Monday, August 27, 2012

தடைகளை வெல்ல வழி

* மனித வடிவம் கொண்ட அனைத்து உயிரையும் வழிபடுங்கள். 
* இரக்கத்தால் பிறருக்கு நன்மை செய்வது நல்லது. ஆனால், இறைவனது படைப்பான அனைத்து உயிர்களுக்கும் பணி செய்வது அதைவிட மிக நல்லதாகும்.
* ஒவ்வொரு உயிரிலும் தெய்வீகத் தன்மை குடி கொண்டிருக்கிறது, உள்ளேயும் வெளியேயும் இருக்கும் இயற்கையைக் கட்டுப்படுத்தி, உள்ளத்தில் குடி கொண்டுள்ள தெய்வீகத் தன்மையை மலரச் செய்வதுதான் முடிவான லட்சியமாகும்.
* தெளிந்த உண்மையையும், கருத்துத் தூய்மையையும் படைக்கலனாகக் கொள்பவர்கள் எந்த தடையையும் எதிர்த்து வெற்றி பெறுவது உறுதி.
* இறைவன் வரம்பு கடந்த பெருமைகளை உடையவன். தூய்மையான மனத்தைப் பெறுவதுடன், இறைவன் மீது நம்பிக்கை கொள்ள வேண்டும். எப்போதும் இறைவனையே சார்ந்து நிற்பதுடன் நன்னெறியில் நின்றால் உங்களை எவராலும் வெல்ல முடியாது.
* எப்போதும் இனிமையோடும், மகிழ்ச்சியோடும் இருப்பது ஒருவனைக் கடவுள் அருகில் கொண்டு செல்லும்.
- விவேகானந்தர்

No comments: