Tuesday, August 14, 2012

அவனல்லவா செய்ய வைத்தான்!

* நாம் "தானம் கொடுக்கிறோம்' என்ற வார்த்தையைச் சொல்வதே தவறு."பகவான் நம்மைக் கொடுக்கும்படி வைத்தான், கொடுத்தோம்' என்று அடங்கி பவ்யமாகக் கொடுக்க வேண்டும். அகங்காரம் வந்துவிடுமோ என்று பயந்து கொண்டு கொடுக்க வேண்டும்.
* நமக்கு எத்தனை ஆசை இருக்கின்றனவோ, அத்தனை ஆணிகளை அடித்துக் கொண்டு, நம்மை
கட்டிப்போட்டுக் கொள்கிறோம். இதனால் துன்பம் 
அதிகரிக்கிறது. ஆசைகளை குறைக்க குறைக்க துன்பமும் குறைகிறது.
* ஒருவர் நம்மிடம் நெருங்கிப் பழகாவிட்டாலும் சரி, 
அவருக்கு ஆத்ம குணங்களும் அனுக்கிரக சக்தியும் இல்லாவிட்டாலும் சரி, அவரால் நமக்கு எந்தக் காரியமும் ஆகாவிட்டாலும் சரி, அப்போதும் நாம் அவரிடம் மாறாத அன்பு வைத்தால் அதுவே உண்மையான அன்பு.
* தியாகம் பண்ணவேண்டும். அதைவிட முக்கியமாக 
"தியாகம் பண்ணினேன்' என்ற எண்ணத்தையும் தியாகம் பண்ணிவிட வேண்டும்.
* மகான்கள் செய்கிற ஆசிர்வாதம், அவர்கள் கொடுக்கும் சாபம் அனைத்தும் அப்படியே பலித்துவிடுவதற்கு 
காரணம் அவர்களுடைய சத்தியத்தின் சக்தி தான். 
- காஞ்சிப்பெரியவர்

No comments: