Wednesday, August 1, 2012

உன்னைப்போல் பிறரை நடத்து

* எதையும் செய்துவிடும் சக்தி தனக்கு உண்டு என்று மனிதன் பெருமையடித்துக் கொள்ளும் நேரத்தில், கடவுள் அவனுடைய அகம்பாவத்தை அடக்கி விடுகிறார்.
* உடலும் உள்ளமும் தூய்மையாக இருக்கும் அளவைப் பொறுத்து தான் உடல் நலமும் மனவளமும் அதிகரிக்கிறது.
* எண்ணம் என்பது மகத்தானதாகவும் புதுமையானதாகவும் இருந்தால் அதன் விளைவு எப்போதுமே மகத்தானதாகவும், புதுமையானதாகவும் இருக்கும்.
* நம்பிக்கையும் வழிபாடும் இல்லாமல் செய்கிற எந்த வேலையும் நறுமணமில்லாத செயற்கைப் புஷ்பம் போன்றதாகும்.
* நம்மைப் பிறர் எப்படி நடத்த வேண்டும் என்று எண்ணுகிறோமோ, அதே போல் நாம் பிறரையும் நடத்த வேண்டும்.
* ஆணவக்காரர்களின் போற்றுதலுக்கும், தம்முடன் ஒன்றை விரும்பிப் பேரம் பேசுவோரின் பிரார்த்தனைக்கோ ஆண்டவன் ஒரு போதும் செவி சாய்ப்பதில்லை.
- காந்திஜி 

No comments: