Wednesday, August 1, 2012

அமைதியாக இருக்க பழகுங்கள்

* நான் கடவுளை காணவிரும்புகிறேன். நான் அறிந்த கடவுள் உண்மையே. அகிம்சையே கடவுளைக் காணும் சாதனம்.
* அதிகாரம் என்பது ஆற்றல் உடையவர் களுக்கு கிடைக்கும். அந்த ஆற்றல் உடல் சக்தியாகவும் இருக்கலாம், ஆன்ம சக்தியாகவும் இருக்கலாம்.
* உடலுக்குத் தூக்கம் தேவைப்படுவது போல் மூளைக்கு ஓய்வு கொடுப்பது தான் உண்மையான அமைதி. அமைதியாக இருப்பது மிக நல்ல பழக்கம். ஏனெனில், அது தவறுகளை மூடி ரகசியங்களைக் காத்து விவாதங்களைத் தவிர்த்துப் பாவத்தைத் தடுக்கிறது.
* அறிவை ஆதாரமாகக் கொண்ட முடிவுகள் நிலையற்றவை. அறிவு முதிர, முதிர அவை மாறிக் கொண்டே போகும் தன்மை வாய்ந்தவை.
* இந்து மதம் விலைமதிக்க முடியாத ரத்தினங்களை உடைய எல்லையற்ற சமுத்திரம் போன்றது. எவ்வளவுக்கு எவ்வளவு ஆழத்தில் இறங்குகிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு அதிகமான ரத்தினங்களை நாம் அடையலாம்.
- காந்திஜி

No comments: