Monday, August 20, 2012

சுறுசுறுப்பாகத் திகழுங்கள்

* நம்முடைய உடலையும், அறிவையும், ஞானத்தையும் பலவீனமாக்கும் எதையும் விஷம் என ஒதுக்கிவிட வேண்டும்.
* பிறருடைய தவறு எவ்வளவு கெட்டதாக இருந்தாலும் அதுபற்றி பேசக்கூடாது. 
அப்படிச் செய்வதனால் நீங்கள் அவனுக்கு கேடு செய்வதுடன், உங்களுக்கும் கேடு 
ஏற்படுத்திக் கொள்வீர்கள்.
* தன்னை அடக்கப் பழகிக் கொண்டவன் வேறு எதற்கும் வசப்படமாட்டான், அவனே உலகில் நன்றாக வாழ 
தகுதியுள்ளவன்.
* எதிலும் பரபரப்பு தேவையில்லை, ஆனால், சுறுசுறுப்பு எப்போதும் தேவை. 
* கீழ்ப்படிதல், முயற்சியுடைமை, செயலாக்கம் ஆகிய மூன்றும் இருந்தால், ஒருவன் வெற்றி பெற்று 
முன்னேறுவதை எதனாலும் தடுக்க முடியாது.
* உலகத்தில் உயர்ந்த செயல்கள் அனைத்தையும் 
சாதித்தவர்கள் உங்களையும் என்னையும் போன்று 
மனிதர்களே. வீரம் மட்டுமிருந்தால் நம்மைப் போன்ற மனிதர்கள் எதையும் செய்து முடிக்க முடியும், 
* இயந்திரங்கள் மனித சமூகத்திற்கு சுகத்தைக் 
கொடுத்தவையுமல்ல, கொடுக்கப் போவதுமில்லை.
- விவேகானந்தர்

No comments: