Tuesday, August 7, 2012

குடிநீர் சிக்கனம் வேண்டும்

* மனிதனாகப் பிறப்பதன் நோக்கமே மக்களுக்கு சேவை செய்வது தான். சேவை செய்வது என்பது நமக்கு சம்பந்தமில்லாதவர்களுக்கு செய்வது தான் என்பதில்லை. நம் குடும்பத்திற்கு செய்வதும் சேவை தான் என்பதை உணர வேண்டும்.
* சிக்கனமாய் இருப்பதை கருமித்தனம் என்று சொல்லக்கூடாது. பணம் தான் என்றில்லாமல் நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு விஷயத்திலும் சிக்கனம் தேவை. குடிக்கும் தண்ணீரைக்கூட அளவோடு பயன்படுத்துவது மிகவும் நல்லது. 
* வாழ்க்கைக்கு எது அவசியமோ அதை மட்டும் விரும்பவேண்டும். மற்றவற்றை சிறிதும் அனுபவிக்க ஆசைப்படக்கூடாது. 
* பிறரது குற்றங்குறைகளை மட்டுமே பெரிதுபடுத்திப் பார்ப்பது சிலரது இயல்பாக இருக்கிறது. மற்றவர்களிடம் உள்ள நல்ல அம்சங்களை மட்டுமே காணும் மனோபாவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். 
* ஒவ்வொரு நாளும் பத்து நிமிஷமாவது வழிபாட்டுக்காக ஒதுக்க வேண்டும். குடும்பத்தோடு அமர்ந்து வழிபாடு செய்வது சிறப்பு. பக்திக்கு தேவை மனம் தானே தவிர பணம் அல்ல.
-காஞ்சிப்பெரியவர்

No comments: