் சேர்ந்து நாம் இதற்கு தகுதிதானா என்ற கேள்வியை மீண்டும் மீண்டும் என் மனதில் எழுப்பிக் கொண்டே இருந்தன. என்ன தகுதி இருக்கிறதோ, இல்லையோ, நாம் முடிந்தவரை இனி நம்மை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்று தீர்மானித்தேன்.

உத்தரேத் ஆத்மன் ஆத்மானம்
நாத்மானம் அவஸாதயேத்




‘தானேதான் தன்னை உயர்த்திக் கொள்ள வேண்டும். தானே தன்னைத் தாழ்த்திக் கொள்ளக் கூடாது’ என்ற தீர்மானத்துடன், இனி இதுவரை இருந்ததை விட, ஓரளவாவது (பெருமளவில் முடியாது என்பது தெரியும்) நல்ல மனிதனாக உயர வேண்டும் என்ற எண்ணத்துடன் ஆஸ்பத்திரியை விட்டு வெளியே வந்தேன்.

இது நன்றிப் பிரகடனம்!


நன்றி சொல்ல ஆரம்பித்தால், அதற்கு முடிவே இருக்காது போலிருக்கிறது. அவ்வளவு பேர்! அவ்வளவு நல்லவர்கள்! என்னிடம் பரிவு காட்டினார்கள்; அக்கறை காட்டினார்கள். முதலில் ஏதோ காய்ச்சல் என்று நினைத்துக் கொண்டு, நானாக எனக்குத் தெரிந்த மருந்துகளை வாங்கிச் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். அதில் ஆன்டிபயாடிக் மருந்தும் உண்டு. பத்து நாளில் உடம்பு நன்றாகக் கெட்டது. அதன் பிறகு ஜுரம், ஹை ஃபீவர், கபம், உடம்பு வலி, குளிர் என்று எல்லாம் வந்து விட்டன. இனி நம் வைத்தியம் செல்லாது என்று தீர்மானித்து டாக்டரிடம் போனேன். டெஸ்ட்கள் செய்தார்கள். சில மருந்துகளைக் கொடுத்தார்கள். இரண்டு மூன்று பேர் ஒருவருக்கு ஒருவர் கலந்து ஆலோசித்து மருந்துகள் கொடுத்தார்கள். இன்ஜெக்ஷன்கள் கொடுத்தார்கள். இப்படி பத்து நாள் போயிற்று.

இருபது நாளாயிற்று. உடம்பு சரியாகவில்லை. ஒரு ஸ்பெஷலிஸ்டிடம் அனுப்பினார்கள். அவர் அன்றே அப்போதே ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட வேண்டும் என்று கூறிவிட்டார். அப்பல்லோவில் போய்ச் சேர்ந்தேன். இதற்கு முன்னால் நான், நோய் என்று ஆஸ்பத்திரியில் போய் படுத்ததில்லை. அங்கே சிகிச்சை ஆரம்பித்ததில் சுமார் ஐந்து நாட்களில் எல்லாம் சரியாகி விட்டது என்று நினைத்தபோது, ஏற்கெனவே எனக்கு இருந்த மூச்சு இரைப்பு மட்டும் போகவில்லை. இரவு தூக்கம் கிடையாது. அவ்வளவு மூச்சிரைப்பு. அதற்காக ‘லங் ஸ்பெஷலிஸ்ட்’டை கன்ஸல்ட் செய்ய வேண்டி வந்தது. மீண்டும் அப்பல்லோ! அங்கு சிகிச்சை தொடங்கியது. லங் ஸ்பெஷலிஸ்டுக்கு உதவியாக மனோதத்துவ ரீதியில் எனக்கு இருக்கக் கூடிய மன அழுத்தங்கள் விலக வேண்டும் என்பதற்காக, ஒரு டாக்டர்! இப்படி மூன்று டாக்டர்கள் கவனித்தார்கள். கொஞ்சம் கொஞ்சமாக மூச்சிரைப்பு குறைந்தது. இரண்டாவது முறை கிட்டத்தட்ட 8 நாட்களுக்கு மேல் அப்பல்லோவில் இருந்தேன். பிறகு வீடு திரும்பினேன்.

Saturday, June 16, 2012


பயனறிந்து செயலில் இறங்கு!
ஜூன் 20,2011,
13:06  IST
* மனஉறுதி, சந்தோஷம், உலகை நடத்தும் சக்தி, நம்பிக்கை, உடல் உழைப்பு முதலிய நற்குணங்களைக் கடைபிடித்து, வாழ்வை உற்சாகமாக நடத்த வேண்டும்.
*தனியிடத்தில் அமர்ந்து உயர்ந்த சிந்தனைகள், அமைதி வழங்கும் சிந்தனைகள், பலம் தரக்கூடிய சிந்தனைகள், துணிவும் உறுதியும் தரக்கூடிய சிந்தனைகள் ஆகியவற்றால் அறிவை நிரப்பி கொண்டு தியானம் செய்யுங்கள்.
* தன்னைத் தானே திருத்திக் கொள்ளாதவன் பிற ஜந்துக்களை திருத்த இறைவனிடம் அதிகாரம் பெறமாட்டான்.
* ஒரு செயலைத் துவங்கும் போது அதனால் என்ன பயன்? அது நமக்கு தேவை தானா? என்பதை ஆராய்ந்து பார்த்து இறங்க வேண்டும். பயன்படாத செயல்களில் இறங்கினால், சங்கீதம் படிக்கப் போன கழுதை போல தொல்லை தான் வந்து சேரும்.
* நல்ல விளக்கு இருந்தாலும் கண் வேண்டும். பெண்களுக்கு நான்கு பேர் துணைக்கு இருந்தாலும் சுயபுத்தி வேண்டும்.
* தன்னைத்தானே வென்றவன் தனக்குத்தானே நண்பனாகிறான். தன்னைத்தானே ஆளாதவன் தனக்குத் தானே பகைவனாகிறான்.
-பாரதியார்

Wednesday, June 13, 2012


நரைத்தாலும் விடாத ஆசை!
ஆகஸ்ட் 01,2008,
08:15  IST
காலம் விரைந்து ஓடுகிறது.பேச்சு, பொருள் தேடுதல், குடும்பப்பராமரிப்பு என்று பகல்நேரமும், உறக்கத்திலும், இன்பநாட்டங்களிலும் இரவுநேரமும் செல்கிறது. நாட்களும் வாரங்களும் மாதங்களும் வருடங்களுமாக நம் வாழ்நாள் மிக வேகமாக நகர்கிறது. ரோமங்கள் நரைத்து விடும். பற்கள் விழுந்து விடும். நம் இயலாமையை சிறிது சிறிதாக உணரவும் செய்கிறோம். ஆனாலும், அழியும் பொருள் களின் மீதுள்ள பற்றுதல் மட்டும் தொலைவதில்லை. சந்தோஷத்தைத் தாங்கி வரும் அனைத்திலும் முடிவில் துன்பமே வந்து சேர்கிறது. அழகும், குரூரமும் கலந்தே இருக்கின்றது. இரக்கமும் கொடுமையும் கலந்தே காட்சியளிக்கிறது. இந்த உலகில் நம்பி நிற்பதற்குரிய ஒரே ஆதாரம் இறைவன் மட்டுமே. உலக ஆசைகளில் ஈடுபட்டவர்களின் நிலை குடிகாரர்களைப் போன்றது. எது நல்லது எது கெட்டது என்ற பகுத்தறிய முடியாமல் மயக்கநிலையில் நாம் புலன்களின் இச்சைகளில் சிக்குண்டு கிடக்கிறோம். ஆகாயத்தில் ஒலிபரப்பப்படும் கம்பியில்லா தந்தியைப் போன்று பகைமை, பொறாமை, வெறுப்பு இவ்வெண்ணங்கள் அருகில் உள்ளவர்களை மட்டுமில்லாது தூரத்தில் உள்ளவர்களுக்கும் அபாயம் விளைவிக்க வல்லவை.

Tuesday, June 12, 2012



பெட்ரோல் பங்க் கொள்ளைகள்

பெட்ரோல் போட ஒவ்வொரு முறை செல்லும் போதும் பீ. பி ஏறாமல் இருக்க வேண்டிக் கொண்டே போவேன். நம்மை நிற்க வைத்து கொண்டு கண் முன்னே ஏமாற்றுவது எவ்வளவு கொடியது ! அதை பொறுத்து கொள்வது மிக கடினம் ! இந்த பதிவில் அத்தகைய ஏமாற்று வேலைகள் குறித்து சற்று பகிர்கிறேன்

முதலாவதாக பெட்ரோல் பங்க்கில் செய்யும் ஏமாற்று வேலை கலப்படம். இது சாதாரண பைக் மற்றும் கார் ஓட்டும் நம்மால் அவ்வளவு எளிதில் கண்டு பிடிக்க முடியாது. சொந்த ஆட்டோ வைத்து ஓட்டுவோர் இதனை எளிதில் சொல்வார்கள். இத்தகைய கலப்பட பங்குகளை தவிர்க்க மிக சாதாரண வழி, கூட்டம் அதிகம் இல்லாத பெட்ரோல் பங்குகளை அறவே தவிர்த்து விடுங்கள் ! அந்த பெட்ரோல் பங்குகள் செய்யும் கலப்படம் குறித்து சுற்று வட்டத்தில் உள்ளோர் நன்கு அறிந்தே தான் அதனை முழுதும் தவிர்க்கின்றனர் என்பதை உணருங்கள் !

மாறாக நாம் என்ன நினைக்கிறோம்? பெட்ரோல் பங்க்கில் போய் ஐந்து நிமிடம் காக்க நமக்கு மனமே வருவதில்லை. விரைவில் போட்டால் போதும் என கூட்டம் இல்லாத பெட்ரோல் பாங்குகளை நாடுகிறோம். இந்த எண்ணத்தையும், வழக்கத்தையும் முழுதும் தவிர்க்க வேண்டும்.

அடுத்து மிக முக்கியமாக பெட்ரோல் பங்க்கில் பெட்ரோல் நிரப்பும் ஆட்கள் செய்யும் திருட்டு ஒன்று உண்டு. நமக்கு முன் ஒருவர் நூறு ரூபாய்க்கு பெட்ரோல் போட்டிருக்கிறார் என வைத்து கொள்ளுங்கள் அடுத்து நமக்கு இருநூறு ரூபாய்க்கு பெட்ரோல் போட வேண்டுமெனில், மறுபடி சீரோ செய்யாமல் அந்த நூறிலிருந்தே ஓட்டி விடுவார்கள். ஆக உங்களுக்கு இருநூறு ரூபாய்க்கு பதில் நூறு ரூபாய்க்கு மட்டுமே பெட்ரோல் போடப்படும் ! நீங்கள் இதை கவனிக்கா வண்ணம் அந்த நேரம் தான் சரியே இன்னொரு நபர் வந்து உங்களிடம் பணம் வாங்குவார். அல்லது பெட்ரோல் நிரப்பும் நபரே உங்களிடம் வேறு பேச்சு கொடுப்பார். இதை ஒரு வேளை நீங்கள் கவனித்து விட்டு கேட்டால், சீரோவுக்கு மாற்ற மறந்து போன மாதிரி ஆக்டிங் குடுத்து விட்டு பின் முழுதும் போடுவார்கள். நீங்கள் பெட்ரோல் போடும் முன் சீரோவை சரி பார்ப்பது மிக அவசியம்.

மேலே சொன்னது கூட எச்சரிக்கை உணர்வு அதிகம் இல்லாதோருக்கு தான் நடக்கும். அதை விட என்ன தான் எச்சரிக்கையுடன் இருந்தாலும் நம்மிடம் அவர்கள் பெட்ரோல் அடிப்பார்கள். இதை கவனிக்கும் நமக்கு செம டென்ஷன் ஆகும்.

நீங்கள் இருநூறு ரூபாய்க்கு பெட்ரோல் போடுகிறீர்கள் எனில், துவக்கம் சீரோவில் இருந்தாலும் அடுத்த ஜம்பே இருபது அல்லது முப்பது ரூபாயில் ஆரம்பிக்கும். அளவில் பார்த்தால் சீரோவில் இருந்து நேரே 0.20 அல்லது 0.30 லிட்டருக்கு ஓடி விடும். அதன் பின் அடுத்தடுத்த எண் மாறினாலும், இந்த முதல் ஜம்ப் இருக்கே அங்கு தான் அவர்கள் கொள்ளை லாபம் அடிப்பார்கள் ! " என்னங்க எடுத்த உடன் 0 .30 லிருந்து ஓடுது என்று கேட்டால் " மெஷின் செம பாஸ்ட். அப்படி தான் ஓடும் " என்று சொல்லி நம்மை அனுப்புவதிலேயே குறியாய் இருப்பார்கள். என் நண்பர் ஒருவர் இத்தகைய இடங்களில் செமையாக சண்டை போட்டு விடுவார். இவர் போடும் சத்தம் தாங்க முடியாமல் இவருக்கு ஜம்ப் ஆனாதக சொல்லும் 0.30 லிட்டர் பெட்ரோல் மீண்டும் போட்டு அனுப்பி விடுவார்கள். காரணம் அங்கு நிற்கும் கஸ்டமர்கள், இவர் சொல்லும் குற்ற சாட்டுகளை கேட்டால் மறுபடி இங்கு வர மாட்டார்கள் என்பதே !

ஆனால் நம்மை போன்ற ஆட்கள் ஒவ்வொரு முறையும் இவர்களிடம் இப்படி சண்டை போட்டு நம் ரத்த அழுத்தத்தை உயர்த்தி கொள்ள முடியாது ! இதற்கு ஒரே வழி. வரிசையில் நிற்கும் போதே மற்றவர்களுக்கு எப்படி போடுகிறார்கள் என பார்க்க வேண்டும். எல்லோருக்கும் இப்படி ஜம்ப் ஆகிற மாதிரி தான் போடுகிறார்கள் எனில் நம் முறை வரும் போது " மெதுவா போடுங்க. ஜம்ப் ஆக கூடாது" என தெளிவாக அவரிடம் கூறுங்கள். " இவர் ஜாக்கிரதையான ஆள். ஜம்ப் ஆனால் சத்தம் போடுவார்" என ஒழுங்கே போட வாய்ப்பு உண்டு. அப்படி சொல்லும் நேரம் பெரும்பாலும் அதிகம் ஜம்ப் ஆகாமல் அவர்கள் பெட்ரோல் போடுவதை என் அனுபவத்தில் பார்த்துள்ளேன்

இப்படி ஜம்ப் ஆவது துவக்கத்தில் மட்டும் தான் இருக்குமா கடைசியில் வெறும் மீட்டர் ஓட, பெட்ரோல் உள்ளே கொட்டாமல் இருக்குமா என தெரியவில்லை. போலவே ஜம்ப் ஆவது பெட்ரோல் போடுபவர் கையில் தான் கண்ட்ரோல் உள்ளதா அல்லது பெட்ரோல் பங்குகள் எல்லா கஸ்டமருக்கும் இப்படி ஜம்ப் ஆகுற மாதிரி ஏற்கனவே செட்செய்திருப்பார்களா என்றும் தெரிய வில்லை. இது பற்றி யாருக்கும் தெரிந்தால் சொல்லுங்கள் !

இவர்கள் செய்யும் இன்னொரு அக்கிரமம். பெட்ரோலுக்கு பெட்ரோல் போடும் முன்பே பணம் வாங்கி விடுவார்கள். போட்ட பிறகு மறுபடி கேட்பார்கள். நாம் கொடுத்து விட்டோம் என சொன்னால் நம்ப மாட்டார்கள். எனக்கு இது மாதிரி இரண்டு முறை ஆகியிருக்கிறது. இன்னும் சிலருக்கும் இப்படி ஆவதை பார்த்துள்ளேன்.

இதற்கு ஒரே வழி பெட்ரோல் போட்ட பின் தான் பணம் தரவேண்டும். அவசரமாய் முடிக்க வேண்டும் என முதலில் தந்தால், ஞாபக மறதியிலோ, அல்லது வேண்டுமென்றோ அவர்கள் மீண்டும் கேட்க வாய்ப்பு உண்டு !

இப்படி பெட்ரோல் பங்குகள் நம்மை செம டென்ஷன் ஆக்குவதை தவிர்க்க, மோசமான பெட்ரோல் பங்குகளை முழுதும் தவிர்த்தல் நலம் ! பிரச்சனை இல்லாத, நல்ல குவாலிட்டி மற்றும் சரியான அளவுடன் பெட்ரோல் தரும் பாங்குகள் குறைவே.

அத்தகைய பங்குகள் எவை என உங்களுக்கு தெரிந்தால், அவை சற்று தூரம் என்றாலும் கூட சிரமம் பார்க்காமல் அவற்றிலேயே பெட்ரோல்

போடுவதை வழக்கமாக்கி கொள்ளுங்கள் ! இன்றைக்கு பெட்ரோல் விற்கிற விலையில் ஏமாறாமல் இருப்பதுடன், அவற்றை கவனித்து பீ.பி ஏறாமல் இருக்கும் 

ஒரே இறைவனுக்கு பல வழிபாடுகள்
பிப்ரவரி 26,2010,
15:06  IST
* நம்முடைய வீடுகளில் பலவிதமான வடிவங்களில் கடவுளை வழிபாடு செய்கிறோம். கடவுளுக்கு இத்தனை பெயர்கள் உண்டா என்பதும், அவரின் உண்மைத் தன்மையை உணர இத்தனை வடிவங்கள் தேவையா என்பதும் நம் மனதில் சந்தேகமாகத் தோன்றும். உண்மையில் ஒன்றுக்கு மேற்பட்ட கடவுள் உலகில் இல்லை. இருப்பவர் ஒருவர் தான். இன்னும் சொல்லப்போனால் நம் உயிரும் கூட அவரின் ஒரு வடிவம் தான். இவ்வுலகத்தை நடத்தும் பெரிய சக்தியாக இருந்து அவரே நம்மை வழிநடத்துகிறார்.
* நம் மண்ணில் தோன்றிய மகான்கள், ஒரே கடவுளையே பல வடிவங்களாக வழிபட்டு, அவரவருக்குரிய வழிபாட்டு முறைகளை ஏற்படுத்தி விட்டார்கள். இந்த முறைகள் அவர்களின் அனுபவத்தின் வாயிலாக கண்டறியப்பட்டவை. அம்முறைகளில் நமக்கு பிடித்ததைப் பின்பற்றினால் நாமும் அவர்களைப் போலவே, ஆண்டவனின் அருளைப் பெறமுடியும். நமது இஷ்டதெய்வ வழிபாட்டினைத் தொடர்ந்து செய்யும்போது, நமக்கென்று தனியான மனப்போக்கு தேவையில்லை என்ற நிலை உருவாகும். அப்போது, இருப்பது ஒரே கடவுள் தான் என்ற உறுதிநிலையைப் பெற்றுவிடுவோம்.
- காஞ்சிப்பெரியவர்

Monday, June 11, 2012

சுரன்

பயப்படாதீங்க,,,இது அம்மாவுக்கு வணக்கம் சொல்லும் முறைதான்.

ஆனா .கீழே படுத்த அம்மாதான் தூங்கிட்ட மாதிரி தெரியுது.
_________________________________________________

இன்று விவேகானந்தர் பிறந்த தினம்)          செய்ய முடியும் என்று நம்பு!
ஜனவரி 10,2012,
11:01  IST
* கடவுளைக் காண மனிதனுக்குத் தொண்டு செய்யுங்கள். பட்டினியால் வாடும் ஏழைகளை நாராயணர்களாக பாருங்கள்.
* உங்களை உடல் அளவிலோ, அறிவு அளவிலோ, ஆன்மிக அளவிலோ ஏதாவது ஒரு விஷயம் பலவீனமாக்கினால், அதை விஷமாகக் கருதி உதறித்தள்ளுங்கள்.
* இறைவன் ஒரு சக்தி மட்டுமல்ல, அவரே உண்மையும் கூட. இதை உணர்ந்து உண்மையுடன் நடந்து கொள்ளுங்கள். 
* திறக்க முடியாத அனைத்து வாசல்களையும் அன்பு திறக்கிறது. உலகின் அனைத்து ரகசியங்களுக்கும் வாசல் அன்பு தான்.
* கால்பந்து விளையாடி விட்டு, கீதை படித்தால் மனதில் நன்றாகப் பதியும். ரத்தத்தில் வேகமிருந்தால் தான், பகவான் கிருஷ்ணரின் அறிவையும், ஆற்றலையும் அறிய முடியும்.
* நம்மிடத்தில் ஒன்றை இழுத்துக் கொள்ளும் சக்தியைப் போல, அதை விலக்கும் சக்தியும் உள்ளது.
* முடியாது என்ற வார்த்தையை அகராதியை விட்டே உதறித்தள்ளுங்கள். உங்களால் எல்லாவற்றையும் சாதிக்க முடியும்.
விவேகானந்தர்

Sunday, June 10, 2012


நூறு வயது வரை வாழ ஏழு குறிப்புகள்!!!

நூறு வயதுவரை வாழ்வதற்கு யாருக்குத் தான் ஆசை இருக்காது. ஆனால் அதற்கான நடைமுறைகளை செயற்படுத்துவதில் தான் பலர் தோற்றுப் போகின்றனர். 

ஆயுளை அதிகரிக் கடினமான சில விடயங்களை செயற்படுத்தி ஓர் இரு தினங்களிலேயே அவற்றை கைவிட்டவர்களே அதிகம். 

ஆனால் இங்கு குறிப்பிடும் ஏழு நடைமுறைக் குறிப்புக்களையும் கடைப்பிடித்து பாருங்கள். உங்கள் உடல் நிலையில் மாற்றம் ஏற்படும்.

  • இடையைக்குறைத்தல்
  • புகைத்தலைத் தவிர்த்தல்
  • உணவில் கொழுப்புச் சத்தைக் குறைத்தல்
  • ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ளல்
  • நீரிழிவு கட்டுப்பாடு
  • சுறுசுறுப்பான வாழ்க்கை
  • பழங்களை அதிகம் உண்ணுதல்
அன்றாட வாழ்க்கையில் பழக்கவழக்கங்களை மாற்றிக் கொள்வதன் மூலம் இதனை சாதிக்கலாம் என வைத்திய நிபுணர்களும் தெரிவித்துள்ளனர்.

வைரமுத்து கவிதைகள்

[தொகு]அந்தந்த வயதுகளில்..!

இருபதுகளில்...
எழு உன் கால்களுக்கு சுயமாய் நிற்கச் சொல்லிக்கொடு...
ஜன்னல்களை திறந்து வை..
படி.. எதையும் படி... வாத்சாயனம் கூடக் காமம் அல்ல-கல்விதான் படி...
உன் சட்டைப் பொத்தான் கடிகாரம் காதல் சிற்றுண்டி சிற்றின்பம் எல்லாம் விஞ்ஞானத்தின் மடியில் விழுந்து விட்டதால் எந்திர அறிவுக் கொள்..
சப்தங்கள் படி சூழ்ச்சிகள் அறி
பூமியில் நின்று வானத்தைப் பார் வானத்தில் நின்று பூமியைப் பார்...
உன் திசையை தெரிவு செய் நுரைக்க நுரைக்கக் காதலி
காதலை சுகி காதலில் அழு..
இருபதுகளின் இரண்டாம் பாகத்தில் மணம்புரி
வாழ்க்கை என்பது உழைப்பும் துய்ப்பும் என்று உணர்
முப்பதுகளில்....
சுருசுருப்பில் தேனீயாய் இரு நிதானத்தில் ஞானியாய் இரு...
உறங்குதல் சுருக்கு உழை நித்தம் கலவிகொள்
உட்கார முடியாத ஒருவன் உன் நாற்காலியை ஒழித்து வைத்திருப்பான்.. கைப்பற்று...
ஆயுதம் தயாரி பயன்படுத்தாதே...
எதிரிகளை பேசவிடு.. சிறுநீர் கழிக்கையில் சிரி...
வேர்களை இடிப் பிழக்காத ஆழத்துக்கு அனுப்பு..
கிளைகளை சூரியனுக்கு நிழழ் கொடுக்கும் உயரத்திற்கு பரப்பு...
நிலைகொள்.
நாற்பதுகளில்...
இனிமேல்தான் வாழ்க்கை ஆரம்பம்
செல்வத்தில் பாதியை அறிவில் முழுமையை செலவழி
எதிரிகளை ஒழி..
ஆயுதங்களை மண்டை ஓடுகளில் தீட்டு
பொருள் சேர்
இரு கையால் ஈட்டு ஒரு கையாலேனும் கொடு
பகல் தூக்கம் போடு
கவனம்.. இன்னொருக் காதல் வரும்.. புன்னகை வரைப் போ புடவை தொடாதே..
இதுவரை இலட்சியம்தானே உனது இலக்கு..
இனிமேல் இலட்சியத்திற்கு நீதான் இலக்கு...
ஐம்பதுகளில்...
வாழ்க்கை- வழுக்கை இரண்டையும் ரசி
கொழுப்பை குறை.. முட்டையின் வெண்கரு காய்கறி கீரைகொள்
கணக்குப்பார்
நீ மனிதனா என்று வாழ்கையைக் கேள்..
அறுபதுகளில்....
இதுவரை வாழ்க்கைதானே உனை வாழ்ந்தது.. இனியேனும் வாழ்க்கையை நீ வாழ்..
விதிக்கப்பட்ட வாழ்க்கையை விழக்கி விடு..
மனிதர்கள் போதும்
முயல்கள் வளர்த்துப் பார் நாயோடு தூங்கு கிளியோடு பேசு
மனைவிக்குப் பேன்பார்
பழைய டைரி எடு.. இப்போதாவது உண்மை எழுது..
எழுபதுகளில்...
இந்தியாவில் இது உபரி..
சுடுகாடுவரை நடந்து போகச் சக்தி இருக்கும்போதே செத்துப்போ
ஜன கண மன..!!!

விழித்திரு.. உணவு கிடைக்கும்
பிப்ரவரி 14,2012,
09:02  IST
* நடுகிறவனும் நீர்பாய்ச்சுகிறவனும் ஒரு மாதிரி தான். ஆயினும், ஒவ்வொருவனும் தன் உழைப்புக்கேற்ற ஊதியத்தையே பெறுவான்.
* தேவையுள்ளவன் என்றைக்கும் மறக்கப்படுவதில்லை. எளியவர்களின் எதிர்பார்ப்பு என்றைக்குமே நசித்துப் போய்விடுவதில்லை.
* இரவோ முன்பே கழிந்து போயிற்று. பகலோ மிகவும் நெருங்கிவிட்டது. ஆகையால், இரவின் செயல்களை உதறிவிட்டு, ஒளியின் கவசங்களை அணிந்து கொள்வோம்.
* உறக்கத்தை விரும்பாதே, விரும்பினால் வறுமை அடைவாய், கண் விழித்திரு; திருப்தியான அளவு உணவு பெறுவாய்.
* கடவுளே நமக்கு அடைக்கலமும் பலமும் ஆனவர். துன்பங்களிடையே உற்ற துணையும் ஆனவர்.
* எந்தக் காலத்திலும் எவரும் கடவுளைக் கண்டதில்லை. நாம் ஒருவரையொருவர் நேசித்தால் நம்முன் கடவுள் வசிக்கிறார்.
* உன்னிடத்தில் வந்து கேட்பவனுக்குக் கொடு. உன்னிடம் கடன் கேட்க விரும்புகிறவனுக்கு முகத்தைத் திருப்பாதே.
- பைபிள் பொன்மொழிகள் 

Saturday, June 9, 2012


 தெரியாத்தனமா அரசியலுக்கு வந்துட்டேன், மன்னிச்சுடுங்க!

ஐய்யோ இந்த கொள்ளைக்காரர்களிடமிருந்து என்பாரதத்தை காப்பாற்றுங்கள்.

பெருவாழ்வு வாழ பெற வேண்டிய 16 செல்வங்கள் எவை தெரியுமா?
ஜூன் 08,2012
  
அ-
+

Stay connected to temple.dinamalar.com
பெரியவர்கள் வாழ்த்தும் போது 16ம் பெற்று பெருவாழ்வு வாழ்க என வாழ்த்துவார்கள். இது கீழ்கண்ட 16 வகையான செல்வங்களைக் குறிக்கும். வாழ்க்கையில் நமக்கு வழிகாட்டக்கூடிய கல்வி, நீண்ட ஆயுள், நம்பிக்கைக்கு உரிய நண்பர்கள், வாழ்க்கைக்கு தேவையான செல்வம், உழைப்புக்கு தேவையான ஊதியம், நோயற்ற வாழ்க்கை, எதற்கும் கலங்காத மனவலிமை, அன்புள்ள கணவன் மனைவி, அறிவு ஒழுக்கம் ஆற்றல் கொண்ட குழந்தைகள், மேன்மேலும் வளரக்கூடிய புகழ், மாறாத வார்த்தை, தடங்கலில்லாத வாழ்க்கை, வருவாயைச்சிக்கனமாக செலவழித்து சேமிப்பு அதிகரித்தல், திறமையான குடும்ப நிர்வாகம், நமக்கு உதவக்கூடிய பெருமக்களின் தொடர்பு, பிற உயிர்களிடம் அன்பு செலுத்துதல். இந்த பதினாறும் பெற்று வாழ்ந்தாலே பெருவாழ்வு வாழ முடியும் என்று நம் முன்னோர்கள் கூறுகின்றனர்

Friday, June 8, 2012



மின்தடையை சமாளிக்க உதவும் இன்வர்டர்: விரிவான அலசல்

மின் வெட்டு தமிழகம் முழுதும் பல வருடங்களாக தீராத ஒரு பிரச்சனையாகவே இருந்து வருகிறது. 

தற்போது வரலாறு காணாத அளவு மின்வெட்டு படு மோசமாய் உள்ளது. சென்னையில் செவ்வாய் கிழமை அனைத்து நிறுவனங்களுக்கும் "மின் விடுமுறை" மார்ச் மாதம் முதல் அமுல் படுத்தியதால், பல நிறுவனங்கள் செவ்வாய் அன்று அலுவலகம் விடுமுறை விட்டு ஞாயிறு வேலை நாள் ஆக்கியுள்ளனர். வாரம் இரு நாள் விடுமுறை விடும் நிறுவனங்கள் செவ்வாய் (மின் தடைக்காக) மற்றும் ஞாயிறு விடுமுறை அறிவித்துள்ளன. 

வீட்டில் கரண்ட் இன்றி எப்படி சமாளிப்பது? இங்கு தான் வருகிறது இன்வர்டர் ! 


எங்கள் குழந்தை சின்னவளாக இருந்த போது பல முறை இரவில் கரன்ட் போய் விடும். அப்போது குழந்தையும் தூங்காமல் நாமும் தூங்க முடியாமல் செம கடுப்பாய் இருக்கும். சில நேரம் அந்த ஒரு நாள் எங்காவது அருகில் இருக்கும் லாட்ஜில் ரூம் போட்டு தூங்கலாமா என்று கூட யோசித்துள்ளேன். (ஒரு முறையும் செய்ததில்லை). 

சொந்த வீடு கட்டி குடியேறும் போது செலவோடு செலவாக inverter வாங்கி விட்டோம். வீடு கட்டும் போதே இதற்காக வயரிங் செய்ய சொல்லியாகி விட்டது. Inverter நிறுவன ஆட்களும் ஒரு முறை வந்து பார்த்து Inverter எங்கு வரும், வயரிங் எப்படி தேவை என சொல்லி சென்றனர். ஆறு வருஷத்துக்கு முன் புது வீடு போகும் போதே இன்வர்டர் உடன் எங்கள் வாழ்க்கை துவங்கியது. 

இன்வர்ட்டர் குறித்த அனுபவங்களை உங்களுக்கும் உதவும் என்பதால் இங்கு பகிர்கிறேன்:

இன்வர்டரில் முக்கியமானவை இரண்டு: ஒன்று இன்வர்டர் என்கிற மெஷின். அடுத்தது அதன் பேட்டரி. இவை இரண்டும் சேர்ந்து கிட்டத்தட்ட இருபதாயிரம் ரூபாய் போல் ஆகும். இது மூன்று மின் விசிறி மற்றும் மூன்று டியூப் லைட் எட்டு மணி நேரம் ஓட உதவும் என்கிறார்கள். ஒரு டியூப் மற்றும் ஒரு மின் விசிறி வரை மட்டும் என்றால் விலை இன்னும் குறைவாக 10,000 to 15,000 ருபாய் ஆகும் என நினைக்கிறேன்.

"மூன்று மின் விசிறி மற்றும் மூன்று டியூப் லைட்" என்று சொன்னாலும், வீட்டில் உள்ள அனைத்து மின் விசிறி மற்றும் டியூப் லைட்கள் எரிகிற மாதிரி நாங்கள் செய்து விட்டோம். அதாவது அவர்கள் அனைத்து இடங்களுக்கும் கனக்ஷன் தந்து விடுவார்கள். நாம் எங்கு தேவையோ அதை மட்டும் உபயோகித்து கொள்ளலாம். இதனால் கரண்ட் இல்லா விட்டாலும் எந்த ரூமுக்கு வேண்டுமானாலும் வழக்கம் போல் போய் வரலாம். கரண்ட் இல்லாமல், இன்வர்டர் ஓடுகிறது என்றால் ஒரு மின்விசிறி மற்றும் ஒரு டியூப் லைட் மட்டும் ஓடுகிற மாதிரி தான் நாங்கள் பார்த்து கொள்வோம். தேவையின்றி இன்வர்டரை அதிகம் உபயோகிப்பதில்லை. 

இன்வர்டர் டிவிக்கும் கூட கனக்ஷன் தந்து விடலாம். லோக்கல் கேபிள் டிவி எனில் அங்கு கரண்ட் இல்லை எனில் உங்கள் வீட்டில் இன்வர்டர் இருந்தாலும் நிகழ்ச்சி வராது. ஆனால் டிஷ் அல்லது சண் டைரக்ட் இருந்தால் கரண்ட் இல்லா விட்டாலும் டிவி பார்க்க முடியும். சீரியல் பார்ப்போருக்கு டென்ஷன் இல்லை பாருங்க :)))

இந்த இருபதாயிரம் ருபாய் ரேஞ்சில் உள்ள இன்வர்டரில் மிக்சி, ஹீட்டர், ஏசி போன்றவை ஓட்ட முடியாது. அதற்கு அநேகமாய் இன்னும் அதிக சக்தி உள்ள இன்வர்டர் தேவை அல்லது ஜெனரேட்டர் இருந்தால் தான் முடியும். இந்த இன்வர்டரில் பேன், டியூப் லைட், கணினி, டிவி இவை மட்டும் தான் இயங்கும். எந்தெந்த இடங்களில் ஏ.சி அல்லது ஹீட்டர் இருக்கோ அந்த லைன் முழுதுக்கும் இன்வர்டர் கனக்ஷன் தர மாட்டார்கள். உதாரணமாய் பாத் ரூமில் ஹீட்டர் உள்ளதால், அந்த ரூம் முழுதும் இன்வர்டர் கனக்ஷன் இருக்காது. இதனால் ஹீட்டர் மட்டுமின்றி, பாத் ரூம் விளக்குகளும் எப்போதும் இன்வர்டர் மூலம் எரியாது !

நடு இரவில் கரண்ட் போய் விட்டால், கரண்ட் போனதே நமக்கு தெரியவே தெரியாது. எப்போது கரண்ட் போனது, எப்போது திரும்ப வந்தது என தெரியாமல் நிம்மதியாக தூங்கலாம். இது தான் இன்வர்டரின் மூலம் கிடைக்கும் பெரிய பயன் என்பேன். அடுத்து பரீட்சைக்கு தயார் செய்யும் குழந்தைகள், கரண்ட் இல்லா விடில் சிரமமின்றி படிக்க முடியும். ( நாம் எல்லாம் பள்ளியில் படித்த போது மெழுகு வர்த்தி அல்லது சிம்னி விளக்கில் படிப்போம்.....)

ஒரு முறை இன்வர்டர் வாங்கினால் அடுத்தடுத்து வரும் செலவு குறித்து பார்ப்போம்: 

இன்வர்டரில் உள்ள பேட்டரிக்கு ஓரிரு மாதங்களுக்கு ஒரு முறை தண்ணீர் ஊற்ற வேண்டும். நீங்கள் இன்வர்டர் வாங்கும் நிறுவனத்துக்கு சொன்னாலே வந்து ஊற்றி விடுவார்கள். வரும் பையனுக்கு அவன் வந்து போக பெட்ரோல் செலவுக்கென மட்டும் ஐமபது ருபாய் தர வேண்டும். உங்களுக்கு ரெண்டு மாதத்துக்கு ஒரு முறை ஐம்பது ரூபாய் செலவு. இது மட்டும் தான் தொடர்ந்து வரும் recurring expenditutre.

இதில் உள்ள பேட்டரி ரெண்டு அல்லது மூன்று வருடம் தான் வரும். பின் அதனை மாற்ற வேண்டும். இது தற்போதைய விலையில் எட்டாயிரம் வருகிறது. மேலும் நாம் வாங்கும் இன்வர்டர் instrument ஐந்து அல்லது ஆறு வருடம் தான் உழைக்கும். பின் மாற்ற வேண்டும். இது பத்தாயிரம் ரூபாய் ஆகும். 

ஆக ரெண்டு அல்லது மூன்று வருடத்துக்கு ஒரு முறை எட்டாயிரம் (பேட்டரி ); ஐந்து வருடத்துக்கு ஒரு முறை பத்தாயிரம் ரூபாய் (புது இன்வர்டர்) ஆகிய செலவுகளுக்கு நீங்கள் தயாராய் இருக்க வேண்டும். புதுசாய் இன்வர்டர் விற்பனை செய்வோர் இதனை உங்களிடம் சொல்ல மாட்டார்கள். நாம் சில வருடங்கள் இன்வர்டருக்கு பழகி விட்டால், பின், மூக்கால் சற்று அழுதவாறே இந்த செலவு செய்ய தயார் ஆகி விடுவோம். 

நாங்கள் இன்வர்டர் வாங்கியது மைக்ரோடெக் (Microtech ) பிராண்ட். இதன் செயல்பாடு ஓகே. பெரிய அளவு பிரச்சனை இல்லை. மற்ற நிறுவன இன்வர்டர்கள் எப்படி வேலை செய்கிறது என தெரியவில்லை. பேட்டரி வாங்குவதானால் Exide போன்ற நல்ல பேட்டரியாக வாங்க வேண்டும். 

இன்வர்டர் வாங்கும் போது மறக்காமல் கவனிக்க வேண்டியவை: 

1 . டியூபுலர் பேட்டரி வாங்குவது நலம். சற்று விலை அதிகம் எனினும் அதிக வருடங்கள் வரும். இதற்கு Replacement வாரண்டி ஐந்து வருடம் போல் தருகிறார்கள் !

2 . இன்வர்டர் & பேட்டரி விலை மற்றும் வாரண்டி நிறுவனத்துக்கு நிறுவனம் மாறுபடும். மூன்று நான்கு இடங்களில் விசாரித்து விட்டு பெஸ்ட் டீல் எதுவோ அதை பார்த்து வாங்குங்கள் 

3 . கணினி உள்ளிட்ட இடங்களுக்கு கனக்ஷன் தந்து விட்டதா என பாருங்கள். எங்களுக்கு கணினிக்கு கனக்ஷன் முதலில் தரலை. சில ஆண்டுகளுக்கு பின் அதை தனி வேலையாக செய்ய வேண்டியதாயிற்று !

4 . வாங்கிய பின் ஓரிரு மாதத்துக்கு ஒரு முறை பேட்டரிக்கு "ஆசிட் " மறக்காமல் ஊற்றவும். இல்லா விடில் லைப் அதிகம் வராது. 

5. இன்வர்ட்டர் மற்றும் பேட்டரி இரண்டும் ஒரே இடத்தில வாங்குவதே நல்லது. வெவ்வேறு இடம் என்றால், ரிப்பேர் வரும்போது ஒவ்வொருவரும் மற்றவர் மேல் குறை சொல்வார்கள். ரிப்பேர் சரியாகாது.
**********************************
ஐந்து வருடங்களுக்கு முன் நாங்கள் இன்வர்டர் வாங்கிய போது இரவில் தெரு முழுக்க கரண்ட் இல்லாத போது, எங்கள் வீட்டில் மட்டும் லைட் எரிவது வித்யாசமாக தெரியும். இப்போது தெருவில் பாதி வீடுகளில் இன்வர்டர் உள்ளது !! எங்களுக்கு சர்வீசுக்கு வரும் ஆட்களே இன்வர்டருக்கு டிமாண்ட் மிக அதிகமாகி விட்டது என்கின்றனர். எல்லாம் ஆற்காட்டார் மற்றும் அம்மா மகிமை !

இந்த பதிவின் பின்னூட்டமாக ராமலட்சுமி அவர்கள் சொன்னதை இங்கேயே பகிர்ந்திட விரும்புகிறேன் (சிலருக்கு கமன்டுகள் வாசிக்கும் பழக்கம் இருப்பதில்லை. இந்த தகவல் அனைவருக்கும் சேர, இங்கேயே பகிர்கிறேன் ):

திருமதி. ராமலட்சுமி 

எனது அனுபவத்தைப் பகிர்வது சிலருக்கு உபயோகப்படலாமென எண்ணுகிறேன். 5 வருடங்களாக APC BI1000I உபயோகிக்கிறோம். அப்போது 30 K ஆயிற்று. 4 ஃபேன், லைட் மற்றும் மிக்ஸி க்ரைண்டர் என 5 ஆம்ப் எல்லாம் வேலை செய்யும்.

நமது எல்லா 5 ஆம்ப் இணைப்புகளுக்கும் இன்வெர்டருடன் இணைப்புக் கொடுத்து விடுவார்கள். 15 ஆம்ப்பில் இயங்கக்கூடிய கீசர், ஏசி, மைக்ரோவேவ் மட்டும் உபயோகிக்க முடியாது. 

முடிந்தவரை குறைந்தபட்சமாகவே உபயோகிப்போம். டாடா ஸ்கை என்பதால் டிவி தடைபடாதென்றாலும் ப்ளாஸ்மா மிக அதிகமாக மின்சாரத்தை இழுப்பதால், லோகல் கேபிளில் ஒளிபரப்பு இருந்தால் இன்னொரு டிவியில் முக்கிய செய்தி என்றால் மட்டும் பார்ப்பது வழக்கம்.

முக்கியமாக நான் பகிர்ந்திட விரும்புவது:

1. AMC (வருடப் பராமரிப்பு ஒப்பந்தம்) எடுப்பது சாலச் சிறந்தது. இதனால் வாங்கிய 2 வருடத்தில் ஃபேனில் கோளாறு வந்த செயலிழந்தபோது புதியது மாற்றித் தந்தார்கள். இல்லையெனில் தனியாக 12K கொடுக்க நேர்ந்திருக்கும்.

2. ஃப்ளாட்களில் வசிப்பவர்கள் ஹாலில் அல்லது பெட்ரூமில் வைக்க நேரலாம். இதிலிருந்து சிலசமயங்களில் கசிகிற அமிலப் புகை உடல்நலத்துக்கு மிகக் கேடு. இந்தப் பிரச்சனை முதலிரண்டு வருடம் இடையிடையே ஏற்பட அதன் பிறகு பராமரிப்பே தேவைப்படாத Exide invasafe 400-க்கு மாறி விட்டோம். 2 பாட்டரிகள் வாங்க வேண்டிவரும். விலை சற்று அதிகமானாலும் உடலுக்குத் தீங்கு விளைவிக்காது என்பதால் இந்தப் பரிந்துரையை பரீசிலிக்கலாம். இரண்டரை வருடங்கள் வரை வருகின்றன (பெங்களூரில் அதிகமாய் மின் தடை இல்லாததால்). 
******************** 
மின் வெட்டால் மிக அவதி படுகிறீர்கள் என்றால், மேலே சொன்ன செலவுகளுக்கு ஓகே என்றால், இன்வர்டர் வாங்குவது பற்றி நிச்சயம் யோசியுங்கள் ! 

ஆறு வருடமாய் வீட்டில் இன்வர்டர் உபயோகிப்பவன் என்பதால், இன்வர்டர் குறித்து வேறு கேள்விகள் உங்களுக்கு இருந்தால், பின்னூட்டத்தில் என்னிடம் நீங்கள் கேட்கலாம் !